tag:blogger.com,1999:blog-34682809425615688382024-02-02T10:07:07.432-08:00நானுற்றி நாலுVimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-27011696048450063552022-12-23T09:51:00.001-08:002022-12-23T09:52:50.843-08:00வெற்றியை தேடி + காமிக்ஸ் கோட்பாடுகள் <div><div><span style="font-size: medium;">காமிக்ஸ் ஒன்றை தயாரிப்பது எனது நீண்டநாள் ஆசையாக இருக்கிறது . சிறுவயதுகளில் நரி ஒன்று விண்வெளிக்கு போனதாக கதை எழுதி படங்கள் வரைந்தேன். படங்கள் வரைவதற்கு நிறைய பொறுமை + திறமை தேவையிருப்பதாலும் சோம்பேறித்தனத்தினாலும் காமிக்ஸ் தயாரிப்பதை நிரந்தரமாக நிறுத்திவிட்டேன். மேலும் வெகு சுமாராகவே படங்கள் வரைவேன். சமீபத்தில் கன்னா பின்னாவென்று வரைந்த கிராபிக் நாவல்கள் பார்த்தபோது மறுபடியும் பேராசை இந்த வந்தது. ஆனால் அழுத்தமான நல்ல கதை எழுதும் திறமை தேவைப்பட்டதால் மறுபடியும் ஆசையை அணைத்து விட்டேன். இயக்குனர் சிம்புதேவன் ஆனந்த விகடனில் வேலை செய்தபோது தொடர் காமிக்ஸ் உருவாக்கினார். அப்போதே மிகவும் பிடித்த தொடர். இப்படி இவர் ஏன் தொடர்ந்து காமிக்ஸ் உருவாக்கவில்லை என்று எப்போதுமே யோசிப்பேன். அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒரு வாரத்துக்குரிய 3-4 பக்கங்களை உருவாக்க பட்ட கஷ்டங்களை கேட்டபோது அவர் ஏன் காமிக்ஸ் உருவாக்கத்தை தொடரவில்லை என்பது தெளிவானது. வெளிநாடுகளில் ஒருவர் ஸ்கிரிப்ட் எழுத ஒருவர் பென்சில் ஸ்கெட்ச்சஸ் வரைய இன்னொருவர் background ஸ்கெட்ச்சஸ் வரைய வேறொருவர் வண்ணம் தீட்ட 10-15 பேர்கள் டீமாக உருவாக்கும் ஒன்றை தனியொருவர் செய்வதிலிருக்கும் பிரச்சனையை சிம்புதேவன் தெளிவாக விளக்கினார். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">உண்மையிலேயே காமிக்ஸ் வினோதமான மீடியம். அதற்கும் கோட்பாடுகள் இருக்கிறது. "பொன்னியின் செல்வன்" படமாக வந்தபோது நாவலில் இருந்த சில சுவாரஸ்ய காட்சிகளை வெட்டினார்கள். ஒரு கதாபாத்திரத்தை இல்லாமல் செய்து விட்டு இன்னொரு கதாபாத்திரம் மூலம் short-circuit செய்தார்கள். வசனங்களை சுருக்கினார்கள். சினிமா கோட்பாட்டுக்குள் அடக்கவே இத்தனை மினக்கெடல்கள். அதுபோன்றே "பொன்னியின் செல்வன்" காமிக்ஸ் ஆக மாற்றினாலும் சில வெட்டல்களும் நீட்டல்களுள் அவசியம். அதைப்பற்றி யோசித்தாலே நல்ல தலைவலிக்கு உத்தரவாதம். "பொன்னியின் செல்வனை" விட்டு விட்டு ஒரு சாதாரண காமிக்ஸ் எழுதுவதை எடுத்தாலே ஒரு பகீரத பிரயத்தனமான காரியம். படங்கள் வரைய திறமையும் பொறுமையும் வேண்டும். போதாக்குறைக்கு காமிக்ஸ் கோட்பாட்டுக்குள் கொண்டுவருவதே இமாலயம் ஏறும் காரியம்.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKbsMDCG3u6lNbWln1Uf0uIAaoyyd_7zy3E33tBPN98VvUfqMfRhvuZUGn0ktUQroR5lCyB2WWBSG1crG2htVmRjvCzkvmnlaIRdUsyDReoiLgpp3PN-SnteEBl-C6S2XBLw3b43_1EcjEafCr_176Wu4ryablj5D3K7isd2uLVGeBegQGb1sRp_3JZw/s1846/topic.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="font-size: medium;"><img border="0" data-original-height="1846" data-original-width="1300" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKbsMDCG3u6lNbWln1Uf0uIAaoyyd_7zy3E33tBPN98VvUfqMfRhvuZUGn0ktUQroR5lCyB2WWBSG1crG2htVmRjvCzkvmnlaIRdUsyDReoiLgpp3PN-SnteEBl-C6S2XBLw3b43_1EcjEafCr_176Wu4ryablj5D3K7isd2uLVGeBegQGb1sRp_3JZw/w450-h640/topic.jpg" width="450" /></span></a></div><span style="font-size: medium;"><br /></span><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இப்படியான பகீரத பிரயத்தனமான காரியத்தை நண்பர் வினோபா இவ்வருடத்திலே மூன்று முறை சாதித்திருக்கிறார். "வெற்றியை தேடி" கதை ஒரு வெஸ்டர்ன் cowboy கதை. இந்த கதையில் வசனங்கள் குறைவு, ஆனால் உயிரோட்டமான படங்களே கதையை நகர்த்தி செல்கின்றன. கதாபாத்திரங்கள் உணர்வுகளை படங்கள் மூலமாக விளங்குகிறது. வழமையாக வரும் சூழ்நிலை விளக்க வசனங்கள் மிகவும் குறைவு. இதுவே காமிக்ஸ் வாசகர்களின் புத்திசாலித்தனத்துக்கான மரியாதை என்று நான் நினைக்கிறேன். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">சித்திரத்தரம் பற்றி நான் அவதானித்ததை கீழே பதிகிறேன். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">1. படங்கள் வரையப்பட்ட கோணங்கள் மிகவும் ஆச்சர்யம். ஒரு காட்சியில் தொடரும் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கோணத்தில் இருக்கிறது. சில angle எல்லாம் ஆச்சர்யத்தின் எல்லையை கடக்கிறது </span></div></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">2. படங்கள் அழகாக நிழல்ப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனக்கு எப்போதுமே Black & White காமிக்ஸ் தான் மிகவும் பிடிக்கும். அதிலும் கதையில் வரும் ஒரு போட்டியின் போது குதிரைகள் மரநிழல்கள் ஊடாக போகும் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">3. சித்திரத்தரத்தில் இருக்கும் உயிரோட்டம் அழகியலின் உச்சத்தை தொட்டு நிற்கிறது. இவ்வளவு சித்திரங்களையும் வரைய கணக்கிலடங்கா நேரம் எடுத்துக்கொண்டதாக சொன்னார். அதனாலேயே நிதானமாக ரசித்து வாசித்தேன்</span></div><div><span style="font-size: medium;"> </span></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw_XxyBAECz4MRuj4vZka4YVGjCIaeZfyCutq9ETJ-ZqOF1r759L3NeoeNkyXYiO4VAitDn772A_8UfnoVZPmSoAKxY7HNpY43Dv3OplZBeLqcZM_d234QmKWrijvis-hjt3WH1E9YQ2G8lDbu2abnTXe9OTB9pIX1K1DvOZwQo55mVilnz4Hgg0E7VQ/s757/217390872_3731487333618350_3627823328880055323_n.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="font-size: medium;"><img border="0" data-original-height="757" data-original-width="575" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw_XxyBAECz4MRuj4vZka4YVGjCIaeZfyCutq9ETJ-ZqOF1r759L3NeoeNkyXYiO4VAitDn772A_8UfnoVZPmSoAKxY7HNpY43Dv3OplZBeLqcZM_d234QmKWrijvis-hjt3WH1E9YQ2G8lDbu2abnTXe9OTB9pIX1K1DvOZwQo55mVilnz4Hgg0E7VQ/w486-h640/217390872_3731487333618350_3627823328880055323_n.jpg" width="486" /></span></a></div><span style="font-size: medium;"><br /></span><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">கதை மிகவும் எளிமையான புதுமையான கதை. தேவையில்லாத விஷயங்கள் பற்றியோ கதையோட்டத்துக்கு வெளியேயான காட்சி அமைப்புக்களோ இல்லை. </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">காமிக்ஸ் கோட்பாடுகளை மிக அழகாக கடைபிடித்திருக்கிறது இந்த சித்திர நாவல். இதுவே வினோபாவின் கதைசொல்லலுக்கு கிடைத்த வெற்றி. சித்திர தரம் கதை சொல்லலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">இந்த புத்தகத்தை Rooney காமிக்ஸ் நிறுவனத்தினர் (Lonewolf publishers) அழகாக வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.</span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;">பின்குறிப்பு : வெற்றியை தேடி புத்தகம் வெளிவந்த போது 6 மாதங்களுக்கு முன்னர் வினோபாவை நேரில் சந்தித்தேன். அடுத்ததாக வகம் காமிக்ஸில் வெளிவர இருக்கும் AK 67 கதையின் ஓவியங்களை காட்டினார். மிகவும் அழகு. அந்த புத்தகம் வெளிவந்து விட்டதாம். அதனுடன் இன்னொரு cowboy கதையும் (செவ்விந்திய பூமி) வருகிறது. அதனை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். </span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpuIhOQO4s_VRvQNR7WbQepRw0r6WfTjFvFVCce-A4jgeMXcMTkU6oTAzzC-nzq93S8QsZ2zFmX2skrE1mKgC8TYhEro5jfCPkM6RrvYVoT-U8aIPd5WAKsqDLyCr2erqlcSegR2DtGSeNeW7R1QMQ7r7Wg8KBj2LjTJ9DQw-yTPDzWI2KDpgQh04lgg/s720/next.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="font-size: medium;"><img border="0" data-original-height="487" data-original-width="720" height="433" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpuIhOQO4s_VRvQNR7WbQepRw0r6WfTjFvFVCce-A4jgeMXcMTkU6oTAzzC-nzq93S8QsZ2zFmX2skrE1mKgC8TYhEro5jfCPkM6RrvYVoT-U8aIPd5WAKsqDLyCr2erqlcSegR2DtGSeNeW7R1QMQ7r7Wg8KBj2LjTJ9DQw-yTPDzWI2KDpgQh04lgg/w640-h433/next.jpg" width="640" /></span></a></div><span style="font-size: medium;"><br /></span><div><span style="font-size: medium;"><br /></span></div><div><span style="font-size: medium;"><br /></span></div><div><br /></div>Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-90142815249659672402020-05-22T07:35:00.000-07:002020-05-22T22:28:22.822-07:00ஒரு பட்டப்பெயர் படலம் !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiLG-dNHJhxCkbHSNMMQXGCKAvUwsugkOEjSQU9wqMsm4MUwDSx-uxxHcNsWRvBrzDB3QlC3I4pGReXKiwYpAUi7nTplseGoPby4sUGWpPLncyVtvhz4dkkhr77P0iWeMBPvmPZ1gBZYsR/s1600/modern.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="356" data-original-width="475" height="298" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiLG-dNHJhxCkbHSNMMQXGCKAvUwsugkOEjSQU9wqMsm4MUwDSx-uxxHcNsWRvBrzDB3QlC3I4pGReXKiwYpAUi7nTplseGoPby4sUGWpPLncyVtvhz4dkkhr77P0iWeMBPvmPZ1gBZYsR/s400/modern.png" width="400" /></a></div>
அரைநித்திரையில் ஆபீஸ் போய் சேர்ந்தேன். மணி அதிகாலை பத்தரை மணியிருக்கும். லிப்ட்டில் ஒருவரும் இருக்கவில்லை. ஒரு ஓரத்தில் சாய்ந்து கிடைத்த முப்பது செகண்டில் கண் அயர்ந்தேன். கன நேரமாக கதவு லிப்ட்டிலேயே போவது போன்றதொரு வினோத உணர்வாகவே இருந்தது. அந்த சில வினாடிகளுக்குள் கனவு ஓடியது. லிப்ட் திறந்தபோது வெளியே செல்வதற்காக பரபரத்தேன். ஷைலா உள்ளே வந்தாள். "நிக்கிற லிப்ட் ல என்ன செய்யிற" என்று ஆங்கிலத்தில் புன்முறுவலுடன் கேட்டாள். லிப்ட்டில் அவசர அவசரமாக ஏறிவிட்டு 30 செகண்ட் நித்திரைக்காக, போகவேண்டிய "ப்லோர்" எண்னை அழுத்தாமல் போய்விட்ட மடமையை எண்ணி வருந்தினேன். லிப்ட் அப்படியே நின்று கொண்டிந்திருக்கிறது. "என்ன உங்கட ப்ரொஜெக்ட்டில வேலை அதிகமோ. இப்படி தூங்கி வழியுறீங்க" என்று கேட்டபோது ஐந்தாம் மாடி வந்திருந்தது.<br />
<br />
ஆபீஸ்சுக்கு நுழையும்போதே இதய துடிப்பு அதிகரித்தது. ப்ராஜெக்ட் மேனேஜர் "சமிந்த" புன்னகையுடன் அப்பாவியான நாலு Developer களுடன் கதைத்து கொண்டிருந்தான். அவனை "சிரிக்கும் கொலைகாரன்" என்று சொல்வோம். மற்ற நேரங்களில் "உர்ர்" என்ற முகத்துடன் சீரியஸாக சுற்றி திரியும் அவன் எங்களுக்கு வரும் ப்ராஜெக்ட் பிளானில் இல்லாத "திடீர்" வேலைகள் வந்தால் புன்னகையுடன் வந்து கதைத்து வேலையை தலையில் கட்டி விடுவான். அவன் தரும் வேலைகள் சில ஆபீஸ் முடியும் நேரத்தை கடந்து அடுத்த நாள் கதவை தட்டி விடும். அவனது இந்த புன்னகை திறமையால் சிலபல ப்ராஜெக்ட்கள் deadline க்கு முன்னராக முடிக்கப்பட்டன.<br />
<br />
சோர்வாக உட்கார்ந்து ஈமெயில்களை நோட்டம் போட்டேன். தலையிடியான மூன்று ஈமெயில்கள் தவிர, உருப்படியாக ஒன்றுமே இருக்கவில்லை. வேலைகளை உடனயாக முடித்து விடுமாறு அந்த ஈமெயில்கள் எச்சரிக்கை செய்தன. அந்த ஈமெயில்களை பார்த்ததும் நித்திரை முழுவதுமாக கலைந்து தலைக்குள் இரைச்சல் ஏற்பட்டது. முந்தா நாள் யாழ்ப்பாண பஸ்ஸில் கேட்ட இரைச்சலான அனிருத்தின் பாட்டு வேறு மண்டைக்குள் ஓடியது. கலவரப்படும் மனதை சாந்தி செய்ய தாகசாந்தி செய்து கொள்ள முடிவெடுத்து லஞ்ச் ரூமுக்கு நடையை காட்டினேன். எங்கள் ஆபீஸில் எங்களுக்கான டீயை நாங்களே போட்டுக்கொள்ளவேண்டும். நாங்களும் டீ போடுகிறோம் பேர்வழி என்று தத்துபித்தென்று ஏதோ கலந்து குடிப்போம். அங்கே "செழியன்" டீ போன்ற ஒரு திரவத்தை உருவாக்கும் முக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தான். பாதி கப் நிறைய பால்மா போட்டு கொஞ்சமாக சாயத்தை ஊற்றி அவன் உருவாக்கும் வெளிர்மஞ்சள் நிற திரவத்தை "ஸ்பெஷல் டீ" என்று செல்லமாக பெயர் வைப்பான். "டேய் மச்சான்! என்னடா வேலைக்கு வந்திட்டியா? மணி பத்தை தாண்டியிருக்குமே" என்று சத்தமாக கத்தினான்.<br />
<br />
எங்கள் செக்சனில் நானும் செழியனும் மட்டுமே தமிழ், மற்றைய எல்லோரும் சிங்களவர்கள். ஆகவே நானும் அவனும் மட்டுமே தமிழில் கதைப்போம். எனக்கு சிங்களம் பஸ் கண்டக்டரிடம் காசு கொடுத்து மிச்ச காசு வேண்டுமளவுக்கு மட்டுமே தெரியும். ஆகவே மற்றவர்களுடன் இங்கிலீஷில் வெட்டி வெட்டி கதைப்பேன். நானும் செழியனும் வேலை இடத்திலேயே தமிழில் இஷ்டத்துக்கு கதைப்போம். எங்களை கொடுமைப்படுத்தும் ப்ராஜெக்ட் மேனேஜர்களை கேவலமாக கதைப்பதில் இன்பம் கண்டோம். அதில் முக்கால்வாசி கற்பனைதான். இப்படித்தான் ஒருமுறை சமிந்த பற்றி கேவலமாக கதைத்து எங்கள் மன வெறியை தீர்த்துக்கொண்டோம். செழியனுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கவுசல்யா லியனகேவுக்கு கொஞ்சம் தமிழ் புரியும் என்பது எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை. சிறுவயதுகளில் யாழ்ப்பாணத்தில் அவள் சிலகாலம் வசித்தது எங்களுக்கு வினையாக வந்துதொலைத்தது. ஆனால் அவள் மருந்துக்கு கூட தமிழ் தெரியும் என்று சொல்லியிருக்கவில்லை. அவள் போய் சமிந்தவிடம் ஏதோ சொல்லிவைக்க எங்கள் தலைகள் உருட்டப்பட்டன. அவளுக்கு தெரிந்த சில தமிழ் சொற்கள் மற்றும் பூதக்கண்ணாடி உதவியுடன் நாங்கள் பொழுதுபோக்காக பேசிய விஷயத்தை பெரியதாக சமிந்தவிடம் சொல்லியிருந்தாள். அவனிடம் ஏதோ சொல்லித்தப்பித்ததில் இதயம் தொண்டை வரை வந்திருந்தது. ஆனாலும் பலபேருக்கு எங்களை பற்றி தெரிந்து விட்டிருந்தது பெரிய அவமானமாக இருந்தது. யார் சிரித்தாலும் எங்களை பார்த்து சிரிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.<br />
<br />
இந்த விஷயம் நடந்து 2-3 வாரமாக நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எங்கள் உரையாடல்களை மற்றவர்கள் உளவு பார்க்காமல் இருக்க நவீன பொறிமுறைகள் தேவைப்பட்டன. அதனை நடைமுறைப்படுத்த நிறைய சிந்திக்க வேண்டியிருந்தது. செழியன் "modern problems need modern solutions" என்ற சித்தாந்தத்தை தீவிரமாக follow செய்யும் ஆசாமி. இந்த பிரச்னைக்கு புது code-word சிஸ்டம் கண்டுபிடிக்கவேணும் என்றான். அவன் யோசனைப்படி, மற்றவர்களின் பெயர்களை நேரடியாக உபயோகிப்பதை தவிர்த்தோம். ஆகவே ஆபீஸில் இருக்கும் எல்லோருக்கும் பட்டப்பெயர்கள் வைத்தோம். தொடக்கமாக எங்களை சிரித்துக்கொண்டே வேலை வாங்கும் சமிந்தவுக்கு "சிரிக்கும் கொலைகாரன்" என்ற காரணப்பெயரை சூட்டினேன். ஆபீஸ்ஸுக்காக உயிரை கொடுத்து வேலை செய்யும் எங்கள் மேலதிகாரியான நிவாஸ்ஸுக்கு "சாமியார்" என்று பட்டம் சூட்டினோம். நிவாஸ் தனது வாழ்க்கையே கம்பெனிக்காக அர்ப்பணித்திருந்தார். நிவாஸ் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமான code-wordம் ஒரு சாமியாரின் வழமையான செயற்பாடுகளை போன்றதாக இருக்கும். உதாரணமாக நிவாஸ் ஏற்பாடு செய்யும் மீட்டிங்குகளை "பிரசங்கம்" என்றழைத்தோம். நிவாஸ் எங்களுக்கு அடிக்கடி வாங்கித்தரும் treatகளை "பிரசாதம்" என்போம். அவர் கணக்கில்லாமல் செய்யும் அட்வைஸ்களை "உபதேசங்கள்" என்போம். சில பேர்களுக்கு பெயர் வைக்க நிறைய creativity தேவைப்பட்டது. creativity செழியனின் இரத்தத்திலே ஊறி இருந்தது. உதாரணமாக எப்போதும் எங்களுக்கு வேலையை தந்து விட்டு ஆபிஸை சுற்றி ரவுண்ட் வரும் அதிரிபுதிரி ப்ராஜெக்ட் மேனேஜர் அனுராதாவுக்கு "சில்லு கட்டி சுத்தற பொண்ணு" என்று பெயர் சூட்டினான்.<br />
<br />
இப்படியாக ஜாலியாக எங்கள் அரட்டையை எங்கள் காரணப்பெயர்கள் மூலம் தொடர்ந்தோம். ஆனாலும் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும்போது சில சிக்கல்கள் உருவாகின. ஒருமுறை செழியன் "அந்த ராக்கோழிப்பய resignation letter கொடுத்திட்டான்" என்றான். அப்போது கவுசல்யாவின் புருவங்கள் உயர்ந்ததை அவதானித்தேன். ஆஃபிஸில் உள்ள யாரோ ஒருவர் resign செய்யப்போவதை பற்றி கதைக்கிறோம் என்பது அவளுக்கு தெளிவாக தெரிந்திருக்கும். இது நடந்து மூன்று நாட்களுக்கு பின்னர் எனது மேனேஜர் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு விஷயத்தில் கண்டித்தார்.<br />
<br />
இந்த விஷயம் நடந்த பின்னர் செழியன் முழுமையான code-word மூலமாக மட்டுமே கதைப்பான். resignation letter கொடுப்பதை "காதல் கடிதம் கொடுப்பது" என்று மாற்றியிருந்தோம். எனக்கே அவன் சிலசமயங்களில் என்ன கதைக்கிறான் என்பதை மனதில் decode செய்வதற்கே சில வினாடிகள் செலவாகின. இப்படியாக எங்களின் அலப்பறைகள் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக சென்றன.<br />
<br />
திடீரென்று ஒருநாள் கௌசல்யாவின் இடம் மாற்றப்பட்டிருந்தது. ஆகவே செழியனுக்கு பக்கத்தில் உள்ள cubicle இல் புதிதாக ஒரு பெண் வந்திருந்தாள். பொட்டு போட்டிருக்கவில்லை. வழமையான தமிழ் பெண்கள் போலல்லாது Modern dress இல் வந்திருந்தாள். "இவா சிங்கள பொண்ணுதாண்டா மச்சான். " என்றான். நாங்களும் இஷ்டத்துக்கு code-wordஇல் கச்சேரி செய்தோம். இது நடந்து சில நாட்கள் கழிந்தபின்னர் நாள் காலை ஒரு அதிர்ச்சி செய்தியோடு செழியன் LunchRoom க்கு ஓடி வந்தான். "டேய் எனக்கு பக்கத்தில இருக்கிற பொண்ணு தமிழ் பொண்ணு போலிருக்கு. அநேக ஆக்கள் இவளோட இங்கிலிஷ்ல தான் கதைக்கினம். நீ சும்மா அவளோட பேச்சு குடுத்துப்பாரு" என்றான். செழியனுக்கு பெண்கள் என்றாலே வியர்த்து ஊத்தும், கை நடுக்கமெடுக்கும். ஆனால் எனக்கு கால் நடுக்கமெடுக்கும் அவ்வளவுதான். இதனால் அடுத்த செக்சனில் வேலை செய்யும் பச்சை தமிழனான "நிலூஷனை" கேட்பதாக முடிவெடுத்தோம்.<br />
<br />
நிலூஷன் பெண்களோடு சர்வசாதாரணமாக கதைப்பான். பொக்கட் நாய் மாதிரி புஸ்புஸ் என்று தலைமுடி வளர்த்திருப்பான். மாதம் இருமுறை சலூன் ஏறி இறங்குவான். சலூன் போகும் முன்னர் இருக்கும் முடிகளின் அளவுக்கும் பின்னரான அளவுக்கும் பெரிய மாற்றமிருக்காது. அவனுக்கு சடையனார் சுவாமிகள் என்று பட்டப்பெயர் வைத்திருந்தோம். அவனை அணுகி இந்த பெண்ணை பற்றி கேட்டோம். "டேய் அது தமிழ் பொண்ணுடா நான் நேற்றே கதைச்சேன். உங்க ரெண்டு பேரை பத்தியும் கேவலமா சொன்னா. மத்தவங்களை பத்தி code-word ல எப்ப பார்த்தாலும் கதைக்கிறீர்களாம். அவா பெரிய Hacker ஆம். இன்னும் ரெண்டு நாள் கழிச்சு உங்கட code-word எல்லாத்தையும் decode பண்ணிடுவாளாம்" என்று பயங்கரமாக சிரித்தான். எங்களுக்கு தலை சுற்றுவது போலிருந்தது.<br />
<br />
எங்கட மேனேஜர் சமிந்ததான் நாங்கள் இருவரும் பேசுவதை ஒட்டுக்கேட்பதற்காக எங்களுக்கு பக்கத்தில் ஒரு பெண் உளவாளியான தமிழ் பெண்ணை வருமாறு செய்திருப்பதாக செழியன் தீர்க்கமாக நம்பினான். எனக்கும் அது உண்மையாக இருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது. அந்த பொண்ணு தமிழ்தானா என்பதில் பெரிய சந்தேகமிருந்தது. நிறைய மேக்கப் போட்டு சுத்தும் தமிழ் பொண்ணுகளுக்கு மத்தியில் மூணு நாளா முகம் கழுவாத மாதிரி இருந்த இந்த பெண்ணை தமிழ் பெண் என்று என்னால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை. ஆனாலும் சரியாக தெரியவில்லை. அதன்பிறகு நானும் செழியனும் அவதானமாக இருப்போம். அந்த பொண்ணு lunch break க்கு போனபிறகு மாத்திரமே எங்கள் சம்பாஷணையை வைத்துக்கொண்டோம். இப்படியாக ஒரு மாதம் போனது.<br />
<br />
சில மாதங்கள் கழித்து அந்த பெண்ணே நீண்டகாலமாக இழுத்துக்கொண்டிருந்த எங்கள் project க்கு வந்தாள். ஒருநாள் project விஷயமா ஏதோ கேட்க வந்தாள். முடிஞ்சு போகும் முன்னர் "அண்ணா! நீங்களும் செழியன் அண்ணாவும் ஜாலியா கதைக்கிறதை கேட்க நல்லாருக்கும். இப்பவெல்லாம் அவரோட கதைக்கிறது குறைவா இருக்கே. அதுசரி நீங்க எனக்கு என்ன பட்டப்பெயர் வச்சிருக்கிறீங்க" என்று கேட்டாள்.<br />
<br />
<br />
செழியன் சொன்னது சரிதான் அவள் நிச்சயம் லேடி ஜேம்ஸ் பாண்ட் தான்.<br />
<br />
பின்குறிப்பு : இம்மாதிரியான சம்பவம் உங்களுக்கே நடந்த மாதிரி இருந்தாலோ நீங்கள் பார்த்தமாதிரியாக இருந்தாலோ குழம்ப வேண்டாம். quarantine சமயத்தில் இவ்வாறான எண்ண கோளாறுகள் ஏற்படுவது சகஜம்தான் :). இது 100% கற்பனை என்று கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-81726669440255903192020-04-21T13:17:00.000-07:002020-04-22T00:57:27.857-07:00Chinaman - ஒரு கிரிக்கெட் படலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
ஷெஹான் கருணாதிலகவின் Chinaman புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். அநேக நேரங்களில் தடித்த புத்தகங்களை வாசிக்கமாட்டேன். சோம்பேறித்தனம்தான் அதற்கான முக்கிய காரணம். எனது சோம்பேறித்தனத்தையும் தாண்டி இப்புத்தகத்தை தெரிவு செய்வதற்கு சில காரணங்கள் இருந்தன.<br />
<div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqM5SOxpDxIN7ae3ZywLsLCo4ooVT_zeqnhCGQSl2VdEkKo0cTidW595dJTeXHES2yYOxAg4S7HR_F0IiIRDlaSZdmAaH8RoY2t38yoYYvdpFfgefpX3sxxAimq7oVhEy2hAjj7knYN9mT/s1600/818TfI1sZZL.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1038" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqM5SOxpDxIN7ae3ZywLsLCo4ooVT_zeqnhCGQSl2VdEkKo0cTidW595dJTeXHES2yYOxAg4S7HR_F0IiIRDlaSZdmAaH8RoY2t38yoYYvdpFfgefpX3sxxAimq7oVhEy2hAjj7knYN9mT/s640/818TfI1sZZL.jpg" width="412" /></a></div>
<br />
<br /></div>
<div>
* இது முழுமையான கிரிக்கெட் சம்பந்தமான கதை. </div>
<div>
* ஒரு இலங்கை எழுத்தாளரால் எழுதப்பட்டது. இதுநாள்வரை சிங்கள எழுத்தாளர்களின் புத்தகங்கள் எதையுமே வாசிக்க வேண்டும் போல இருந்ததில்லை. இது இலங்கை அரசியல் பற்றி இல்லாமல் இருப்பதால் வாசிக்க வேண்டும் என்று யோசித்தேன் </div>
<div>
* இந்திய வாசகர்கள் பலர் சிலாகித்த கதை என்பதே ஆச்சர்யமாக இருந்தது </div>
<div>
* ஆனாலும் இலங்கையில் பெரும்பான்மையினரால் அவ்வளவாக கண்டுகொள்ளப்படாத நாவல். அது இன்னும் பெரிய ஆவலை உண்டாக்கியது.</div>
<div>
* ஒரு இலங்கை எழுத்தாளரினால் எழுதப்பட்ட இந்த புத்தகத்துக்கு GoodReads இல் 4.2 ரேட்டிங் இருந்தது </div>
<div>
* போதாக்குறைக்கு இக்கதையின் நாயகன் "பிரதீப் மத்தியூ" தமிழ் தந்தைக்கும், சிங்கள தாய்க்கும் பிறந்தவன் </div>
<div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj00W21YipFy79jQgI8BP27RcZV9OetUPwYaWAfbwPhmQGsQ284B2GiDFPzxyEDe6Rnng2ztwjn42QomJKikUgmGPxC7buuwHCPyqfjba-nGT4-KVfrhdfMI-HC66mmp7kRGbyAVdwS_ifQ/s1600/166px-Shehan_Karunatilaka.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="249" data-original-width="166" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj00W21YipFy79jQgI8BP27RcZV9OetUPwYaWAfbwPhmQGsQ284B2GiDFPzxyEDe6Rnng2ztwjn42QomJKikUgmGPxC7buuwHCPyqfjba-nGT4-KVfrhdfMI-HC66mmp7kRGbyAVdwS_ifQ/s400/166px-Shehan_Karunatilaka.jpg" width="266" /></a></div>
<br />
<br /></div>
<div>
இக்கதை குடித்து குடித்தே தன்னை அழித்துத்கொள்ளும் "கருணாசேன" என்கிற 64 வயதான விளையாட்டுத்துறை பத்திரிகையாளர் ஒருவரின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. இவரும் "ஆரி" எனப்படும் இவரது நண்பரும் சேர்ந்து "பிரதீப் மத்தியூ" என்கிற ஒரு முன்னாள் தேசிய கிரிக்கெட் விளையாட்டு வீரனை ஒரு முக்கிய காரணத்துக்காக தேடி அலைகிறார்கள். இந்த "பிரதீப் மத்தியூ" என்பவன் வினோதப்பிறவி. இவன் ஒரு அதிரிபுதிரியான variationகளை காட்டக்கூடிய ஒரு ஸ்பின்னர். Chinaman வகை பந்துவீச்சு முறைதான் இவனது பிரம்மாஸ்திரம். ஆனாலும் இவன் விளையாடிய 1980களில் இலங்கையில் அவன் அவ்வளவாக பிரபலமாகவில்லை. அவனைப்பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இதனாலேயே அவனை தேடி அலையும் இந்த இரு நண்பர்களுக்கும் பல சிக்கல்கள் வருகின்றன. ஆனாலும் பிடிவாதக்காரரான "கருணாசேன" விடாப்பிடியாக பிரதீப்பை தேடி அலைகிறார். இந்த கதை நடக்கும் இடம் நான் தற்போது வசிக்கும் இடத்துக்கு அண்மையிலான "கல்கிசை", "சொய்சாபுர", "மொரட்டுவ" பகுதியிலே பெரும்பாலும் நடக்கிறது. பல வருடங்களாக "கருணாசேன" சந்திக்கும் வெவ்வேறான மனிதர்கள் மூலம் பிரதீப்பின் குணாதிசயங்கள் மற்றும் அவனது பாடசாலை கிரிக்கெட் சாகசங்கள் பற்றி அறிந்துகொள்கிறார். என்னதான் தேசிய அணியில் "பிரதீப் மத்தியூ" விளையாடினாலும், எப்போதும் யாருக்கும் அடங்கி போகாமல் பிரச்சனை செய்யும் அவனை பலருக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாகவே அவன் தேசிய அணியிலிருந்து நிறுத்தப்படுகிறான். ஆனாலும் "கருணாசேன" பிரதீப்பை ஒரு திறமையான சுழல் பந்து வீச்சாளனாக கருதுகிறார். முரளிதரனை விடவும் பிரதீப்பை அவருக்கு பிடித்துப்போய் விடுகிறது. அவன் வீசிய சில முக்கிய பந்துகளை கதை நெடுக நினைவுகூருகிறார். ஒரு கட்டத்தில் நண்பன் ஆரியுடன் நடக்கும் விவாதத்தில் முரளிதரனே பந்தை எறிகிறார் என்று தான் நம்புவதாக சொல்கிறார்.இப்படியாக "பிரதீப் மத்தியூ" என்னும் விளையாட்டு வீரன் மீதான மோகத்தில் திளைக்கிறார்.</div>
<div>
<br /></div>
<div>
இங்கு நான் சொல்லாமல் விட்ட முக்கியமான விஷயம் கதையில் வரும் சில கதாப்பாத்திரங்கள். இங்கு கதையில் வரும் முக்கிய சில பாத்திரங்கள் மட்டுமே கற்பனையானவர்கள். இலங்கை கிரிக்கெட்டின் முக்கிய பல வீரர்களும் கதையில் மூன்றாம் மனிதர்களாக ஆங்காங்கே தலை காட்டுகிறார்கள். எண்பதுகளில் தொண்ணூறுகளில் கொழும்பில் இடம்பெற்ற இனப்பிரச்சனை, குண்டுவெடிப்புகள், அந்நேரத்தில் இலங்கைக்கு கிடைத்த உலகக்கிண்ணம் போன்றவை கதையோடு ஒட்டி போகின்றது. இலங்கையின் அரசியல் போக்கு, கிரிக்கெட் ஊழல்கள் கதையில் சரியாக செருகப்பட்டுள்ளது. குறிப்பாக "பிரதீப் சிவநாதன் மத்தியூ" என்கிற பெயரில் "சிவநாதன்" என்ற நடுப்பெயர் கரைந்து போய் "பிரதீப் மத்தியூ" சுருக்கப்படுவதற்கு சரியாக அரசியல் காரணம் கற்பிக்கப்படுகிறது. சிறுபான்மையின வீரன் ஒருவன் ஏன் தேசிய அணியில் இடம்பெறுவது குதிரைக்கொம்பான விஷயம் என்பதை ஒளிவுமறைவின்றி எழுத்தாளர் தெளிவுபடுத்துகிறார். ஒரு பெரும்பான்மை இன எழுத்தாளரிடமிருந்து இதனை நான் எதிர்பார்க்கவில்லை. இப்படியாக அவரின் பல நடுவுநிலையான கருத்துக்கள் கதை நெடுக இருக்கின்றன. இவ்வளவு காலமும் அப்படி ஒரு விசயம் இல்லை என்றுஇவ்வளவு காலமும் நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த கதை வினோதமாக தெரியலாம்.<br />
<br />
எழுத்துநடை மிகவும் சீராக சுவாரசியமாக செல்கிறது. ஒரு குடிகாரன் கதை சொல்லும்போது ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தாவுவான். ஆனால் கதை சுவாரஸ்யமாக இருக்கும். அதுபோலவே காலக்கிரமத்துக்கு ஏற்றவாறு பயணிக்காமல் "கருணாசேனவின்" குடிகார மனநிலைக்கு ஏற்றவாறு கதை பயணிக்கிறது. திடீரென்று "கல்கிசை" தெருவில் ஊர்ந்து போகும் கதை தாஜ் கொட்டலில் நடந்த சம்பவத்துக்கு தாவுகிறது. இந்த non-linear பாணி அநேக நேரங்களில் சுவாரசியம் தருகிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsZMeHMnd__YZNp3CHkHNw4AuhNY_zZ675-DX3Q8dywqiN17gE_8ZF0h-asmiouz4nADyWOJKDJGvPabUm-nklmGfR9M46sLg2jeGX5VoxC6sf1t6nuD9_EufqohVDz4xR3vKZfPLQY9ye/s1600/main-qimg-0daa95a978b1ac75cd772578bc8df846.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="172" data-original-width="214" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsZMeHMnd__YZNp3CHkHNw4AuhNY_zZ675-DX3Q8dywqiN17gE_8ZF0h-asmiouz4nADyWOJKDJGvPabUm-nklmGfR9M46sLg2jeGX5VoxC6sf1t6nuD9_EufqohVDz4xR3vKZfPLQY9ye/s400/main-qimg-0daa95a978b1ac75cd772578bc8df846.jpeg" width="400" /></a></div>
<br />
<br />
இக்கதையில் வரும் அரசியல் பாண்டஸித்தனமாக இருப்பதாக பட்டது. கருணாசேன ஒரு தமிழ் தாதாவை இலகுவாக சந்திக்கிறார். தமிழ் இயக்கங்களுக்கு வெளிப்படையாக உதவும் அந்த தாதாவின் பாத்திரம் நம்பமுடியாததாகவே இருக்கிறது. ஆனாலும் கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தமான புனைவுகளில் நம்பகத்தன்மை ஸ்திரமாக உள்ளது. குறிப்பாக 1987 ல் நியூஸிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் வந்தபோது முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் தலைநகரில் குண்டு வெடிக்கிறது. இதனால் நியூஸிலாந்து அணியினர் நாடு திரும்பினார்கள். இது உண்மை சம்பவம். ஆனாலும் ஷெஹானின் புனைவு இந்த இடத்தில்தான் தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பார்வையாளர்கள் இன்றி ஒருசிலருக்கு மட்டுமேயான அனுமதியுடன் நடக்கிறது. குண்டு வெடிப்பினால் பயந்து போயிருந்த நியூஸிலாந்து வீரர்கள் அரைமனத்துடன் விளையாட சம்மதிக்கின்றனர். முதல் போட்டியில் சந்தர்ப்பம் கிடைக்காத "பிரதீப் மத்தியூ" இப்போட்டியில் விளையாடி எட்டு விக்கெட்டுகளை பறிக்கிறான். தனது மாஜாஜால Chinaman பந்து மூலமாக விக்கெட்டுகளை சாய்ப்பதை நேரில் கண்ணுற்ற "கருணாசேன" அதன் பின்னர் "பிரதீப் மத்தியூ"வின் தீவிர விசிறியாகிறார். ஆனாலும் முதல் இன்னிங்சின் குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நியூஸிலாந்து போட்டியை நிறுத்திவிட்டு நாட்டின் அரசியல் நிலையை காரணம் காட்டி விட்டு வெளியேறுகிறது. இதன் காரணமாக இப்போட்டிக்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்கவில்லை என்று சொல்லி என்னையே நம்பவைத்து விட்டார். நானும் கூகிள் செய்து சலித்தேன். அப்படி ஒரு போட்டியே நடக்கவில்லையாம்.<br />
<br />
<br />
"கருணாசேன"வின் நீண்ட காலத்தேடல் அவரின் மரணத்துடன் தோல்வியில் முடிகிறது. ஆனால் அதன் பின்னரும் கதை நகருகிறது. அதுதான் மிகப்பெரிய காதில பூ சமாச்சாரம். ஆனாலும் தொடர்ச்சியாக வாசிக்கும் போது அது பெரிய விஷயமாக தோற்றவில்லை. </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
உண்மைக்கதை போன்றதான இக்கதை சுவாரசியமாக நகர்த்தப்படுகிறது. உண்மையிலேயே இப்படி ஒரு கிரிக்கெட் வீரன் இருக்கிறானோ அல்லது வேறு ஒருவரது உண்மை பெயரை மாற்றி கதை சொல்கிறாரோ என்று எண்ண தோன்றுகிறது. ஆனாலும் தொடர்ச்சியான நாட்களில் trainல் வேலைக்கு போகும்போது வாசித்தேன். சுவாரசியமான நாட்கள். உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குதோ இல்லையோ வாசித்து விடுங்கள். கதைசொல்லும் பாணி சுவாரசியமாக இருக்கும்.<br />
<br />
இப்புத்தகம் Wisden சஞ்சிகையின் கணிப்பின்படி கிரிக்கெட் சம்பந்தமான புத்தகங்களில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இதை ஹிந்தியில் படமாக்கப்போகிறார்களாம். அங்கு கொலை நடக்கமுன்னராக Chinaman ஐ தரிசித்து விடுங்கள்.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
</div>
</div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-39613827252127177732019-05-05T12:18:00.000-07:002019-05-05T12:18:48.130-07:00வெறுங்கால் சுட்டிப்பையன் ஜென் - Barefoot GEN Comics<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="font-size: large; margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="267" data-original-width="189" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLZPwkytOGPog9-RSQMDeU7PvnOqQAndQDtK96HM1Un0PVkuTaYFZw_a1jTqN8b_d4xoT0eBELzP0t6HDxVP69p42FdOrqoCDTk2lPXP_IxZqDt3A1j0rCptXX_TCLbm4IwIVuCozgkQ2j/s400/download+%25281%2529.jpg" width="283" /></span></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<span style="font-size: large;">போர் என்பது வெறுப்பான விஷயம். அது துயரம் மிகுந்தது. போர் நடக்கும் நாடுகளில் வசிக்கும் மக்கள் வாழ்க்கையே இருள் மிகுந்து விடுகிறது. உயிர் மேல் இருக்கும் ஆசை, மற்றைய ஆசைகளை தின்று விடுகிறது. போரில் ஈடுபடுவர்கள் ஒருநாள் சாகிறார்கள், ஆனால் நடுவில் இருக்கும் சாதாரண மக்கள்தான் நித்தமும் செத்து பிழைக்கிறார்கள். எங்கள் நாட்டின் முப்பது வருட யுத்தத்தின் பெரும்பகுதி எனது சிறு பிராயத்தை ஆக்கிரமித்திருந்தது. யுத்தம் இல்லாத நாடு எப்படியிருக்கும் என்பதே எங்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. ஒரு வருடம் தொடர்ச்சியாக பள்ளிக்கூடம் போகாமல்கூட இருந்திருக்கிறேன். வீட்டில் நித்தமும் விளையாடிக்கொண்டிருந்தேன். சிறுவயதுகளில் எதையும் விளையாட்டாகவே பார்த்ததால் போரின் உண்மையான தார்பரியம் சரியாக விளங்கவில்லை. மிராஜ் பிளேன் வரும்போது கதிரைக்கு அடியில் ஒளித்து பாராட்டு பெற்றேன். "சண்டை தொடங்கிட்டுது" என்றாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சண்டை நடந்தால் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் இருக்கலாம் என்ற ஒரு இனம்புரியாத சந்தோசம் மட்டுமே இருக்கும். ஆனால் வளர்ந்த பிற்பாடு கொழும்பில் இருக்கும்போது ஆமி செக் பண்ண வாரான் என்றாலே காலில் நடுக்கமெடுத்தது வேறு கதை. ஐந்து வயதுகளில் போர் விமானங்கள் தாழ்வாக பறந்தபோது பங்கர்களில் ஒளிவதையே ஒரு விளையாட்டாக எடுத்துக்கொண்டேன். பின்னாட்களில் விமான குண்டுவீச்சில் தெரிந்தவர்கள் பலியானபோதுதான் உண்மை நிலை விளங்கியது. சிறுவர்களுக்கு எல்லாமே விளையாட்டாகவே வாழ்க்கை நகர்கிறது. போர் அவர்களின் வாழ்க்கையை பாதித்தாலும் விளையாட்டு மனநிலையை எதுவும் செய்யாது போலும். ஆனால் அவர்களை நேரடியாக பாதிக்கப்படும்போது விஷயமே தலைகீழாகிவிடுகிறது.</span><br />
<span style="font-size: large;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgG-lxDLcalCTWb_XB1Xg7ZT-fqJdBvUrxxAFv3FGcl3yPFQtNA0BeHs6li3EzMmAHmN2ulL6BnU7gXBefoRugTbILfbuXutyOfGq_F7GfScVj3L04RyBWy30m6SKk-Ehii2tIG45S4aC7n/s1600/i_saw_it1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="font-size: large;"><img border="0" data-original-height="640" data-original-width="419" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgG-lxDLcalCTWb_XB1Xg7ZT-fqJdBvUrxxAFv3FGcl3yPFQtNA0BeHs6li3EzMmAHmN2ulL6BnU7gXBefoRugTbILfbuXutyOfGq_F7GfScVj3L04RyBWy30m6SKk-Ehii2tIG45S4aC7n/s400/i_saw_it1.jpg" width="260" /></span></a></div>
<span style="font-size: large;">1945ஆம் ஆண்டு ஜப்பானின் ஹீரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்படுகிறது. உலக வரலாற்றின் துன்பம் மிகுந்த நிகழ்வு சர்வசாதாரணமாக அமெரிக்காவினால் நிகழ்த்தப்படுகிறது. அதில் கெய்ஜி எனும் ஆறு வயது நிரம்பிய சிறுவன் தனது தந்தை மற்றும் அக்கா, தம்பியை பலியாவதை கண்முன்னே காண்கிறான். சிறுவனான அவனால் அவர்களை காப்பாற்ற முடியாமல் போனாலும், 8 மாத கர்ப்பிணியான தாயுடன் தப்பி பிழைக்கிறான் கெய்ஜி. இந்த அணுகுண்டுஅந்நகரில் வாழ்ந்த மக்கள் எல்லோரின் வாழ்க்கையையும் மாற்றி போட்டுவிடுகிறது. சிறுவனான கெய்ஜியின் மனதில் ஆறாத்துயரை அது ஏற்படுத்துகிறது. கெய்ஜி வளர்ந்து பின்னாட்களில் ஜப்பானின் பிரபல மங்கா காமிக்ஸ் கார்ட்டூனிஸ்ட் ஆக உருவாகிறார். தனது மனதில் பதிந்த துயரத்தை காமிக்ஸ் என்ற மீடியத்தை வடிகாலாக பாவித்து "<i style="background-color: white; color: #222222; font-family: sans-serif;">Ore wa Mita</i>" என்ற பெயரில் காமிக்ஸாக மாற்றுகிறார். அது "I SAW IT" என்று ஆங்கில மொழியில் மொழிமாற்றம் பெறுகிறது. 1972இல் வெளியான அந்த கதையில் இருந்த சோகம், மகிழ்ச்சி, துயரம் எல்லோரையும் கட்டிப்போட்டது. அவர் அதனை தன்னுடைய சுயசரிதம் போன்று நடந்த உண்மையை அப்படியே விவரித்திருந்தார். இத்தொடர் 48 பக்கங்கள் மட்டுமேயான குறுந்தொடர் மட்டுமேயாகும். இந்த தொடருக்கு கிடைத்த அற்புதமான வரவேற்பை தொடர்ந்து "<i style="background-color: white; color: #222222; font-family: sans-serif;">Hadashi no Gen</i>" என்ற பெயரில் இந்த 48 பக்க சிறுகதையினில் ஒருசில கற்பனைகளை கலந்து கிட்டத்தட்ட 2000 பக்கங்களுக்கு மேற்பட்ட நெடுந்தொடராக மாற்றுகிறார். 1973ஆம் ஆண்டு தொடங்கி பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்த இந்த தொடர் இன்றுவரை ஜப்பானியர்கள் மனங்களில் அழியாத இடத்தை பிடித்திருக்கின்றது. யுத்தத்தில் ஊறிப்போன ஒரு தலைமுறைக்கே ஒருவித வினோத ஆறுதலை அது கொடுத்தது.</span><br />
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;">யுத்தத்தில் இடம்பெறும் கோரங்களை தெளிவாக விளக்கும் இந்த கதைத்தொடர் இன்றுவரை சிறந்த போருக்கு எதிரான பிரச்சார கதை என்று புகழப்படுகிறது. ஒபாமாவின் ஆட்சியின் போது அணுகுண்டு தொடர்பான அவரின் சிலமுடிவுகளை பார்த்து மனம் நொந்து போன கெய்ஜி அணுகுண்டுகளின் விளைவுகளை விளக்கும் தனது புத்தகங்களின் பிரதிகளை அனுப்ப முயற்சித்தாகவும் சொல்லப்படுகிறது.</span><br />
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;">இக்கதையில் போர் என்ற மாயவலையில் சிக்கியிருந்த ஜப்பானிய இராணுவம் பொதுமக்களுக்கு இழைத்த கொடுமையை பற்றியும் கெய்ஜி நாகசாவா தெளிவாக விவரிக்கிறார். அவரின் இவ்வாறான பாராபட்சமற்ற கதைசொல்லல் முயற்சி மேலும் நம்பகத்தன்மையை கூட்டுகிறது. இக்கதையில் மனிதர்கள் யாரையும் நிரந்தர வில்லன்களாக சித்தரிக்கவில்லை. போரும் அதன்மூலமாக மனிதர்களுக்கு தோன்றும் சுயநலமுமே உண்மையான வில்லன்களாக சித்தரித்திருக்கிறார். ஒரு போர் எப்படி மனித மனங்களை மாற்றி விடுகிறது என்பது பல காட்சிகளில் உணர்த்தப்படுகிறது. அதுமட்டுமன்றி ஜப்பானிய மக்களின் பல நல்ல குணங்களை பற்றியும் அறியக்கிடைக்கிறது.</span><br />
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;"><br /></span>
<u><span style="font-size: large;">பாகம் 1: அணுகுண்டு வீச்சுக்கு முன்னரான வாழ்க்கை</span></u><br />
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;">கெய்ஜி தன்னை போன்றே உருவாக்கிய கற்பனை கதாப்பாத்திரத்தின் பெயர்தான் "ஜென்". அவனுக்கு ஒரு அக்காவும், இரண்டு அண்ணன்களும் ஒரு குட்டித்தம்பியும் இருக்கின்றனர். போர் காரணமாக ஜப்பானியர்களின் பிரதான உணவான அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் அநேக நேரங்களில் சிறுபிள்ளைகள் பசியில் வாடுகின்றனர். ஒரு காட்சியில் ஜென் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சமைக்கப்படாத அரிசியை திருடி அப்படியே மென்று உண்ணுகிறான். அதுவே அவனுக்கு அமிர்தம் போலிருக்கிறது. உணவின் அருமையை இந்த ஒற்றை காட்சி அருமையாக உணர்த்துகிறது. ஜென்னின் தந்தை போருக்கு எதிரான மனப்பான்மையை கொண்டவர். பொது இடங்களில் போரினால் ஏற்படும் தீமைகளை நேரடியாக தெரிவிப்பதில் எந்தவித தயக்கமும் காட்டாதவர். இதன்மூலமாக போர் என்ற தீவிர மூளை சலவை செய்யப்பட்ட மற்றைய குடித்தனக்காரர்களுடன் எளிதாக சண்டை வளர்க்கிறார். அதனால் கோபமடையும் பக்கத்து வீட்டுக்காரர்கள், அவரது கோதுமை பயிர்களை நாசம் செய்கின்றனர். இந்த நிலையில் வேறு எந்த உணவும் இல்லாத நிலையில் நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகளை பிடித்து வறுத்து உண்கின்றனர். பசியாறிய சிறுவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். இப்படியான பல்வேறான காட்சிகளில் அந்த குடும்பத்தின் கஷ்ட ஜீவனம் உணர்த்தப்படுகிறது. ஆனாலும் இடையிடையே வரும் சிறுவர்களின் குறும்புத்தனங்கள் சோகத்தை குறைக்கின்றன.</span><br />
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;">ஜென்னின் இரண்டு அண்ணன்களும் இராணுவ சம்பந்தமான பயிற்சிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள் எளிதில் மனதை கரைய வைக்கின்றன. அதில் மூத்த அண்ணனான கோஜி கட்டாயமாக சேர்க்கப்பட்ட போர் விமானி ஒருவரை சந்திக்கிறான். அந்த விமானி ஒரு பல்கலைக்கழக மாணவனாக இருக்கும்போதே கட்டாயமாக தற்கொலை விமானப்படையில் சேர்க்கப்படுகிறான். அவன் தனது அம்மா மற்றும் காதலியை நினைத்து பித்து பீடித்தவனாக அலைகிறான். இவ்வாறான மனிதர்கள் போரின் கடுமையான போக்கை வாசிப்பவர்களுக்கு தெளிவாக்குகிறார்கள்.</span><br />
<span style="font-size: large;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjij2CSwlLWY3d2ylrqQwPj52-OtemU37AIyDskq5V78O3QU9hvRawftzoXNrwpZJMrG9JYqhUZm7CfNJ4x47LTGNy8uTcLUp4STciTzJeQx-fviVhgSvvncMHoP2jEoxY7KZlQeEGaSHok/s1600/6a0105369e6edf970b01bb085f612e970d-800wi.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="font-size: large;"><img border="0" data-original-height="823" data-original-width="740" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjij2CSwlLWY3d2ylrqQwPj52-OtemU37AIyDskq5V78O3QU9hvRawftzoXNrwpZJMrG9JYqhUZm7CfNJ4x47LTGNy8uTcLUp4STciTzJeQx-fviVhgSvvncMHoP2jEoxY7KZlQeEGaSHok/s400/6a0105369e6edf970b01bb085f612e970d-800wi.png" width="358" /></span></a></div>
<span style="font-size: large;">இது மட்டுமன்றி வேறுபல நெகிழ்வான தருணங்களும் இக்கதையில் இருக்கின்றன.</span><br />
<span style="font-size: large;">ஒரு முன்னாள் காலை இழந்த இராணுவ வீரனொருவன் ஜன்னல் கண்ணாடிக்கடை வைத்திருக்கிறான். பெரிதாக வியாபாரம் இல்லாமல் எடுத்த கடனை கட்ட வழியில்லாமல் தவிக்கிறான். இதனை சிறுவன் ஜென் தற்செயலாக அவதானிக்கிறான். அவருக்கு எப்படியாவது உதவவேண்டும் என்று எண்ணும் அவன், ஒரு வீதியில் இருக்கும் எல்லா வீட்டு யன்னல் கண்ணாடிகளை கற்களை வீசி உடைத்து விட்டு ஓடுகிறான். அடுத்த நாள் எல்லா வீட்டுகாரர்களும் ஜன்னல் கண்ணாடி கடைக்கு முற்பணம் தந்து புது ஜன்னல் வாங்குவதற்கு வரிசையில் நிற்கின்றனர். இதனை பயன்படுத்தி அந்த கண்ணாடிக்கடைக்காரன் எளிதாக தனது கடனை கட்டி விடுகிறான். ஜென் செய்த உதவியால்தான் தனது வியாபாரம் கூடியது என்பதை அறிந்த அந்த முன்னாள் சிப்பாய் அவனுக்கு ஒரு கப்பல் பொம்மையை பரிசளிக்கிறான்.</span><br />
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;">இப்படியாக செல்லும் முதல் பாகத்தின் இறுதியில் அமெரிக்கர்கள் ஹிரோஷிமா நகர்மீது அணுகுண்டை வீசுகின்றனர். அதன்போது ஏற்பட்ட கடுமையான வெம்மை பலரை எரித்து கொல்கிறது. கட்டடங்கள் நொறுங்குகின்றன. உண்மையில் நடந்ததை போன்றே, ஜென்னும் அம்மாவும் தப்பிக்க வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கிய அப்பாவும், தம்பியும், அக்காவும் அணுகுண்டு உருவாக்கிய தீயினால் எரிந்து மடிகின்றனர். ஒரு சில நிமிடங்களின் பின்னர் மக்களின் வாழ்க்கையே அடியோடு மாறிபோய்விடுகிறது.</span><br />
<span style="font-size: large;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrlSxJDcqls4SJ9YxmZZAiKc3tmi3eA3O4_KRQXeMjkKteQy8qC0N9MQctSvAxYjtNkds4Qyn0doEL_YRP4NLYmCI6-CftKIobRdaw8dJrWxPDUmmwecbW4-pLkOuPAn9fOb6kPOmPf0Fn/s1600/1102c06_e.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="font-size: large;"><img border="0" data-original-height="504" data-original-width="330" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrlSxJDcqls4SJ9YxmZZAiKc3tmi3eA3O4_KRQXeMjkKteQy8qC0N9MQctSvAxYjtNkds4Qyn0doEL_YRP4NLYmCI6-CftKIobRdaw8dJrWxPDUmmwecbW4-pLkOuPAn9fOb6kPOmPf0Fn/s640/1102c06_e.gif" width="417" /></span></a></div>
<span style="font-size: large;"><br /></span>
<u><span style="font-size: large;">பாகம் 2: அணுகுண்டு வீச்சுக்கு பின்னரான அகோர வாழ்க்கை</span></u><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1keb_9V51yyoa-ibYurDhgCvd7TfszMnzXmaKUP_NQHxqdarsllG9es1zpsqI6r6ayAy-hplHwh8ST0ZSSQk-axqUg1mO7iBbyJKt6wyKoRd3SPHJ62wC9Ax7nEO1ajgt0b9-0ULdPopJ/s1600/Gen-birth-resize.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="font-size: large;"><img border="0" data-original-height="929" data-original-width="650" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1keb_9V51yyoa-ibYurDhgCvd7TfszMnzXmaKUP_NQHxqdarsllG9es1zpsqI6r6ayAy-hplHwh8ST0ZSSQk-axqUg1mO7iBbyJKt6wyKoRd3SPHJ62wC9Ax7nEO1ajgt0b9-0ULdPopJ/s640/Gen-birth-resize.jpg" width="446" /></span></a></div>
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;">அணுகுண்டுக்கு பின்னரான நாட்களில் ஜென்னும் அம்மாவும் பல சவால்களை . கட்டட இடிபாடுகளிலேயே அவர்களில் நாட்கள் கழிகின்றன. அவர்களை சுற்றி இறந்தவர்களின் பிணங்கள் அங்கங்கே விழுந்து கிடக்கின்றன. அணுகுண்டு அதிர்ச்சி காரணமாக கர்ப்பவதியான ஜென்னின் தாய் ஒரு பெண் குழந்தையை பெற்றுக்கொள்கிறாள். 2-3 நாட்களாக பட்டினியில் இருக்கும் தாய்க்கு பால் சுரக்கவில்லை. அந்த குழந்தை பாலுக்கு அழும்போது மனது வலிக்கிறது. தான் உணவு உட்கொண்டால் மட்டுமே பச்சைக்குழந்தைக்கான பால் சுரக்கும் என்பதை அறிந்த தாய் ஜென்னிடம் அரிசி வாங்கி வருமாறு கூறுகிறாள். ஆங்காங்கே எரிந்து போன பிணங்களால் மட்டுமே சூழப்பட்ட ஹீரோஷிமா நகரில் அரிசி தேடி அலைகிறான் ஜென். அவன் காணும் இடங்களிலெல்லாம் கருகிய உடல்கள் உயிரோடோ உயிரற்றோ இருக்கின்றன. இப்படியாக தேடி களைத்துப்போன ஜென் ஒரு கட்டத்தில் வழியிலேயே உறங்கி விடுகிறான். அவனை காணும் இராணுவத்தினர் அவனை ஒரு உயிரற்ற சடலமாக கருதி ஏனைய பிணங்களுடன் எரியூட்டுகின்றனர். திடுக்கிட்டு விழித்தெழும் ஜென்னை பார்த்து இராணுவத்தினர் உதவி செய்கின்றனர்.</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQaopOkX6-EkF7yqcUXjowO4x-SZY9Sjs7ayKl3sEgOXKA_MD6m-bqrHbIrdyix1th_ICY9uQtnt7HdtJBXmDlMJusZX0Q9JxxdFN_MpPFEJjChsa0Wd8-Rk3gODR4pOYIqbot4KP25aiW/s1600/Cistern-resize.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="font-size: large;"><img border="0" data-original-height="935" data-original-width="650" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQaopOkX6-EkF7yqcUXjowO4x-SZY9Sjs7ayKl3sEgOXKA_MD6m-bqrHbIrdyix1th_ICY9uQtnt7HdtJBXmDlMJusZX0Q9JxxdFN_MpPFEJjChsa0Wd8-Rk3gODR4pOYIqbot4KP25aiW/s640/Cistern-resize.jpg" width="443" /></span></a></div>
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;">இப்படியாக அரிசி தேடி செல்லும் ஜென், மேற்கொள்ளும் பயணத்தினால் அணுகுண்டின் அழிவுகள் கண்முன்னே காட்டப்படுகின்றன. பல அவலங்கள் மனதை ஏதோ செய்கின்றன. கிட்டத்தட்ட 150 பக்கங்களுக்கு மேலாக சித்தரிக்கப்படும் அவலங்களை வாசிப்பதற்கு ஒரு வன்மையான இதயம் தேவைப்படுகிறது. இவையெல்லாம் உண்மையான நிகழ்வுகள் என்பதை நினைவுகூரும் போது மனம் வலிக்கிறது.</span><br />
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;">எனக்கு ஜப்பானின் மங்கா பாணியிலான சித்திரங்கள் பரிச்சயமில்லை. ஆகவே இப்புத்தகங்களை வாங்கவே பலதடவை யோசித்தேன். என்னை பொறுத்தவரை கார்ட்டூன் பாணியிலான சித்திரங்கள் கதையில் இருக்கும் கொடூரங்களை குறைக்க உதவியிருக்கிறது. நகைச்சுவைக்கான காட்சிகளில் சிறுவர்களின் முகபாவங்கள் சிறப்பாக இருக்கின்றன. எனினும் கெய்ஜியின் சித்திரங்கள் அணுகுண்டின் பின்னரான சேதங்களை ஆவணப்படுத்தப்படுத்த போதுமானதாக இருந்ததாகவே எண்ணுகிறேன்.</span><br />
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgodFsj_59QAk2zJjq0SrAk89eQjxcV74WnqASxn0dDimi9kJo6MbjsTwvztrntO4-IXvADdndTOli861c0gviEZOFaCf3FrOb10CdNNEAJZZimhUEllUIgW0HUJe_HZqVCzBzFMSkYpcOd/s1600/23cc0d17e6d88f33581a4277677fdb02_original.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="font-size: large;"><img border="0" data-original-height="454" data-original-width="680" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgodFsj_59QAk2zJjq0SrAk89eQjxcV74WnqASxn0dDimi9kJo6MbjsTwvztrntO4-IXvADdndTOli861c0gviEZOFaCf3FrOb10CdNNEAJZZimhUEllUIgW0HUJe_HZqVCzBzFMSkYpcOd/s640/23cc0d17e6d88f33581a4277677fdb02_original.jpg" width="640" /></span></a></div>
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;">பின்குறிப்பு :</span><br />
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;">இந்த நெடுந்தொடருக்கு முன்னராக வந்த 48 பக்கங்களிலான "I SAW IT" அந்த சிறுகதை லயன் காமிக்ஸில் "நரகத்தை பார்த்தேன்" என்ற பெயரில் 1995/96 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தொடராக வெளியானது. முதல் பாகம் மாடஸ்தியின் "திகில் நகரம் டோக்யோ" என்ற புத்தகத்தில் நான்கு பக்கங்கள் கொண்ட தொடராக தொடங்கியது. சிறுவயதுகளில் வாசித்த அந்த தொடர் அப்போதே விருப்பத்துக்குரிய தொடராக இருந்தது. உணவு பஞ்சத்தினால் அவதியுறும் கெய்ஜியின் குடும்பம் வெட்டுக்கிளிகளை வறுத்துச்சாப்பிடும் காட்சி இப்பொழுதும் மனதில் இருக்கிறது. இத்தொடரின் அநேக பாகங்களை வாசித்திருந்தாலும், முழுமையான நெடுந்தொடரை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக பத்து பாகங்கள் கொண்ட இத்தொடரின் முதலிரு பாகங்களை வாங்கி வாசித்தேன்.</span><br />
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;"><br /></span>
<br /></div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-68325712388028193582018-11-20T09:59:00.001-08:002018-11-20T10:00:46.810-08:00வாசிப்பு என்னும் மிருகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIogOy_DyfjE1BVE9s5Ol96KbaTr0bV0cwOv0X4YWLTmR-0kEIYgCcl-8jKotxURLNshfGIn52zLGUZgViXbiXWz8or42XnQpHpd9ighK8BsvuDASeKOZpqEDG_K29bJPKdEhR0LUIK-tK/s1600/bettmann-chimpanzee-reading-newspaper_a-l-8668236-14258387.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="550" data-original-width="413" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIogOy_DyfjE1BVE9s5Ol96KbaTr0bV0cwOv0X4YWLTmR-0kEIYgCcl-8jKotxURLNshfGIn52zLGUZgViXbiXWz8or42XnQpHpd9ighK8BsvuDASeKOZpqEDG_K29bJPKdEhR0LUIK-tK/s400/bettmann-chimpanzee-reading-newspaper_a-l-8668236-14258387.jpg" width="300" /></a></div>
சமீப நாட்களில் வாசிப்புக்கு ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது ஒதுக்குகிறேன். இவ்வாறாக நேரம் ஒதுக்குவதற்கே மிகவும் சிரமமாக இருக்கின்றது. இதனாலேயே ரயிலில் பயணம் செய்யும்போதும் தீவிரமாக வாசிக்கிறேன். ரயிலுக்குள் நுழையும் கடல் காற்றை ரசிக்காமல் புத்தகத்துக்குள்ளே விழுந்திருக்கின்றேன். ஒரு பக்க யன்னலால் நுழையும் கடற்காற்று என்னை மயக்க தீவிர முயற்சி செய்து தோற்றுவிட்டு அடுத்தப்பக்க யன்னல் மூலம் தோல்வியுடன் வெளியேறுகிறது. இதற்குமுன்னர் நான் ஒருபோதும் நேரம் ஒதுக்கி புத்தகங்களை வாசித்ததில்லை. வாசிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் வந்தால் மட்டுமே வாசிப்பேன். இப்போதெல்லாம் வாசிப்பு ஒரு குரங்கு போல என்னுடன் தொற்றிக்கொண்டிருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசிக்கும்படி என்னை அது ஏவுகிறது. என் சொல்பேச்சை அது கேட்பதில்லை. அது பேச்சை தட்டுவது கடினமாக இருக்கிறது. இரவு படுக்கைக்கு செல்ல முன்னர் வாசிக்காமல் படுத்தால் அந்த நாளில் ஏதோ குறையிருப்பதாக மனதுக்கு படுகிறது. ஆனாலும் சில நேரங்களில் எனது வாசிப்பு ரசனை எனக்கே பயத்தை ஏற்படுத்துகிறது. எனக்கு எல்லோருக்கும் பொதுவாக பிடித்த புத்தகங்களை வாசிக்கவேண்டும் என்று தோன்றாது. எப்போதோ கேள்விப்படட பழைய கிளாசிக் புத்தகங்களை வாசிக்க வேண்டும் போல திடீரென்று தோன்றும். பழைய ஆங்கிலபடங்களின் மூலமான புத்தகங்களை கண்ணில் படும்போது வாங்குவேன். காரணமேயில்லாமல் அந்த புத்தகங்களுக்குள் மூழ்கிவிடுவேன். ஆனால் அந்த படங்களை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் இருப்பதே இல்லை. எல்லோரும் சிலாகிக்கும் "பொன்னியின் செல்வன்" நாவலை வாசிக்க ஒருபோதும் தோன்றியதில்லை. நான் எதை வாசிக்க வேண்டும் என்பதை அந்த குரங்குதான் தீர்மானிக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.<br />
<br />
அலுவலத்தில் வேலை செய்யும் நண்பன் ஒருவன் விலை கூடிய ஆங்கில காமிக்ஸ்க்களை வாங்கிக்குவிப்பான். எங்களுக்குள் புத்தகங்களை பரிமாற்றம் செய்வோம். அவன் வாங்கும் புத்தகங்களில் பாதிக்கு மேல் அவன் வாசித்ததில்லை என்பது ஆச்சர்யம் தரும் விஷயமாக இருந்தது. அநேக தருணங்களில் டாலடிக்கும் அவனுடைய புத்தம்புதிய புத்தகங்களை நானே முதலில் வாசிப்பேன். அவனே இது ஒருவகை மனோவியாதி என்றான். அதாவது வாங்கி குவித்துவிட்டு அதனை வாசிக்காமல் அடுக்கி அழகு பார்ப்பது. நல்லவேளையாக எனக்கு இந்த வியாதி இப்போதில்லை. ஆனாலும் நான் வாசிக்கும் வீதத்தை விட வாங்கும்வீதம் அநியாயத்திற்கு அதிகம்தான். காணும் இடங்களிலெல்லாம் புத்தகங்களாக வாங்கிக்குவிக்கிறேன். ஆனால் உடனடியாக வாசிப்பதில்லை. அவற்றை வாசிக்க ஏதோ ஒரு உந்துதல் தேவைப்படுகிறது. இப்படித்தான் ஒரு புத்தகவிழாவில் ஷெர்லாக் ஹோம்ஸ் இன் சிறுகதை தொகுப்பை ஆசைக்கு வேண்டினேன். ஆனால் அது எனது புத்தக அலுமாரியில் இரண்டு வருட ஆழ்ந்த தூக்கம் போட்டது. ஒருநாள் ஷெர்லாக் ஹோம்ஸ் இன் கதைகளை அடிப்படையாக கொண்ட "துப்பறிவாளன்" படம் வருவதாக அறிந்தேன். அந்த தீப்பொறி எப்போதோ வாங்கிய புத்தகத்தை வாசிக்க தூண்டியது. புத்தகத்தை வாசித்து முடித்த நான் அந்த படத்தை பார்க்கமுடியாமல் போனது இங்கு முக்கியமில்லை. இவ்வாறே "The Martian" என்ற புத்தகத்தை அதை தழுவிய படம் பார்க்க விருப்பத்தில் வாசித்து முடித்தேன். புத்தகம் வாசித்தவர்களுக்கு அந்த படம் பிடிக்காது என்று ஒரு நண்பன் கூறினான். ஆகவே அந்த படத்தை பார்க்கவில்லை. இந்த புத்தகத்தை ஒவ்வொரு காலைப்பொழுதிலும் ரயிலில் வேலைக்கு போகும்போது வாசித்தேன். இப்புத்தகத்தின் கதை செவ்வாய் கிரகத்தில் நடப்பதாக இருந்ததால் ரயில் கூட செவ்வாய் கிரகம் போல மாயையை உண்டுபண்ணியது. இப்படித்தான் நான் வாங்கும் புத்தகங்கள் என்னுடைய வாசிப்புக்காக தவம் கிடக்கின்றன. எப்போதோ ஒரு நாள்தான் அவற்றுக்கு வரம் கிடைக்கின்றது. அந்த நாள்தான் எப்போது என்று தெரிவதில்லை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz-v5Cs7VQ5zjnu9lt0kz-DhYbREMQF9KmX9CnROJifhLRej0he14DJf3QbV16U0AqPjHlWKDAWuF3Y9homDjLaFB9XgN0oZcK-dI6_f5kIAwxenmZiDEWn1-SZxTPAPeO3oIjQJ0AQm7T/s1600/178403_m.Jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="397" data-original-width="600" height="211" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz-v5Cs7VQ5zjnu9lt0kz-DhYbREMQF9KmX9CnROJifhLRej0he14DJf3QbV16U0AqPjHlWKDAWuF3Y9homDjLaFB9XgN0oZcK-dI6_f5kIAwxenmZiDEWn1-SZxTPAPeO3oIjQJ0AQm7T/s320/178403_m.Jpeg" width="320" /></a></div>
<br />
<br />
நான் காலைப்பொழுது வாசிக்கும் புத்தகத்தை இரவில் தொடர்வதில்லை. இரவுக்கு வேறு ஏதாவது புத்தகம் வாசிக்கிறேன். இப்படித்தான் "Bram Stoker"இன் டிராகுலா புத்தகத்தை காலைப்பொழுதின் இருபது நிமிட புகையிரத சவாரியில் மட்டுமே மூன்று மாதங்களாக வாசித்து முடித்தேன். இரவில் ஏதாவது ஒரு நகைச்சுவை நிறைந்த காமிக்ஸ் ஏதாவது வாசிப்பேன். நாய்கள் ஊளையிடும் நடு ராத்திரியில், டிராகுலா புத்தகத்தை வாசிப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பது வேறு விஷயம். ஆனாலும் எனது மனவோட்டத்துக்கு ஏற்றவாறு புத்தகங்களை அந்த குரங்கு தேர்வு செய்கிறது போலும்.<br />
<br />
<br />
இப்போதெல்லாம் புத்தக விழாக்கள் கணிசமாக நடக்கின்றன. ஏதோ பொய்யான பரபரப்புடன் எல்லா வேலையையும் தூக்கி போட்டுவிட்டு அந்த நிகழ்வுகளுக்கு போகிறேன். சித்தம் பேதலித்தவன் போல புத்தகங்களை பார்வையிடுகிறேன். புத்தகங்கள் நிறைய வாங்குகின்றேன். அவை வீட்டினுள் ஆங்கங்கே புத்தகங்கள் சிதறி கிடக்கின்றன. இயலுமானவரை தேவையற்ற புத்தகங்களை நண்பர்களுக்கு பரிசளிக்க முயற்சிக்கிறேன். ஆனால் என்னை போன்ற வியாதியஸ்தர்களை காணுவது அரிதாகவே இருக்கிறது. வீட்டில் குவிந்து கிடைக்கும் புத்தகங்களை அடுக்கி வைப்பதற்கே திண்டாடுகின்றேன். எது தேவை எது தேவையற்றது என்று வேறுபடுத்தவே முடிவதில்லை. அடுக்கும்போதே புத்தகங்களை நோட்டம் போடுவதற்கே பாதி நாள் போய் விடுகிறது. ஒவ்வொரு புத்தகத்தை அடுக்குவதற்காக தூக்கும்போதும் அப்புத்தகம் சம்பந்தமான நினைவுகள் வந்து அலைக்கழிக்கின்றன. இப்படியே நேரம் போய் விடுகிறது. கொட்டிக்கிடக்கும் புத்தகங்களை அடுக்குவதற்கே இன்னொரு அறையை கட்டுவோமோ என்று யோசிக்கிறேன் ஆனாலும் வீட்டு சொந்தக்காரன் என்ன சொல்லுவானோ என்ற நினைப்பு அதனை அணைத்து விடுகிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFwhoOPTy019aUvYrWSo3WPbWtFExcGyzC1NbXPcRDh6u4dr70MbmrKs8d0ewUWYDMave-4RMakoFUQtJuxyuEIXtUOkD8TfuILZPSGyStznlbYUCL1kKo0mW05tWCkd81v8g6pT-nIdX_/s1600/shadow-reading.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="500" data-original-width="375" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFwhoOPTy019aUvYrWSo3WPbWtFExcGyzC1NbXPcRDh6u4dr70MbmrKs8d0ewUWYDMave-4RMakoFUQtJuxyuEIXtUOkD8TfuILZPSGyStznlbYUCL1kKo0mW05tWCkd81v8g6pT-nIdX_/s320/shadow-reading.jpg" width="240" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-10634598658337286272018-05-28T12:29:00.002-07:002018-05-29T02:22:19.817-07:00ராபீயின் பூனை ஒரு வாயாடி பூனை -- காமிக்ஸ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIbpB3dTuDZ_dyL5k0HNXRUZ89ICx1It1i6Z1mUk4fQHr26Vs2D9gn238prg-EZhMjvIdblMJcYIeGzpXLAhGgkBIUoY14dnHce237pJ5AqdK1mWX8V6gES_2DnPEr-lF6QDT90NK7pv4V/s1600/82882.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="422" data-original-width="318" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIbpB3dTuDZ_dyL5k0HNXRUZ89ICx1It1i6Z1mUk4fQHr26Vs2D9gn238prg-EZhMjvIdblMJcYIeGzpXLAhGgkBIUoY14dnHce237pJ5AqdK1mWX8V6gES_2DnPEr-lF6QDT90NK7pv4V/s400/82882.jpg" width="301" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
எங்கள் வீட்டில், சில வருடங்களுக்கு முன்னர் செல்லப்பிராணியாக ஒரு பூனை பதவிவகித்தது. சும்மா தெருவில் சுற்றி திரிந்த அந்த பூனை அக்காவின் மகள் போட்ட சிக்கன் துண்டுகளினால் கவரப்பட்டு எங்கள் வீட்டின் முற்றத்தில் குடிபுகுந்தது. பசி வந்தால் நிமிசத்துக்கு நூறு முறை மியாவ்.. மியாவ்.. கத்தும். அதற்கு பெயர் வைக்கப்படாமலே இரண்டு மாதங்கள் கடந்தன . எப்போதுமே அம்மாவின் காலை சுற்றி வரும். அம்மாதான் எப்போதுமே சாப்பாடு வைப்பா. நாங்கள் சும்மா அதோடு விளையாடுவதோடு சரி. ஆனாலும் எப்போதுமே கத்தி கூப்பாடு போடும் அந்த பூனையை பார்த்தாலே அம்மாவுக்கு எரிச்சல் வரும். சரியான "சொடுகு" பூனை என்று எப்போதுமே சொல்லுவா. "சொடுகு" என்பது கொஞ்சம் அமங்கலமாக தோன்றியதால் "சுடோகு" என்று மாற்றி விட்டேன். இதுக்கு ஜப்பான் காரனுக மாதிரி சின்ன கண்ணிருக்கு அதான் இப்படி பேரு என்று ஒரு போலி காரணத்தை உருவாக்கினேன். "சுடோகு" எங்களது பின் கதவு வாசலில் இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை வந்து "மியாவ்" கச்சேரி வைக்கும். சாப்பாடு கொடுக்கும்வரை அந்த இம்சை இசை தொடரும். அதுக்கு மீன் வைக்கவேண்டும். ஆனால் எங்கள் வீட்டில் மாதத்திற்கு சில நாட்களுக்கே மச்சம் சமைப்போம். மரக்கறி நாட்களில் பாலும் சோறும் சாப்பிடும். கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மீர்.. ரர்.. வ்.. என்று அதிருப்தியுடன் என்னை பார்த்து முறைத்துவிட்டு மதில் மேல் சோகமாக படுத்திருக்கும். அதற்கு பேச தெரிந்திருந்தால் இன்றைக்கு ஏன் மச்சம் சமைக்கவில்லை என்று அதட்டி கேட்டிருக்கலாம். ஏன் வெள்ளிகிழமைகளில் மட்டும் கட்டாயம் மரக்கறி சாப்பிட்டுகிறீர்களோ என்று அலுத்துகொண்டிருக்கலாம். சுடோகு ஒருமுறை மூன்று குட்டிகளை ஈன்றது. அம்மா நிறைய பால்விட்டு சோறு வைத்தா. அப்பா மச்சம் சமைக்காத நாட்களிலும் கொஞ்சமாக நெத்தலி மீனை சுடோகுவுக்காக வாங்கி வந்தார். குட்டிகளை சில நாட்களுக்கு சுடோகு கண்ணில் காட்டவில்லை. அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு ஓடி விடும். சில நாட்கள் கழித்து தனது குட்டிகளுடன் எங்கள் வீட்டுக்கு விசிட் அடித்தது. எங்கள் வீட்டுக்கு யாராவது விருந்தினர்கள் வந்தால், சுடோகுவும் தனது குட்டிகளுடன் வந்து வாசலில் படுத்திருக்கும். நானும் எனது குடும்பத்துடன் வந்து விட்டேன் பார் என்பது போல பெருமையாக பார்க்கும். சுடோகு சில வேளைகளில் குரல் மாற்றி அதே மியாவ்வை வித்தியாசமாக ராகம் பாடும்போது எனக்கு ஏதோ சொல்ல வருகிறது என்பதை புரிந்துகொள்வேன். ஆனால் ஒன்றுமே புரியாது. ஒரு கடுமையான மழை நாளில் சுடோகு காணாமல் போனது. அதற்கு முதல் நாளில்கூட எனது காலை சுரண்டி ஏதோ சொல்ல முயன்றது. ஹீம்.. அதற்கு பேசும் சக்தி இருந்தால் நல்லா இருந்திருக்கும்.<br />
<br />
இப்படி எனக்கு தோன்றியதை போல கடல் கடந்து பல மைல்களுக்கு அப்பால் உள்ள பிரான்ஸ் தேசத்தின் காமிக்ஸ் ஓவியரான "ஜோன் ஸ்பார்"(joann sfar)க்கும் தோன்றியிருக்கும் போல. அவர் உருவாக்கிய "ராப்பீஸ் கற்" கதையில் ஒரு பூனைக்கு பேச்சு வருவது போல கதையை அமைத்திருப்பார்.<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhriWdI6A_e2QElRuB3fZhm7jJXhjAn870nCos6GVW4CRRGbyY8cENjYITfur1a8s2l2iL-Gh-8qW6G5CWTvkYBAaLwrL5liQIgp_CXcM9u9oZxuw2elu2quv0XjtC1dEHvNTNYLq1k9Duu/s1600/2e17c03c8c0bb778c9d2446e355a8db2.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="815" data-original-width="554" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhriWdI6A_e2QElRuB3fZhm7jJXhjAn870nCos6GVW4CRRGbyY8cENjYITfur1a8s2l2iL-Gh-8qW6G5CWTvkYBAaLwrL5liQIgp_CXcM9u9oZxuw2elu2quv0XjtC1dEHvNTNYLq1k9Duu/s400/2e17c03c8c0bb778c9d2446e355a8db2.jpg" width="271" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Joann Sfar இக்கதையை உருவாக்க காரணமான தனது பூனையுடன்</td></tr>
</tbody></table>
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரை ஒன்றிலே இந்த காமிக்ஸை பற்றி சிலாகித்து எழுதியிருந்தார். வழமை போலவே மாசக்கணக்கில் இந்த கதையை பற்றி கூகிள் செய்தேன். எல்லோரும் கோரசாக நல்லாருக்கு என்றார்கள். படங்கள் நான் அஞ்சாம் வகுப்பில் வரைந்த கார்ட்டூன் ஓவியங்கள் போல சொதப்பலாக இருந்தன. இரண்டு, மூன்று வாரங்களாக ஒவ்வொரு நாளும் விடாது கூகிள் செய்ததில் பைத்தியம் பிடித்தது போலாகியது. இதை நிறுத்துவதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே அந்நேரத்தில் புலப்பட்டது. ஒன்லைனில் ஆர்டர் செய்தேன். புத்தகம் வந்திறங்கிய பின்னர் பெரிய ஏமாற்றம் ஏதும் இருக்கவில்லை. தரமான அச்சு. கலர் நிறைந்த பக்கங்களாக இருந்தன.<br />
<br />
<br />
இந்த கதை "ராபீ" எனப்படும் யூத மத தத்துவங்களை போதிக்கும் ஆசிரியரின் வீட்டில் வாழும் பூனையை பற்றியது. கதை 1930ம் ஆண்டுப்பகுதியில் அல்ஜீரியா நாட்டில் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு ராபீ எனப்படுபவர்கள் "Torah" என்கிற மத நூல்களை கற்று பாண்டித்தியம் பெற்றிருப்பர். இப்படிப்பட்ட ஒரு பழமைவாதியான ராபீயின் வீட்டில் வாழும் பூனை ஒரு பேசும் கிளியை விழுங்கி ஏப்பமிடுகிறது. அதன் மூலமாக அதற்கு பேசும் திறனை பெற்றுக்கொள்கிறது<br />
ஆனால் அது வாயை திறந்தாலே பொய்தான் பேசுகிறது. முதலாவது பொய்யாக தான் அந்த கிளியை விழுங்கவில்லை என்று சாதிக்கிறது. <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
"ராபீ"யுடன் வீண்தர்க்கங்களில் ஈடுபடுகிறது. ராபீயின் பழமைவாத கருத்துக்களை கிண்டல் செய்கிறது. ராபீ "ஒரு தூய யூதனாகிய அந்த பூனையை பொய் பேசக்கூடாது" என்று வாதிடுகிறார். தான் ஒரு யூதன் இல்லை எனவே அந்த கட்டாயம் தனக்கில்லை என வாதிடுகிறது. <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnPs413AZbMFvpqekwy3stVsn9oZaj34FlerTQPsBlu9KkLj6WCUtSPd6k2qlFcLKBELUpQQmTMrGKBLmWPZzfZoUw7N1T6E9tDcpiG4pUliVJuONUq90Z_cSIZ3_kfJ9Pc4PeG9jbJLDq/s1600/6a00d83455e40a69e20167664e17f2970b-500wi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="710" data-original-width="500" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnPs413AZbMFvpqekwy3stVsn9oZaj34FlerTQPsBlu9KkLj6WCUtSPd6k2qlFcLKBELUpQQmTMrGKBLmWPZzfZoUw7N1T6E9tDcpiG4pUliVJuONUq90Z_cSIZ3_kfJ9Pc4PeG9jbJLDq/s1600/6a00d83455e40a69e20167664e17f2970b-500wi.jpg" /></a></div>
தொடர்ச்சியான விவாதங்ககளின் மூலம் தானும் யூத மத நூல்களை கற்று தானும் யூதனாகலாமா என்று கேட்கிறது. அதனுடன் விவாதம் செய்வதில் "ராபீ" தடுமாறுகிறார். இந்த பூனையுடன் தனது மகள் பேசினால் அவளும் பொய் பேசுதல் போன்ற கெட்ட பழக்கங்களை பழகுவாளோ என்று கவலைகொள்ளும் ராபீ பூனையை மகளுடன் பேச தடைவிதிக்கிறார். இங்கு அந்த பூனை ராபீயின் மகளாகிய ஸ்லுபியாவை தனது ரகசிய காதலியாகவே கருதுகிறது. அவளை தன்னுடைய மனதின் இளவரசியாகவே எண்ணி வருகிறது. தானும் ஒரு யூதனாகி அவளை திருமணம் செய்வது பற்றியெல்லாம் விவாதிக்கிறது. இதனை ஸ்லுபியா எளிதாகவே எடுத்துக்கொள்கிறாள். இப்படி போகும் கதை பேசும் சக்தி கொண்ட கிழச்சிங்கம் வேறு வருகிறது. அதுவும் பூனையும் பேசிக்கொள்ளும் காட்சிகளில் நகைச்சுவை இழையோடுகிறது. இதற்கிடையில் ஸ்லுபியாவுக்கு இன்னொரு இளைய ராபீயுடன் காதல் வருகிறது. அவளும் மண முடித்து பட்டணத்துக்கு சென்றுவிட ராபீயும் பூனையும் கவலையடைகிறார்கள் (எஸ்ரா). இருவரும் ஸ்லுபியாவை காண பட்டணம் செல்லுகிறார்கள். அங்கு அவர்களுக்கு ஏற்படும் வினோத அனுபவங்கள் அவர்களுக்கு வாழ்க்கையை புரிய வைக்கிறது<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7wYAXDdOEZks7DUMgHULP0PkI2Bk928ZBQ7EXC312AE30xaaJG04mCNzdiieHCfjddmDpLyrS1es9w_rKoNREG3XCJ2PcdgBSpQq9Xp9rgPBp5EjohHnQexLNTJ8oTtjChnFw0RnB4-NI/s1600/370a0a2250f638805b14a056a28c1dc0.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="682" data-original-width="512" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7wYAXDdOEZks7DUMgHULP0PkI2Bk928ZBQ7EXC312AE30xaaJG04mCNzdiieHCfjddmDpLyrS1es9w_rKoNREG3XCJ2PcdgBSpQq9Xp9rgPBp5EjohHnQexLNTJ8oTtjChnFw0RnB4-NI/s1600/370a0a2250f638805b14a056a28c1dc0.jpg" /></a></div>
<br />
இங்கு நகைச்சுவை தெறிக்கும் வினோத கதையே புதுமையாக இருக்கிறது. கதாசிரியர் பூனைகளில் இயல்பை கதையில் அழகாக கொண்டு வந்திருக்கிறார். பூனைகள் எப்போதும் வளர்ப்பவர்களை தங்களது அடிமைகள் என்று எண்ணும் இயல்புள்ளன. இதனை கதை முழுவதும் காணலாம். பூனையின் இயல்பிலேயே கதை பயணிக்கிறது என்பதை கதையை படித்துமுடித்தபின்னர் உணரமுடிகிறது. இப்புத்தகத்தில் ஓவியங்கள் கன்னா பின்னாவென்று இருப்பது போல தோன்றினாலும். இப்படியான வினோதமான கதையமைப்புக்கு வேறு எதுவும் பொருந்தியிராது என்றே தோன்றுகிறது. மின்சாரமில்லா 1930களில் நடக்கும் கதை அநேக நேரங்களில் விளக்கு வெளிச்சத்திலேயே நடக்கிறது. அதனை அடர்த்தியான வண்ணக்கலவைகள் மூலம் அழகாக காட்டியிருக்கிறார்கள்.<br />
வசனங்கள் 30% கதையை சொன்னால் 70% கதையை ஓவியங்களும் அதன் அடர் வண்ணங்களுமே பொறுப்பெற்கின்றன. ஆனாலும் சில இடங்களில் வசனங்களில் நீளம் அதிகம். கதையின் தன்மை அதற்கு காரணமாக இருக்கலாம்.<br />
<br />
வித்தியாசமான காமிக்ஸ்களை வாசிக்க விரும்புவோருக்கு ஏற்றது. வாசிப்பவர்களின் மனநிலைக்கேட்ப வினோதமான அனுபவங்களை தரவல்லது என்றே எண்ணுகின்றேன். இப்புத்தகத்தை வாங்கிய நாட்களில் நேரமின்மை காரணமாக நள்ளிரவு நேரங்களிலேயே இப்புத்தகத்தை வாசித்தேன். அதனாலோ என்னவோ கதையின் இருளோடு என்னை ஒன்றி கொள்ள முடிந்திருந்தது.<br />
<div>
<br /></div>
</div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-65804099672848846532016-09-24T12:04:00.002-07:002016-09-24T12:12:04.118-07:00Maus காமிக்ஸ்- வரலாற்றின் மேல் காய்ந்துபோன இரத்தத்துளிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1kSmJDnhLVCJ2_tZpI4EqEH-ooE5piFQOaW4LPzSLWzxhhbJJEWGBA_p5WMOXlZsHr_o3zwkFJEG5yc0xQZduRxwIHXPUdaMdxoSBeXZF9C64AtJsWdUxMSE-QRDHDEV-B1UM4nxWVndo/s1600/4648826.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1kSmJDnhLVCJ2_tZpI4EqEH-ooE5piFQOaW4LPzSLWzxhhbJJEWGBA_p5WMOXlZsHr_o3zwkFJEG5yc0xQZduRxwIHXPUdaMdxoSBeXZF9C64AtJsWdUxMSE-QRDHDEV-B1UM4nxWVndo/s640/4648826.jpeg" width="444" /></a></div>
சில மாதங்களுக்கு முன்னராக நண்பர் விஸ்வா பேஸ்புக்கில், உலகத்தில் தலைசிறந்த காமிக்ஸ் ஒன்றை வாசித்துக்கொண்டிருப்பதாக பதிவிட்டார். அதன்பெயரை குறிப்பிடாது, அதனை எங்களை ஊகிக்குமாறு கூறினார். நான் எனக்கு தெரிந்த சில காமிக்ஸ்களை வரிசைப்படுத்தினேன். இன்னும் சிலரும் ஊகிக்க முயன்று தோற்றனர். விஸ்வா எனக்கு அந்த புத்தகத்தின்<br />
அட்டைப்படத்தை எனக்கு chatஇல் அனுப்பினார். அது "Maus" என்னும் ஒரு காமிக்ஸ். Maus என்பது ஜேர்மன் மொழியில் "எலி" என்று பொருள்படும். இது ஒரு தலைசிறந்த காமிக்சாக கருதப்படுவது என்பது ஆச்சர்யம் தந்தது. கூகிள் செய்தபோது வந்த படங்களும் ஏமாற்றம் தந்தன. செய்திதாள்களில் வரும் அரசியல் கார்ட்டூன் போன்ற படங்களே இருந்தன. நுணுக்கமான படங்கள் வரையப்பட்டிருக்கும் ஐரோப்பிய காமிக்ஸ் வாசித்து வளர்ந்த எனக்கு தலைசுற்றலை தந்தன. விஸ்வாவுக்கும் எனக்கும் ரசனை விசயத்தில் கொஞ்சமாக ஒத்துப்போகும். மேலும் விக்கிபீடியாவில் "Maus" உருவான கதை சுவாரஸ்யம் தந்தது. ஆகவே அந்த காமிக்சை ஆன்லைனில் வாங்கினேன். புத்தகம் கைக்கு கிடைத்த போது, பெரிய ஏமாற்றம் எதுவுமில்லை. தரமான பதிப்பு. ஆனாலும் இந்த புத்தகத்தை வாசித்து முடிப்பேன் என்ற நம்பிக்கை அப்போது இருக்கவில்லை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1RHmPsZQdqm1GKEWcG2OD4ZCh0pAd0orsSg9nuBIXwN5AnuclaIaY_JTNNCk1VYEUUSzOxpUSs_bZYlw91YDUXubkBHGxykFaRlJbdTJiYPj_9LJG0rV5n7AYQujjtrRL4BOrpVhzHz8N/s1600/f03b2e09a5e618a0b3dd38b6190ebab9.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="251" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1RHmPsZQdqm1GKEWcG2OD4ZCh0pAd0orsSg9nuBIXwN5AnuclaIaY_JTNNCk1VYEUUSzOxpUSs_bZYlw91YDUXubkBHGxykFaRlJbdTJiYPj_9LJG0rV5n7AYQujjtrRL4BOrpVhzHz8N/s320/f03b2e09a5e618a0b3dd38b6190ebab9.jpg" width="320" /></a></div>
இரண்டாம் உலக யுத்தத்தின்போது போலந்திலுள்ள யூதர்களும் கிட்லரின் இன அழிப்பிலிருந்து தப்பவில்லை. யூதர்கள் வசித்த இடங்களிருந்து விரட்டப்பட்டு அகதி முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர். பலர் "காஸ் சேம்பர்ஸ்" எனப்படும் மனித அழிப்பு சாதனத்துக்குள் கொண்டுசெல்லப்பட்டு ஒரே நேரத்தில் கொல்லப்பட்டனர். அதன்போது சில யூதர்கள் போர் முடியும் தருவாயில் உயிர் பிழைக்கிறார்கள். அதில் தப்பிய ஒரு யூதர்தான் இக்கதையை எழுதிய ஆர்ட் ஸ்பிகேல்மனின் தந்தையாகிய "விலாடேக் ஸ்பிகேல்மன்". தனது தந்தையின் சொந்த கதையை கேட்டு அதனை ஒரு காமிக்சாக மாற்றியுள்ளார். ஆனால் வழமையான கிராபிக் நாவல்களில் வரும் சோகம் வழிந்தோடும் உண்மைக்கதை கிடையாது. வெறும் உண்மைக்கதை அவ்வளவுதான். படங்களில் மனிதர்கள் இல்லை. மனிதர்களுக்கு பதிலாக மிருகங்களே வரையப்பட்டிருக்கும். யூதர்கள் எலிகளாக வரையப்பட்டிருப்பர். அதுபோலவே ஜேர்மானியர்கள் பூனைகளாகவும் அமெரிக்கர்கள் நாய்களாகவும் வரையப்பட்டிருப்பர். படங்கள் கார்ட்டூன் பாணியிலிருக்கும். இரண்டாம் உலக யுத்தக்கதைகளில் தானும் ஒரு பாத்திரமாக ஜரூராக நுழையும் கிட்லரும் இதில் இல்லை. ஆர்ட் ஸ்பிகேல்மனின் தந்தையாகிய விலாடேக் ஸ்பிகேல்மன் சந்தித்த பாத்திரங்கள் மட்டுமே கதையிலிருக்கும். இரத்தம் சொட்ட சொட்ட வரும் வன்முறை சண்டைகாட்சிகளே இல்லை. ஆனால் விலாடேக் ஸ்பிகேல்மன் எதை எவ்வாறு சொன்னாரோ அதை அப்படியே பதிந்திருக்கிறார் கதாசிரியர் ஆர்ட்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwio4NhVtUHUwANPGV-gG0dmwvuKEG4Rm7iVo9EE1LjHDgkfC5qsFDh1hY74Fjr4FCgTuYg-WAScCnemtiC6HkxA60-_MZRUdNuuvUswPuhzLuIYedGpz8ThXqaS0yWhctYtsXlk9kF1sH/s1600/comics-essay-2-spiegelman-maus-112-23.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="440" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwio4NhVtUHUwANPGV-gG0dmwvuKEG4Rm7iVo9EE1LjHDgkfC5qsFDh1hY74Fjr4FCgTuYg-WAScCnemtiC6HkxA60-_MZRUdNuuvUswPuhzLuIYedGpz8ThXqaS0yWhctYtsXlk9kF1sH/s640/comics-essay-2-spiegelman-maus-112-23.jpg" width="640" /></a></div>
இந்த கதை இருவேறு காலங்களில் நகரும். ஒன்று 1970களில் தந்தையின் கதையை கேட்டறிய "ஆர்ட் ஸ்பிகேல்மன்" தந்தையின் வீட்டுக்கு பலமுறை விசிட் அடிக்கும்போது நடைபெறும் சம்பவங்கள். மற்றையது இரண்டாம் உலக யுத்தத்தின்போது நடைபெறும் வேதனை மிகுந்த காலப்பகுதி. இருவேறு காலப்பகுதிகளிலும் வெவ்வேறான சுவாரஸ்யங்களுடன் கதை பின்னப்பட்டுள்ளது. "ஆர்ட் ஸ்பிகேல்மனுக்கும்" அவரது தந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் நேர்மையாகவும் சுவாரஸ்யமாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த உரையாடல்களில் போரினால் மனஉளைச்சலுக்கு உள்ளான ஒரு நபரின் மன உணர்வுகளும் முதுமையின் இயலாமையும் பளிச்சிடும். ஒரு காட்சியின்போது "விலாடேக்" ஒரு கறுப்பினத்தவரை இனத்துவேஷ வார்த்தைகளால் வர்ணிப்பார். அப்போது ஆர்ட் "நீங்கள் இவர்கள் மீது காட்டும் இனத்துவேஷம் எங்களுக்கும் ஜேர்மானியருக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்கிறது" என்று சாடுவார். அப்போதும் அவரது தந்தை சளைக்காமல் "நீ எப்படி யூதர்களையும் கறுப்பர்களையும் ஒப்பிடுவாய்" என்று சொல்லி கோபிக்கிறார். இதிலும் தனது தந்தை ஒரு இனத்துவேஷம் மிக்கவர் என்பதை மறைக்காமல் கதை சொல்லலில் நேர்மையை கடைப்பிடிக்கிறார் ஆர்ட். விலாடேக் முதுமையின்போது காட்டும் பிடிவாதம் காரணமாக ஆர்ட்டுக்கு வரும் தர்மசங்கடங்கள் வசிப்போருக்கு புன்னகையை வரவைக்கின்றன. விலாடேக்கின் மாத்திரைகளை எண்ணும் பழக்கம், உணவுப்பொருட்களை வீணாக்காது தனது மகனுக்காக எடுத்துவைக்கும் பழக்கம் போன்றவற்றை நானே பல வயதானவர்கள் செய்வதை கண்டிருக்கிறேன்.<br />
அதனை காமிக்ஸ்வடிவில் காணும்போது அதில் வருகின்ற உரையாடல்கள் நெகிழ்ச்சியை தருகின்றன.<br />
<br />
இக்கதையை தந்தையிடமிருந்து கேட்டறிந்து எழுத ஆரம்பித்தபோது ஆர்ட்டின் அம்மாவாகிய "அஞ்சா" உயிரோடில்லை. அதற்கு முன்னராக சில வருடங்களுக்கு முன்னாலேயே தற்கொலை செய்துவிட்டிருப்பார். ஆகவே "ஆர்ட் ஸ்பிகேல்மனுக்கு" ஜேர்மானிய கொலைமுகாம்களில் நடந்த இனஅழிப்பை பற்றி தனது தாயிடம் கேட்டறிய வாய்ப்பில்லாமல் போனது.<br />
ஆனால் "அஞ்சா" டயரி எழுதும் பழக்கமுள்ளவர். ஆனாலும் "அஞ்சாவின்" தற்கொலையின் பின்னரான காலப்பகுதியில் இருந்த மனஉளைச்சலில் தானே அவற்றை எரித்துவிட்டதாக தந்தை கூறும்போது ஆர்ட் மனவருத்தம் கொள்கிறார். தனது தாயின் அனுபவங்களை பெற்றுக்கொள்ள ஏதுவாக இருந்த கடைசி சந்தர்ப்பமான டயரி எரிந்து போனதை எண்ணி மனம் வருந்துகின்றார். மீண்டும் மீண்டும் தந்தையின் வீட்டில் டயரியை தேடும்போது ஒரு படைப்பாளனின் வருத்தம் வாசிப்போரையும் தொற்றிக்கொள்கின்றது.<br />
<br />
வதைமுகாமில் இருக்கும்போது விலாடேக் உணவுபொருட்களை பண்டமாற்று செய்து உயிர்பிழைக்கும் காட்சிகள் அவரின் புத்திசாலித்தனத்தை பறைசாற்றுகின்றன. கடைசி வரையிலும் உயிரை தக்கவைக்க விரும்பும் அவரின் மனதைரியம் நிறைய பாடங்களை எங்களுக்கு சொல்கின்றது. இப்படி உயிர்பிழைப்பதற்காக வித்தியாசமான தொழில்களை செய்து தப்பிக்கும் காட்சிகள் அபாரம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
இத்தனைக்கும் இந்த சீரியசான கதையை நகர்த்துவது பொம்மை வடிவிலுள்ள எலிகளும், பூனைகளும், பன்றிகளும்தான். இந்த கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் எப்படி உணர்ச்சி மிகுந்த காட்சிகளில் முகத்தை வைத்திருக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். கதையை வாசிக்கத்தொடங்கி ஐந்தாறு பக்கங்கள் முடிந்த பின்னர். எலிகள், பூனைகளாவும் உங்கள் கண்களுக்கு யூதர்களாகவும், ஜேர்மானியர்களாகவும் தெரிவார்கள். என்னதான் ஒரு எலியை வரைந்திருந்தாலும் அதன் முகபாவம், வயது வேறுபாடு, பால் வேறுபாடு என்பனவற்றை சரியாக வேறுபடுத்தி விளங்குமாறு வரைந்திருப்பார் ஆர்ட்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjM1Qmh3Yq931swYNYbKpjQZX6Ag7DUzfGNefdMozUWZixFNtvTVFyNT-Ztfik9mD0qTD53Jmm0eUMMXcEvrk0gFDlqxL5pYKp4jdl43olVT4faAb6bmzLpJZRk62GSrfDxqPHECncoyM3V/s1600/insidemaus.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjM1Qmh3Yq931swYNYbKpjQZX6Ag7DUzfGNefdMozUWZixFNtvTVFyNT-Ztfik9mD0qTD53Jmm0eUMMXcEvrk0gFDlqxL5pYKp4jdl43olVT4faAb6bmzLpJZRk62GSrfDxqPHECncoyM3V/s640/insidemaus.jpg" width="419" /></a></div>
இந்த புத்தகம் ஒரு த்ரில்லர் இல்லை. ஆக்சன் இல்லை. ஹீரோ வில்லன் இல்லை. கடைசியில் வில்லனை எப்படி ஹீரோ அழிக்கபோகிறாரோ என்ற பதைபதைப்பு இல்லை. ஆகவே நான் இந்த புத்தகத்தை வாசிப்பதில் அவசரம் காட்டவில்லை. ஒவ்வொரு நாளும் நான்கைந்து பக்கங்களாக இரண்டு மாதங்கள் வாசித்தேன். ஒரு கிழமை வாசிக்கவிடின் கதை மறந்து போகுமோ என்று ஒருபோதும் வருந்தியதில்லை. ஆனால் இந்த புத்தகம் வாசித்து முடித்தபின்னர் ஒரு நல்ல மனஅமைதி கிட்டியது. சில புத்தகங்களை வாசிக்கும்போது முடிந்துவிட்டதே என்று வருந்துவோம். அந்த கவலையும் எனக்கு வரவில்லை. ஊடகத்துறையில் முதன்மையான புலிட்சர் விருது வென்ற ஒரே காமிக்ஸும் இதுதான்.<br />
<br /></div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-66740228716144063712016-07-09T03:44:00.000-07:002016-07-09T09:02:00.371-07:00ஐஸ்பெர்க் காமிக்ஸ் இலங்கையில் ஒரு தமிழ் காமிக்ஸ் -- பாகம் 2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgogI6wAwQUxilbZ48-L3fH_ODg0I6RgfBWrE0O3fUAmDIyjbiG2QFSE5N0Dw3jvECm1fvzwUEUhK6xkSstgZsCjI3Wmbs2ZFrmxiB2kiTN1u-ap8a9sLzT3fIBrHRrLDgbTzQcrHR-k_am/s1600/logo.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgogI6wAwQUxilbZ48-L3fH_ODg0I6RgfBWrE0O3fUAmDIyjbiG2QFSE5N0Dw3jvECm1fvzwUEUhK6xkSstgZsCjI3Wmbs2ZFrmxiB2kiTN1u-ap8a9sLzT3fIBrHRrLDgbTzQcrHR-k_am/s1600/logo.png" /></a></div>
<br />
<br />
<br />
<table bgcolor="amber" border="2">
<tbody>
<tr>
<td><span style="color: white;">
சில வருடங்களுக்கு முன்னராக <a href="https://vimalaharan.blogspot.com/2013/11/blog-post.html">ஐஸ்பெர்க் காமிக்ஸ் பற்றிய முதலாவது பதிவினை</a> எழுதினேன். ஏனோ தெரியவில்லை, அதன் தொடர்ச்சியை எழுதுவதற்கு மனம் வரவில்லை. எழுத யோசித்தாலும் எதை எழுதுவது என்று தெரியவில்லை. சமீபத்தில் நண்பர் பிரதீப் ஞாபகப்படுத்தினார். சரி பழைய ஞாபகத்தை திரட்டி எழுதுவோம் என்று முடிவெடுத்தேன். என்னுடைய ஞாபக சக்திக்கு ஏற்றவாறு கீழ்கண்ட பதிவை அமைத்துள்ளேன்.
</span>
</td>
</tr>
</tbody></table>
<br />
<br />
<br />
ஐஸ்பெர்க் காமிக்ஸின் முதலாவது பிரதி பெரிய சைசில் 85ரூபாவில் வந்தது. அண்ணாவே இலங்கையிலுள்ள புத்தக கடைகளுக்கு போன் செய்து புத்தகங்களை அனுப்பி வைத்தான். நான் எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாத ஆள் மாதிரி "தேமே" என்றிருந்தேன். இரண்டு மூன்று வாரங்கள் கழித்து புத்தக விற்பனை குறித்து விசாரித்தால் வந்த சேதி நல்லதாக இருக்கவில்லை. ஒரு சில புத்தகங்களே விற்றதாக சொன்னார்கள். ஓரிண்டு இடங்களில் விற்பனை பரவாயில்லை ரகம். அதுவும் காமிக்ஸ் பற்றிய ஆர்வமிருந்த விற்பனையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எடுத்து சொல்லி விற்றிருந்தார்கள். நான்கைந்து கடிதங்கள் வந்தன. ஒவ்வொன்றும் இரண்டு மூன்று பக்கத்துக்கு இருந்தன. தீவிர காமிக்ஸ் ரசிகர்கள் ஐஸ்பெர்க் காமிக்சை வரவேற்றனர். அவர்களது கடிதங்களே அடுத்த புத்தகத்துக்கான முயற்சிக்கான டோனிக்காக அமைந்தது. ஆனாலும் எப்படி புத்தகங்களை மார்கெட் செய்வதோ என்று தெரியாமல் தடுமாறினோம். காமிக்ஸ் வாசிக்கும் குறிப்பிட்ட வட்ட வாசகர்களுக்கு எவ்வாறு விளம்பரப்படுத்தலாம் என்றும் தெரியவில்லை.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgenupFPFLANnTATDcZcN8-Kfr0bEBHf85e-d8tCv4_QyVM0vfU8cOcy7DHiQYwqCkuREXOXh8aJ5SO0bXSgcJuE_j-uIzOg5ZDCzJ8rzRUVT8doYEnTLpHmJTfMa8ZDcntZwg-sV5A9c9/s1600/Sevinthiya+Kudiyiruppu+Wrapper-I_thumb%255B1%255D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgenupFPFLANnTATDcZcN8-Kfr0bEBHf85e-d8tCv4_QyVM0vfU8cOcy7DHiQYwqCkuREXOXh8aJ5SO0bXSgcJuE_j-uIzOg5ZDCzJ8rzRUVT8doYEnTLpHmJTfMa8ZDcntZwg-sV5A9c9/s640/Sevinthiya+Kudiyiruppu+Wrapper-I_thumb%255B1%255D.jpg" width="441" /></a></div>
<br />
<br />
அப்போதுதான் இன்டர்நெட் என்கிற சமாச்சாரம் ப்ரௌசிங் சென்டர்கள் மூலமாக எங்கள் பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்த சமயம். அண்ணாவும் ஒரு IT ஆசாமி என்பதால் ஐஸ்பெர்க் காமிக்ஸுக்காக ஒரு வெப்சைட் உருவாக்கிடுவதாக முடிவெடுத்தான். நானும் அப்போதுதான் வெப் ப்ரோக்ராம்மிங் பற்றி படித்திருந்தேன். ஆகவே ஒரு நல்ல நாளில் ஐஸ்பெர்க் காமிக்ஸ் வெப்சைட் உதயமானது. வெப்சைட்டை உருவாக்கி ஒரு "டிஸ்கஸன் போரம்" வைத்தோம். அதில் ஐஸ்பெர்க் காமிக்ஸ் சம்பந்தமான அறிவிப்புகளை செய்தோம். இந்த வெப்சைட் மூலமாகத்தான் கடல் கடந்த இந்திய காமிக்ஸ் நண்பர்களின் தொடர்பு ஏற்பட்டது. எங்களது "டிஸ்கஸன் போரம்" காமிக்ஸ் நண்பர்கள் கூடி பழைய அனுபவங்களை விவாதிக்கும் திண்ணையாக தொழிற்பட்டது. இலங்கை நண்பர்களின் வருகையை விட இந்திய காமிக்ஸ் ஆர்வலர்களின் வருகை அதிகம் என்பதுதான் உண்மை. அக்காலத்தில் இன்டர்நெட் என்பது இலங்கையின் எல்லா பகுதிக்கும் சரியாக பரவவில்லை என்பது காரணமாக இருந்திருக்கலாம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2OEbVaxUd9EhiGhqs9KWWDRUu8Gky_0t9O5xGjuGDZiCsmbuu3VOrbB5QqAtcJsffa8Bbfz68emxr50X63LSkodmBlO8mEHjeXmyYo9loLuk-LN11VZnIH9jPLXXnLil6dfsbDFkh1WSB/s1600/Sevinthiya+Kudiyiruppu+Editorial_thumb%255B1%255D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2OEbVaxUd9EhiGhqs9KWWDRUu8Gky_0t9O5xGjuGDZiCsmbuu3VOrbB5QqAtcJsffa8Bbfz68emxr50X63LSkodmBlO8mEHjeXmyYo9loLuk-LN11VZnIH9jPLXXnLil6dfsbDFkh1WSB/s640/Sevinthiya+Kudiyiruppu+Editorial_thumb%255B1%255D.jpg" width="492" /></a></div>
<br />
<br />
ஐஸ்பெர்க் காமிக்ஸ் வெப்சைட் மூலமாக இந்திய காமிக்ஸ் ரசிகர்களான ரகு மற்றும் விஸ்வா ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சில காமிக்ஸ் பிரதிகளை இந்தியாவுக்கு அனுப்பினோம். 2007ஆம் ஆண்டளவில் ரகு என்கிற ராகுலன் என்ற அந்த நண்பர் தாங்களும் புதிதாக காமிக்ஸ் வெளியிட இருப்பதாக சந்தோஷ செய்தியை அறிவித்தார். அவரும் சில காமிக்ஸ் நண்பர்களும் இணைந்து "ஸ்டார் காமிக்சை" தொடங்கியிருந்தார்கள்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiz9n8aiGdQFUohps2rSFEjwotYUPKGXdownTUKt_W_t8JtqAYA2NbPwA7s2s1UaD9DNq1g35OqG3jAIkqLpHAXRE2pMujiFgW9wAbG3LY8RWeORt1okZoFTCvOJ8F3S0p3kEn9vMtIPXhl/s1600/Star+Comics+Logo_thumb%255B1%255D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="192" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiz9n8aiGdQFUohps2rSFEjwotYUPKGXdownTUKt_W_t8JtqAYA2NbPwA7s2s1UaD9DNq1g35OqG3jAIkqLpHAXRE2pMujiFgW9wAbG3LY8RWeORt1okZoFTCvOJ8F3S0p3kEn9vMtIPXhl/s200/Star+Comics+Logo_thumb%255B1%255D.jpg" width="200" /></a></div>
<br />
<br />
முதல் இதழை எங்களுக்கு அனுப்பினார்கள். அதன் தரம் ஆங்கில பதிப்புகளின் தரத்தில் அட்டகாசமாக இருந்ததை கண்டு வியந்தேன். "பனி மலைக்கோட்டை" என்ற கேப்டன் பிரின்ஸ் தோன்றும் சாகசத்தை முதன்முறையாக வாசித்து ரசித்தேன். முதன்முறையாக ஹார்ட் பைண்டிங்கில் ஒரு தமிழ் காமிக்ஸை கண்டேன். ஏதோ ஒரு காரணத்தினால் "ஸ்டார் காமிக்ஸ்" பின்னர் வெளிவரவில்லை. ஆனாலும் என்னை பொறுத்தவரை அந்த இதழ் தமிழ் காமிக்ஸ் உலகில் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது என்றே தோன்றுகின்றது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6vInKa6xngFPv80izmw5KUa7Wd1Xdkhaqq2-OaU3cTK7V5zS1Jugx10J1laxGGvc7cUP17uADXaCWrgqWxb-28Vq-OQK8bk9bCu6q7DRjKpdyrMBvIMIK3IasFRAiE20NnXDchj1gmTyX/s1600/Star+01+Cover1_thumb.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6vInKa6xngFPv80izmw5KUa7Wd1Xdkhaqq2-OaU3cTK7V5zS1Jugx10J1laxGGvc7cUP17uADXaCWrgqWxb-28Vq-OQK8bk9bCu6q7DRjKpdyrMBvIMIK3IasFRAiE20NnXDchj1gmTyX/s400/Star+01+Cover1_thumb.jpg" width="313" /></a></div>
<br />
விஸ்வா அப்போதே எங்கள் காமிக்ஸ் பற்றிய விமர்சனங்களை வழங்கி அதீத ஆதரவு தந்தார். அவரது ப்ளாக்போஸ்டுகள்தான் ஐஸ்பெர்க் காமிக்ஸ் இருந்ததற்காக ஆதாரங்களாக உள்ளன. இப்போது இந்த போஸ்டுக்கான படங்களை அங்கிருந்தே உருவியுள்ளேன். இவ்வாறான ப்ளாக்போஸ்ட்கள் மற்றும் நீளமான கடிதங்கள் அடுத்தடுத்த புத்தகங்களை வெளியிட உந்துதல் அளித்தன என்பது நிச்சயம்.<br />
<br />
முதலாவது இதழின் பின்னராக இரண்டாம் இதழுக்கான வேலைகளை அண்ணா தொடங்கினான். முதலிரண்டு புத்தகங்களுக்காக ஏற்கனவே ரோயல்டி கட்டணங்கள் கட்டி விட்டதால் இரண்டாம் புத்தகத்தை உடனடியாக வெளியிட வேண்டிய கட்டாயம். முதல் இதழைப்போலவே இரண்டாம் இதழுக்கும் ஆங்கில பதிப்பு எங்களிடம் இருந்ததால் மொழிபெயர்ப்பு எளிதாக இருந்தது. ஆனால் இம்முறை நானும் மொழிபெயர்ப்பில் உதவினேன். இப்போது அந்த புத்தகத்தை பார்க்கும்போது பல இடங்களில் சொதப்பியிருப்பதை உணரமுடிகின்றது. முதல் புத்தகம் பெரிய சைசில் ஜரூராக 85ரூபா விலையில் வந்தது. விற்பனை மந்தத்திற்கு விலையின் உச்சம் காரணமாக இருக்கலாம் என்று அண்ணா கருதினான். அதனால் இரண்டாம் புத்தகம் 50ரூபா விலையில் வழமையான சின்ன சைஸுக்கு மாற்றப்பட்டது. இம்முறையும் அண்ணாவே விற்பனையாளர்களுக்கு அனுப்பிவைத்தான்.<br />
<br />
இலங்கை முழுவதுக்குமாக XIIIஇன் உரிமை வாங்கப்பட்டிருந்தாலும் அதனை ஐஸ்பெர்க் காமிக்ஸ் அதனை சரியாக பயன்படுத்தியிருக்கவில்லை. குறிப்பாக சிங்களம் இலங்கையில் எழுபது சதவீத மக்களின் மொழி, ஆகவே அதில் வெளியிடும் யோசனையை அண்ணா சொன்னான். எங்களுக்கு சிங்களம் சுத்தமாக தெரியாது. ஆகவே ஒரு சிங்களம் படிப்பிக்கிற ஒரு மாஸ்டரின் உதவிகொண்டு மொழிபெயர்ப்பதாக ஏற்பாடு. சில நாட்களில் ஆர்வமாக தமிழை சிங்களத்தில் மொழிபெயர்த்து தந்துவிட்டார். ஆனால் அவர் என்னத்தை எழுதியிறுக்கிறாரோ... அது சிங்கள காமிக்ஸ் ரசிகர்களிடம் எடுபடுமா என்று தலையை பிய்த்துக்கொண்டோம். எனது சிங்கள நண்பர்களிலே காமிக்ஸ் வாசிக்கும் நண்பனிடம் சிங்கள மொழிபெயர்ப்பு ப்ரூப் காமிக்ஸை கொடுத்து வாசிக்குமாறு சொன்னேன். இரண்டு நாளைக்கு பிறகு வந்த அவன் இந்த மொழிபெயர்ப்பு சரிவராது. சிங்கள காமிக்ஸ் பேச்சுவழக்கில் எழுதுவார்கள். ஆனால் இது எழுத்து வழக்கில் போர்மலா இருக்கு. இது எடுபடும் என்று தோணலை என்று கை விரித்தான். சரியான மொழிபெயர்ப்பாளர் இல்லாததால் சிங்கள காமிக்ஸ் ஐடியா கைவிடப்பட்டது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQB8NfNeGdAAkdGMWb0SwRWicMaiIuKyWcPED1UDVUT2EciM4NzclKX7MN4Euh8EDnzhjaKrPnUePG71Z_jDRdB79ujF-m8N2ak58t51urPxTSgeAQqzSuqM3fJmB_IQFFVJZqqfH2pgqi/s1600/TCU+Contest+1+C.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQB8NfNeGdAAkdGMWb0SwRWicMaiIuKyWcPED1UDVUT2EciM4NzclKX7MN4Euh8EDnzhjaKrPnUePG71Z_jDRdB79ujF-m8N2ak58t51urPxTSgeAQqzSuqM3fJmB_IQFFVJZqqfH2pgqi/s400/TCU+Contest+1+C.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">இன்சைடர்ஸ் விளம்பரம்<br /></td></tr>
</tbody></table>
அது அவ்வாறு போய்கொண்டிருக்க தமிழ் காமிக்ஸின் அடுத்த இதழுக்கு என்ன செய்வது என்ற யோசனை தலையிலேறியது. XIIIக்கு பிறகு யார் என்ற கேள்வி எனக்கு எப்பவுமே இருந்தது. அண்ணாவோ தோர்கல், அல்டேப்ரன் என்ற வேற்றுகிரகக்கதை, இன்சைடர்ஸ் என்ற பெண் உளவாளியின் சாகசம் என்ற பெரிய லிஸ்ட் ஒன்று வைத்திருந்தான். ஆனால் அந்நியமான கதைகளை தொடுவதில் பல சிக்கல்கள் இருந்தன. அவர்கள் அனுப்பிய சாம்பிள்கள் பிரெஞ்சு மொழியிலிருந்தன. படம் பார்த்து கதையின் தரத்தை மதிப்பிடுவது சிரமம் என்றே புரிந்தது. உதாரணமாக பவுண்சரின் முதலாம் பாகமும் அவர்கள் அனுப்பிய சாம்பிள்களில் இருந்தன. ஆனால் அக்கதையின் படங்கள் கவர்ந்தாலும் சிக்கலான கதையின் போக்கு பிடிபடவில்லை. ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான "கேப்டன் டைகர்" என்று அறியப்படும் ப்ளுபெரியை அறிமுகப்படுத்துவது என்று தீர்மானித்தோம். ஆனால் இதுவரை தமிழில் வராத கதைகளை கதைகளை தேடினோம். அப்போது இளமைக்கால டைகர் கதைகளை முத்து காமிக்ஸ் வெளியிட்டிருக்கவில்லை. ஆகவே அக்கதைகளை தெரிவுசெய்தோம்.<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh34FVWJ01hqzfWyQt8GiyLcTzXiU7IsUDs-x5o1DM6iHc2p2m84w-xsR8mxKdfMPfm2trBKv-AOcRYmgzdWYnUlBbjM0iR5JtmaAYTrztXoJVtWALifOd3obd0fyNC7XYcrv13l3G7Qjv6/s1600/TCU+Contest+1+B.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="295" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh34FVWJ01hqzfWyQt8GiyLcTzXiU7IsUDs-x5o1DM6iHc2p2m84w-xsR8mxKdfMPfm2trBKv-AOcRYmgzdWYnUlBbjM0iR5JtmaAYTrztXoJVtWALifOd3obd0fyNC7XYcrv13l3G7Qjv6/s400/TCU+Contest+1+B.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">வாஸ்கோ கதையின் விளம்பரம்</td></tr>
</tbody></table>
<br />
ஒரு நல்ல நாளில் Dargaud நிறுவனத்திலிருந்து சாம்பிள் புத்தகம் வந்திறங்கியது. அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பு சாம்பிள்கள் இல்லையென கையை விரித்துவிட்டனர். அப்போதுதான் தொடங்கியது சங்கடம். விசாரித்து பார்த்தபோது பிரெஞ்சு மொழிபெயர்ப்பு கொழும்பில் செலவு கூடின விஷயம் என்ற உண்மை தெரிந்தது. வழமையாக ஓரிரண்டு பக்கங்கள் மட்டுமே மொழிபெயர்க்கும் அவர்கள் இருபத்தைந்து முப்பது பக்கங்கள் மொழிபெயர்ப்பதற்கு யானை விலை குதிரை விலை சொன்னார்கள். அப்போதுதான் அண்ணாவின் சாப்ட்வேர் மூளை வேலைசெய்தது. "கூகிள் டிரான்ஸ்லேடர்" மூலமாக மொழிபெயர்க்கலாம் என்றான். கதையில் பக்கபக்கமாக வரும் வசனங்களில் முதலில் ஒரு நண்பரின் உதவிகொண்டு டைப் செய்து எடுத்தோம். பின்னர் அதனை "கூகிள் டிரான்ஸ்லேடர்"ல் மொழிபெயர்த்தேடுத்தோம். "கூகிள் டிரான்ஸ்லேடர்" தனது ஆரம்ப காலங்களில் ஓரளவுக்குத்தான் மொழிபெயர்க்கும். ஆகவே ஆங்கிலத்தில் டிரான்ஸ்லேட் ஆன சமாச்சாரம் கொஞ்சம் விளங்கியது. குறிப்பாக ப்ளுபெரி லோங் சாம் என்ற தப்பியோடிய அடிமையுடன் கதைக்கும் வசனங்கள் பிரெஞ்சு கிராமீய வட்டார வழக்கு மொழியில் இருந்ததால் "கூகிள் டிரான்ஸ்லேடர்" அநியாயத்துக்கு திணறியது. அந்த பக்கோடா வசனங்களுடன், படங்களையும் பார்த்து, கதையோட்டத்திற்கு ஏற்றவாறு வசனங்களை தீர்மானித்தோம். அதனை மொழிபெயர்ப்பது வினோதமான சவாலாகவிருந்தது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjr8OTERgVH8tlosONg9r3Hph6ocx9l_MmFOD107KBqR20t8V2g-_SKg_g7FD6gFOyMG2FqfhLzrH4jw2sMTH1kNWTyhiwEJ7lodRZskwhsBylf00s1pUfpINll1ScRMQsrGcIZg1UOgkP/s1600/Iceberg%25233-Front_thumb%255B1%255D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjr8OTERgVH8tlosONg9r3Hph6ocx9l_MmFOD107KBqR20t8V2g-_SKg_g7FD6gFOyMG2FqfhLzrH4jw2sMTH1kNWTyhiwEJ7lodRZskwhsBylf00s1pUfpINll1ScRMQsrGcIZg1UOgkP/s640/Iceberg%25233-Front_thumb%255B1%255D.jpg" width="474" /></a></div>
<br />
இது இப்படி போய்கொண்டிருக்க அண்ணா செய்த ஒரு காரியம் எனக்கே வியப்பளித்தது. இனிமேல் இப்படி பிரெஞ்சு மொழிபெயர்ப்புக்கு திணறுவதை காட்டிலும் பிரெஞ்சு படித்துவிடலாம் என்று அண்ணா முடிவு செய்தான். ஆனால் இரண்டு மூன்று கிளாஸ் போய்விட்டு முழிபிதுக்கியவாறு வீடு திரும்பினான். "என்னடா சோதனை இது. பிரெஞ்சில் கதிரை மேசைக்கெல்லாம் ஆண்பால் பெண்பால் பாக்கிறாணுக" என்று அலுத்துக்கொண்டான். காமிக்ஸ் மேல் அவனுக்கிருந்த பற்று அவனை பிரெஞ்சு க்ளாஸுக்கு கொண்டு போய் விட்டது. அவனும் சலிக்காமல் சில க்ளாஸுக்கு போனான். அவனை மாதிரி ஒரு காமிக்ஸ் வெறியனை கண்டதில்லை.<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhydFCoNwoaaXhsAIRQmNY7gAJzkIy60KScRF6Qv1q4eUMtFc3obzJnOb4Gv0MHQONqsqBw1pXrppEATS9yjcyT5b6RxqnuiWNN_r1tMhCqTapYSTKhm0jltUodZ-peVgPoyVKphcLc6jF7/s1600/Iceberg%25233-Page-15%255B3%255D.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhydFCoNwoaaXhsAIRQmNY7gAJzkIy60KScRF6Qv1q4eUMtFc3obzJnOb4Gv0MHQONqsqBw1pXrppEATS9yjcyT5b6RxqnuiWNN_r1tMhCqTapYSTKhm0jltUodZ-peVgPoyVKphcLc6jF7/s640/Iceberg%25233-Page-15%255B3%255D.jpg" width="462" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ப்ளுபெரியின் பெயர் வந்த காரணம்</td></tr>
</tbody></table>
<br />
இரண்டாம் இதழைபோலவே ப்ளுபெரியின் சாகசமும் அம்பது ரூபாயில் விற்பனைக்கு அனுப்பப்பட்டது. விற்பனையின் பின்னராக சில கடிதங்கள் வந்தன. ஆனால் விற்பனை அவ்வளவு முன்னேற்றமில்லை. வெறும் இருபது லட்சம் தமிழர்கள் வாழும் நாட்டில் காமிக்ஸ் என்ற ஊடகம் சென்றடைய வேறு லெவலில் முயற்சி செய்ய வேண்டும் என்பது புரிந்தது. 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில்தான், நிழல் உள்நாட்டுப்போர் நிஜமாக உருமாற தொடங்கியிருந்தது. போரின் தாக்கம் காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான தொடர்பு பாதிக்கப்பட்டது. கிளிநொச்சிக்கும் 50 புத்தகங்கள் அனுப்பினோம். அதன்பிறகு அதைப்பற்றி கேட்கத்தோன்றவில்லை. பணம் வராததற்கு வெவ்வேறு நியாயமான காரணங்கள் இருந்தன. அப்போதுதான் நாட்டில் சமாதான பேச்சுகள் முடிந்து போர் உத்தியாகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு வளைக்குள் பதுங்கிய எலிகளாணோம். கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எங்கள் வாழ்க்கைமுறையே மாறிப்போனது. காமிக்ஸ் வெளியிடும் யோசனையே வரவில்லை. ஏதோ சின்ன வயசு ஆசைக்கு மூன்று புத்தகமே அதிகமோ என்று தோன்றியது. இப்போதுகூட ஏதாவது ஒரு ஆங்கில காமிக்ஸை வாசிக்கும்போது தமிழில் வெளியிடுவோமா என்று ஆசை வருவது உண்மைதான். அதற்கு காலம் பதில் சொல்லலாம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDnWopEjO7_AoYhuARYOSZfbZVpvYb0Uiijcnu_-5N7qZ636m0lyHJq29mBRIG4QcSlTh3ISHbQQeYq0Rar023ZPIF5WxfvJfX78WpERbyEHFGCEARs6uZ4weCo0aYpr9VZfgUkc7OW0vt/s1600/Sevinthiya+Kudiyiruppu+Wrapper-II_thumb%255B1%255D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDnWopEjO7_AoYhuARYOSZfbZVpvYb0Uiijcnu_-5N7qZ636m0lyHJq29mBRIG4QcSlTh3ISHbQQeYq0Rar023ZPIF5WxfvJfX78WpERbyEHFGCEARs6uZ4weCo0aYpr9VZfgUkc7OW0vt/s640/Sevinthiya+Kudiyiruppu+Wrapper-II_thumb%255B1%255D.jpg" width="438" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<br />
படங்கள் பின்வரும் நண்பர்களின் தளங்களிருந்து சுடப்பட்டன. நன்றி...<br />
<a href="http://tamilcomicsulagam.blogspot.com/">http://tamilcomicsulagam.blogspot.com/</a><br />
<a href="http://www.comicology.in/">http://www.comicology.in/</a><br />
<br />
<br />
<br />
<a href="http://www.comicology.in/2007/08/star-1-captain-prince-april.html">http://www.comicology.in/2007/08/star-1-captain-prince-april.html</a><br />
<a href="http://tamilcomicsulagam.blogspot.com/2008/09/iceberg-comics-srilankan-tamil-1st.html">http://tamilcomicsulagam.blogspot.com/2008/09/iceberg-comics-srilankan-tamil-1st.html</a><br />
<a href="http://tamilcomicsulagam.blogspot.com/2008/09/iceberg-comics-2nd-issue-xiii.html">http://tamilcomicsulagam.blogspot.com/2008/09/iceberg-comics-2nd-issue-xiii.html</a><br />
<a href="http://tamilcomicsulagam.blogspot.in/2008/09/icerberg-comics-3rd-issue-blueberry.html?m=1">http://tamilcomicsulagam.blogspot.in/2008/09/icerberg-comics-3rd-issue-blueberry.html?m=1</a><br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-6654323164914414082016-05-28T12:34:00.000-07:002016-05-28T12:34:04.376-07:00ஊழிகாலத்தில் ஒரு காமிக்ஸ் வேட்டை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2MKEtdKWxWu43FvQQ8DoypKcbunytjyPeC30vApLxdgycYcUUP9m17aG5acqqijueojsd8AChELpfIwcd9BeIOBNjyS5_QaTGp922-Tw3ZNJsl3CncNkAsoPrah58BK_gsudL1kOQASbF/s1600/images.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="221" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2MKEtdKWxWu43FvQQ8DoypKcbunytjyPeC30vApLxdgycYcUUP9m17aG5acqqijueojsd8AChELpfIwcd9BeIOBNjyS5_QaTGp922-Tw3ZNJsl3CncNkAsoPrah58BK_gsudL1kOQASbF/s400/images.jpg" width="400" /></a></div>
1997ஆம் ஆண்டளவில் நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். காமிக்ஸ் படிப்பற்காகவே பள்ளிக்கூடம் போன காலம். பள்ளிக்கூடத்தில் காமிக்ஸ்களை கைமாற்றிக்கொள்வோம். சமூகக்கல்வி பாடம் நடக்கும்போது மாயாவியின் "தலையில்லா கொலையாளி" பாக்கெட் சைஸ் புத்தகம் எனது சமூககல்வி புத்தகத்துக்கு நடுவே இருக்கும். எங்களிடம் இருக்கும் காமிக்ஸ் புத்தகங்களை கைமாற்றிகொள்வோம். பாடசாலை நேரத்திலேயே வாசித்துவிட்டு கொடுத்துவிட வேண்டும். வீட்டுக்கு கொண்டு செல்ல அனுமதியில்லை. இதற்காகவே நான், சிவா, கிச்சா என்கிற கிருஸ்ணா, அச்சா என்ற அச்சுதன் ஆகியோர் கடைசி வரிசையில் இருப்போம். கணித டீச்சர் முக்கால்வாசி நேரம் ப்ளாக் போர்டை பார்த்தே பாடம் படிப்பிப்பா. நாங்களும் சீரியஸாக கணித புத்தகத்தை பார்ப்பது போல ஒரு பீரியட்டில் 25 பக்கம் காமிக்ஸ் வாசித்துவிடுவோம். இதற்காகவே தவறாமல் ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு போவேன். பள்ளிக்கூடம் போக அடம்பிடிக்கிற பயல் திடீரென்று ஒழுங்கா போறானே என்று அம்மாவுக்கு ஒரே ஆச்சர்யம்.<br />
<br />
அப்போது சண்டை கடுமையாக நடந்த நேரம். இந்தியாவிலிருந்து அநேக நேரங்களில் படகினில் வரும் ஏனைய பொருட்களுடன் சில புத்தகங்களும் வந்திறங்கும். ஆனால் சில மாதங்களாக கடலில் அடிக்கடி சண்டை நடந்தது. இந்தியாவிலிருந்து ஒரு சாமானும் வரவில்லை. இதனாலேயே எங்கள் பகுதிக்கு காமிக்ஸ் வறட்சி. பருத்திதுறையிலிருக்கும் புத்தககடைக்கு வாரத்துக்கு ஒருமுறை சைக்கிள் மிதித்து தோல்வி கண்டோம். இதற்கு மேல் என்ன செய்வது கடுமையான சிந்தனையிலிருந்தோம். சிவா பள்ளிகூடத்துக்கு அடிக்கடி "கட்" அடிக்க ஆரம்பித்தான். கேட்டால் "பள்ளிகூடத்துக்கு வந்து என்னதான் செய்யிறது" என்பான். ஆண்கள் பாடசாலை வேறு. பள்ளிக்கூடம் போரடிக்க ஆரம்பித்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
இப்படியாக போன காலப்பகுதியில், கிச்சா ஒரு நல்ல மழைநாளில் வினோத தகவலுடன் வந்தான். யாழ்ப்பாண டவுணுக்கு அருகிலுள்ள ஒரு பழைய லைப்ரரியை மூடபோகிறார்களாம். அதிலுள்ள புத்தகங்களை எல்லாம் விற்பதாக இருக்கிறார்களாம். என்பதுதான் அந்த தகவல். அதில் பழைய காமிக்ஸ்கள் இருக்குமோ? என்பதுதான் எங்களுக்கான மில்லியன் டொலர் கேள்வி. இந்த தகவலை கிச்சாவுக்கு சொன்னது அவன்ட மாமா. அவருக்கே யாரோ ஒரு கூட்டாளி சொன்னாராம். சும்மா காதுவழியா வந்த செய்திதான். புத்தகங்கள் முடிந்து விட்டனவா என்று தெரியாது. மேலதிக தகவலை கேட்டு உறுதிபடுத்த ஒருவழியும் இல்லை. போதாக்குறைக்கு யாழ்ப்பாண டவுண் எங்கள் ஊரிலிருந்து பதினாறு மைல் தூரம். போறவழி முழுக்க ஆமிகாரன்ட செக்பொயிண்டுகள். இறக்கி ஏத்தி குசலம் விசாரிப்பானுக. டவுணுக்கு போய் வர ஒரு நாள் முழுக்க போகும். போதாக்குறைக்கு அந்த காலத்துல யாரும் அவ்வளவு தூரம் போக மாட்டார்கள். வழியில் எதுவும் நடக்கலாம். ஆகவே எங்கள் காமிக்ஸ் கனவுகளை பெரிய பூட்டுபோட்டு பூட்டி விட்டு வேற வேலையை பார்த்தோம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbAehLDqDPSk-pQmnLM9LZS4XWVYJnzBEHztqlY3iYu8m-waKCW5NDMGRTab7KjW5NJaYs0KimSxzmT7SPGiHBAX71olP0Tx1oMnFJA3bvnUl8NFIfJ_uN7ndSLCzOTT0L4RTwySFEpnYU/s1600/Lion081PazhiVaangumPuyal_thumb1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbAehLDqDPSk-pQmnLM9LZS4XWVYJnzBEHztqlY3iYu8m-waKCW5NDMGRTab7KjW5NJaYs0KimSxzmT7SPGiHBAX71olP0Tx1oMnFJA3bvnUl8NFIfJ_uN7ndSLCzOTT0L4RTwySFEpnYU/s400/Lion081PazhiVaangumPuyal_thumb1.jpg" width="270" /></a></div>
இப்படியாக ரெண்டு நாட்கள் கழிந்தன. அன்று மத்தியானம் ஒருமணி இருக்கும். கடைசிப்பாடம் நடந்துகொண்டிருந்தது. இங்க்லீஷ் வாத்தியார் அரைமயக்க நிலையில் சலிப்புடன் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். நாங்களும் தேமே என்று கேட்டுகொண்டிருந்தோம். அச்சா நல்ல நித்திரையில் தூங்கி வழிந்தான். நானும் கிச்சாவும் அவன் எப்போது கீழே விழுவான் என்று ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று அச்சா விழித்துக்கொண்டான். என் காதில் "டேய் நாளைக்கே டவுணுக்கு போவோம். அந்த லைப்ரரியில் நமக்கு காமிக்ஸ் புத்தகம் கிடைக்கிறதா கனாகண்டேன்" என்றான். அரைநித்திரையில் ஏதோ உளறுகிறான் என்று நினைத்துக்கொண்டேன். "டேய்! நான் வகுப்பறையில் கண்ட கனவெல்லாம் பலிச்சிருக்கு. நிச்சயமா இதுவும் பலிக்கும்" என்றான் உறுதியாக.<br />
<br />
பள்ளிக்கூடம் முடிந்தபின்னர் ஆலமரத்துக்கு கீழே திட்டமிடலை ஆரம்பித்தோம். அடுத்த நாளே யாழ்ப்பாணம் போவதாக ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அச்சா முன்னின்று திட்டங்கள் வகுத்தான். அடுத்த நாள் காலை பள்ளிக்கூடத்துக்கு போவது போல் வெளிக்கிட்டுகொண்டு வந்து அப்படியே "தட்டி வானில்" டவுணுக்கு போவோம் என்று நான் யோசனை சொன்னேன். பதினாறு மைல் சைக்கிள் மிதிக்க எனக்கு விருப்பமேயில்லை. அச்சா "டேய்.. பள்ளிகூட உடுப்போட வானில ஏறினா யாராவது பார்த்து என்ட அப்பாவிடம் சொல்லிட்டா என்னை பெல்டாலை வெளுத்து போடுவார். சைக்கிள்ள போனா அவ்வளவு சந்தேகம் வராது. பள்ளிக்கூடம் முடியுற நேரத்துக்குள்ளே திரும்பி வந்திட்டா போதும், ஒருத்தருக்கும் சந்தேகம் வராது". உண்மைதான் எங்கள் ஊர் ஒரு வினோதமான ஊர். ஊர் முழுக்க அம்மா, அப்பாவின் சொந்தக்க்காரர்களோ நண்பர்களோ பரவியிருப்பார்கள். இப்படித்தான் இரண்டு மாதத்திற்கு முன்னால, ஒன்றுவிட்ட பெரியப்பா ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தபோது, "உங்க மகன் பள்ளிக்கூடம் முடிச்ச பிறகு கேள்ஸ் ஸ்கூலுக்கு முன்னால நிற்கிறதை கண்டேன். கொஞ்சம் கண்டிச்சு வையுங்க" என்று அப்பாவிடம் தகவல் சொன்னார். அப்பாவிடம் அடி வாங்காத குறைதான். விசாரணை என்ற பெயரில் துளைத்தெடுத்துவிட்டார். எங்கள் ஊர் முழுக்க உளவாளிகள் பரவிக்கிடந்தனர். ஊரின் வடக்குப்பக்கம் அப்பாவின் சைட் சொந்தக்காரர்கள். தெற்குப்பக்கம் அம்மாவின் சைட் சொந்தக்காரர்கள். அவர்களின் கழுகு கண்களிலிருந்து தப்புவது கஷ்டம்தான். காமிக்ஸ் வாங்க யாழ்ப்பாண டவுணுக்கு போனேன் என்று தெரிந்தால் அம்மா தோலை உரித்துவிடுவாள். நான் தவணை டெஸ்ட்டுகளில் எடுக்கும் மார்க்குகளுக்கும் நான் வாசிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கைக்கும் ஏதோ தொடர்ப்பிருப்பதாக ஒரு தியரி சொல்லுவாள். அதனால் விஷயம் ரகசியமாக இருக்கவேண்டும்.<br />
<br />
அடுத்த நாள், காலை நேரத்துக்கே விழித்துக்கொண்டேன். வழமையாக ஏழரை மணிக்கு பள்ளிக்கூடத்துக்கு போகும் நான் அன்று ஏழே காலுக்கே வெளிக்கிட்டேன். "அண்ணா! என்ன இன்றைக்கு மட்டும் நேரத்துக்கு போறே" என்றாள் தங்கச்சி. உண்மைதான், பதட்டத்தில் நேரத்துக்கே வெளியே வந்துவிட்டேன். தங்கச்சி அம்மாவோட கையாள். நான் படிக்கும் நேரத்தில், காமிக்ஸ் வாசித்தால் அம்மாவிடம் போட்டு கொடுக்கும் உள்நாட்டு உளவாளி. நான் சுதாரித்தவாறே "இன்றைக்கு நான் வகுப்பறை க்ளீன் பண்ற டேர்ன்" என்று சொல்லிவிட்டு சைக்கிளை மிதித்தேன். சிவா, அச்சா, கிச்சா எல்லோரும் சரியாக ஏழரைக்கு பள்ளிக்கூடம் முன்னால் ஆஜர். பெரிய போத்தல்களில் தண்ணீர் அள்ளிக்கொண்டோம். முகத்தில் பெரிய பரபரப்பு காட்டாமல் ஒருவர் போய் இரண்டு நிமிடம் கழித்து மற்றவர் என்று மெதுவாக ஊருக்கு வெளியே சென்றோம். சன்னதி கோவிலுக்கு கிட்டே வைத்து எல்லோரும் இணைந்து கொண்டோம். சன்னதி கோவில் போகும் வரையிலும் ஊர் உளவாளிகள் நிறைந்திருந்தார்கள். ஆகவேதான் இப்படி ஒரு ஏற்பாடு. எனக்கு அப்போதே இளைக்க ஆரம்பித்து விட்டது. கிச்சா போன ஸ்போர்ட்ஸ்மீட்டுக்கு வாங்கி மிஞ்சிய குளுகோஸ் பக்கட்டுகளை பள்ளிகூடத்திலிருந்து லவட்டி கொண்டு வந்திருந்தான். அதை வாயில் கொட்டி தண்ணீரை குடித்தேன்.<br />
<br />
அச்சுவேலிக்கருகில் இரண்டாம் நிறுத்தம். கடையில் மாம்பழ டொபி வேண்டினோம். கையில் இருந்த காசுகளை எண்ணிப்பார்த்தோம். மொத்தமாக இருநூற்றி பன்னிரெண்டு ரூபா. சிவா மட்டுமே எண்பத்தைந்து ரூபா போட்டிருந்தான். என்னுடைய பங்கு நாப்பத்திரண்டு ரூபா மட்டும்தான். குறைந்தது இருபது புத்தகமாவது வாங்கிவிடலாம் என்று கணக்கு போட்டோம். மீண்டும் சைக்கிளோட்டத்தை ஆரம்பித்தோம். ஆமி செக்பொய்ண்டுகளில் சைக்கிளை உருட்டினோம். "எங்க போறே" என்று விசாரித்தான் ஒரு ஆமிக்காரன். "டவுண் ஸ்கூலில் எக்சிபிஷன்" என்றேன். ஒருமாதிரியா பார்த்தான். என்ன நினைத்தானோ தெரியவில்லை. "சரி போ" என்றான். என்னுடைய பள்ளிகூட அடையாள அட்டையை பார்த்தால் என்னை போக விட்டிருப்பானோ.. என்னவோ..! அவ்வளவு தூரத்திலிருந்து எக்சிபிஷன் பார்க்கவாறது பல சந்தேகங்களை தோற்றுவிக்கலாம்.. பள்ளிகூட சீருடைக்கு ஒரு மரியாதை இருக்கத்தான் செய்கிறது.<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7ds6V4_Wg95jXGyomJep8Aj_8uOJcx2Elyp6lhIdID3KNiA_PWdu6niFVV5wMts4nN7M3hOJK_31jpR7zf_2bMe4yi3Hb-FHNOpIMM-ShlC6zNnTkWiA_Gad68cr_6G4nM51K5RwIhCn1/s1600/atct-india-kta-bookstore-1-2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7ds6V4_Wg95jXGyomJep8Aj_8uOJcx2Elyp6lhIdID3KNiA_PWdu6niFVV5wMts4nN7M3hOJK_31jpR7zf_2bMe4yi3Hb-FHNOpIMM-ShlC6zNnTkWiA_Gad68cr_6G4nM51K5RwIhCn1/s320/atct-india-kta-bookstore-1-2.jpg" width="240" /></a></div>
அந்த லைப்ரரி கள்ளியங்காட்டுக்கு பக்கத்தில் இருப்பதாக மட்டுமே தகவல். பத்து மணியளவில் டவுணுக்கு போய் சேர்ந்தோம். கள்ளியங்காட்டு சந்தியில் உள்ள தேத்தண்ணி கடைகளில் லைப்ரரியை பற்றி விசாரித்தோம். ஒருவருக்கும் அதைப்பற்றி தெரிந்திருக்கவில்லை. சரியான தகவலில்லாமல் கிளம்பி வந்த முட்டாள்தனத்தை எண்ணி மனம் நொந்தோம். சிவா "என்னால் இனிமே சைக்கிள் ஓட முடியாதுடா. கால் எல்லாம் நோவுது" என்றான். வெயிலின் கொடுமை தாங்கவில்லை. சந்தியில் இருந்த மரத்தின் கீழ் ஓய்வெடுத்தோம். எங்கள் எல்லோரின் தலையும் கவிழ்ந்திருந்தது. கிச்சா மட்டும் கொஞ்சம் யோசனையிலிருந்தான். அரை மணித்தியாலமாக அதிலேயே காத்திருந்தோம். அப்போது கிட்டத்தட்ட எங்கள் வயதில் ஸ்கூல் சீருடையுடன் ஒரு பொடியன் சைக்கிளில் போய் கொண்டிருந்தான். கிச்சா அவன் அவனை சைக்கிள் முன்னால் பாய்ந்து மறித்தான். அவனிடம் விசாரித்ததில் ஏதோ ஒரு சின்ன வீதியின் பெயரை சொன்னான். புதிய உத்வேகத்துடன் சைக்கிள் ஓடினோம். "அங்கே 'பழி வாங்கும் புயல்' புத்தகம் இருந்தா அது எனக்குத்தான்" என்று முன்பதிவு செய்தான் சிவா. அச்சா "முதல்ல அந்த லைப்ரரியில காமிக்ஸ் இருக்கோணும் என்று கடவுளை வேண்டிக்கொள்" என்று முறைத்தான். நான் கொடுத்த நாற்பது சொச்சம் ரூபாவுக்கு என்ன புத்தகம் கிடைக்குமோ தெரியவில்லை என்று யோசித்துக்கொண்டேன்.<br />
<br />
ஒருவாறாக லைப்ரரியை வந்தடைந்தோம். சின்ன லைப்ரரிதான். ஒரு வயதான நபர் எங்களை முறைத்துபார்த்தார். பள்ளிக்கூட நேரத்தில் பள்ளிக்கூட சீருடையுடன் வந்ததை அவர் ரசிக்கவில்லை. "என்ன தம்பிகளா. இந்த நேரத்தில நீங்க வரக்கூடாது" என்றார். அவர் பேச்சிலேயே அவர் மென்றுகொண்டிருந்த வெற்றிலையின் காரமிருந்தது. அச்சா கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "ஐயா! நாங்க பருத்துறை பக்கமிருந்து வாரோம். இந்த லைப்ரரியில புத்தகங்கள் விக்கிறீங்களா. இந்த லைப்ரரியை மூடப்போறதா யாரோ சொன்னாங்க" என்று இழுத்தார். அவர் எங்களை மேலும் கீழுமா பார்த்தார். "என்ன புத்தகங்கள் வேணும். நிறைய புத்தகங்கள் முடிஞ்சு போச்சு. அந்த செல்புல இருக்கிற புத்தங்கள்தான் மிச்சம்" என்று சலிப்புடன் கூறினார். எங்கள் எல்லோரது இதயமும் "தடக்.. தடக்.." என்று அடித்துக்கொண்டது. இரத்தம் சூடாக உடல் முழுக்க பரவியது. கிச்சா கண்ணை மூடி கடவுளை வேண்டிக்கொண்டான். அச்சா மெதுவாக முன்னோக்கி நடை போட்டான். புத்தகங்கள் வரிசையில் அடுக்கப்பட்டிருக்கவில்லை. ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப்பார்த்து சலித்தோம். "டேய் ஒரு காமிக்ஸ்கூட இல்லடா" என்று அழாக்குறையாக அச்சா கூறினான். எல்லா தெய்வங்களும் ஒன்றுசேர்ந்து எங்களுக்கு எதிராக சதி செய்ததை போல உணர்ந்தோம்.<br />
<br />
"என்ன தம்பி ஒரு புத்தகமும் எடுக்கலையா" என்றவாறு அந்த பெரியவர் வந்தார். "எங்களுக்கு காமிக்ஸ் வேணும் ஐயா" என்று தீனமான குரலில் கூறினேன். "அதுவா! அதுவும் கொஞ்சம் இருக்கு. அதை அந்த மூலையில் தனியா போட்டு வச்சிருக்கு" என்றார். அவர் காட்டிய திசையில் மூன்று நான்கு கட்டுகளாக காமிக்ஸ்கள் இருந்தன. ஒரே நேரத்தில் எங்கள் கண்களில் ஒளி வந்தது. ஒரு சிலிர்ப்புடன் புத்தகங்களை பார்வையிட்டோம். கடைசி பத்து வருஷங்களில் வந்த ஒருசில புத்தகங்கள் அழகாக பைண்டிங் செய்யப்பட்டு எங்களை பார்த்து கண்ணை சிமிட்டின. "பழி வாங்கும் புயல்" இருந்தது. நார்மனின் "மரணத்தின் நிழலில்" புத்தகத்தை நான் எடுத்துக்கொண்டேன். ஆளுக்கு ஏழெட்டு புத்தகங்களுடன் ஐயாவின் முன்னுக்கு நின்றோம். எல்லா புத்தகங்களுக்கும் அதன் தடிப்பை வைத்து ஒரு விலையை நிர்ணயித்தார். மொத்தமாக முன்னூற்றி எழுபது ரூபா வந்தது. எங்களிடம் இருந்த காசுக்கு இதை வாங்க முடியாது. அச்சா தயங்காமல் தனது வாட்ச்சை தூக்கி பெரியவரிடம் கொடுத்தான். பெரியவர் "என்ன தம்பி இதுக்கு போய் நல்ல கசினோ வாட்ச்சை தாறீங்க. இவ்வளவு தூரம் மினக்கெட்டு வந்திருக்கிறீங்க, இவ்வளவு காசு போதும்" என்று சிரித்தார். வாட்ச்சை திரும்பி தந்துவிட்டு கொடுத்த இருநூறு சொச்சம் ரூபாவுக்கே எல்லா புத்தகங்களையும் தந்துவிட்டார். வெளியே வந்தோம். கால்கள் தரையில் படாதது போன்றதொரு சிலிர்ப்பான அனுபவம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbwZJdr9p_AC4OVyQ7wh-g3bDSEtsvasUxRLZv8Eo9kyW_VaDaTMBjoD70tAwgA9gwXFyRC2AC8NFccL5o87owuapsKy8Xwp5z9NFi2FAv62q9F3CexN7rfgS9Uo9GV3vOgwJUmz4AVwfJ/s1600/Lion_Comics_Indian_Comics_Magazine.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbwZJdr9p_AC4OVyQ7wh-g3bDSEtsvasUxRLZv8Eo9kyW_VaDaTMBjoD70tAwgA9gwXFyRC2AC8NFccL5o87owuapsKy8Xwp5z9NFi2FAv62q9F3CexN7rfgS9Uo9GV3vOgwJUmz4AVwfJ/s400/Lion_Comics_Indian_Comics_Magazine.jpg" width="270" /></a></div>
மணி பன்னிரெண்டரை. பள்ளிக்கூடம் முடிவதற்கு இன்னமும் ஒரு மணித்தியாலமே இருந்தது. வேகமாக சைக்கிள் மிதித்தாலும் போய் சேர்வது கஷ்டம் என்பதை அப்போதுதான் உணர்ந்தோம். சைக்கிளில் சிட்டாக பறந்தோம். "லேட்டாக போனதற்கு காரணமாக பள்ளிக்கூடத்தில் கிரிக்கெட் விளையாடியதாக சொல்லி சமாளிக்கலாம்" என்றான் சிவா. வல்லைவெளி பிரதேசத்தில் நுழையும்போது காற்று சோதனை தந்தது. அதைவிட பெரிய சோதனை காத்திருக்கும்போது அது பெரிதாக தோற்றவில்லை. சன்னதி கோவிலடியில் எல்லோரும் தனித்தனியாக பிரிந்தோம். ஒருவாறாக இரண்டரைக்கு வீட்டுக்கு போய் சேர்ந்தேன். வீட்டுக்குள்ளே நுழையும்போதே அம்மா வாசலில் நின்றாள். "ஐயா எங்க போய்ட்டு வாரீங்க. பள்ளிகூடம்தான் போனீங்களா" என்று முறைத்தாள்.<br />
<br />
சன்னதி கோவிலுக்கு போன அம்மாவின் யாரோவொரு சிநேகிதி எங்களை பார்த்து வீட்டில் சொல்லிவைக்க விஷயம் வீட்டுக்கு தெரிந்து விட்டது. அப்பா வீட்டுக்கு வந்தபிறகு பூசை ஆரம்பித்தது. அப்பா அடித்து களைத்த பின்னர்தான் கேட்டார். "அப்படி நாள் முழுக்க எங்கடா போனே" என்றார். உண்மையை சொன்னேன். அதிர்ந்து போனார். "முதல்லேயே சொல்ல வேண்டியதுதானே. சொல்லியிருந்தா நானே வேண்டி தந்திருப்பேனே" என்று சொன்னது இந்த கதைக்கு ஒவ்வாத அன்டி-கிளைமாக்ஸ். அவரும் ஒரு காமிக்ஸ் ரசிகர்தான்.<br />
<br />
<br />
<div style="text-align: center;">
********************</div>
<br />
<b><br /></b>
<span style="color: #0c343d;"><b>இது வெறும் கற்பனை கதைதான். காமிக்ஸ் வேட்டையாடி சலிக்கும் நண்பர்களுக்கு சமர்ப்பணம்.</b></span><br />
<div>
<br /></div>
</div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-55839875146805282472016-05-23T05:31:00.000-07:002016-05-23T05:31:05.641-07:00அமெரிக்க காமிக்ஸ்கள் : சில Batman கதைகள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeeCUQRkbKdmRnxKjKiP8AiCYZqwjOrUVYHCzmwnHpTn48rCieA5OChw-69W5vM1LzZyNqO-aU3SXFMEWSLArtuP8xw8XNLkdEOAy7o40mkHksuU5TV9GJy5I4LPaoFDcmDc-hjleDkY_p/s1600/Comic_Art_-_Batman_by_Jim_Lee_%25282002%2529.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeeCUQRkbKdmRnxKjKiP8AiCYZqwjOrUVYHCzmwnHpTn48rCieA5OChw-69W5vM1LzZyNqO-aU3SXFMEWSLArtuP8xw8XNLkdEOAy7o40mkHksuU5TV9GJy5I4LPaoFDcmDc-hjleDkY_p/s320/Comic_Art_-_Batman_by_Jim_Lee_%25282002%2529.png" width="198" /></a></div>
சமீபகாலமாக அமெரிக்கத்தனமான Batman கதைகளை ஆங்கிலத்தில் வாசிக்க முயற்சிக்கிறேன். இன்டர்நெட்டில் Batman கதைகளை பற்றி பலர் சிலாகிக்கிறார்கள். Batman மீதான அவர்களின் அபிமானம் அளப்பெரியது. அவ்வாறான விமர்சனங்கள் என்னை Batman காமிக்ஸ்களை வாசிக்கத்தூண்டின. எனக்கு "டிம் பேர்டன்" மற்றும் "கிறிஸ்டோபர் நோலன்" உருவாக்கிய Batman படங்கள் மிகவும் பிடிக்கும். எந்தவித அதிசய சக்திகளும் இல்லாத Batman உடல்பலம் மற்றும் தொழில்நுட்ப ஆற்றல் மூலமாக நீதிக்காக போராடுவது சுவாரஸ்யமானது. குறிப்பாக Dark knight திரைப்படத்தில் ஜோக்கருடன் நடைபெறும் சண்டையில் Batman அடிபட்டு மயங்கிவிழும் காட்சி புதுவிதமாக இருந்தது. அதுவே Batman படங்களை எனக்கு தேடிபார்க்க தூண்டியது. ஆனால் காமிக்ஸ் என்பது வினோதமான வஸ்து. அதிலும் அமெரிக்க காமிக்ஸ்கள் வெவ்வேறான காரணங்களுக்காக ரசிக்கப்படுகின்றன. சில நேரங்களில் கன்னாபின்னாவென்று படங்களை கொண்டுள்ள காமிக்ஸ்களும் உலகின் தலைசிறந்த காமிக்ஸ் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. கதைசொல்லப்படும் உத்திகள், வித்தியாசமான காட்சியமைப்புகள், படங்கள் மூலம் கதையை கொண்டுசெல்லும் நவீன உத்திகளை கொண்ட காமிக்ஸ்கள் கொண்டாடப்படுகின்றன. இங்கு படங்கள் கதைகள் அநேக நேரத்தில் இரண்டாம் பட்சம்தான். எனக்கு இவற்றை புரிந்து கொள்ள நீண்ட காலமெடுத்தது. நான் இதுவரை காலமும் வாசித்தது ஐரோப்பிய காமிக்ஸ்கள்தான். அவை ஆழமான கதையம்சமும் நேர்த்தியான சித்திர தரமும் கொண்டவை. அமெரிக்க காமிக்ஸ்களை ரசிப்பதற்கு வித்தியாசமான ரசனை நிச்சயம் தேவை. சமீபத்தில் சில அமெரிக்க காமிக்ஸ்களை வாங்கினேன். ஆனால் அவற்றை வாசிக்கும் முன்பதாக மனதை தயார்படுத்தினேன். அப்படி நான் வாசித்த மூன்று Batman காமிக்ஸ்களில் நான் ரசித்த விஷயங்களை பட்டியலிடுகிறேன்.<br />
<br />
<br />
<br />
<br />
<b>1. Dark knight returns</b><br />
<b><br /></b>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgn3xVbCLhMT_dMgmBPa-Q9Mc1CRujgihJysCLPBNejipxcFyd9vyvqW1XpIR-1VC7o0er997r0KgPBQWGtX2DLuWU59wdVYgwY8QRs6rijiWcJcclRotpQ1qhcKQxkjna3HB71KbAFYn06/s1600/Untitled1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgn3xVbCLhMT_dMgmBPa-Q9Mc1CRujgihJysCLPBNejipxcFyd9vyvqW1XpIR-1VC7o0er997r0KgPBQWGtX2DLuWU59wdVYgwY8QRs6rijiWcJcclRotpQ1qhcKQxkjna3HB71KbAFYn06/s320/Untitled1.png" width="140" /></a></div>
55 வயது Batman சில வருட ஓய்வுக்கு பின்னராக மறுபடியும் கொதம் நகரத்தில் உள்ள சமூக விரோதிகளுடன் மீண்டும் போராடுகிறான். அதன்போது இடம்பெறும் நிகழ்வுகள் காரணமாக அவனுக்கு சமூகவிரோதி என்ற பட்டம் கிடைக்கிறது. Batman மீதான மக்களின் செல்வாக்கினால் பொறாமையில் இருக்கும் அமெரிக்க அரசாங்கம் Supermanனிடம் Batmanஐ அழிக்க உதவுமாறு கோரிக்கை விடுக்கிறது. கடைசியாக இருவருக்கும் இடையே தூள் பறக்கும் ஒற்றைக்கு ஒற்றை சண்டை. கடைசியாக எதிர்பாராத சுவாரஸ்யமான ஒரு முடிவு.<br />
<br />
வழமைக்கு மாறான வித்தியாசமான கதை. கதாசிரியர் பிராங் மில்லர் கதை சொல்லும் விதத்தில் பல புதுமைகளை முயற்சித்திருப்பார். ஒரு நியூஸ் சனலில் போகும் செய்திகள், பேட்டிகள் மூலமாக கதை சம்பவத்துக்கு சம்பவம் நகரும். நியூஸ் சனல் அந்நேரத்தில் உள்ள மக்களின் மனநிலையை தெளிவாக படம்பிடித்துக்காட்டும். வலிமையான வசனங்கள் இக்கதையின் உயிர்நாடி. வித்தியாசமான காட்சி அமைப்புக்கு உதாரணமாக கதையில் ஒரு கட்டத்தில் காட்சி இருளில் ஆரம்பிக்கும். நான்கு கட்டங்களில் தொடர்ச்சியாக இருள். யாரோ இருவர் கதைத்துக்கொண்டிருப்பார்கள். <br />
இருள் விலகும்போது வில்லனின் கையாள் ஒருவனை Batman பலமாடி கட்டடத்துக்கு மேலாக பிடித்து தொங்கபோட்டவாறு இருப்பான். வில்லனின் கண்களை Batman பொத்திவைத்திருந்ததால்தான் காட்சியின் தொடக்கத்தில் இருள் வந்தது என்பதை அறியும்போது காட்சி வடிவமைப்பை பாராட்டத்தோன்றுகிறது. இப்படியாக வெவ்வேறான புத்திசாலித்தனமான காட்சி அமைப்புகள் இருக்கின்றன. கதையை வாசிக்கும்போது Batmanஇன் மனநிலையில் வாசிப்பவர்களையும் கொண்டுசெல்கிறார் கதாசிரியர். Batman மனதில் யோசிப்பதை வசனங்கள் வெளிப்படுத்தும்போது நாங்களும் அதே மனநிலையில் பயணிக்கிறோம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRoyYT2bIDK5yVGdrpDAx5h6SzSSg91Vju_QL01nL6z41kdGk4HHrCdiRJ-8l_tNTsxzMU8757EXU8KCb7ev82KiOctHP14uauJNeQLGKXlfVxGEyd88Xo7zGjLUo8aVJpjnbZEHR4KmMy/s1600/Batman+-+Dark+Knight+Returns+1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="250" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRoyYT2bIDK5yVGdrpDAx5h6SzSSg91Vju_QL01nL6z41kdGk4HHrCdiRJ-8l_tNTsxzMU8757EXU8KCb7ev82KiOctHP14uauJNeQLGKXlfVxGEyd88Xo7zGjLUo8aVJpjnbZEHR4KmMy/s320/Batman+-+Dark+Knight+Returns+1.png" width="320" /></a></div>
<br />
கடைசியாக Batman உம் Supermanனும் மோதிக்கொள்ளும் காட்சிகளில் வரும் லாஜிக்குகள் சிறப்பாக இருக்கும். பலம் என்ற விசயத்தில் Batman, Supermanக்கு ஈடாகவிட்டாலும் தனது தொழில்நுட்பதிறனால் சாதிப்பதுவும் ஓரளவு யதார்த்தமான சுவாரசியம். ஆனால் இக்கதையின் படங்களை கன்னாபின்னாவென்று பிராங் மில்லர் வரைந்திருப்பார். சில நேரங்களில் நேர்த்தியில்லாத விகாரமான சித்திரங்கள் வாசிப்பை தடைசெய்கின்றன. சில படங்கள் பரவாயில்லை ரகம். இவ்வளவு காலமும் நேர்த்தியான சித்திரத்தரம்கொண்ட ஐரோப்பிய காமிக்ஸ்களை வாசித்துவிட்டு இப்படியொரு சித்திரதரம் கொண்ட காமிக்ஸை வாசிப்பது வினோதமான அனுபவம்தான். இந்த புத்தகத்தை மூன்று வருடங்களுக்கு முன்னர் வாங்கியிருந்தாலும், சமீபத்தில்தான் வாசிக்க மனம் வந்தது. அதற்கு காரணம் அந்த சித்திரதரம்தான். ஆனால் வாசித்துமுடித்தபின்னர் அந்த புத்தகத்தில் ரசிப்பதற்கு வேறு நிறைய விஷயங்கள் இருப்பதை மறுக்கமுடியாது. ஆனால் நல்ல மனஅமைதி உள்ள மழைநாளில் வாசிப்பதற்கு மட்டுமே இவ்வாறான கதைகளை recommend செய்வேன் :).<br />
<br />
சமீபத்தில் Coursera வழங்கும் காமிக்ஸ் தொடர்பான ஒரு Courseஇல் இந்த புத்தகம் ஒரு reference ஆக உள்ளது. காமிக்ஸில் உள்ள புதுமை உத்திகளை<br />
விளங்கப்படுத்த இந்த காமிக்ஸ் உதாரணமாக உள்ளது.<br />
https://www.coursera.org/course/comics<br />
<br />
<br />
<b>2. Batman: Year one</b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrPu-Vb9evAIRFUnflITnnpAklj247BPDfS8Cgq3Y3KU3V_SmYVy9Us_TQH1yB-ismxUkv24f7qUk7brFJsOpT6A2quwTfKa6Jlid4v_iesR5PTf4-2g3rFrq4OTGzZ5XWGCB3Vud-5EVO/s1600/batman_year_one_by_dodero03-d5k0m40.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrPu-Vb9evAIRFUnflITnnpAklj247BPDfS8Cgq3Y3KU3V_SmYVy9Us_TQH1yB-ismxUkv24f7qUk7brFJsOpT6A2quwTfKa6Jlid4v_iesR5PTf4-2g3rFrq4OTGzZ5XWGCB3Vud-5EVO/s320/batman_year_one_by_dodero03-d5k0m40.jpg" width="240" /></a></div>
1980 காலப்பகுதியில் Batman மீதான மோகம் குறைந்து போவதை DC Comics நிறுவனத்தினர் உணர்ந்தனர். அதனை மேம்படுத்தும் முயற்சியாக Batmanக்கு புதிய அவதாரம் கொடுக்க முடிவுசெய்தனர். அதற்கான பணியை Frank Millerரிடம் ஏற்றுக்கொண்டார். "ப்ரூஸ் வேய்ன்" எவ்வாறு Batman ஆக மாறினான் என்பதையும், இளமையான ஜேம்ஸ் கோர்டன் கொதம் போலிஸில் இணைந்த ஆரம்ப நாட்களில் இடம்பெறும் சம்பவங்கள் என்று களைகட்டும் கதை. இது Batman எவ்வாறு உருவானான் என்பது பற்றிய கதை அல்ல. Batmanஇன் ஆரம்ப நாட்களில் அவன் எதிர்கொள்ளும் சவால்கள் செய்யும் தவறுகளை நூதனமாக ஆராயும் கதை. Batman தோன்றும் கட்டங்கள் கதையின் பாதிதான். மற்றைய அரைவாசிக்கதை ஜேம்ஸ் கோர்டனுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். ஜேம்ஸ் கோர்டன் கொதம் நகரின் போலிஸ் பொறுப்பினை ஏற்றுக்கொண்டவுடன் எதிர்கொள்ளும் சவால்கள், போலிஸ்காரனாக மணவாழ்க்கையில் சந்திக்கும் நெருக்கடிகள், என்று கொஞ்சம் வித்தியாசமான தளத்தில் செல்லும்கதை. இது கூடுதலாக பெரியோர்களை மட்டுமே கவரக்கூடிய கதை. இந்த இரு கதைகளும் ஒரே நேரத்தில் நகர்த்திச்செல்லப்பட்டு ஒரு புள்ளியில் இணைக்கப்படுகின்றன.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
இரு கதைகளுக்கும் வெவ்வேறான வர்ண சேர்க்கை வித்தியாசமான எழுத்துருக்களை பாவித்து வித்தியாசம் காட்டியிருப்பார்கள். ஓவியங்கள் David Mazzucchelli. நான் இதுவரை பார்த்திராத ஓவியங்கள். இவரது கோடுகள் மொத்தமானவை. ஆனால் வர்ணங்கள் மூலம் நிழல்ப்படுத்துகின்றார். கதை அநேக நேரங்களில் கொதம் நகரின் இருள் படிந்த மூலைகளிலேயே நகர்கின்றது. மொத்தமான கோடுகள் இருள் படிந்த காட்சிகளை இட்டுநிரப்ப அழகாக பொருந்துகின்றன. வர்ணசேர்க்கையின் போது பயன்படுத்தப்பட்ட நிறங்கள் புதுமையானவை. கதாசிரியர் Frank Miller தனது சகல கதைசொல்லும் திறமைகளை புத்திசாலித்தனமாக கையாண்ட இதழ். ஜேம்ஸ் கோர்டன் வரும் காட்சிகள் என்னை மிகவும் கவர்ந்தன. ஏனென்றால் அவ்வளவு யதார்த்தம். Batman சந்திக்கும் சவால்கள் அழகாக பின்னப்பட்டிருக்கும். இக்கதையில் Catwomanக்கு அறிமுகம் கிடைக்கிறது. வாசகனாக என்னால் குறை கண்டுபிடிக்கவே முடியாத இதழ். குறைந்தளவு வசனங்கள்தான் என்றாலும் வலிமைமிக்க வசனங்கள். இந்த புத்தகத்தில் 96 பக்கங்களே இருந்தன. ஆனால் இதனை வாசித்துமுடிக்க வேண்டுமென்றே நிறைய நாட்களை எடுத்துக்கொண்டேன். இந்த புத்தகம் வாசித்துமுடிந்து விட்டதை எண்ணி பிறகு வருத்தப்பட்டது வேறு கதை.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg76RSfGSroq45kgE22A8XFzK7j-2-riYUDwKqV6gVC3HTwS9bpF868R6cNgsAWjE5_9Iy7z4BbAhcR6IoRsBMTca4iXVHxl17HBLOaZbXjY9mENTNZHat20ETY75OBa9-O5Q278V7-nzL_/s1600/Untitled.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="171" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg76RSfGSroq45kgE22A8XFzK7j-2-riYUDwKqV6gVC3HTwS9bpF868R6cNgsAWjE5_9Iy7z4BbAhcR6IoRsBMTca4iXVHxl17HBLOaZbXjY9mENTNZHat20ETY75OBa9-O5Q278V7-nzL_/s400/Untitled.png" width="400" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<b>3. Long Halloween</b><br />
<b><br /></b>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhENr_fh_Nv261C-VmB7ggAXfw9xQnNDqv7hpyWg-vrXYcMCyZVlx7dxEDKJ-4l6e5cSyfV0LqZZNY6-6AF_RsOw8yy-7InHacr8wQX7gH0zvJiZFH819tvyuvV1FID599c4W3NLr6ICVbI/s1600/batman_el_largo_halloween_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="239" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhENr_fh_Nv261C-VmB7ggAXfw9xQnNDqv7hpyWg-vrXYcMCyZVlx7dxEDKJ-4l6e5cSyfV0LqZZNY6-6AF_RsOw8yy-7InHacr8wQX7gH0zvJiZFH819tvyuvV1FID599c4W3NLr6ICVbI/s320/batman_el_largo_halloween_1.jpg" width="320" /></a></div>
இளவயது Batmanஇன் தொடக்ககாலத்தில் நடக்கும் கதை. முகம் தெரியாத ஒரு வில்லன் ஒவ்வொரு விடுமுறை நாளிலும் ஒரு கொலை செய்கிறான். அமெரிக்காவின் ஒவ்வொரு விடுமுறை நாளிலும் ஒவ்வொரு கொலை அரங்கேறுகின்றது. கொதம் நகரிலுள்ள பெரிய தாதாவின் எதிரிகள் மற்றும் அவனது நண்பர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்படுகின்றனர். முகம் தெரியாத யாரோ ஒருவன்தான் கொலையாளி. அவனுக்கு Holiday என்று பத்திரிகைகள் பெயர் சூட்டுகின்றன. இக்கொலைகளுக்கான காரணத்தை Batman மற்றும் கமிஷனர் ஜேம்ஸ் கோர்டன் ஆகியோர் துப்பறிகின்றனர். இதே நேரத்தில் Batman கதைகளில் வரும் வழமையான வில்லன்கள் வெவ்வேறான தருணங்களில் Batmanஉடன் மோதுகிறார்கள். இது வழமையான Batman பாணி கதையில்லை. வழமையான கதைகளில் Batman பைத்தியகார வில்லன்களுடன் கண்டமேனிக்கு மோதுவார். ஆனால் இதுவோ வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர். இக்கதை வெளியானபோது இந்த வித்தியாசமான பாணி Batman கதை ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. இக்கதையின் கதாசிரியர் "ஜெப் லோப்" Batman கதைகளில் வழமையாக வலம்வரும் வில்லன் கதாப்பாத்திரங்களை புத்திசாலித்தனமாக இக்கதையில் உள்நுழைத்திருப்பார். அந்த வில்லன் கதாப்பத்திரங்களின் வித்தியாசமான குணாதிசயங்களை அழகாக பயன்படுத்தியிருப்பார். குறிப்பாக டூ-பேஸ், பொய்சன் ஐவி போன்ற பாத்திரங்கள் கதையின் போக்கை திசைதிருப்ப உதவுகின்றன. இக்கதையில் Batman தோன்றும் காட்சியமைப்புகள் கொஞ்சம் குறைவுதான். ஆனாலும் ஒரு நல்ல சூப்பர் ஹீரோ த்ரில்லரை வாசித்த திருப்தியை தருகின்றது. கதை முழுக்க தாதாக்கள் வலம்வருகின்றனர். இந்த தாதாக்களின் உலகத்தை Dark knight திரைப்படத்திலும் பயன்படுத்தியிருப்பார்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhv-XOmz4VdEeFIu0Kcly3DG72VFX2HVddnUzsiHNX23NEwwuFXGODgQrPGe5TkzY322jA4jnvM4jjlSfv7VaZ13jCkODuy8uRRXZbnjtn-iN6Fb_0Ev-ZQEBm1gTWouD3xou6ozRNAKAaK/s1600/tumblr_md6jwtkOq51rbxlg5o2_1280.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="297" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhv-XOmz4VdEeFIu0Kcly3DG72VFX2HVddnUzsiHNX23NEwwuFXGODgQrPGe5TkzY322jA4jnvM4jjlSfv7VaZ13jCkODuy8uRRXZbnjtn-iN6Fb_0Ev-ZQEBm1gTWouD3xou6ozRNAKAaK/s400/tumblr_md6jwtkOq51rbxlg5o2_1280.jpg" width="400" /></a></div>
என்னை பொறுத்தவரை கதை ஓகே ரகம்தான். ஆனால் சித்திரங்கள் ஆச்சர்யப்படுத்தும் ரகம். சித்திரங்கள் நேர்த்தியானவையோ உயிரோட்டமானவையோ அல்ல. சில நேரங்களில் ஓவியர் தனது பத்து வயது மகனிடம் தூரிகையை கொடுத்து வரையச்சொன்னாரா என்று சந்தேகம் வருகின்றது. ஆனால் அவை வரையப்பட்ட கோணங்கள் அருமையாக இருக்கும். வினோதமான கோணங்களில் ஓவியர் "டிம் சேல்" வரைந்து தள்ளியிருப்பார். ஒவ்வொரு காட்சிக்குமான வண்ணகலவை கதையின் போக்குக்கு ஏற்ப மாறுபடுகிறது. ஒரு கட்டத்தின்பின்னர் ஓவியங்களில் உள்ள நெளிவுகோடுகளை ரசிக்க பழகிகொண்டேன். வாசகர்களின் மனநிலையை கதையின் போக்குடன் ஒன்றச்செய்வதில் வண்ணக்கலவை முக்கிய பங்கு வகிக்கிறது. சித்திரங்களுக்காகவே மீண்டும் ஒருமுறை வாசிக்கவேண்டும்.<br />
<br />
<br />
<br /></div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-69292880995651615812015-04-12T00:01:00.002-07:002015-05-09T21:29:42.812-07:00பிரதீப்!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYr9_hL5W7xIesNrehO2PhynhBwEIvpJkzQzAgd66ZToHVMsHrpMEHHLtlqJXUpbL_LnSB3sIV7KSHK2Tgo6HGhtheRgfdlXiR4-mJjNe3Z1JF4kHdNPMtoPYBVZMlFodUVqN0A_RCrLaO/s1600/60951176.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="267" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYr9_hL5W7xIesNrehO2PhynhBwEIvpJkzQzAgd66ZToHVMsHrpMEHHLtlqJXUpbL_LnSB3sIV7KSHK2Tgo6HGhtheRgfdlXiR4-mJjNe3Z1JF4kHdNPMtoPYBVZMlFodUVqN0A_RCrLaO/s1600/60951176.jpg" width="400" /></a></div>
பிரதீப்...! இந்த பெயரை கேட்டால் உங்களுக்கு என்ன எண்ணம் மனதில் தோன்றுகிறது. எனக்கு இந்த பெயர் பல ஞாபங்களை கொண்டுவருகிறது. பிரதீப் அக்காலத்தில் கொஞ்சம் டிரென்டியான பெயர். பிரதீப் என்ற பெயரையுடைய நபரை சந்திக்கபோகிறேன் என்றால் அந்த பெயரே ஒருவித எதிர்பார்ப்பை எனக்குள் ஏற்படுத்திவிடும். கொஞ்சம் புத்திசாலியான மாடர்னான ஒரு பயலை சந்திக்கபோகிறோம் என்று நினைத்துகொள்வேன். எனக்கு தெரிந்து பலபேர் அந்த பெயருடன் சுற்றிக்கொண்டிருந்தார்கள். பிரதீப் என்ற பெயருடைய ஒருவன் என்னுடன் ஆறாம் ஆண்டுவரை, கிராம பள்ளிகூடத்தில் படித்துவிட்டு நகர பாடசாலைக்கு மாறினான். அவன் மாறியதால் அவன் எடுத்துவந்த வகுப்பின் "முதலாம் பிள்ளை" என்ற பெருமை எனக்கு தற்காலிகமாக கைமாறியது. பத்தாம் ஆண்டு படிக்கும்போது பிரதீப் என்ற பெயருடையவன் பக்கத்து வீட்டில் குடியேறினான். என்னுடன் அடிக்கடி கிரிக்கெட் விளையாடினான். நன்றாக "லெக் ஸ்பின்" போடுவான். கண்ணில் "போல்" பட்டு கொஞ்ச காலம் கப்பல் கொள்ளைக்காரன் மாதிரி ஒரு கண்ணில் கட்டுடன் திரிந்தான்.<br />
<br />
எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது, பக்கத்துவீட்டில் இருந்த பிரதீப் அண்ணாவும் வித்தியாசமான பேர்வழி. வீட்டில் அதிகம் இருக்கமாட்டார். அவர் அப்படி எங்கே போகிறார் என்று அந்த வயதில் எனக்கு புரியவில்லை. எப்போதாவது காணும்போது "கண்மணி" கடையில் தோடம்பழ முட்டாசி வாங்கித்தருவார். எங்கள் கிராமத்தில் இருந்த ஒரே ஒரு தியேட்டருக்கு தெருவில் உள்ள பொடியன்களை படத்துக்கு கூட்டிக்கொண்டு போனார். சேர்ட்டின் உள்ளே தோட்டா மாலை போட்டிருப்பார். அதை எங்கே வாங்கினீர்கள் என்று அப்பாவியாக கேட்டுவைத்தேன். கொஞ்சம் மழுப்பலாக சிரித்துக்கொண்டு "திருவிழா காலத்தில் 'கண்மணி' கடையில் இது விக்கும்" என்றார். ஆனாலும் கண்மணி கடையில் தோட்டா விற்றதை இதுவரை கண்டதில்லை. அதை பற்றி மேலும் விசாரிக்க பிரதீப் அண்ணாவை மறுபடியும் காண முடியவில்லை.<br />
<br />
கம்பசிலும் "பிரதீப்" என்ற பெயருடைய இன்னொரு நபரையும் சந்தித்தேன். என்னைவிட படிப்பில் திறமைசாலி. இவ்வாறான அனுபவங்கள் காரணமாக, பிரதீப் என்ற பெயருள்ள எவனும் என்னைவிட வல்லவன் என்ற எண்ணம் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இப்படித்தான் எனக்கு சிறுவயதில் பெயர் சம்பந்தப்பட்ட வினோத பழக்கமிருந்தது. எனது வகுப்பில் இருக்கும் மாணவர்களின் திறமை, குணாதிசயம் போன்றவற்றை அவர்களின் பெயர்களுடன் தொடர்பு படுத்தியே சிந்திப்பேன். செழியன் என்பவன் என்னை முந்தி வகுப்பில் முதலாம் பிள்ளையாக வந்தால், செழியன் என்ற பெயருள்ள எல்லா பயல்களும் தீவிர புத்திசாலிகள் என்ற மனதில் விம்பம் உருவாகும். இப்படி சில வினோத கோட்பாடுகள் சிறுவயதிலே மனதில் வைத்திருப்பேன். நாங்கள் இதுவரை சந்திக்காத நபரின் பெயர் அந்த நபருடன் எங்களுக்கான முதல் அறிமுகத்தை தருகிறது. பின்னர் அந்த நபரை சந்திக்கும்போது அநேக நேரங்களில் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.<br />
<br />
வயது ஏற ஏற பெயர் மூலமாக நபரின் உருவ அமைப்பு குணாதிசயங்களை தீர்மானிக்கும் பழக்கம் குறைந்தது விட்டது. சமீப காலத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு அவ்வாறான கோட்பாடு பிழை என்பதை உறுதி செய்தது. கம்பசில் கடைசி வருடம் படிக்கும்போது புதிதாக தொடங்கவிருந்த பாடத்துக்கு புதிதாக ஒரு விசிடிங் லெக்சரர் வருவதாக ஏற்பாடாகவிருந்தது. அவர் ஒரு சிங்களவர். சிங்கள பெயர்களை உச்சரிக்கும்போது வரும் 'ஷ', 'ஹ' சத்தங்களுக்கு ஏற்றவாறு குணாதிசய நியமங்களை உருவாக்கிக்கொண்டேன். அந்த லெக்சரரின் பெயர்கூட ஒரு கேட்டு சலித்ததொரு வழமையான சிங்கள பெயர். முதலாவது லெக்சருக்கு வழமைபோல ஐந்து நிமிஷம் லேட்டாக போனோம். ஆளை காணவில்லை. லெக்சர் ஹோலுக்கு வெளியே ஒரு பயல் ஜீன்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து ஸ்டைலாக நின்று கொண்டிருந்தான். மெதுவாக உள்ளே அவன் நடந்து வந்தான். அவன் கதைக்கதொடங்கிய பின்னரே அவர்தான் எங்கள் புதிய லெக்சரர் என்ற உண்மை எங்களுக்கு புரிந்தது. அவருக்கு ஒரு லெக்சரருக்குரிய வழமையான தோற்றமில்லை. ஆனால் வந்த முதல் நாளே இரண்டு அசைன்மென்ட் தந்து கிலியை ஏற்படுத்தினார். அவருடைய லெக்சர்களின்போது அசைன்மென்ட் கொப்பி அடித்தால் அடுத்த லெக்சரில் பெயர்களை வாசித்து அவமானப்படுத்துவார்.<br />
<br />
அவர் போலவொரு ஆசாமிக்கும் பெயருக்கும் சம்பந்தமில்லை. அவர் போடுற "ஆர்மனி" டீ-சேர்ட்டுக்கும் அவர் தருகிற கெடுபிடி அசைன்மென்ட்டுக்கும் துளிகூட சம்பந்தமில்லை. இந்த ஆசாமியை சந்தித்தபின்னர் எவரையும் அவர்கள் பெயர்கள் மூலமாக நபரின் உருவ அமைப்பு மூலமாகவோ குணாதிசயங்களை தீர்மானிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhURp0FeorC8Xk0xpp793SYRBRkXDugcVH4_PNAItlIC_w7dnxCMlfULdRcqiDyDjer8oDQnRCS3Lz9cOZnpuWSzI4S0l0Ep5lEiUqOK1vaaDEnzRgAVVonF9XwCskjELXIxH0AqxzDDCeK/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhURp0FeorC8Xk0xpp793SYRBRkXDugcVH4_PNAItlIC_w7dnxCMlfULdRcqiDyDjer8oDQnRCS3Lz9cOZnpuWSzI4S0l0Ep5lEiUqOK1vaaDEnzRgAVVonF9XwCskjELXIxH0AqxzDDCeK/s1600/images.jpg" width="400" /></a></div>
போனவாரம்தான் எங்கள் ஆபீஸ்ஸில் "பிரதீப்" என்று ஒரு பயல் சேர்ந்திருக்கான். பயல் எப்படிப்பட்ட ஆளா இருப்பானோ.. பார்ப்போம்..<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br /></div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-46560439531219793582015-03-02T10:09:00.000-08:002015-03-02T10:09:01.171-08:00மறுமலர்ச்சியின் பின்னரான டாப் டென் காமிக்ஸ் இதழ்கள் !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
2000ம் ஆண்டுகளின் பின்னர் காமிக்ஸ் வறட்சி உருவானது. அது அமெரிக்காவில் ஏற்பட்ட Great Depressionஐ போன்றதொரு தாக்கத்தை தமிழ் காமிக்ஸ் உலகில் உருவாக்கியது. ஆனாலும் 2012 ஜனவரி comeback ஸ்பெஷலின் பின்னரான காலப்பகுதியில் லயன் காமிக்ஸ் மீண்டும் வலிமையாக உயிர்த்தெழுந்திருக்கிறது. மாதத்துக்கு 2-3 என்று இதழ்கள் தவறாமல் கிடைக்கின்றன. கனவிலும் எதிர்பார்த்திராத தரத்தில் கலரில் வந்தது எல்லோரையும் கவர்ந்தது. ஆனாலும் இதனை இலங்கையில் பெற்றுகொள்வது குதிரைகொம்பாக இருந்தது. இலங்கையில் பல முன்னணி புத்தக இறக்குமதியாளர்களும் காமிக்சை கைவிட்ட நிலையில், "கோகுலம் வாசகர் வட்டம்" என்ற காமிக்ஸ் நண்பர்களில் முயற்சியால் எங்களுக்கும் காமிக்ஸ் கிடைக்கிறது. கடந்த இரு வருடங்களில் வந்த காமிக்ஸ்களிலேயே top ten வரிசைப்படுத்தும் அளவுக்கு ஏகப்பட்ட இதழ்கள் வந்து விட்டன. ஆகவே ஒரு top ten பதிவை போடுகிறேன்.<br />
<br />
** இன்னும் இவ்வருட இதழ்கள் எதனையும் வாசிக்கவில்லை. ஆகவே 2012 ஜனவரி முதல் 2014 டிசம்பர் வரையான இதழ்களை மட்டுமே போட்டியிட்டன.<br />
<br />
** மறுபதிப்பு இதழ்கள் எதனையும் சேர்க்கவில்லை. ஆகவே "கார்சனின் கடந்தகாலம்", "புரட்சி தீ" போன்ற evergreen இதழ்கள் ஒதுக்க வேண்டியதாயிற்று.<br />
<br />
** இங்குள்ள ஒவ்வொரு கதையும் ஏதோவொரு காரணத்துக்காக பிடிக்கும். விருப்பு அடிப்படையில் வரிசை படுத்தவில்லை.<br />
<br />
** இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் ஏனைய காமிக்ஸ் நண்பர்களின் தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. அவர்களுக்கு எனது நன்றிகள் :)<br />
<br />
<b>ஒரு சிப்பாயின் சுவடுகளில் </b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5t6buzTy2FxrfqZqS8JZw5wnjqBQi2D-3DNcdydfG3N1iSJG4Grak9zTI_z7Y49qH4Ppaeu8JGA3jQpiQtGLzYsHIcNdFN6DdQ329fiBWeYIoGkL8Otu1MwCX0ClyFeSRwzUKLdU03Vmv/s1600/oru+sipppayin+suvadukalil.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5t6buzTy2FxrfqZqS8JZw5wnjqBQi2D-3DNcdydfG3N1iSJG4Grak9zTI_z7Y49qH4Ppaeu8JGA3jQpiQtGLzYsHIcNdFN6DdQ329fiBWeYIoGkL8Otu1MwCX0ClyFeSRwzUKLdU03Vmv/s1600/oru+sipppayin+suvadukalil.jpg" height="200" width="148" /></a></div>
எங்களுக்கு நெருக்கமானவர்கள் காணாமல் போய்விடுவது என்றுமே தீராத வலியை ஏற்படுத்தும். சாவு ஒருநாள் வலி என்றால். "காணாமல் போய்விடுவது" என்பது பலநாள் வலி. அந்த வலியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கதை இருவேறு காலங்களில் பின்னப்பட்டிருக்கிறது. அசுவாரசியமாக மிதவேகத்தில் தொடங்கும் கதை கொஞ்சமாக வேகமெடுக்கிறது. போக்கில் நாயகனை ரசிக்கத்தொடங்கி விடுகிறோம். ஒரு கட்டத்தில் அவனுக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்ற பதைபதைப்பு வாசிப்பவர்களுக்குள் தொற்றிக்கொள்கிறது. வர்ண சேர்க்கைகளும் வித்தியாசமான சித்திர முறையும் எங்களை வியட்னாம் காடுகளுக்கு அழைத்துச்செல்கின்றன. எங்கள் நாட்டில் முப்பது வருட காலமாக இருக்கும் சூழ்நிலைக்கு நெருக்கமான கதையின் கரு கதையுடன் எளிதாக ஒன்றுபடச்செய்கிறது. கதையின் முடிவில் எங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது காணாமல் போய்விட்டவர்களா என்று நினைக்கதொடங்கி விடுகிறோம்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<b>வல்லவர்கள் வீழ்வதில்லை (டெக்ஸ் வில்லர்)</b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidpv8zcj2AkdKfITmuKjWvtSvu5575nvCcxY1Tt1xyNTjQbJMh3RzvC4WNyipGa-WbaGxX24QC-2dIgY3ywS4tguVTx1CW_2w99xbXul9UfmmYovmPSb29RCL0yWI34IPqYZhoTh7QcUq3/s1600/vallavargal+(1).JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidpv8zcj2AkdKfITmuKjWvtSvu5575nvCcxY1Tt1xyNTjQbJMh3RzvC4WNyipGa-WbaGxX24QC-2dIgY3ywS4tguVTx1CW_2w99xbXul9UfmmYovmPSb29RCL0yWI34IPqYZhoTh7QcUq3/s1600/vallavargal+(1).JPG" height="200" width="128" /></a></div>
வழமையான டெக்ஸ் வில்லர் கதைகளில் டெக்ஸ் குழுவினரை வீழ்த்த முடியாத வல்லவர்களாக சித்தரிப்பார்கள். ஆனால் இந்த முறை இந்த கதையின் தலைப்பில் இருக்கும் வல்லவர்களோ வேறு. பல்வேறான வரலாற்று சம்பவங்களை கோர்த்து உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பு. இந்த கதையை வாசிக்கும்போது ஒருவகையில் எல்லா புரட்சி போராட்டங்களுக்கும் பொதுவான இயல்புகள் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது!!. வில்லருக்கும் "ஹட்ச்" என்பவனுக்கும் இருக்கும் நட்பு. பின்னிக்கும் ஷானுக்கும் இருக்கும் நட்பு. டோலோரஸ் - "ஹட்ச்" காதல் போன்ற மனித உணர்வுகள் கதையின் போக்கை சுவாரசியமாக்குகிறது. வசனங்களுக்காக மட்டுமே மீண்டும் ஒருமுறை வாசித்தேன். சித்திரங்களுக்காக இன்னொரு முறை வாசிக்க வேண்டும். நெருப்பினை சுற்றி அமர்ந்து ஷான் குழுவினர் உரையாடும்போது நெருப்பு வெளிச்சத்தின் உக்கிரம் கண்களில் தாண்டவமாடுவது போன்ற உயிரோட்டமான சித்திரங்கள் அற்புதம். "கார்சனின் கடந்த காலத்தின்" உயரத்தை எட்ட இனியொரு டெக்ஸ் கதை இருக்குமா என்ற என்ற சந்தேகம் எனக்கிருந்தது. அந்த உயரத்தை எட்ட முயற்சித்திருக்கிறது இந்த கதை. <br />
<br />
<b><br /></b>
<b><br /></b>
<b><br /></b>
<b>என் பெயர் லார்கோ (லார்கோ வின்ச்)</b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgde9HbZhNgendeOrKt5emaJNCXvVGTX_VvCekYoPKiiTyDVrWxol1AYRoepfidnimnDOiekV_Hp-w8xNKT7tLkiro8abmRDhh9NTdo_wqpw1-8YpTdqVDEbC9nSIcEkuuYzWBEfziBn1kp/s1600/Largo0.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgde9HbZhNgendeOrKt5emaJNCXvVGTX_VvCekYoPKiiTyDVrWxol1AYRoepfidnimnDOiekV_Hp-w8xNKT7tLkiro8abmRDhh9NTdo_wqpw1-8YpTdqVDEbC9nSIcEkuuYzWBEfziBn1kp/s1600/Largo0.jpg" height="200" width="150" /></a></div>
லார்கோ கதைகள் வழமையான டிடெக்டிவ் பாணி கதைகளை வேறு பரிமாணத்தில் சொல்கிறது. கதாசிரியர் கதையின் போக்கிலேயே உலக பொருளாதாரம், கம்பனி நிர்வாகம், எண்ணெய் வர்த்தகம், பங்குகள், போதைவஸ்து போன்ற விடயங்களில் பாடமெடுக்கிறார். பின்னாட்களில் வந்த கதைகளை காட்டிலும் முதலாவதாக வந்த இந்த கதை ஆக்சன், த்ரில் போன்றவற்றில் தூள்பரத்தியது. ஒன்றையும் சீரியஸாக தலையில் ஏற்றிக்கொள்ளாத அலட்சிய இளைஞன்தான் இப்போதைய சூப்பர் ஸ்டார்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<b>லார்கோ ஆக்ஸன் ஸ்பெஷல் (லார்கோ வின்ச்)</b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRgP9cd8sQLcaXY4Sk5wgOkFO3JiSIcVa1pMo8fLbiXdYhm9D24F9BfkBpQw3UhLtBW2qlCcwiO0p8fKwt3nk2M-_yxhZ0iG4HXmMq5N2rUCP4X73a3cwG7SwSQvCo5BXT78nwhyYhoeob/s1600/largo_action.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRgP9cd8sQLcaXY4Sk5wgOkFO3JiSIcVa1pMo8fLbiXdYhm9D24F9BfkBpQw3UhLtBW2qlCcwiO0p8fKwt3nk2M-_yxhZ0iG4HXmMq5N2rUCP4X73a3cwG7SwSQvCo5BXT78nwhyYhoeob/s1600/largo_action.png" height="149" width="200" /></a></div>
இந்த டாப் டென்னில் இருக்கும் இரண்டாவது லார்கோவின் கதை. இந்த கதை ஒரு போதை வஸ்து நெட்வொர்க் பற்றிய த்ரில்லர். போதை வஸ்து தயாரிப்புமுறை, உலகம் முழுக்க விரவி கிடக்கும் வர்த்தக நெட்வொர்க் பற்றிய தகவல்கள் சுவாரசியம். எளிமையாக அமைந்த கிளைமாக்ஸ் சினிமாத்தனமில்லாமல் இருந்தது அருமை. என்னை பொருத்தவரை இதுவரை வந்த லார்கோ கதைகளில் மிகவும் பிடித்த கதை.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<b>எமனின் திசை மேற்கு (Wild West Special)</b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBbKnx_C6MJReaAs-ajS4TLbjd6M_Y64hF1YJLowvCREJfjhsmCptGHig5K43veaHgY1MLoFk_yFyBBDQ3j9VE-yF4ncdCjN31ogNUELj7w2dHKAQ-CHMnIdeq6B4sqiCjD2R4NHF1QeJ9/s1600/western-cover.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBbKnx_C6MJReaAs-ajS4TLbjd6M_Y64hF1YJLowvCREJfjhsmCptGHig5K43veaHgY1MLoFk_yFyBBDQ3j9VE-yF4ncdCjN31ogNUELj7w2dHKAQ-CHMnIdeq6B4sqiCjD2R4NHF1QeJ9/s1600/western-cover.jpg" height="200" width="150" /></a></div>
சோகம் இழையோடும் எளிமையான யதார்த்தமான கௌபாய் கதை. பொருத்தமான டல்லான வர்ணங்கள் புழுதி நிறைந்த மேற்கு பகுதிக்கு வாசகர்களை அழைத்து செல்கின்றன. கிராபிக் நாவல் வரிசையில் முதலாவதாக வந்த போதே கிராபிக் நாவல் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்ற standards ஏற்படுத்திய இதழ்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<b><br /></b>
<b><br /></b>
<b><br /></b>
<b><br /></b>
<b>ஆகாயத்தில் அட்டகாசம் (ப்ளூகோட் பட்டாளம்)</b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUG5iecvDXTwBzM422kblWfOUJanOyz4pAM6qSquhLOJeqMOQpapjPpJGIn6bG3xbwNKBFkENKFI-c8JxyuSH6x94VPZgmcHQRUcgUW-QuLW-P9zPdIUMzrpbSJfQrUA7VqRMIXz_Vzxbq/s1600/aakayaththil+attakasam+001.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUG5iecvDXTwBzM422kblWfOUJanOyz4pAM6qSquhLOJeqMOQpapjPpJGIn6bG3xbwNKBFkENKFI-c8JxyuSH6x94VPZgmcHQRUcgUW-QuLW-P9zPdIUMzrpbSJfQrUA7VqRMIXz_Vzxbq/s1600/aakayaththil+attakasam+001.jpg" height="200" width="148" /></a></div>
ப்ளூகோட் பட்டாளத்தின் அறிமுக கதை. அமெரிக்கா உள்நாட்டு போரை பின்னணியாக கொண்ட கதையை போரடிக்காமல் நகர்த்தி செல்கிறார்கள். சீரான நகைச்சுவை வசனங்கள் முழுமையான கதைக்கரு போன்றவை சுவாரசியம். பலூன் மூலமாக வேவு பார்க்கும் முறை மூலமாக வரும் நகைச்சுவை சம்பவங்கள் அருமை.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<b><br /></b>
<b><br /></b>
<b><br /></b>
<b><br /></b>
<b>விரியனின் விரோதி (XIII மர்மம்)</b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4Sj3Cqyu1n6I9R7DIeN3hjMR8QorykXKTqI8Vx8HnbCIBi-3IwAWvdyqveMZrcwT40tSFr49HxAciFuaH50y-2iIyHkLdGNG-bvZs8rZ5s_CevcCtRPbnxx4I2PMcXsB6PTJc17po4V3M/s1600/Original.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4Sj3Cqyu1n6I9R7DIeN3hjMR8QorykXKTqI8Vx8HnbCIBi-3IwAWvdyqveMZrcwT40tSFr49HxAciFuaH50y-2iIyHkLdGNG-bvZs8rZ5s_CevcCtRPbnxx4I2PMcXsB6PTJc17po4V3M/s1600/Original.jpg" height="200" width="147" /></a></div>
இரத்த படலத்தின் இடியாப்ப சிக்கல் கதைக்குரிய prequelஆன இந்தக்கதை ஒரு தொழில்முறை கொலைகாரனின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளது. இதுவரை காலமும் கொடூரமான கொலைகாரன் என்று அறியப்பட்ட "மங்கூஸின்" சிறுவயது பிராயத்திலேயே அவனுக்குள்ளே விரோதம் வளர்க்கப்படுகிறது. தொழில்முறை கொலையாளியான ஹான்சை பார்த்து அவனுக்கும் தொழில்முறை கொலையாளியாக வரவேண்டுமென்ற ஆசை வருவது யதார்த்தம். ஹான்ஸ் ஷ்ரைனரை கொலையாளியாக உருவாக்கும் காட்சிகள் சுவாரசியம். ஷ்ரைனரின் முதலாவது கொலையின் பின்னரான பதட்டம் காரணமாக தலைமுடிகள் உதிர்ந்து போகும் காட்சிகள் வாசிப்பவருக்கும் அதேவகையான பதட்டத்தை ஏற்படுத்தும்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<b>மேற்கே ஒரு சுட்டிப்புயல் (சுட்டி லக்கி)</b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh30_ijf_wYNyV5U3zzArRWpJfXTQWtiBzvUdJr_5-2IhKFr4w-BwBdtMX_ayznSncTpm3cu6NOuSHtjyJffINAkSqCh6Nsz27QBBJxHBCi7tknYKqiz2jPRlCqNIV0P2OCbF6tiw5jLk0p/s1600/sutty+lucky.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh30_ijf_wYNyV5U3zzArRWpJfXTQWtiBzvUdJr_5-2IhKFr4w-BwBdtMX_ayznSncTpm3cu6NOuSHtjyJffINAkSqCh6Nsz27QBBJxHBCi7tknYKqiz2jPRlCqNIV0P2OCbF6tiw5jLk0p/s1600/sutty+lucky.jpg" height="131" width="200" /></a></div>
<br />
நான் ஆங்கிலத்தில் Kid Luckyயின் ஒரு சாகசத்தை வாசித்திருந்தேன். அதில் இல்லாத நகைச்சுவையை தேடி ஏமாற்றமடைந்தேன். கோஸ்சின்னி எழுதாத Lucky Luke கதைகள் அவ்வளவாக எடுபடாது. போதாக்குறைக்கு ஆங்கிலம் வேறு அறுவையாக இருக்கும். இதனால் தமிழில் சுட்டி லக்கி எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனாலும் வசனங்களில் இருந்த நகைச்சுவை கதையை தூக்கி நிறுத்தியது. எடிட்டர் விஜயன் இந்த கதைக்காக நிறைய மினக்கெட்டு நகைச்சுவை வசனங்களை உருவாக்கியதாக கூறியிருந்தார். சிறுவர்களுக்கும் உகந்ததான இந்த இதழ் சிறந்த மொழிபெயர்ப்புக்காக வெற்றி பெற்றிருப்பது சிறப்பு.<br />
<br />
<br />
<br />
<br />
<b>கொலை செய்வீர் கனவான்களே! (Green Manor லயன் All New Special)</b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZNMj9Lkby-jQfCUY2DD2ne43_EIL9mkuqLYi5E_rSa47O3laOSJVUZGOlz8xmdv0LKVhAKgkKkU1tu7MfWNMcXxl3E-_hwux2Yn7_AMyShYCNjxo-yzi5-7mExhc4E4uhzms5ZPZNUKfq/s1600/HWScan00425.bmp+(FILEminimizer)%2B(FILEminimizer).jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZNMj9Lkby-jQfCUY2DD2ne43_EIL9mkuqLYi5E_rSa47O3laOSJVUZGOlz8xmdv0LKVhAKgkKkU1tu7MfWNMcXxl3E-_hwux2Yn7_AMyShYCNjxo-yzi5-7mExhc4E4uhzms5ZPZNUKfq/s1600/HWScan00425.bmp+(FILEminimizer)%2B(FILEminimizer).jpg" height="200" width="144" /></a></div>
புராதன காலம் தொட்டு மனிதன் மனதில் இருக்கும் தீய எண்ணங்களான குரோதம், வன்மம், பழிக்கு பழி போன்ற இயல்புகளை அடிப்படையாக கொண்ட சிறுகதைகளின் தொகுப்புத்தான் Green Manor. வினோதமான கார்ட்டூன் பாணியிலான சித்திரம் மூலம் 100% சீரியசான விஷயத்தை சொல்ல முயற்சித்திருப்பது புதுமை. சில கதைகள் எழுத்தாளரின் புத்திசாலித்தனத்தை பிரதிபலிக்கிறது. புராதன நெடி வீசும் தமிழ் மொழிபெயர்ப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டு கதைக்களனுக்கு எங்களை இட்டுச்செல்வதில் வெற்றிபெறுகிறது. கோயில்கடை குமரன் அண்ணாவுடன் ஒரு நாள் கதைக்கும்போது Green Manor கதைகளில் ரசித்தவற்றை பற்றி கூறி மகிழ்ந்தார். அவருடன் கதைத்தபின்னர் மீண்டும் ஒருமுறை "ஜான் ஸ்மித்" கதையை வாசித்தேன். அந்த கதையில் "ஜான் ஸ்மித்" என்பவன் பல கொலைகளுக்காக தேடப்படுகிறான். கொலையை துப்பு துலக்கும் இன்ஸ்பெக்டரே சரணடைய வெவ்வேறான காரணங்களுக்காக வெவ்வேறான நபர்களால் நிகழ்த்தப்படும் கொலைகள் நிறுத்தப்படுகின்றன. கடைசியாக கொலைசெய்ய திட்டமிட்டிருந்த ஆசாமி "ஜான் ஸ்மித்" என்று எழுதப்பட்டிருந்த பேப்பர் துண்டை எறியும் கட்டம் கதைக்கு சரியான முடிவை தருகிறது.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<b>வானமே எங்கள் வீதி</b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXcWpYeeciuWwVa2k0z7YooN734GBQeE_Br9yj_uNk0xZQUOkdpAQ-2PeFid5lILBa2_54XU2Ylzo5E5FAMLqU4qv05h6hY-5zX1IkydVxKENzWsMStU1VHnasSNnmPUq6XuZxryKbsq97/s1600/vaname+yengal+veethi+(3).JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXcWpYeeciuWwVa2k0z7YooN734GBQeE_Br9yj_uNk0xZQUOkdpAQ-2PeFid5lILBa2_54XU2Ylzo5E5FAMLqU4qv05h6hY-5zX1IkydVxKENzWsMStU1VHnasSNnmPUq6XuZxryKbsq97/s1600/vaname+yengal+veethi+(3).JPG" height="200" width="153" /></a></div>
இரண்டாம் உலகப்போரை மையமாக வைத்து பல கதைகள் வந்திருக்கின்றன. இந்த கதை விமானங்கள் மூலமாக இடம்பெற்ற தாக்குதல்களை பின்புலமாக கொண்டு அமைக்கபட்ட இந்த non-linear கதை ஏனைய உலகப்போர் கதைகளில் தனித்திருக்கிறது. இரு வேறான காலங்களில் நகர்கின்ற யூகிக்க முடியாத இந்த கதையின் கதையின் போக்கு ஒருவித ஆர்வத்தை மனதில் தோற்றுவிக்கிறது. அடுத்து கதை எப்படி போகுமோ என்ற சுவாரசியம் இங்குள்ள வேறு எந்த கதையும் எனக்கு ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.<br />
<br />
<b><br /></b>
<b><br /></b>
<b><br /></b>
<b><br /></b>
<b><br /></b>
<b><br /></b>
<b><br /></b>
<b><br /></b>
<b>11th Man: </b>நம்முடைய டைலன் டாக் - <b>அந்திமண்டலம்</b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifWRjZxxwC2SsNooyuQ6W7rjjoAsSBDHPBhTZwYqiVraDCa8X2ElrnS16vzobqwqYH-ik6weA01xyf252O54btp5vqdFui8YhRFCANP7mry3jFBVit4p1kIDbcm50zXoJnniTRjICdwESa/s1600/DD-1.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifWRjZxxwC2SsNooyuQ6W7rjjoAsSBDHPBhTZwYqiVraDCa8X2ElrnS16vzobqwqYH-ik6weA01xyf252O54btp5vqdFui8YhRFCANP7mry3jFBVit4p1kIDbcm50zXoJnniTRjICdwESa/s1600/DD-1.JPG" height="200" width="130" /></a></div>
டைலன் டாக் முதல் பத்து இடங்களை சின்ன வித்தியாசத்தில் பிடிக்க தவறுகிறார். ஆனாலும் அவரது அறிமுக கதை வித்தியாசமான கதைகளனால் சுவாரசியம் தருகிறது. ஆனாலும் கதையின் தொடக்கத்தில் இருந்த சுவாரஸ்யம் பின்னர் கொஞ்சம் குறைந்து போவதுதான் ஒரே குறை. நேர்த்தியான சித்திரங்களுக்காக இன்னொருமுறை வாசிக்க வேண்டும்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
** உங்களுடைய டாப் டென் இதழ்கள் வேறுவிதமாக இருந்தாலோ உங்களுடைய favorites புறக்கணிக்கப்பட்டாலோ பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.</div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-57706448406316078052015-01-09T08:25:00.000-08:002015-01-09T08:28:54.408-08:00ஒரு அடையாள அட்டை படலம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8pAzvFl0nukHqwjDmI2QVQferslZ7GfckLJMjbJo4znCaP3peiPlQPBfK4DV8P5GU8sNby5oGetzajbM4K60PNu_4kqhMsjAOIezp9hs5OTfm9VblF2Mk3FgUTvCmWgQYmkt1KIfxzNmq/s1600/Untitled.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8pAzvFl0nukHqwjDmI2QVQferslZ7GfckLJMjbJo4znCaP3peiPlQPBfK4DV8P5GU8sNby5oGetzajbM4K60PNu_4kqhMsjAOIezp9hs5OTfm9VblF2Mk3FgUTvCmWgQYmkt1KIfxzNmq/s1600/Untitled.png" /></a></div>
மாலை அஞ்சு மணிக்கு வரச்சொன்னவள். இப்போது மணி நாலரை. நூறாம் நம்பர் பஸ். ரோட்டில் கொஞ்சம் டிராபிக் இருந்தது. இன்னும் நாலு பஸ் ஹோல்டை தாண்டினால் வெள்ளவத்தை வந்து விடும். ஒரே படபடப்பாக இருந்தது. ஆனால் அது ஒரு சந்தோசப்படபடப்பு. முதன்முறை அல்லவா, கொஞ்சம் அப்படித்தான் இருக்கும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டேன். மனம் வேறு எங்கோ சஞ்சரிக்கிறது. நான் கொழும்புக்கு புதுசு. இறங்க வேண்டிய ஹோல்டை விட்டுவிடபோகிறேனோ என்ற எண்ணம் வந்தது. வெள்ளவத்தை "மார்க்கெட்" ஹோல்ட்டுக்கு வரசொல்லியிருந்தாள். வேறு ஏதாவது ஹோல்டில் மாறி இறங்கினாலும் யாரிடமாவது விசாரித்து போய் சரியான இடத்துக்கு போய் சேர்வதற்கு சிங்களம் தெரியாது. அடுத்தது தெகிவளை நகரசபை ஹோல்ட். பிறகு வெள்ளவத்தை ஆர்மி செக்பொய்ன்ட் வரும். சிலநேரம் மறித்து "ஐ.சி" கேட்பான்கள். அப்போதுதான் மனதிற்குள் மின்னலடித்தது. பேர்சை தொட்டுப்பார்த்துக்கொண்டேன். பேர்சை காணவில்லை. அவள் "வா சந்திப்போம்" என்று அழைத்ததால் ஏதோ அவசரத்தில் பேர்சையும் எடுக்காமல் வந்து விட்டதை எண்ணியபோது நெஞ்சில் பகீரென்றது. செக்பொய்ண்டில் செக் பண்ணும்போது "ஐ.சி", போலீஸ் ரிப்போர்ட் இல்லாவிட்டால் முடிந்தது கதை. சந்தேக கேசில் கம்பி எண்ண வேண்டியதுதான். எல்லா பஸ்சையும் செக் பண்ணமாட்டார்கள். ஏதாவது ஒரு பஸ்சை ராண்டமாக நிறுத்தி செக் பண்ணுவார்கள். இந்த பஸ்சை நிறுத்தினால் என் கதை அம்போதான். "ஐ.சி" இல்லாவிட்டால் முதல் குற்றம், சிங்களம் பேசி சமாளிக்க முடியாவிட்டால் இரண்டாம் குற்றம். இவை எல்லாவற்றையும்விட திரு.. திருவென்று.. முழித்தால் மூன்றாம் குற்றம். எனக்கு எதிராக உடனடியாக சுமத்துவதற்கு ஏதுவாக மூன்று குற்றங்கள் இப்போது இருக்கின்றன. உடனடியாக ஜெயில்தான். யாருக்காவது தகவல் சொல்லி மீட்டுச்செல்ல ஒரு கிழமையாகும். ஆனாலும் அதிஷ்டம் இருந்தால் தப்பலாம். இப்போதுதான் முதல்முறையா ஒரு பொண்ணு "கபேக்கு வா.. உன்னோடு எதிர்காலம் பற்றி முக்கியமாக கதைக்கணும்" என்று சொல்லியிருக்கா. லவ் சரியாகும் போல இருக்கும் நேரத்தில் இப்படி முட்டாள்தனமாக "ஐ.சியை" விட்டுவிட்டு வந்திருக்கிறேனே என்று என்னை நானே சபித்துக்கொண்டேன். தலையை சுற்றியது. பஸ்ஸிலிருந்து இறங்கி மீண்டும் வீட்டுக்கே போனால் அந்த "ரிஸ்க்" இருக்காது. ஆனால் என் லவ் முளையிலேயே கருகி விடும்.<br />
<br />
***********************************<br />
<br />
அது ஒரு காலம். காசைவிட உயிர் மதிப்பு மிகுந்த காலம். நீங்கள் இந்த திருநாட்டின் உருப்படியான பிரஜைகள் என்று நிரூபிக்கும் முதல் ஆதாரம் நீங்கள் வைத்திருக்கும் "ஐ.சி" எனப்படும் "ஐடேன்டிடி கார்ட்". தமிழில் சொல்வதானால் அடையாள அட்டை. "ஐ.சி" எனப்படும் அந்த வஸ்து குறிப்பிட்ட நபரின் பெயர், முகவரி, மற்றும் சோகமாக போஸ் கொடுக்கும் மூஞ்சியையுடைய போட்டோ போன்ற விபரங்கள் அடங்கிய அட்டை. இந்த அட்டை இல்லாதவர்கள் பதினாறு வயதுக்கு குறைவானவர்களாக இருக்கலாம் அல்லது இந்நாட்டின் பிரஜைகளாக இல்லாதிருக்கலாம், இவை எதுவும் இல்லாவிட்டால் நீங்கள் சந்தேக நபராகவும் இருக்கலாம். கொழும்பில் இருக்கும் நபர்களுக்கு "ஐ.சி" என்பது உடலின் இன்னொரு அங்கம் போன்றது. அது இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவது நீங்களாகவே ஆறடிக்கு ஆறடி அறை வாடகைக்கு எடுத்துக்கொண்டு போய் பாணும், பருப்பும் மட்டுமே சாப்பிட்டு மிச்ச காலத்தை கழிப்பது போன்றது. வீட்டிலிருந்து கிளம்பும்போது அம்மா "பத்திரமா பார்த்து போடா" என்று சொல்லுவதற்கு பதிலாக "ஐ.சியை கொண்டு போடா" என்றுதான் சொல்லுவா. "ஐ.சி"யை தொலைப்பது போன்று வரும் கனவுதான் அக்காலத்தின் படுமோசமான கனவு.<br />
<br />
கொழும்பு என்பது ஒரு கனவு தேசம். ரோடு நிறைய கடைகள். எதுவும் கிடைக்கும். ஏ.ல். எக்ஸாமில் சொதப்பினாலும் ஏதாவது படிக்கலாம். எந்த கொம்பனும் வெளிநாட்டுக்கு போவதற்கு விசா எடுக்க இங்குதான் வந்தாகணும். ஆனாலும் கொழும்பு கெடுபிடிகள் நிறைந்த தேசம். ஆங்காங்கே செக்பாயிண்டுகள் இருக்கும். அடிக்கடி வீதிகள் மூடப்பட்டு வழவழப்பான கார்கள் அணிவகுத்து செல்லும். சரியான காரணம் இல்லாமல் கண்ட இடங்களில் உலாத்தினால், ஒருமுறை மாமியார் வீட்டுக்கு போய் வரவேண்டும். இவ்வாறான சூழ்நிலை காரணமாக, சும்மா காரணமில்லாமல் ஊர் சுற்ற யோசிப்போம். ஆகவே கொழும்பு ஒரு சொர்க்கமா? நரகமா? என்று பட்டிமன்றமே நடத்தலாம். இப்படியான ஒரு நகரத்தில் "ஐ.சி"யை தொலைத்தால் என்ன நடக்கும் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. நானும் ஒருமுறை தொலைத்திருக்கிறேன்.<br />
<br />
நான் "ஐ.சி"யை தொலைத்த தினம் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அன்று காலை எழும்பும்போதே மணி எட்டு. மேகங்களால் மூடப்பட்ட மந்தமான காலை. அன்று காலை வழமைக்கு மாறாக, வழமையான குயில்கள் கத்தும் ஓசைக்கு பதிலாக அண்டங்காக்கைகள் கரைந்ததாக ஞாபகம். இன்று ஏதோ விபரீதமாக நடக்கபோகிறது என்று என் மனம் சொன்னது. ஆனால் என்னவென்றுதான் தெரியவில்லை. அவசரமாக ஷேவ் செய்துகொண்டு ஓடிப்போய் பஸ்ஸில் ஏறினேன். கூட்டம் அதிகமில்லை. பஸ்ஸிலிருந்து இறங்கும்போது கொஞ்சம் கூட்டமாக இருந்ததாக ஞாபகம். இறங்கினேன். தாகமாக இருந்தது. கொஞ்ச தூரத்தில் ஒருத்தன் இளநீர் விற்றுக்கொண்டிருந்தான். ஒரு இளநீர் குடித்தேன். பத்து ரூபா என்றான். பேர்சை எடுக்க துழாவினேன். ம்ஹூம்.. அது இல்லை.. கடைசியாக பஸ்ஸுக்கு காசு எடுத்து கொடுத்ததாக ஞாபகம். எங்கு தேடியும் இருக்கவில்லை.. அவ்வளவுதான்.. கதை முடிந்துவிட்டது.. பேர்சை எவனோ பிக்பொக்கட் எடுத்துவிட்டான். அதில் முப்பது ரூபாய்தான் இருந்தது. அது இப்போது முக்கியமில்லை. என்னுடைய "ஐ.சி" அதில்தான் இருந்தது. தலை சுற்றியது. இளநீர்க்காரன் கையில் நல்ல கூரான அரிவாள் இருந்தது. அவன் வெட்டிய இளநீருக்கு காசு கொடுக்கணும். அதுவேறு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது. அவனுக்கு தமிழ் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பேர்ஸ் தொலைந்து போனதை இளநீர்க்காரனுக்கு சைகை விளக்கம் கொடுக்க முயற்சித்தேன். அவனும் கத்தியை ஆட்டிக்கொண்டு ஏதோ புரியாத சிங்களத்தில் கேட்டான். கடைசியாக எனது கையிலிருந்த புதிய "நோக்கியா 3310" போனை கொடுத்து "நாளைக்கு காசை தாரேன், அதுவரை போனை வச்சிருங்க" என்றேன். "என்ன தம்பி உங்களுக்கு பேச்சு வருமா? நீங்க ஊமைன்னு நெனைச்சேன்.. பத்து ரூபாக்கு போயி போனை தாறீங்க.. நாளைக்கு காசை தாங்க" என்றான். அவனும் தமிழன்தான். நான் வேறு முட்டாள்தனமா சைகை செய்து.. சை.. "ஐ.சி" வேறு தொலைந்து போய்.. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏதாவது ஒரு செக் பொய்ண்டில் மாட்டினால் கதை கந்தல். வீட்டுக்கு போன் செய்வதற்கு போனில் காசு இல்லை.<br />
<br />
இந்த சம்பவம் நடைபெற்ற நேரம் காலை பத்தரை மணி. இடம் கல்கிசை மார்கெட் அருகில். திருவென்று திருவென்று முழித்து கொண்டிருக்கிறேன். அப்போது பார்த்து யாரோ முதுகில் தட்டினார்கள். இதய துடிப்பு சடாரென்று அதிகரிக்க திரும்பினேன். அது கண்ணன். நண்பன்..<br />
<br />
"டேய் என்னடா ரோட்டில முழுசிக்கொண்டு நிக்கிற.. சைட் அடிக்க வந்தியா" என்று சிரித்தான்.<br />
<br />
"ஐ.சி தொலைஞ்சு போச்சுடா. யாரோ பஸ்சில பிக்பொக்கட் அடிச்சு போட்டாங்கள்" என்று அழாக்குறையாக சொன்னேன்.<br />
<br />
"இதுக்கு போய் அழுகிற.. வாடா போலிஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுப்போம்"<br />
<br />
"இல்லடா பயமா இருக்கு.. அங்க போனா என்னை பிடிச்சு ஜெயிலில போடுவாங்கள்"<br />
<br />
"சும்மா வாடா.. கம்ப்ளைன்ட் கொடுக்கத்தானே போறோம். அது இல்லாம புது ஐ.சிக்கு அப்ளை பண்ண ஏலாது"<br />
<br />
அதுநாள் வரை கல்கிசை போலிஸ் ஸ்டேஷன் எங்கேயிருக்கிறது என்று தெரிந்திருக்காத என்னை கண்ணன் அழைத்துச்சென்றான். போலிஸ் ஸ்டேஷன் நான் நினைத்ததை போலல்லாது விநோதமாக அமைதியாக இருந்தது. ஆனாலும் எனது காலில் நடுக்கம் குறையவில்லை. போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பதற்காக வரிசையில் காத்திருந்தோம். அப்போது பார்த்து கண்ணன் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியை கேட்டான்<br />
<br />
"டேய்! எல்லா இடமும் சரியா தேடி பார்த்திட்டியா? முதுகில இருக்கிற BAGஇல தேடி பார்த்திட்டியோ" என்று சும்மா சாதாரணமாகத்தான் கேட்டான்.<br />
<br />
ஒரு துளி நம்பிக்கையுடன் BAGஇல் தேடினேன். முதலில் கிடைக்கவில்லை. எல்லா இடமும் தேடினேன். A/L டியூசன் கார்டை வைக்கும் வழமையான இடத்தில் "ஐ.சி" வெளிப்பட்டது. எனது கண்ணை என்னாலேயே நம்பமுடியவில்லை. இதற்கு முதல் நாள்தான் "ஐ.சியை" போட்டோகொப்பி எடுத்துவிட்டு எனது பேர்சில் வைப்பதற்கு பதிலாக BAGஇல் வைத்தது ஞாபகத்துக்கு வந்தது. கண்ணனின் முகத்தை பார்த்து சிரிக்க முயன்றேன். அவன் என்னை கொன்றுவிடுவது போல பார்த்தான். "வாடா போவோம்" என்று மெதுவாக காதில் சொல்லி விட்டு விருக்கென்று வெளியேறி விட்டான். ஐ.சி கிடைத்த சந்தோசத்தில் வெளியே வந்தேன்.<br />
<br />
கண்ணன் வேகமாக நடந்து போய் கொண்டிருந்தான்.<br />
<br />
************************************************************!!!<br />
<br />
<br />
இந்த கதையெல்லாம் நடந்தது, கிட்டத்தட்ட பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னரான காலப்பகுதியில். ஆனால் இன்று ஐ.சி என்ற வஸ்துவின் மரியாதை கிட்டத்தட்ட பூஜ்யம். நேற்று காலை ஒரு இலங்கையின் குடிமகனுக்குரிய கடமையை ஆற்றவேண்டிய ஒரே காரணத்துக்காக ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்க வாக்களிப்பு நிலையத்துக்கு சென்றேன். அங்கிருந்த அதிகாரியிடம் வாக்களிப்பு அட்டையை ஸ்டைலாக கொடுத்தேன். "உங்கட அடையாளத்தை நிரூபிக்க ஐ.சி இருக்கா" என்றார். எனது வாழ்வில் மறுபடியும் ஐ.சி முக்கியத்துவம் பெறக்கூடிய தருணம். இருக்குமோ.... இல்லையோ... என்ற சந்தேகத்துடன் பேர்சை துழாவினேன். பேர்சின் ஒரு ரகசிய உள் பொக்கட்டில் காமாசோமாவேன்று ஐ.சி பரிதாபமாக எட்டிப்பார்த்தது.<br />
<br /></div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-58701118564825617072014-10-04T03:30:00.002-07:002014-10-04T08:44:28.199-07:00பிரம்மாஸ்திரம்!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiU7mstUVEkeQTtRV3PKyHzU2oMesgMlkQphM2AEabv4dFV_vT8m2HfNH1uyTmbJSYIV3TyFTBNimrjnifOm_4MdLecHsqV6i1PJwfiBSNZFRnBirl8HISmaRoz9dYPFFgmU56Vc5AkrrrC/s1600/7b7903d4-2915-48d9-a3d5-ff4d6872abbeHiRes.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiU7mstUVEkeQTtRV3PKyHzU2oMesgMlkQphM2AEabv4dFV_vT8m2HfNH1uyTmbJSYIV3TyFTBNimrjnifOm_4MdLecHsqV6i1PJwfiBSNZFRnBirl8HISmaRoz9dYPFFgmU56Vc5AkrrrC/s1600/7b7903d4-2915-48d9-a3d5-ff4d6872abbeHiRes.JPG" height="238" width="320" /></a></div>
பின்னேரம் நாலு மணி இருக்கும். முன் கேட்டில் மூன்று தரம் டிங்.. டிங்.. என்று சத்தம் கேட்டது. அதுதான் பின்னேர கிரிக்கெட் விளையாட்டுக்கான ரகசிய சமிக்ஞை. முந்தாநாள்தான் ஏழாம் ஆண்டு கடைசி தவணை பரீட்சைகள் முடிந்து ரிப்போர்ட் கார்ட் வந்திருந்தது. ரிப்போர்ட்டில் வந்த மார்க்ஸ் அம்மாவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியம அளவுகளில் இல்லாததால் லீவு நாட்களிலும் அம்மாவின் கெடுபிடிகள் அதிகமாக இருந்தன. அதனால் "பின்னேர விளையாட்டு" கிழமையில் மூன்று நாட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஏனைய நாட்களில் "டியூஷன் போகிறேன்" என்று சொல்லிவிட்டுத்தான் விளையாட்டுக்கு போகணும். எல்லாமே தீவிரமாக திட்டமிடப்பட்டிருந்தது. பிரசாத் கேட்டில் மூன்று தரம் மெதுவாக தட்டுவான். நான் அந்த சிக்னலை கேட்டு பாடபுத்தகத்தோடு வெளியே வரவேண்டும். என்னை தவிர வேறு யாராவது சத்தம் கேட்டு போய் பார்த்தால் யாரையும் காணமுடியாது. மூணு வீடு தள்ளி இருக்கிற "டியூசன்" அங்கிள் வீட்டுக்கு போக சைக்கிள் தேவைப்படாது. ஆகவே எனது சைக்கிளை தொட்டால் அம்மாவுக்கு சந்தேகம் வந்துவிடும். இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கிற உப்பு கராஜ்ஜுக்கு போக பிரசாத்தின் சைக்கிளில்தான் தொற்றிக்கொள்ள போகவேண்டும். பிரசாத்துக்கு என்னைவிட ஒரு வயசு குறைவு. ஆனாலும் அவன் வயது பயல்களுடன் சுற்றுவதைவிட என்னுடன்தான் கூடுதலாக சுற்றுவான். அவன் ஒரு கிரிக்கெட் பைத்தியம். அவனுடன் கிரிக்கெட் விளையாட சம்மதிக்கும் யாரும் அவனுக்கு நண்பராகலாம். அந்தவழியில்தான் நான் அவனுக்கு நண்பன்.<br />
<br />
நான் பாடபுத்தகத்தோடு வெளியே வந்தேன். பிரசாத்தின் சைக்கிளில் ஏற சைக்கிள் வேகம் பிடித்தது. வேகமாக சைக்கிள் ஓடினால் இன்னும் கூடுதலான நேரம் கிரிக்கெட் விளையாடலாம் என்பதற்காகவே மூச்சிரைக்க பிரசாத் வெறியுடன் ஓடினான். "நத்தை" நந்துவும், முத்துவும் நேரடியாக உப்பு கராஜ்ஜுக்கே வருவார்கள். நாலே நாலு பேர்தான். ஆனாலும் நாங்க விளையாடுற கிரவுண்டின் அளவுக்கு நாலு பேர் அதிகம்தான். எங்கள் ஊரில் "புட் போல்"தான் பேமஸ். கிரிக்கெட் என்றால் சோம்பேறிகளின் விளையாட்டு என்று ஒரு பொதுவான அபிப்பிராயம் இருந்தது. "அது என்னடா விளையாட்டு.. ஒருத்தன் போல் போட.. அதை ஒருத்தன் அடிக்க.. கிரவுண்டுல இருக்கிற மற்ற பத்து பேரும் கொட்டாவி விடுகிறான்கள்" என்று தாத்தா கடுமையாக விமர்சிப்பார். ஆகவே கிரிக்கெட் விளையாட காசு குடுத்ததுதான் ஆள் பிடிக்கவேணும். யன்னல் கண்ணாடிகளை காப்பாற்றிகொள்வதற்காக உள்ளூர் பெருசுகள் செய்யும் சதி என்று பிரசாத் சொல்லுவான். இதுவரை நாலு வீட்டு யன்னலை உடைத்திருக்கிறான். அடுத்த நாள் காசை தந்து விடுவேன் என்று சொல்லி நழுவி விடுவான். அடுத்த நாள் வேறு இடத்துக்கு விளையாட்டை மாற்றிவிடுவோம். இவ்வளவு எதிர்ப்புக்கும் மத்தியிலும் நாங்கள் நாலு பேரும் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு காரணம் இருந்தது. நாங்கள் நாலு பேருக்கும் "புட் போல்" ஒத்துவராது. "புட் போலில்" தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். "கோல்" அடிக்க போகும்போது காலை "டாக்கில்" செய்து விழுத்தி விடுவான்கள். பிரசாத் இப்படியான ஒரு சம்பவத்தில் முன் பல்லை இழந்திருந்தான். அந்த பயத்திலேயே கிரிக்கெட்டுக்கு எங்களை இசைவாக்கப்படுத்திக்கொண்டோம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbDwT2A7IaQA-wEeXVjkH2cWBJ_Iqocu-qwJHfmkyjmirZVCFWX9kzqPDQD4rbsqx_AQeLpBmvhVcMv2v49T5iQ6MHdLoS_tQjFr8E8tVjgqz7mqvEwmuGmoXhgH3wisujbVWFAOJQgZcF/s1600/85fb7227-6bd5-4a40-a532-a35523d3db43HiRes.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbDwT2A7IaQA-wEeXVjkH2cWBJ_Iqocu-qwJHfmkyjmirZVCFWX9kzqPDQD4rbsqx_AQeLpBmvhVcMv2v49T5iQ6MHdLoS_tQjFr8E8tVjgqz7mqvEwmuGmoXhgH3wisujbVWFAOJQgZcF/s1600/85fb7227-6bd5-4a40-a532-a35523d3db43HiRes.JPG" height="238" width="320" /></a></div>
உப்பு கராஜ்ஜூக்கு போய் சேர்ந்தபோது முத்துவும், நந்துவும் விக்கெட்டுகளை நாட்டிக்கொண்டிருந்தார்கள். நந்துவின் பட்டப்பெயர் "நத்தை". நாங்கள் அவன் பீல்டிங் செய்யும் பக்கமாக பந்தை அடிப்போம். பௌண்டரி நிச்சயமாக கிடைக்கும். முத்து நல்ல "பாட்ஸ்மன்". பலசாலி. ஆனாலும் உப்பு கராஜ் போன்ற சின்ன மைதானங்களில் அவன் திறமை வீணானது. உப்பு கராஜ் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரிய காலி நிலமாக கனவு மைதானமாக இருந்தது. ஆனால் இப்போது சில வீடுகள் முளைத்து விட்டன. அதனால் மைதானம் சுருங்கி நீள் சதுரமாக மாறியது. இதனால் "ஓப்" சைட்டில் அடித்தால், லல்லு மாமா வீட்டு யன்னல்களுக்கு ஆபத்து வரும். "ஓன்" சைட்டில் அடித்தால் உப்புக்குளத்தில் பந்து விழுந்து விடும். ஆகவே ஸ்ட்ரைட்டாக அடித்தால் மட்டுமே சிக்ஸர் அடிக்க முடியும். இப்படியோரு இண்டர்நஷனல் க்ரௌன்ட். ஆனாலும் கிரிக்கெட் மேலிருந்த வெறி எங்களை அங்கே அழைத்துச்செல்லும்.<br />
<br />
முத்து முதலாவதாக "பேட்"டை தூக்கினான். பிரசாத் ஒருவன்தான் அவனுக்கு தைரியமாக பந்துவீச வருவான். பிரசாத் "பாஸ்ட் போலர்" பௌன்டரி லைனுக்கு அருகாமையிலிருந்து ஓடி வருவான். "வக்கார் யூனுஸ்"தான் அவனது மானசீக குரு. முதல் பந்தை முன்னுக்கு ஒரு ஸ்டெப் வைத்து "ப்லோக்" செய்தான். "சிவமயம்" போட்டு எழுத ஆரம்பிப்பது போல இப்படித்தான் தொடங்குவான். அடுத்த பந்து தூக்கி அடிக்க சிக்ஸருக்கு பறந்தது. அடுத்தது பௌன்டரி. அடுத்த பந்தை பிரசாத் கொஞ்ச ஸ்லோவாக போட பேட்டை மிஸ் பண்ணி முத்துவின் முழங்காலில் பட்டது. "முத்து.. நீ அவுட்டு.. LBW போடா வெளியே" என்று பிரசாத் கத்தினான். ஆனால் முத்து "இல்லடா பாட்டுல(pad) பந்து பட்டாத்தான் LBW.. நீ டீவியில மேட்ச் பார்த்ததில்லையா" என்று சண்டை பிடித்தான். அவனை அவுட் ஆக்குவது கஷ்டம். அவுட் ஆக்கினாலும் வெளியே போக வைப்பது அதைவிட கஷ்டம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
அடுத்த ஓவர் என்னிடம் வந்தது. நான் "லெக்" ஸ்பின்னர். எனக்கு ஓடுவது என்றாலே அலர்ஜி. பள்ளி விளையாட்டு போட்டிகளில் ஓடி ஒளிவேன். ஓடினால் கால் உளையும். "ஸ்பின்னராக மாறும்" சரித்திரத்தையே மாற்றும் முடிவை எடுத்தேன். முதல் பந்து அரைபிட்ச்சில் விழுந்து சுழன்று அடிப்பதற்கு வாகாக விழுந்தது.. வெளுத்தான்.. சிக்ஸர்.. "இருடா.. ஆறு போலுக்குமே சிக்ஸர் அடிக்கிறேன்" என்று சூளுரைத்தான். அடுத்த பந்து கொஞ்சம் பரவாயில்லை. கஷ்டப்பட்டுத்தான் அடித்தான்.. நந்து விட்டுவிட பௌண்டரி.. </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxEO1iCDMrKl6xOpNqJ8GIczrNrsq2E-dsHpJD6h8TA7zghRDhf282L-bZhYK63j3rEZQzcKKJ_QuSQIkbfZOExXAXQDeogmbGoSIz_XOt2FBdzaUel6MsiXo0y42JIMWnxmOp5UjXkwbT/s1600/famous20cricket20player20of20pakistan20saqlain20mushtaq2_2140_.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxEO1iCDMrKl6xOpNqJ8GIczrNrsq2E-dsHpJD6h8TA7zghRDhf282L-bZhYK63j3rEZQzcKKJ_QuSQIkbfZOExXAXQDeogmbGoSIz_XOt2FBdzaUel6MsiXo0y42JIMWnxmOp5UjXkwbT/s1600/famous20cricket20player20of20pakistan20saqlain20mushtaq2_2140_.jpg" height="252" width="320" /></a>எனக்கு அடுத்து என்ன செய்வது தெரியவில்லை. அப்போதுதான் எனது</div>
பிரம்மாஸ்திரம் ஞாபகத்துக்கு வந்தது. அந்த நேரம் "சக்லைன் முஸ்தாக்" பிரபலமாக இருந்தார். ஓப் ஸ்பின்னர் என்று சொன்னாலும் பந்தை அடுத்த பக்கமாகவும் திருப்புவார். அவரைப்போலவே நானும் எனது வழமையான லெக் ஸ்பின்னை கொஞ்சம் மாற்றி ஓப் ஸ்பின் போட்டேன். முத்து எதிர்பார்க்கவில்லை. ஓப் ஸ்டம்ப் பறந்தது. "நீ அலாப்புகிறாயடா.. பந்து கல்லில பட்டு அடுத்த பக்கம் திரும்பிட்டுது." என்று பிட்சில் விழுந்திருந்த சின்ன கல்லுகளை சாவகாசமாக தட்டிவிட்டான். அவனது சேர்ட்டை பிடித்து இழுத்து "நீ அவுட்டு.. போடா வெளியே" என்றேன். அவன் என்னை தள்ளிவிட பிட்சில் போய் விழுந்தேன். காலில் தேய்த்து காயம் ஏற்பட்டது. "இப்ப பாருடா உனக்கு குடுக்கிறேன் பாரு" என்று கர்ஜித்துக்கொண்டே எழுந்தேன். எல்லோரும் சிலை போல அதிர்ந்து போய் எனது பக்கமாக பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்கள் என்னை பார்க்காமல் எனக்கு பின்னாலிருந்த யாரையோ பார்த்துகொண்டேயிருந்தார்கள். திரும்பி பார்த்தபோது அவர்களைவிட நான் அதிர்ச்சியானேன். அன்பு மாமா முகம் சிவந்தவாறு முறைத்துகொண்டிருந்தார். "டேய் உனக்கு இப்போது டியூஷன் இருக்கு.. ஆனா நீ இங்க என்ன செய்யுற" என்று கர்ஜித்தார். "அம்மாட்ட பொய் சொல்லிட்டாய்.. என்ன பார்க்கிற.. வீட்டுக்கு வா.. தாரேன் பூசை" என்றார்..<br />
<br />
அவருடைய "சூப்பர் கப்" மோட்டார் சைக்கிளில் ஏறினேன். மற்றவர்கள் அசையாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். வீட்டில் அன்பு மாமாவின் பிரம்மாஸ்திரமான பெல்டினால் நல்ல பூசை கிடைத்தது. அதற்கான காரணம் கிரிக்கெட் மட்டுமல்ல. அதைவிட அபாயகரமான காரணம் ஒன்று இருப்பது பிறகுதான் உறைத்தது. "அக்கா.. இவன் ரிப்போர்ட் கார்டுல கணித பாட மார்க்ஸ் மாத்திப்போட்டான்.. இவன் உண்மையா எடுத்தது நாற்பத்தைந்து மார்க்ஸ்.. ஆனா கள்ளப்பயல் அதை அழிச்சு எழுபத்தைந்து என்று மாற்றிப்போட்டான்" என்று போட்டுடைத்தார். அவ்வளவுதான் பூசையில் அம்மா வேறு சேர்ந்து கொண்டாள். அன்றுதான் கிரிக்கெட் விளையாடிய கடைசி நாள். நல்லதொரு ஸ்பின்னரை இந்த நாடு இழந்து விட்டது..<br />
<br />
அவர் ஏன் உப்பு கராஜ் போன்ற ஒதுக்குபுறமான இடத்துக்கு திடீரென்று வந்தார்.. ரிப்போர்ட் கார்டில் நான் செய்த திருகுதாளம் எப்படி அவருக்கு தெரிந்தது என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகள் இரண்டு வருடங்களுக்கு பின்னர்தான் தெளிவானது. உப்பு கராஜுக்கு பக்கத்தில் இருந்த லல்லு மாமாவின் மகளை சைட் அடிக்க அன்பு மாமா வருவாராம். லல்லுவின் மகள்தான் எங்கள் கணித ஆசிரியையான மாலா டீச்சர். இரண்டு வருஷம் கழிச்சு இப்போது மாலா டீச்சர் அன்பு மாமியாகி விட்டா. "உனக்கு இவன் ரிப்போர்ட்டில் மாற்றினது எப்படி தெரியும்" என்று ஒரு வார்த்தையை அம்மா மாமாவை பார்த்து கேட்டிருந்தால் அன்றையதினம் நிலைமை மாறியிருந்திருக்கலாம்..<br />
<br />
ஆனால் கேட்கவில்லை..<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-57154759987938799692014-09-28T09:01:00.001-07:002014-09-29T09:54:51.956-07:00போர்முலா!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimgeSvfqBFRm7TW262qF431DvA-om-fv3ou-PFC-YWVrqMiRUZ_6ANpXwyrfyFb5zrpUst5v2aplLOLsJIrUDCLQCg52jFAvC3_oorX-636GrIWGQrQUGwlWzIb3meYd3G3foG_vnqBlX2/s1600/shutterstock_111060314-620x465.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimgeSvfqBFRm7TW262qF431DvA-om-fv3ou-PFC-YWVrqMiRUZ_6ANpXwyrfyFb5zrpUst5v2aplLOLsJIrUDCLQCg52jFAvC3_oorX-636GrIWGQrQUGwlWzIb3meYd3G3foG_vnqBlX2/s1600/shutterstock_111060314-620x465.jpg" height="240" width="320" /></a></div>
"போர்முலாவை கண்டுபிடிச்சிட்டிங்களா" என்றான் சக்கரை. அவனுக்கு அப்படி ஒரு ஆர்வம்.<br />
<br />
"இல்லை.. இன்னும் கொஞ்சம் சரிப்படுத்தணும்.. இண்டைக்கு எப்படியும் சரிவரும் எண்டு நினைக்கிறன்" என்றார் மூலவர். மூலவர் ஒரு டைப்பான விஞ்ஞானி.<br />
<br />
வீட்டுக்கு மூத்தவர் என்பதால் மூலவர் என்ற பட்டப்பெயர் நிலைத்து விட்டது. சக்கரை அவருடைய மருமகன்.<br />
<br />
"இது எப்படி சாத்தியம். மூணு வருசமா சோழர் காலத்துக்கு போறதுக்கு மெஷின் கண்டுபிடிக்கிறன் பேர்வழி என்று இந்த ரூமிலேயே அடைஞ்சு கிடக்கிறீங்க"<br />
<br />
"கொஞ்சம் விஞ்ஞானம்.. கொஞ்சம் சூனியம்.. கொஞ்சம் நம்பிக்கை போதும். இரவுக்கு வா உன்னை சோழ தேசத்துக்கு கொண்டு போறேன்"<br />
<br />
"சோழ தேசத்துக்கு போனா திரும்பி வரக்கூடாது. வந்தா A/L எக்ஸாம் எழுதவேணும். ஏதாவது குருகுலத்தில் சேர்ந்து வில்வித்தை கத்துக்கணும். இரவுக்கு வாரேன்"<br />
<br />
இரவு பதினோரு மணிக்கு சக்கரை ஆர்வமாக ஆஜர். தனக்கு பிடித்த சேர்ட் அணிந்திருந்தான். அந்த சேர்ட்டுடன் சோழ தேசம் போகணும் என்பது அவன் அவா.<br />
<br />
கால இயந்திரம் அறுகோண வடிவில் ஒரு ஆள் போகக்கூடிய அளவுக்கு பெரிசாக இருந்தது. மூலவரின் கால இயந்திரம் மந்திரங்கள் எழுதிய தகடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.<br />
<br />
"இந்த முறை வேறு விதமான போர்முலா. அதற்கு உன் ஒத்துழைப்பு மிக அவசியம். சரி.. மனசுக்குள் சோழகாலத்தை பற்றி நினைத்துக்கொள். உனக்கு பிடித்த ராஜராஜ சோழன் காலம். குதிரைகள்.. அம்புகள்.. வில்லுகள்.. உன் மனதுக்கு நீதான் ராஜா. நீ மனப்பூர்வமாக நம்பினால் அடுத்த நிமிஷம் சோழர் காலம்" என்று பிரசங்கம் செய்பவர்களின் குரல் போல மூலவரின் குரல் அதிகாரமாக ஒலித்தது.<br />
<br />
சக்கரை மறு கேள்வி கேட்காமல், கால இயந்திரத்தை நோக்கி மந்திரிக்கப்பட்டவன் போல நடந்தான்.<br />
<br />
டொட்.. டொட்..<br />
<br />
இந்த கதை சும்மா ஒரு உருவக கதைதான். அதை கொஞ்சம் அந்த இடத்தில் விட்டுவிட்டு சொல்ல வந்த விசயத்துக்கு வருகிறேன். "யாழ் ஐடி ஹப்" நடாத்தும் போட்டி நிகழ்வு "யாழ் கீக் சாலேஞ்" வரும் நவம்பர் மாதம் நடக்கவிருக்கிறது. இம்முறை நடக்கவிருப்பது மூன்றாம் வருடம். முதலிரு முறைகளில் நடைபெற்ற போட்டிகள் மிக சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. "யாழ் கீக் சாலேஞ்" என்பது ஐடி தொழினுட்பவியாளர்களும், மாணவர்களும் சங்கமிக்கும் ஒரு போட்டி நிகழ்வாக அமைந்திருந்தது. இதன்மூலம் மாணவர்களுக்கு மென்பொருள் தொடர்பான செயன்முறை எவ்வாறு இருக்கும் அதற்காக அவர்கள் செய்யவேண்டிய ஆயத்தங்கள் பற்றிய அறிவினை பெற்றுக்கொள்ளகூடியதாக இருந்தது. இதில் கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தி மாணவர்கள் வேறு சில IT போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. வெவ்வேறான பாதைகளில் பயணிக்கும் மாணவர்கள் "யாழ் கீக் சாலேஞ்" என்ற ஒரு நிகழ்வின் மூலமாக சந்தித்துக்கொண்டனர். அறிவை, அனுபவத்தை பகிர்ந்தனர். இதன்மூலமாக சிலருக்கு IT துறையில் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது.<br />
<br />
சென்ற முறைகளில் "யாழ் கீக் சாலேஞ்" போட்டிகள் Software Engineering lifecycleஇலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு Software Engineering lifecycle பற்றிய அறிவுகளை அளவிடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. Requirements, Design, User Experience, Business Strategy போன்று Industryயில் கடைப்பிடிக்கும் அதே வரிசையில் போட்டியாளர்கள் ஒவ்வொரு roundஆக மூழ்கி எழுந்தனர். தாங்கள் மனதில் தோன்றிய ஐடியாக்களுக்கு Design diagram உருவாக்கினார்கள். Whiteboardஇல் designஐ வரைந்து காட்டி விவாதித்தார்கள். எதிர்காலத்தில் வரக்கூடிய Technical பிரச்சனைகளை ஆராய்ந்தார்கள். நடுவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சில டெக்னாலஜிகளை ஒப்பிட்டு பதிலளித்தார்கள். User experienceஐ அதிகரிக்கும் வழிகளை ஆராய்ந்து செயல்வடிவமாக present செய்தார்கள். எவ்வாறு தங்களது படைப்பின் மூலமாக பணம் சம்பாதிக்கலாம் என்பதை புதிது புதிதாக ஐடியாக்கள் சொன்னார்கள். சில அணிகள் நடுவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக சிறப்பாக செயற்பட்டன. டெக்னாலஜி trendஇற்கு ஏற்றவாறு டெக்னாலஜிகளை தெரிவுசெய்தார்கள். தெரிவுகளை நியாயப்படுத்தினார்கள்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiafuQKM79ZAtQdPre-ygfLZe_imfPVj9l-5RLsIooNMxCGmRotSMem2ObuSs0W8InPU1j_umLZ7RFW8u0kFnDkF0aGwleXLTX9-3U4DuNuWTscYVYlIpeC7yNoWCGFkkbOlIIItP6Me4EA/s1600/10676350_10152274837636415_1098151156749936032_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiafuQKM79ZAtQdPre-ygfLZe_imfPVj9l-5RLsIooNMxCGmRotSMem2ObuSs0W8InPU1j_umLZ7RFW8u0kFnDkF0aGwleXLTX9-3U4DuNuWTscYVYlIpeC7yNoWCGFkkbOlIIItP6Me4EA/s1600/10676350_10152274837636415_1098151156749936032_n.jpg" height="235" width="640" /></a></div>
<br />
<br />
இவ்வகையான போட்டி வடிவமைப்பில் Software development இருக்கவில்லை. இதனால் மாணவர்களின் சில நல்ல ஐடியாக்கள் உயிர் கொடுக்கப்படாமலே அவர்களது மனதிலே உறங்கின. இதனால் அடுத்து வரும் "யாழ் கீக் சாலேஞ்" போட்டி அமைப்பு மேம்படுத்த படவேண்டிய அவசியம் உணரப்பட்டது.<br />
<br />
சென்ற வருடம் "யாழ் ஐடி ஹப்" நடாத்திய Hackathon போட்டிகளின்போது பலர் ஆர்வமாக கலந்துகொண்டு தங்களது ஐடியாக்களை develop செய்து உயிர் கொடுத்தார்கள். Prototypeகளை சிறப்பாக வடிவமைத்து காட்டி அசத்தினார்கள். இது "யாழ் கீக் சாலேஞ்" போட்டி அமைப்பு மேம்படுத்தும் திட்டத்துக்கு பெரிதும் உதவியது. இதன் காரணமாக போட்டிகள் prototype ஒன்றை உருவாக்குவதை போன்றதாக போட்டி அமைப்பினை முன்மொழிந்தார்கள். பழைய போர்முலா அப்படியே மாற்றம் பெற்றது. பழைய போர்முலாவின்போது இல்லாத prototypeஐ இம்முறை போட்டியாளர்கள் உருவாக்கப்போகிறார்கள். நானும் ஒரு Developer என்பதால் இம்முறையின் போட்டி அமைப்பு எனக்கு பிடித்திருக்கிறது. மூன்று நாள் தொடர்ச்சியாக Hackathan நடக்கவிருக்கிறது. போட்டியாளர்கள் Software Development செய்யப்போகிறார்கள். போனமுறை Strategy Roundஇன்போது போட்டியாளர்கள் உருவாக்கப்படாத பொருளை சந்தைப்படுத்தும் வழிவகைகளை ஆராய்ந்தார்கள். ஆனால் இம்முறை தாங்கள் develop செய்த Softwareஐ காட்டி விவாதிக்கப்போகிறார்கள். இம்முறை ஆதாரம் இன்னும் உறுதியாக இருந்து போட்டியாளர்களின் கருத்துக்கு வலுச்சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.<br />
<br />
***<br />
<br />
போட்டியாளர்கள் தங்களது அணியை தெரிவு செய்யும்போது திறமைகளின் சரியான விகிதாசாரத்தில் தெரிவுசெய்தால் சிறப்பாக செயற்பட முடியும். சரியான ஐடியாவை உருவாக்கி அதற்கு சாப்ட்வேர் வடிவம் கொடுக்கவல்ல நபர்களை அணியில் சேருங்கள். கடைசி போட்டிகளின்போது அதனை ஸ்திரமாக present செய்ய பொருத்தமான நபரை கண்டுபிடியுங்கள். இப்போதே அணியாக செயற்ப்பட்டு ஆயத்தங்களை செய்யுங்கள். செப்டெம்பர் 30க்கு முதல் பதிவு செய்து கொள்ளுங்கள்.<br />
<br />
இம்முறை போட்டிகளின் கடைசி நாளன்று முதலீடு செய்யும் ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். அவர்கள் ஒரு அணியின் productஇல் ஆர்வமாக இருந்தால், முதலீடு செய்யும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. உங்கள் கனவு ஐடியா ஒரே நாளில் நனவாகும் வாய்ப்பு கடைசி போட்டி தினத்தில் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே நாளில் உங்கள் சொந்த கம்பெனி உருவாகலாம். கடைசி நாளன்று கிடைக்கும் ஒரு சில நிமிடங்கள் உங்கள் வாழ்க்கையை ஒரேயடியாக மாற்றினாலும் ஆச்சர்யமில்லை.<br />
<br />
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOWgtlLOQf__BQAnsx6k3sjROmAWn-U1xiYY1Evrib1OsHfdiMKGle2uBs1oyYMeMt6i45TIfGATlAErlpg71z9-cjDUIenqBb6Ewy8IXw20QKIW9k8_Vuf-L_5NpLyCjNeZewgovy8mYP/s1600/08-shutterstock_126489416-300x300.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOWgtlLOQf__BQAnsx6k3sjROmAWn-U1xiYY1Evrib1OsHfdiMKGle2uBs1oyYMeMt6i45TIfGATlAErlpg71z9-cjDUIenqBb6Ewy8IXw20QKIW9k8_Vuf-L_5NpLyCjNeZewgovy8mYP/s1600/08-shutterstock_126489416-300x300.jpg" /></a></div>
<div>
<br /></div>
</div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-81470759643648810222014-08-16T09:20:00.001-07:002014-08-16T09:20:38.919-07:00அது!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsynUNIz5y0Nai2Qsf6y_g_-4fHsJHinQXyW1l8wdpXxwFklqLid4r8CVkHF4UY-O5vbetOfmy_vLmAdEidUMuWA282kneIBzcOyUbRJIipKqY1Pd4v2uh4NbY2ygQ3o2sk6tia1olWj_7/s1600/r2IMG_1009_india_varanasi_sleeping_dog_bicycle.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsynUNIz5y0Nai2Qsf6y_g_-4fHsJHinQXyW1l8wdpXxwFklqLid4r8CVkHF4UY-O5vbetOfmy_vLmAdEidUMuWA282kneIBzcOyUbRJIipKqY1Pd4v2uh4NbY2ygQ3o2sk6tia1olWj_7/s1600/r2IMG_1009_india_varanasi_sleeping_dog_bicycle.jpg" height="266" width="400" /></a></div>
"நீ வந்திட்டியா.. நான் சொன்னதை வாங்கி வந்திருக்கியா" என்று அதட்டலாக கேட்டான் மறுமுனையில் பேசிய ஆசாமி. <br />
<br />
"ம்.. ம்.." என்றேன்.<br />
<br />
"இந்த விஷயம் ரகசியமாக இருக்கட்டும்டா" அவனது குரல் கொஞ்சம் கெஞ்சலாக மாறியது.<br />
<br />
"சரிடா.. அந்த ஆண்டவனுக்கே தெரியாம பாத்துக்கிறேன்" அப்படியே போனை கட் பண்ணினேன். ரகசிய விசயங்களை போனில் நிறைய கதைக்கக்கூடாது.<br />
<br />
எனக்கு போனில் வந்த ரகசிய உத்தரவின்படி பொருளை சின்னாவின் கடையில் ஒப்படைக்க வேண்டும். பொருளின் ஒரு பகுதி சின்னாவுக்கு, மற்றது எனக்கு உத்தரவு போட்டவனுக்கு. மந்திரிக்கப்பட்டவன் போல பொருளை நியூஸ் பேப்பரில் சுற்றினேன். ஏதோவொரு டீ-ஷர்ட்டை மாட்டிக்கொண்டு சைக்கிளை மிதித்தேன். அம்மா "கொழும்பிலேயிருந்து வந்ததும் வாராததுமா எங்கடா போறே. அப்பா உன்னை எங்கயோ போகசொன்னாரு... ..." என்று அம்மாவின் அதட்டல் எனது ஒரு காதில் விழுந்து, மறுகாதால் போனது. சைக்கிள் ஒழுங்கைகளின் வளைவுகளில் வேகமாக வளைந்தது. பொருளை பத்திரமாக நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்தேன்.<br />
<br />
ஊர் சந்தியின் ஒரு புறத்தில் சின்னாவின் கடை ஜம்மென்றிருந்தது. எப்போதும் மூன்று நாலு பொடிப்பயல்கள் அவன் கடையில் மலேசிய புளியம்பழ டொபி வாங்குவார்கள். அவன் கடையில் எப்போதும் வெளிநாட்டு புளிப்பு டொபி பிரபலம். அவனுடைய அப்பாவின் கடையை அடுத்த தலைமுறையாக நடத்துகிறான். அவன் அப்பா காலத்தில் "சந்திக்கடை" என்று பிரபலம் பெற்றிருந்தது. ஆனால் சின்னாவின் காலத்தில் "டொபிக்கடை" என்று பெயர் மாற்றம் பெற்றது. ஆனாலும் அவனால் எல்லா சின்ன பிள்ளைகளுக்கும் விற்க முடியாது. அவனது கடையில் ஒரு நோட்டு புத்தகம் இருக்கும் அதில் "ப்ளக் லிஸ்ட்" செய்யப்பட்ட சின்ன பிள்ளைகளின் பெயர்கள் இருக்கும். வாங்கவரும் குழந்தைகளின் பெயரை கேட்டு சரிபார்த்த பின்னரே டொபி குடுப்பான். மீறி "ப்ளக் லிஸ்ட்" செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு டொபி விற்றால் கடைக்கு கல்லெறி விழும். அவனது கடைக்கு பக்கத்திலிருந்த "பல்லு புடுங்கிற" டாக்டர் சாமி, சின்னா மூலமாக நல்லா சம்பாதிக்கிறார் என்று ஊருக்குள் பேச்சு அடிபட்டது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwlcjqyh10FKvW4uXhYjwiswvWiyoalApGZspB4A1SRxyDtyDt9Ob2XkMRY-ZBLLaWQ9KDb-D2at_OtMwQa_xOx9W_u5J9NyR-hW8UZ8GcYf6e61h1G21sfcWjLeL75RD9w3MdK268Oxvw/s1600/varanasi-street-photography-5.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwlcjqyh10FKvW4uXhYjwiswvWiyoalApGZspB4A1SRxyDtyDt9Ob2XkMRY-ZBLLaWQ9KDb-D2at_OtMwQa_xOx9W_u5J9NyR-hW8UZ8GcYf6e61h1G21sfcWjLeL75RD9w3MdK268Oxvw/s1600/varanasi-street-photography-5.jpg" height="213" width="320" /></a></div>
நான் சின்னா கடைக்கு போய் சேர்ந்தபோது கடையில் கொஞ்சம் கூட்டமாகத்தான் இருந்தது. சின்னா கவுன்ட்டரில் சோம்பலாக இருந்தான். என்னை கண்டவுடன் முகம் மலர்ந்து "எப்படா வந்தே? நல்லாயிருக்கியா.. மூஞ்சியில கொஞ்சம் சதை போட்ட மாதிரி இருக்கே" என்று நலம் விசாரித்தான் சின்னா. அவன் கண்கள் எனது கையில் இருந்த பொருளை எடை போட்டன. "என்னது கொழும்பிலேருந்து திராட்சை அல்வா வாங்கி வந்திருக்கிறாயா" என்றான். "ம்.. ம்.." என்றேன். பார்சலை பவ்யமாக கடையின் உள்ளே வைத்துவிட்டு வந்தான். "திருமால் இன்னும் ஐந்து நிமிஷத்தில் வருவான். ஏழு மணியாகுது கடையை பூட்டிட்டு வாரேன். கடற்கரைக்கு போவோம்". இப்போதாவது கதையின் தொடக்கத்தில் வந்த அநாமதேய குரல் ஆசாமி யாரென்று சொல்லியாகணும். திருமால் என்கிற எங்களது நண்பன்தான் எனக்கு ரகசிய உத்தரவு தந்த குரலுக்கு சொந்தக்காரன். நாலு நிமிஷத்திலேயே வந்து விட்டான். ஒல்லியான வெள்ளை ஆசாமி. ஊரின் தேசிய உடையான சாரம் அணிந்திருந்தான். சின்னா கடையை மூடினான். நான் கொண்டுவந்த பார்சல் மேலும் ஒரு ப்ரௌன் பேப்பரில் சுற்றப்பட்டது. யாருக்கும் உள்ளே இருப்பது என்னது என்று சந்தேகம் வராதாம் பிஸ்கட் டின் என்று நினைப்பார்கள் என்று சின்னா சொன்னான். கடற்கரைக்கு சைக்கிளை மிதித்தோம். மாலை மணி ஆறே முக்கால் சூரியன் மறைந்திருந்தாலும் மந்தமான வெளிச்சம் இருந்தது. கடற்கரையில் இருந்த ஒருசிலரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். சுற்றி வர யாருமே இல்லாத இடமாக தேடினோம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFzQnYsqdP3PO349nRkHXusrCROPFDPf-OqaC0FayrRCOgBPdlqVNmwSrHnVjl8661Bi9FeqI3UhbxW9zWYSoUZbgR9ZZ50RooWBH4RV6pARLZDR_EdKPrtKk2wqnRPKCl1lGGWLTDCMQi/s1600/usca25909-bw.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFzQnYsqdP3PO349nRkHXusrCROPFDPf-OqaC0FayrRCOgBPdlqVNmwSrHnVjl8661Bi9FeqI3UhbxW9zWYSoUZbgR9ZZ50RooWBH4RV6pARLZDR_EdKPrtKk2wqnRPKCl1lGGWLTDCMQi/s1600/usca25909-bw.jpeg" height="244" width="640" /></a></div>
<br />
<br />
வழியில் சங்கரன் மாமாவை கண்டோம். "போச்சுடா இந்த மனுஷன் என்னை கண்டா வீட்ட போட்டுக்குடுத்திடுவார்டா.. நான் செத்தேன்" என்று குளற ஆரம்பித்தான் திருமால். உண்மைதான் சங்கரன் மாமா "போட்டுகுடுக்கிறதுல" பிஎச்டி செய்த ஆளு. அவரை கண்டாலே பொடியள் ஓடி ஒளிவான்கள். உதாரணத்துக்கு "உங்கட மகனை மூணாம் தெருவுல ஒரு பெண்ணோட பார்த்தேன்" என்று ஒரு கம்ப்ளைன்டை சம்பந்தப்பட்ட அப்பாவியின் அப்பாவிடம் பதிவு செய்வார். அவர் எங்களை கண்டதுமே எங்களை நோக்கி வந்தார். "என்னடா தம்பிகளா யாரடா நீங்க" என்று டோர்ச் லைட்டை முகத்தில் அடித்தார். சின்னாதான் பேசத்தொடங்கினான். "இல்ல மாமா.. எண்ணெய்க்கடை சதாசிவத்தோட பேரன் கொழும்பிலேயிருந்து வந்திருக்கான்.. அவனோட சும்மா காத்து வாங்க கடற்கரைக்கு கூட்டி வந்தோம்" என்று படபடத்தான். சங்கரன் மாமாவின் சந்தேகம் குறைந்த மாதிரி தெரியவில்லை. "டேய் என்னவோ சொல்றீங்க.. ம்.." என்று எனது முகத்தில் டோர்ச் அடித்தார். என்னுடைய தலைமுடிவெட்டு கொழும்பு ஸ்டைலில் இருந்ததால் சந்தேகம் வரலை போலும், எங்களை விட்டு விட்டார்.<br />
<br />
ஒரு ஒதுக்குப்புறமாக இடத்தை கண்டுபிடித்தோம். கடலுக்கு வெகு அருகாமையிலிருந்த ஒரு பெரிய பாறைக்கு பின்னாலுள்ள சின்னப்பாறைதான் அந்த இடம். "இனி எந்த கொம்பனாலும் எங்களை கண்டுபிடிக்க முடியாது" என்று சின்னா வெற்றிச்சிரிப்பு சிரித்தான். திருமால் பார்சலை மணந்து மோப்பம் பிடித்தான். "வெளி வாசமே மூக்கை துளைக்குதடா" என்று பார்சலை கிழித்துபார்க்க ஆரம்பித்தான். அப்போது பார்த்து சின்னா "ஐயோ காலில் ஏதோ கடிக்குதடா.. பாம்புதாண்டா" என்று அலறினான். இருட்டில் எதுவுமே தெரியலை. "கடவுளே எங்களை தடுக்க நினைக்கிறார் போல" என்று அரற்றினான் திருமால். "இங்க நண்டுதான் இருக்கும் பாம்பாக இருக்காது" என்றேன் கொஞ்சம் தைரியமாக. சின்னாவின் காலுக்கிடையில் கைவைத்து பார்த்தபோது ஒரு சின்ன நண்டு சிக்கியது. அதை எடுத்துக்காட்டி சிரித்தேன். சின்னாவுக்கு அப்போதுதான் நிம்மதி.<br />
<br />
சின்னா "டேய் வேணாண்டா பார்சலை அப்படியே கடலில் போட்டுவிடு கடவுள் கொடுத்த முதல் எச்சரிக்கை அது" என்றான். "டேய் இதுக்கு போய் பொம்பிளை மாதிரி பயப்படுற. கடவுள் உன்னை திருத்த சின்ன நண்டை அனுப்பினாரா" என்று சிரித்தான். அந்த வார்த்தைகள் சின்னாவுக்கு இரசாயன மாற்றத்தை விளைவித்ததால் அடுத்து கதைக்க இருந்த வசனத்தை இடைநிறுத்தினான். திருமால் இடைநிறுத்தப்பட்டிருந்த பார்சல் கிழிக்கும் வேலையை மறுபடியும் தொடர்ந்தான்.<br />
<br />
"தாத்தா இருக்கும்வரைக்கும் இது எப்படியாவது எனக்கு கிடைக்கும்.. அவருக்கு தெரியாம கொஞ்சம் கொஞ்சமா எடுத்து பதுக்கி வச்சிடுவன்.. அவர் மேலே போனபிறகு எனக்கு ஒரே திண்டாட்டம்தான்.. இப்ப இதுக்கு தடை விதிச்சி போட்டாங்கள்.. நீ எப்படித்தான் இதை கொழும்பில வாங்கிறியோ தெரியலை.. ஆனா இப்ப யாழ்ப்பாணத்துல எங்க தேடினாலும் இதை வாங்கவே முடியாது" என்று திருமால் நன்றியுரையை தொடங்கினான். பாதுகாப்புக்காக இரண்டு மூன்று பொலித்தீன் தாள்களால் சுற்றப்பட்டிருந்த தகர டின் வெளியே வந்தது.<br />
<br />
"இது என்னடா புது ப்ராண்டா இருக்குது.. அது சரி நமக்கு ப்ராண்டா முக்கியம் உள்ளே இருக்கிற சரக்குத்தான் முக்கியம்"<br />
<br />
டின்னை திறந்து ஒரு சொட்டு மூக்குப்பொடியை எடுத்து மூக்கால் உறிஞ்சினார்கள். அடுத்த ஐந்து நிமிசத்துக்கு, அவர்களின் தும்மல் ஒலியை கடலின் அலைகளின் ஓசை விழுங்குவதை பார்த்துக்கொண்டிருந்தேன்.<br />
<br />
<br />
<br /></div>
<table bgcolor="silver"><tbody>
<tr><td>இதை வாசித்துவிட்டு கொழும்பில் மூக்குப்பொடி இருக்கும் கடையை தெரியுமா எண்டு யாரும் கேட்டிடாதீங்க.. எனக்கு சத்தியமா தெரியாது. இலங்கையில இப்ப "அது"க்கு தடையாம்.
</td></tr>
</tbody></table>
</div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-85775153431993819082014-07-26T08:36:00.001-07:002014-08-01T10:32:31.551-07:00ஈமெயில் கொலைகள்!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipXNDCvGlkvv2-sRq5tG0ZfU07HODSR6NSUCQtVAB2hkYWPfrgp4c8EOrZOS6MDcejYZ1KwMKn0X9KFwyEGkl-EUwWtPkDKNT5AfI0BvNYAOlRVPtf1ZY8Rta6iRV2kijcbTrRizkwKN5W/s1600/vlcsnap-1013140.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipXNDCvGlkvv2-sRq5tG0ZfU07HODSR6NSUCQtVAB2hkYWPfrgp4c8EOrZOS6MDcejYZ1KwMKn0X9KFwyEGkl-EUwWtPkDKNT5AfI0BvNYAOlRVPtf1ZY8Rta6iRV2kijcbTrRizkwKN5W/s1600/vlcsnap-1013140.png" height="300" width="400" /></a></div>
<b>அத்தியாயம் 1: வேலையில்லா சாப்ட்வேர் கம்பெனி</b><br />
<b><br /></b>
அஞ்சு நாள் லீவுக்கு பிறகு அலுவலகத்துக்கு போய் சேர்ந்தேன். கடந்த ரெண்டு மாசமா ஒரு ப்ரோஜெக்டும் இருக்கவில்லை. ப்ரோஜெக்ட் இல்லாத சாப்ட்வேர் கம்பெனி கிட்டத்தட்ட மீன் மார்க்கெட் மாதிரி பரபரப்பாக இருக்கும். இரண்டு பேர் facebookஇல் ஒரு பெண்ணின் profile pictureக்கு கமெண்ட் அடித்தார்கள். மூன்று பயல்களும் ஒரு பொண்ணும் சேர்ந்துகொண்டு காணாமல் போன MH370க்கு என்ன நடந்திருக்கும் என்பது பற்றி விவாதித்தார்கள். வழமைபோலவே எந்த முடிவுக்கும் வராமல் கப்பில் இருந்த டீயை ஜாலியாக காலி செய்தார்கள். ஆறு மாதங்களுக்கு முன்னர், ஆணியடித்து வைத்ததை போல ஒரு இடத்திலே இருந்து கடுமையாக ராத்திரி பகல் வேலை செய்துவிட்டு இரண்டு மாசமா வேலை இல்லாமல் இருந்தது ஒரு மாதிரியா இருந்திச்சு. மத்தியான சாப்பாட்டுக்கு இரண்டு மணித்தியாலம் எடுத்தோம். பிற்பகல் வேளைகளில் கண்களில் அரைத்தூக்கத்துடன் வேலை செய்தோம் அல்லது வேலை செய்வதுபோல நடித்தோம். வேலையில்லாத சாப்ட்வேர் கம்பனிகளில் நிலைமை கொஞ்சம் இடக்குமுடக்காத்தான் இருக்கும். ஆனால் இவ்வாறான நிலைமை கொஞ்ச நாளுக்குத்தான் நீடிக்கும் என்ற உண்மை தெரியாமல் சந்தோசத்தில் மிதந்தோம்.<br />
<br />
எதுக்கும் ஒரு எல்லை வேண்டுமல்லவா. சந்தோசமும் திகட்ட ஆரம்பித்தது. வேலைக்கு போவதே போரடிக்கும் அனுபவமாக மாற ஆரம்பித்தது. சாப்ட்வேர் கம்பெனியில் A/C இல்லாமலும் இருக்கலாம். ஆனா வேலை இல்லாமல் இருக்கமுடியாது. வேலையே இல்லாமல் ஒரு இடத்தில் இருந்து கம்ப்யூட்டரை வெறித்துபார்ப்பது என்பது கொஞ்சம் நவீனத்துவமான தண்டனையாகவே எங்களுக்கு தெரிய ஆரம்பித்தது. எங்கள் செக்சன்களில் இப்படி வேலையே இல்லாமல் போரடித்துகொண்டிருந்தபோது, மார்க்கெட்டிங் செக்சன் மட்டும் வேலைகளில் மூழ்கியிருந்தது. எங்களுக்கு ப்ராஜெக்ட் இல்லாத சமயங்களில் மார்க்கெட்டிங் ஆசாமிகளுக்கு வேலை தொண்டை வரை இருக்கும். ஆனால் ஒரு ப்ராஜெக்ட் சிக்கினால் மூன்று நாலு மாசங்களுக்கு மார்க்கெட்டிங் ஆசாமிகள் காலாட்டிகொண்டு ரெஸ்ட் எடுக்கலாம்.<br />
<br />
நேரம் இப்படி போய் கொண்டிருந்தபோது, ஒரு நாள் மார்க்கெட்டிங் எக்ஸகியூடிவ் சில்வெஸ்டர் சில்வா கதவை திறந்துக்கொண்டு அரக்கப்பறக்க உள்ளே வந்தபோது எங்களின் "வேலையில்லா திண்டாட்டம்" முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. சில்வெஸ்டர் புதுசா ஒரு ப்ராஜெக்ட் கொண்டு வந்திருக்கிறான் என்ற செய்தியை துமிலன் எங்களுக்கு சொன்னான். போதாக்குறைக்கு என்னையும் துமிலனையும் project requirements பற்றி விவாதிக்க அடுத்த நாளே எங்களுக்கு கஸ்டமர் கம்பெனியுடன் மீட்டிங் schedule செய்திருப்பதாக சொன்னார்கள். போரடிக்கும் காலம் முடிவடைய போகிறது என்று சந்தோசப்படுவதா? இல்லை நாளை முதல் வேலை வரப்போகிறது என்று கவலைப்படுவதா என்று தெரியாமல் முழித்தோம்.<br />
<br />
<br />
<b>அத்தியாயம் 2: புதிரான கஸ்டமர்</b><br />
<b><br /></b>
அடுத்த நாள் முழுக்கை சேர்ட் அணிந்து சென்ட் அடித்துக்கொண்டு ஆபீஸ் போனோம். சில்வெஸ்டர் எங்களுக்கு ஒரு காரை ஏற்பாடு செய்திருந்தான். எங்கே மீட்டிங் நடக்கும் என்ற விபரம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. அதை சொல்ல சந்தர்ப்பம் வரவில்லை போலும். கார் கொள்ளுபிட்டி சந்தியில் நிறுத்தப்பட்டது. டிரைவர் "இந்த இடத்தில இறங்குங்க. ஒரு வான் வரும். அதில் ஏறுங்க. என்னை ஒண்ணும் கேக்காதிங்க" என்று இயந்திரத்தனமாக சொல்லிவிட்டு நிதானமாக காரை கிளப்பிக்கொண்டு சென்றான். நாங்கள் அதிர்ந்துபோய் ஆளை ஆள் பார்த்துக்கொண்டோம். துமிலன் வியர்வையை கைக்குட்டையால் ஒற்றிக்கொண்டான்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJAWBxUpFk_8iTNWwO9b3e0a6QkPm0m-iWlULsfI3Crqmf1Pm9ApcX-ZcUaTjMn-UmIpfV4HHshpCD0n3eDnuwGZOoOIEiXkGwukJUXR7zbSKh_-xUmY9BnQHp07zi3vD_ySqNdsASTsmJ/s1600/download+(1).jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJAWBxUpFk_8iTNWwO9b3e0a6QkPm0m-iWlULsfI3Crqmf1Pm9ApcX-ZcUaTjMn-UmIpfV4HHshpCD0n3eDnuwGZOoOIEiXkGwukJUXR7zbSKh_-xUmY9BnQHp07zi3vD_ySqNdsASTsmJ/s1600/download+(1).jpg" /></a></div>
"என்னடா இது கஸ்டமர் பற்றின விஷயம் மர்மமா இருக்குதே" என்றான். பதினைந்து நிமிசத்தில் ஒரு வெள்ளை வான் எங்கள் அருகில் வந்து நின்றது. கதவு திறந்தது, அதிலிருந்த ஒருவன், வானின் கறுப்பு கண்ணாடிக்கு வெளியே அரைவாசி மூஞ்சியை வெளியே காட்டியவாறு, "ரெண்டு பேரும் ஐடென்டிட்டி கார்டை எடுங்க" என்றான். சரிபார்த்த பின்னர் "ஏறுங்க சார்" என்றான். அவன் முகத்தில் இருந்த கடுமை கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை. மந்திரிக்கப்பட்ட ஆடுகள் போல வானுக்குள் ஏறிக்கொண்டோம். நாங்கள் முன்பு எப்போதோ நாங்கள் செய்த ப்ராஜெக்ட்டில் இருந்த "பக்ஸ்" (bugs) மூலமாக பாதிக்கப்பட்ட கஸ்டமர்கள் யாராவது எங்களை கடத்தி சித்ரவதை செய்ய போகிறார்களோ? போன்ற எண்ணங்கள் மனதில் வந்தன. அந்த வான் பஞ்சிகாவத்தை பகுதியில் ஒரு ஒடுக்கமான வீதியில் நிறுத்தப்பட்டது. இன்னொரு வானுக்குள் மாற்றப்பட்டோம். இதிலும் ட்ரைவருக்கு பக்கத்தில் ஒருத்தன் இருந்தான். இல்லை ஒருவர் இருந்தார்.<br />
<br />
முகத்தில் சிநேகமான புன்னகை தவழ்ந்தது. "ஏறுங்க தம்பி. இன்னும் கொஞ்ச தூரம்தான்" என்றார். அவர் சொல்லாமலே ஏறியிருப்போம். அப்படியொரு அழகான சாந்தமான புன்னகை. ஏறி இருந்துமே "சார் நாங்க எங்கதான் போறோம்" என்று தொடங்கினான் துமிலன். அந்த கணத்திலே எங்கள் பின்னால் இருந்த ஒருவன் கறுப்புத்துணியால் எங்கள் கண்களை கட்டினான்.<br />
<br />
எனக்கு உடல் முழுக்க கடுமையான வியர்வை. நெஞ்சுக்குள் யாரோ சம்மட்டியால் அடிப்பது போன்று ஏதேதோ செய்தது. "எங்களை விட்டிடுங்க. நாங்கள் எதுவுமே செய்யவில்லை" என்று பதறினோம். "கொஞ்சம் சத்தம் போடாம இருங்க. பத்து நிமிஷம்தான் இடம் வந்திடும். பயப்படாதீங்க. ஒண்ணுமே நடக்காது" என்றார் சாந்தமான புன்னகைக்கு சொந்தக்கார ஆசாமி. இன்றுதான் வாழ்க்கையின் கடைசி நாள் என்று மனசு சொல்லிக்கொண்டே இருந்தது. எத்தனை மணித்தியாலங்கள் கழிந்தனவோ தெரியவில்லை. ஒரு இடத்தில் இறக்கப்பட்டோம். துணி விலக்கப்பட்டபின்னர், கண்களை சூரிய வெளிச்சம் வேட்டையாடியது. துமிலனின் கண்கள் அழுது அழுது சிவந்திருந்தன. "டேய் எங்களை கொல்லப்போறாங்கடா.." என்று ஏங்கி ஏங்கி அழுதான். நாங்கள் வித்தியாசமான முறையில் கட்டப்பட்ட வீட்டினுள் கொண்டுசெல்லப்பட்டோம். அந்த பகலிலும் இருட்டு அந்த வீட்டீனுள் ஒளிந்து கொண்டிருந்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaCh-MZ6CopbnDbIsU8y_rPBkj55lqfVpfsTGMDX9-aApIUd4-vyOxUkIPB1CvCXjFiVH7d9B_-XdFLUAzw2kC71dv5VMlaxGPpi_H10P2XPbQ3FcAH25aIXCDnqgiWyouN6yM3Zmcx3Aw/s1600/Top-19-Most-Filthy-Rich-Gangsters.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaCh-MZ6CopbnDbIsU8y_rPBkj55lqfVpfsTGMDX9-aApIUd4-vyOxUkIPB1CvCXjFiVH7d9B_-XdFLUAzw2kC71dv5VMlaxGPpi_H10P2XPbQ3FcAH25aIXCDnqgiWyouN6yM3Zmcx3Aw/s1600/Top-19-Most-Filthy-Rich-Gangsters.jpg" height="153" width="320" /></a></div>
அந்த இடத்தின் அமைப்பு மனதில் புதிய இரசாயனத்தை கசியச்செய்தது. மனதில் வினோதமான அமைதி வந்தது போலிருந்தது. பழைமையான ஓவியங்கள் சுவர்களை மறைத்திருந்தன. மந்தமான வெளிச்சம் அந்த ஓவியங்களிலுள்ள சோக உருவங்களுக்கு உயிர் கொடுத்தது. அந்த விசாலமான அறையின் ஒரு ஓரத்தில் உள்ள சோபாவில் ஒரு உருவம் முதுகை காட்டியவாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. "சாந்தமான புன்னகை" ஆசாமி எங்களை உள்ளே வழிநடத்தினார். அந்த சோபாவை நோக்கி நடந்தோம். நடத்தப்பட்டோம்!!. சோபாவில் உள்ள உருவத்தின் காதில் ஏதோ சொன்னார். அந்த உருவம் எழுந்தது. கை கொடுத்தது. நாற்பது வயது மதிக்கத்தக்க ஆள். வெள்ளை முடி நாற்பது சதவீத முடியை ஆக்ரமித்திருந்தது. அயர்ன் செய்யப்பட்ட வெள்ளை சேர்ட், கறுப்பு ட்ரௌசர் அணிந்திருந்தார். வாயில் உயர்தர சுருட்டு புகைந்தது. எங்களுடன் கை குலுக்கினார். "நான்தான் சண்முகநாதன்.. பிசினஸ்மான்" அறிமுகப்படுத்தினார். அவர் செயல்களில் கண்ணியம் இருந்தாலும் கண்களில் சந்தேகம் ஓடி கொண்டிருந்தது.<br />
<br />
"என்னைப்பற்றி தெரியுமா" என்று மர்ம புன்னகை பூத்தார் சண்முகநாதன். துமிலன் "உங்களை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கு.. உங்களை பார்த்தா அந்த சண்டா மாதிரி இருக்கு" என்று சொல்லிக்கொண்டே நாக்கை கடித்துகொண்டான்.<br />
<br />
"ம்.. ம்.. நீ சொல்றது சரிதான்.. ஆனா என்னைப்பற்றி அவ்வளவா தெரியலை போலிருக்கு.. தெரிஞ்சிருந்தா அப்படி என்முன்னால பேசமாட்டே.. நான்தான் கொழும்பு ஏரியாவை பத்து வருசத்துக்கு முன்னால கண்ட்ரோலில் வச்சிருந்த நிழலுலக தாதா "சண்டா". உங்களை மாதிரி பொடிப்பயல்களுக்கு என்னைப்பற்றி தெரிய வாய்ப்பில்லை.. அது ஒரு காலம்.. கொழும்பில் இருந்த சின்ன சின்ன தாதாக்கள் என்னை கேட்காமல் ஒரு முடிவு எடுக்கமாட்டார்கள்.. என்னுடைய நண்பர்கள்தான் ஆட்சிக்கு வரமுடியும். கொழும்பு முழுக்க நான் வச்சதுதான் சட்டம்" என்றார்.<br />
<br />
அவர் குரல் கம்மியது. "ம்.. ம்.. நான் செய்த ஒரு பிழையால் எங்கட தலையெழுத்தே மாறிடிச்சு. என்னுடைய ஆட்களில் பலரை பொலிஸ் கொன்றுவிட்டது.. போலீஸ் என்னை வேட்டையாடியது.. ஆனா அவர்களால் என்னை பிடிக்க முடியவில்லை" அவரது முகம் சிவப்பாகியது. அதன்பின்னர் முப்பது செக்கன் மௌனம் நிலவியது. முகத்தில் இருந்த கடுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.<br />
<br />
"இவன் எதற்காக எங்களை வரவழைத்திருக்கிறானோ" என்று எங்களுக்குள் ஆயிரம் சிந்தனைகள் மனதில் ஓடியது. சண்டா கொஞ்சம் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார். எங்களை அழைத்துவந்த தாதாவின் "வலதுகரம்" பேசத்தொடங்கினார். "நாங்கள் நாலைஞ்சு வருசமா தொழிலில் இருந்து விலகிட்டோம். கடைசியா போலீஸ் எங்கட ஆட்கள் முப்பது பேரை கொன்றாங்க.. அத்தோடு ஆறு வருஷம் தலைமறைவுக்கு பிறகு இப்போதுதான் தொழிலை திரும்ப தொடங்கினோம். இப்ப முன்னைய மாதிரி தொழிலை நடத்த முடியலை. கூலிக்கு கொலை செய்தல், கட்டபஞ்சாயத்து எல்லாமே ரகசியமா நடத்த வேண்டியிருக்கு.<br />
<br />
போதாக்குறைக்கு இந்த கூலிப்படையை மெயின்டைன் பண்ண நிறைய செலவாகுது. யானையை கட்டி தீனி போடற கதையா இருக்குது. முன்னைய மாதிரி இல்லை, எங்கேயாவது ஏதாவது நடந்தா, போலீஸ் நேரா இங்கதான் வருகுது. இப்போதெல்லாம் யாழ்பாணத்திலிருந்து நிறைய ஆர்டர் வருது. அந்த மாதிரி தூர இடத்தில வேலை வந்தா இவனுகளை அங்கே அனுப்பிறதுக்குள்ளேயே போதும் போதும் என்றாகிடுது. இதுக்கெல்லாம் நீங்கதான் எங்களுக்கு உங்கட சாப்ட்வேர் மூலம் தீர்வு தரப்போறீங்க" என்று புதிர் போட்டார் வலது கரம்.<br />
<br />
நாங்கள் எக்குத்தப்பாக முழித்துகொண்டிருக்கும்போது, சண்டா பேசத்தொடங்கினார். "கூலிக்கு கொலை செய்வதற்கான ஆர்டர் நவீன முறையில் ஈமெயில், எஸ்எம்எஸ் இல் வரணும். இங்க்லீஷ் படத்தில வாற மாதிரி என்னோட அடியாட்கள் அமெரிக்காவிலிருந்தாலும் கொலை செய்யப்படுபவனின் படத்தை ஈமெயிலில் அனுப்பி கொலை செய்ய வைக்கவேண்டும். என்னோட அடியாட்களை பிடிபட்டாலும் என்னை பற்றி தகவல் குடுக்க அவனுகளுக்கு ஒண்ணுமே தெரியப்போவதில்லை. செஞ்ச கொலைக்கு காசு குடுக்க என்ட கஸ்டமர் யாராவது எங்கிட்ட வந்தாதானே போலிஸ் என்னை தேடிவரும். கஸ்டமர்களை கிரெடிட் கார்டுல காசு குடுக்க சொன்னா சரி. பாங்க்குல காசு குவியும்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். நிறைய நாள் தீவிரமாக நூற்றுக்கணக்கான சிகரெட் பாக்கெட்டுகளை காலி செய்து நிதானமாக யோசித்து திட்டமிட்டிருப்பது போல இருந்தது. எங்களுக்கோ மண்டை காய்ந்தது. அவர் சொன்னதை ஜீரணிக்க மூளை கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டது. துமிலன் முதலில் சுதாரித்துகொண்டான். சற்று செருமிக்கொண்டு பேசத்தொடங்கினான். "இது சூப்பர் ஐடியா.. உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் கொலைக்கான ஆர்டரை யாரும் எங்கள் சிஸ்டம் மூலம் கொடுக்கலாம். அது போலவே தொழில்முறை கொலைகாரர்கள் எங்கள் சிஸ்டத்தில் பார்ட்-டைம் அடியாட்களாக ரெஜிஸ்டர் செய்யலாம். கொலை ஆர்டர் வரும் இடத்துக்கு அருகாமையிலுள்ள கொலைகாரனை தேர்ந்தெடுத்து சிஸ்டம் தகவல் அனுப்பும். சுவிஸ் பாங்க்குடன் "இண்டிகிரேட்" பண்ணிவிட்டால் உங்களை பிடிக்க எந்த போலீசாலும் முடியாது" என்று அளந்தான்.<br />
<br />
இப்போது தாதாவுடனான உரையாடல் சுமுகமாக மாறியது. அடுத்த மீட்டிங்கில் சிஸ்டம் பற்றிய டிசைனை நாங்கள் விளக்குவோம் என்றவாறு விடைபெற்றோம். அதே வான், கண்களில் கறுப்புத்துணி ஆனால் இம்முறை இறுக்கம் குறைவாக கட்டப்பட்டிருந்தது. கொள்ளுபிட்டி சந்தியில் இறக்கப்பட்டோம். ஆபீஸுக்குள் நுழைந்தவுடனேயே சில்வெஸ்டர் ஓடி வந்து வரவேற்றான். அவன் முகத்தில் குரூரமான புன்னகை தவழ்ந்தது. பிறகு வேறு சில மேனேஜர்கள் சகிதம் புதிய ப்ரோஜெக்ட் பற்றிய தீவிர மீட்டிங் நடந்தது. இந்த ப்ரொஜெக்ட் செய்வதில் இருக்கும் தாதாக்களுடனான தொடர்பு மூலம் வரக்கூடிய ரிஸ்க்குகளை பற்றி எனது கருத்தை வலியுறுத்தினேன். ஆனாலும் கம்பெனி இருந்த கேவலமான நிலையை கருத்தில் கொண்டு ப்ரோஜெக்ட்டை செய்யுமாறு சில்வெஸ்டர் முதலான மேனேஜர்கள் வற்புறுத்த மீட்டிங் ரூமில் வெக்கை கூடியது. வார்த்தைகளால் சண்டையிட்டோம். ஆனாலும் அடுத்த மாத சம்பளம் வருவதே இந்த ப்ரொஜெக்ட்டில்தான் தங்கியிருக்கிறது என்ற விஷயம் எங்களை இறுதியாக சம்மதிக்க வைத்தது.<br />
<br />
<br />
<b>அத்தியாயம் 3: கொலைகார சிஸ்டம்</b><br />
<b><br /></b>
ராத்திரி பகலாக வேலை தொடங்கியது. சண்டா சொன்ன சாப்ட்வேர் சிஸ்டத்தின் வடிவம் விநோதமாக டெர்ரராக இருந்தது. சிஸ்டத்தின் பயனாளர்களுக்கு விதவிதமான சேவைகள் வழங்கப்பட்டன. பயனாளர்கள் தாங்கள் பழிவாங்க விரும்பும் நபரின் பெயர், முகவரி, போட்டோவை சிஸ்டத்தில் அப்லோட் பண்ண வேண்டும். பின்பு எவ்வாறு பழிவாங்க வேண்டும் என்பதை விளக்க வேண்டும். கொலை அல்லது கை, கால் எடுத்தல், வெள்ளைவான் கடத்தல் போன்று வெவ்வேறான தண்டனை விபரணைகளை "கம்போபொக்சில்" தெரிவுசெய்யவேண்டும். ஒவ்வொரு தண்டனைக்கும் தண்டனையின் தீவிரத்துக்கு ஏற்றவாறு கிரெடிட் கார்டில் காசு அறவிடப்படும். இப்படியாக இலங்கையின் ஒரு மூலையில் இருக்கும் மிஸ்டர் சின்னதம்பி என்பவர் ஏதோவொரு மூலையிலிருக்கும் பெரியதம்பி என்பவரை பழிவாங்க விரும்பினால் சிஸ்டத்துக்கு பெரியதம்பியின் "கையை" எடுத்துவிடுமாறு சிஸ்டத்துக்கு உத்தரவு போடலாம். கிரெடிட் கார்ட் இந்த சேவைக்காக பத்தாயிரம் ரூபா வசூலிக்கும். பெரியதம்பியின் இருப்பிடத்துக்கு அருகாமையிலுள்ள சண்டாவின் ஆள் "கத்தி" கண்ணாயிரத்துக்கு போட்டோ சகிதம் உத்தரவு ஈமெயிலில் பறக்கும்.<br />
<br />
இவ்வாறான கொலைகார சிஸ்டத்தை வடிவமைக்கும்போது எங்களுக்கு ஒவ்வொரு நாளும் தீக்கனவுகள் வந்து தொல்லை கொடுத்தன. கொடுத்த Deadlineஇல் முடிக்க முடியாமல் போனதால் சண்டா எங்கள் கைகளை வெட்டபோவதாக சொல்வது போன்ற கனவு மூன்று நாளைக்கு ஒருமுறை வந்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSJFhXPqJZsj4gHQ5ac7MlQ4YnUVAxR7Mm50qHIGgZabkVTUPn8W5VNY840Q9LDQs_rQH9PDHrmip1SvrRp8TfgSACJV-06EPtBo1uQEDklv7CceOtyPkDxlQvzC-2-bISza7EqOnmEEBi/s1600/download.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSJFhXPqJZsj4gHQ5ac7MlQ4YnUVAxR7Mm50qHIGgZabkVTUPn8W5VNY840Q9LDQs_rQH9PDHrmip1SvrRp8TfgSACJV-06EPtBo1uQEDklv7CceOtyPkDxlQvzC-2-bISza7EqOnmEEBi/s1600/download.jpg" /></a></div>
இப்படியே நாலு மாதங்கள் கடந்தன. ஒருவழியாக எங்கள் சிஸ்டம் ரெடியாகி விட்டது. ஆனாலும் இப்படி ஒரு சிஸ்டம் செய்ததில் பெரிய மகிழ்ச்சி எங்களுக்கு இருக்கவில்லை. துமிலன் "நான் நல்லா தூங்கி நாலு மாசமாகுது. இந்த இழவு சிஸ்டத்தை பார்க்கும்போதே தலையிடி வருது. நாங்கள் இதன் மூலம் காசு சம்பாதிக்கிறமோ இல்லை நிறைய பாவத்தைத்தான் சம்பாதிக்க போகிறோம்" என்று புலம்புவான். சில்வெஸ்டர் உடனே முடிக்குமாறு சத்தம் போடுவான். அவன் மேனேஜர்களின் செல்லப்பிள்ளை. அதனாலேயே இஷ்டத்துக்கு உத்தரவு பிறப்பிப்பான். எங்களை விரட்டுவான். எல்லோருக்கும் அவன் மேல் கொஞ்சம் பயம் இருக்கும். அவன் என்னையும் துமிலனையும் சண்டாவுடனான UAT மீட்டிங்க்குக்கு போகுமாறு உத்தரவு பிறப்பித்தான். சில்வெஸ்டர் போன் மூலமாக சண்டாவுடன் தொடர்பு வைத்திருந்தாலும், அவரை நேரடியாக சந்திக்க தயங்கினான். பலிக்கடாக்களான எங்களை அனுப்பினான். நாங்கள் போவது UAT எனப்படும் User Acceptance Test. UAT என்பது ஒருவகையான அதிரி புதிரி சிஸ்டம் டெஸ்டிங். சாப்ட்வேருக்குரிய கஸ்டமர்கள் சிஸ்டம் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு டெஸ்ட் பண்ணுவார்கள். ஏதாவது சரியாக வேலை செய்யாவிட்டால் "தாம் தூம்" என்று குதிப்பார்கள். சிஸ்டத்தை திருத்திகொடுக்கும்வரை கொடுக்குப்பிடி பிடிப்பார்கள். சும்மா கஸ்டமர்கள் இப்படி என்றால், துப்பாக்கி, அரிவாள் தூக்கும் சண்டா எப்படி எங்கள் அரைகுறை சிஸ்டத்தின் செயல்பாடுகளில் சகித்து கொள்ளபோகிறார் என்பதே நெஞ்சை பதைக்கும் ஒரு கேள்வியாக இருந்தது. "டேய், அவரின்ட கால்ல கையில விழுந்தாவது சிஸ்டத்தை ஓகே பண்ணனும். நான் வர்ற வழியில பிள்ளையாருக்கு தேங்காய் உடைச்சேன்." என்று பதற வைத்தான் துமிலன். அவன் நெற்றியில் திருநீறு பட்டை தெரிந்தது. நான் வரும்போது பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து கொண்டு வந்திருக்கணும். குறைஞ்சது அம்மாவோட அறிவுரைப்படி வீட்டை விட்டு வெளியே வரும்போது திருநீறு சாத்திட்டு வந்திருக்கலாம்.<br />
<br />
வழமையான கண்கட்டு வித்தையில் சண்டாவின் வீட்டுக்கு போய் சேர்ந்தோம். கண்களில் கட்டு அவிழ்க்கப்பட்டபோது, சண்டா எங்கள் முன்னால் கம்பீரமாக அமர்ந்திருந்தார். அவரது வாயின் ஓரத்தில் தோன்றிய சிக்கனமான புன்னகைக்கு அவரது இரத்தச்சிவப்பான கண்கள் ஒத்துழைக்கவில்லை. "உங்கட வேலையை தொடங்குங்க தம்பி. கவனமா நடந்துக்குங்க. சிஸ்டம் செய்யிற ஒவ்வொரு பிழையும் அநியாயமா உயிரை பறிக்க வாய்ப்பிருக்கு" என்றார் "வலதுகை". நாங்கள் ஒவ்வொரு சிஸ்டம் செயற்பாடுகளை பற்றி தெளிவாக விளங்கப்படுத்தினோம். பிறகு டெஸ்டிங் தொடங்கியது. மட்டக்களப்பில் உள்ள சாம்சன் என்பவரை "வெள்ளைவானில் கடத்தி சித்ரவதை" செய்வதற்காக சிஸ்டம் மூலம் ஆர்டர் கொடுத்தோம். அதன் விளைவை பற்றி அறிவதற்காக, "வலதுகை" ஒரு டிவியை ஓன் செய்து, "சக்தி டிவி" சானலுக்கு மாற்றினார். ஒரு மணித்தியாலத்துக்கு பின்னர், சக்தி டிவி Breaking Newsஇல் "யாழ்ப்பாணத்தில் சபேசன் என்பவர் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களால் சற்று முன்னர் கடத்தப்பட்டார்" என்று செய்தி பறந்தது. எங்கள் முகங்களில் வந்த பீதியை சமாளித்துக்கொண்டு "இன்னும் வேறு சில ஆர்டர்களை செய்து பார்ப்போம்" என்றேன். இந்த முறை புத்தளம் சிவசாமிக்கு செமத்தியாக அடி கொடுத்து பல்லை உடைக்கவேண்டும் என்று ஆர்டர் கொடுத்துவிட்டு சக்தி டிவியை அரைமணித்தியாலமாக முறைத்துபார்த்துக்கொண்டிருந்தோம். ஒருவாறாக சக்தி டிவி Breaking News வந்தது. எங்கள் இதயம் 150 கிலோமீட்டர் வேகத்தில் ஓடியது. "புத்தளத்தில் சிவசாமி என்பவரின் கைகள் இனந்தெரியாத நபர்களால் வெட்டப்பட்டது" என்று Breaking News அலறியது. சண்டா மேலே பார்த்து தலையில் கை வைத்தார். "வெறும் பல்லை உடைக்கிறதுக்கு பத்தாயிரம்தான் வாங்கறோம். நீங்க குடுத்த காசுக்கு மேலே போய் கையை வெட்ட உத்தரவு கொடுக்கிறீங்க. கையை வெட்ட நாலு லட்சம் வாங்கிறம் தெரியுமா.. எவ்வளவு நட்டம் பாருங்க" என்று முறைத்தார் "வலது கை". எங்களின் இதயம் வெளியே வந்தால் போதும் என்றிருந்தது.<br />
<br />
சண்டா நிதானமாக தளர்வான குரலில் "இந்த பிரச்சனைகளை திருத்தி போட்டு வாங்கோ. நாலு நாள் தாரேன். அதுதான் Deadline. உண்மையான Dead.. line" என்றார். முகத்தில் ஒரு சலனமும் இல்லை. கையில் இருந்த தேநீர் கோப்பையை சத்தமாக மேசையில் வைத்தார். அதில்தான் அவரின் கோபம் வெளிப்பட்டது.<br />
<br />
ஆபீஸ் வந்து சேர்ந்தபோது இரவு ஏழு மணி. உடனடியாக கண்டு பிடிக்கப்பட்ட bugகளை திருத்த ஆரம்பித்தோம். இரவு பகலாக சிஸ்டத்தை சரி செய்தோம். சில்வெஸ்டர் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை போல நடந்து கொண்டான். அவன் மூலமாக சண்டாவுடன் பேசி கூடுதலாக நேரம் கேட்க முயற்சித்தேன். ஆனாலும் சில்வெஸ்டர் சண்டாவுடன் பேச மறுத்துவிட்டான். இதனால் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக சிவராத்திரி அனுஷ்டித்தோம். எல்லார் முகத்திலும் வெறுமை இருந்தது. சிரிக்க முடியவில்லை. அழுவதற்கு நேரமிருக்கவில்லை. ஒருவாறு பூசி மெழுகி சிஸ்டத்தை சரி செய்தோம். நான்காம் நாள் காலை, மறுபடியும் கண்ணை கட்டிக்கொண்டே சண்டாவின் வீட்டே விடப்பட்டோம். இந்த முறை சூழல் அவ்வளவு சுமுகமாக இருக்கவில்லை. வழமையாக கொஞ்சமேனும் புன்னகைக்கும் "வலது கை" அன்று கடுமையாக நடந்துகொண்டார். ஆனால் இந்த முறை எங்கள் சிஸ்டம் ஏமாற்றவில்லை. யாழ்ப்பாணத்தில் கொடுத்த கொலை ஆர்டர் யாழ்ப்பாணத்திலேயே நிறைவேற்றப்பட்டது. தர்மராஜூவுக்கு கொடுக்கப்பட்ட வெள்ளை வான் ஆர்டர் மூலம், தர்மராஜ் வெள்ளை வானில் கடத்தப்பட்டு முப்பது லட்சம் பணம் கொடுத்தபின்னர் விடுவிக்கப்பட்டார்.<br />
<br />
சண்டாவின் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. "தாதாயிசம் goes to IT" என்று கூவினார். நான்கு வைன் கிளாசை தானே எடுத்துக்கொண்டு வந்தார். "இது உயர்தர வைன். இது வெற்றிகரமாக முடிந்ததை கொண்டாடுவோம்." என்றார் ஒரு சிறுவனுக்குரிய உற்சாகத்துடன்.<br />
<br />
அதற்கு பின்னர் சண்டாவுடன் சகஜமாக கதைத்தோம். எங்கள் குடும்பங்களை பற்றி அக்கறையாக விசாரித்தார். எப்போது கல்யாணம் என்று கண் சிமிட்டினார். கடைசியாக "மனுஷன் பிறந்த நாள்முதல் வன்மம் என்பது அவனை நிழல் போல் தொடர்கிறது. நீங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. தம்பி! நீங்க யாரையாவது பழி வாங்க விரும்பிறீங்களா. நீங்க எங்களுக்கு செய்த உதவிக்காக ஒரு பழிக்கு பழியை ப்ரீயா செஞ்சு தாறோம். அப்படி யாராவது இருக்கா" என்றார். "நான் எப்போதுமே அன்பை நாடுவேன். பழிக்கு பழி வேணாம் சேர்" என்றான் துமிலன். எனக்கு வேணாம் என்று சொல்ல தோன்றவில்லை. "சும்மா யோசிச்சு பாருங்க.. உங்களுக்கு யார் மேலாவது வன்மம் இருக்கலாம். உங்கள் user accountகளுக்கு ஒருமுறை மட்டும் ப்ரீ. இரண்டு நாளைக்குள் இதை பாவிச்சுடுங்க. பிறகு வருத்தப்படக்கூடாது. யாராகவும் இருக்கலாம். நான் கண்டுகொள்ள மாட்டேன். உங்களுக்கு பிடிக்காதவர்களை கொலைகூட செய்யலாம்" என்று கண் சிமிட்டினார்.<br />
<br />
<b>அத்தியாயம் 4: இதுதான் முடிவா</b><br />
<b><br /></b>
வீட்டுக்கு வந்த சேர்ந்தபோது மணி பத்து. கால் முகம் கழுவிக்கொண்டேன். மனதில் ஒருவித வெறுமை உணர்ச்சி. உடல் சோர்வாக இருந்தது. ஆனால் நித்திரை வரவில்லை. கம்ப்யூட்டரை ஓன் செய்தேன். சண்டாவின் கொலைகார சிஸ்டத்துள் நுழைந்தேன். புதிய ஆர்டரை பதிவு செய்ய கோரினேன். சிஸ்டம் என்ன தண்டனை என்று கேட்டது. நாக்கை அறுக்க வேண்டும் என்றேன். தண்டனை கொடுக்கப்படவேண்டிய ஆளின் பெயரை கேட்டது.<br />
<br />
பொறுமையாக ஒவ்வொரு எழுத்தாக என்று டைப் செய்தேன். அது "சில்வெஸ்டர்" என்றிருந்தது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDi7IDa0GDMLGTATEjabauOdIvbKwWJpAzLbR3NhuyUoM0ADXSrbak1OQUNtMyT8o5_ajajtF6o9VAi-qeOgJ49Slk4or_6Ah2cPc2DtGTMxkMGcGcbx-gZYL2GUnCgUCx3todgk41vKRe/s1600/4648842439_b17fe00dfa_z.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDi7IDa0GDMLGTATEjabauOdIvbKwWJpAzLbR3NhuyUoM0ADXSrbak1OQUNtMyT8o5_ajajtF6o9VAi-qeOgJ49Slk4or_6Ah2cPc2DtGTMxkMGcGcbx-gZYL2GUnCgUCx3todgk41vKRe/s1600/4648842439_b17fe00dfa_z.jpg" height="320" width="320" /></a></div>
<br /></div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-28652127692585747572014-02-22T10:44:00.000-08:002014-08-16T10:20:18.262-07:00Software Companyயில அப்படி என்னதான் கிழிக்கிறாங்க..?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBMXOwTP2OulCtE9C69-gimSKqEtzcCxUpImjtXL0mn0S9xjXR0eMgFfguuKSZrKc9Cwft1xYRID_VWsHQTspqd6HpGTPOJXX5vkhpEAP1o_DONL-rZDWfi1TQomfux7P5e7TeO4CM58Zc/s1600/images.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBMXOwTP2OulCtE9C69-gimSKqEtzcCxUpImjtXL0mn0S9xjXR0eMgFfguuKSZrKc9Cwft1xYRID_VWsHQTspqd6HpGTPOJXX5vkhpEAP1o_DONL-rZDWfi1TQomfux7P5e7TeO4CM58Zc/s1600/images.jpg" height="318" width="320" /></a></div>
காலை எட்டு மணி பத்து நிமிஷம். சூரிய வெளிச்சம் கண்ணில் பட்ட ஒரே காரணத்துக்காக கண்ணை கஷ்டப்பட்டு திறந்தேன். இன்னும் பத்து நிமிஷம் நித்திரை கொள்ளணும் போல இருந்திச்சு. அப்போதுதான் கொஞ்ச நேரத்துக்கு முதல் ஏதோ sms வந்தது போல சத்தம் கேட்டது ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது. எடுத்துப்பார்க்கணும் போல ஆர்வமா இருந்துச்சு. அவளா இருக்குமோ என்று நினைத்துக்கொண்டு பார்த்த எனக்கு ஏமாற்றம் என்பதைவிட அதிர்ச்சியா இருந்ததுதான் உண்மை. Project manager பயல்தான் அனுப்பியிருந்தான். "நேற்று ராத்திரி நீ develop பண்ணின moduleலில் நாலு bugs கண்டுபிடிக்கப்பட்டிருக்கு உடனடியாக வந்து fix பண்ணினால் நன்றியுடையவனாக இருப்பேன்" என்றது sms. அந்த செக்கனிலேயே நித்திரை கலைந்தது. "நரிப்பயல் நேரம் கெட்ட நேரத்தில sms அனுப்பி உசிரை எடுக்கிறான்." என்று கறுவிக்கொண்டேன். அடுத்த பக்கம் திரும்பிப்படுத்தேன். ஆனால் ஒரு உண்மையான Software Engineerஆல் இதனை தட்டிக்கழிக்க முடியாது. மண்டைக்குள் என்னவோ செய்தது. நித்திரை முழுவதுமாக போய் மனதில் வைராக்கியம் வந்தது. "என்ட moduleலில வரும் bugஐ வேற எவனாவது fix பண்ண அனுமதிக்கலாமா?" என்று என் மனச்சாட்சி கேட்டது. இல்லை.. இல்லை.. என்று ஆயிரம் குரல்கள் மண்டைக்குள் ஒலித்தன. எல்லா Software Engineerகளின் மனதுக்குள்ளே இப்படித்தான் ஆயிரம் குரல்கள் மண்டைக்குள் இருக்கும். இந்த குரல்கள்தான் அவனை வழிநடத்தும். பிரஷ்ஷில் கொஞ்சம் பேஸ்ட்டை போட்டு பல்லில் பட்டும் படாமலும் பல்லை தீட்டினேன். ரெண்டு கிழமையா தோய்க்காத ஜீன்சை எடுத்து மாட்டிக்கொண்டு பறந்தேன்.<br />
<br />
பஸ்ஸில் ஏறி கண்ணை கொஞ்சமாக மூடி நித்திரையை தொடர்ந்தேன். கனவில் bug fix பண்ண முயற்சிப்பது போல வந்திச்சு. எவ்வளவு முயன்றாலும் முடியவில்லை. யாரோ தோளை தட்டினார்கள். Project managerதான் தட்டுகிறானோ என்று பயந்து கொண்டே திரும்பினேன். கண்டக்டர்தான், பஸ் காசு கேட்க தட்டியிருக்கிறான். காசை கொடுத்தேன். ஏதோ கிண்டலாக என்னை பற்றி பக்கத்திலிருப்போரிடம் சொல்லி சிரித்தான். நல்லவேளை சிங்களத்தில் சொன்னதால ஒண்ணுமே விளங்கவில்லை. Software Engineerஆ இருந்துகொண்டு சூடுசுரனை தேவையா.. மறுபடியும் கொஞ்சம் நித்திரை கொண்டேன். என்ட ஆபீஸ் அருகில் ஒரு பேக்கரி இருக்கும். பஸ்ஸில் போகும்போதே கேக் வாசனை முகத்தில் அடிக்கும். அதனை அடையாளமா வச்சு சரியா முழிச்சிடுவேன். ரெண்டு, மூன்று நாள் பேக்கரிக்காரன் கேக் போடாமல்விட, சரியான பஸ் haltஇல் இறங்காமல் கொஞ்ச தூரம் தள்ளி இறங்கி நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.<br />
<br />
நான் தூங்கி ஆபீஸ்ஸுக்கு போய் சேர்ந்தபோது மணி பத்து. ஆபீஸ் பாரதப்போரின் பத்தாம் நாள் முடிவில் இருந்த நிலைமைக்கு ஒத்ததாக இருந்தது. மூன்று பேர் மேசையில் நித்திரை தூங்கிகொண்டிருந்தார்கள். இன்னும் ஐந்து பேர் கண்ணில் கருவளையத்துடன் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை முறைத்துக்கொண்டிருந்தார்கள். Project manager மட்டும் கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் குளித்துவிட்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவன் மாதிரி freshஆ இருந்தான். என்னை பார்த்ததும் குட் மோர்னிங் சொல்லி <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOxL_qncrD2B96FSr1Gwtb4h58zDaeHhBc5krgTbiJtr37BZkl2awmZy7f8GwOkgGZHRsMWdoXZyTgP6sJKq4N_guk05lc7UKT9RsW_ZHhC5qMhBRnsnr9YQrpxtmGVin_yX24D9lfBFzi/s1600/unnamed.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOxL_qncrD2B96FSr1Gwtb4h58zDaeHhBc5krgTbiJtr37BZkl2awmZy7f8GwOkgGZHRsMWdoXZyTgP6sJKq4N_guk05lc7UKT9RsW_ZHhC5qMhBRnsnr9YQrpxtmGVin_yX24D9lfBFzi/s1600/unnamed.jpg" height="400" width="300" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">அடக்கடவுளே இன்னொரு "bug"</td></tr>
</tbody></table>
புன்னகைத்தான். நானும் அவனை பார்த்து கஷ்டப்பட்டு புன்னகையை வரவழைத்துக்கொண்டு குட் மோர்னிங் சொன்னேன். எனக்கு பக்கத்தில் இருக்கும் நீலன் அப்போதுதான் முகம் கழுவிக்கொண்டு பிரஸ் டூத்பேஸ்ட் சகிதம் ஆபீஸ் washroomஇலிருந்து வந்தான். நானும் எனது ஆபீஸ் மேசைக்கு அடியில் பிரஸ், டூத்பேஸ்ட், சின்னதாய் ஒரு சோப் வச்சிருப்பேன். வேலைக்கு சேர்ந்த தொடக்கத்தில் எல்லா பயலுகளும் ஏன்தான் இப்படி பிரஸ் டூத்பேஸ்டை மேசைக்கு அடியில் வைத்திருக்கிறார்கள் என்பது முதலில் புரியவில்லை. இரண்டு நாட்கள் இரவை ஆபீஸ்ஸில் கழிக்க நேர்ந்தபின்னர்தான் அந்த ரகசியம் புரிந்தது. எப்போதாவது வேலையை முடிக்கமுடியாமல் போனால் அன்று சிவராத்திரிதான். மற்ற எல்லாருக்கும் வருசத்தில் ஒரு நாள்தான் சிவராத்திரி. ஆனா Software Engineerகளுக்கு எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும் வருசத்துக்கு நாலைஞ்சு தடவையாவது வந்து போகும்.<br />
<br />
"எப்படிடா நீலா! நேற்றிரவு வேலை எப்படி போச்சு" என்று பேச்சை அப்பாவித்தனமாய் ஆரம்பித்தேன். "உன்ட moduleஇல் நாலு bug இருந்துச்சு. சரியாவே டெஸ்ட் பண்ண மாட்டியா? போதாக்குறைக்கு code compile பண்ணுதில்லை. அதை ஒரு மாதிரி சமாளிக்கவே அஞ்சு மணித்தியாலம் போச்சு. உன்னாலே எனக்கு நேற்று ராத்திரி முழுக்க அநியாயமா போச்சுடா" என்று முறைத்தான். உன்னால "code compile பண்ணுதில்லை" என்றது எனது முகத்தில் அறைந்தது போல இருந்தது. நெஞ்சு படபடத்தது. நான் நேற்று commit பண்ணின codeதான் compilation failureக்கு காரணமா என்று தீவிரமாக ஆராய்ந்தேன். என்ட computerஇல் சரியா வேலை செய்தது. ஆனால் தீவிர தேடுதல் முயற்சியில் compile ஆகாத codeஐ commit பண்ணிய புண்ணியவான் அர்ஜுன் என்று gitweb கூறியது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFAphFzptcfjkbXQx66MblMmDeUELHWlzEFOhigU1zvxP4G8CAi0hJwi7-2KhbPL_wN9rGbC6cshyphenhyphenS6_i6Q6zDBOT1AP5vGeuQGuoPLUX_mA12puDlDJaQtYucyTPldshuNwUbvrIKrwXV/s1600/428667_376499435707766_218488228175555_1304625_352107407_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFAphFzptcfjkbXQx66MblMmDeUELHWlzEFOhigU1zvxP4G8CAi0hJwi7-2KhbPL_wN9rGbC6cshyphenhyphenS6_i6Q6zDBOT1AP5vGeuQGuoPLUX_mA12puDlDJaQtYucyTPldshuNwUbvrIKrwXV/s1600/428667_376499435707766_218488228175555_1304625_352107407_n.jpg" height="241" width="320" /></a></div>
அர்ஜுன்தான் எங்கட TechLead. எங்களைவிட கொஞ்சம் சீனியர். சுமார் ஆறு வருசமா கொம்பனியே கதி என்று பழியா கிடக்கிறான். அதனால நேரடியா "உங்கட பிழைதான்" என்று விஷயத்தை உடைக்க ஏலாது. சுத்தி வளைச்சு எப்படியாவது "நைசா" சொல்லணும். என்ன சொல்றது என்று தெரியாமலே அவனது இடத்தை நோக்கி நடந்தேன். ஆனால் அந்த பயல் இந்த projectஇன் சீரியஸ் நேரத்திலும் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை பார்த்து பரவசமா புன்னகைத்துக்கொண்டிருந்தான். chatஇல் யாரோவொரு பொண்ணுக்கு smileyகளை ஜாலியாக அனுப்பிக்கொண்டிருந்தான். அர்ஜுன் சரியான மூளைசாலி அவனால்தான் project ஒருமாதிரியா நடை பழக ஆரம்பிச்சிருக்கு. அதனால Project Manager அவனை ராசா மாதிரி நடத்துவான். பத்து வருசமா ஒரு கேர்ள் பிரண்ட் வேணும் எண்டு தேடுதல் வேட்டை நடத்தினான். எல்லாமே பெயிலியர். இப்பத்தான் ரெண்டு மாசத்துக்கு முன்னாலதான் ஒரு பொண்ணு சிக்கியிருக்கு. ரெண்டு மாசமா chatஇல்தான் மவராசன் மிளகாய் அரைக்கிறான். அடிக்கடி தனக்கு தானே சிரித்துகொள்ளுவான். மாடிப்படி ஏறி முடிந்தபின்னரும் அந்தரத்தில் நடப்பது போல நடந்தான். அடிக்கடி சரியாக டெஸ்ட் பண்ணாமல் codeஐ commit பண்ணி எங்கள் உயிரை எடுத்தான். அர்ஜுனின் கவனக்குறைவால் வந்த bugsகளை "Love Bugs" என்று புது categoryயில் Jiraவில் log பண்ணவேணும் என்று எங்களுக்குள் பேசி சிரித்துக்கொள்வோம். இவனது தடாலடி மாற்றங்களை பார்த்த துமிலன், "மச்சான்! அரைகுறை அறிவோட ஒரு Developer டீமில் இருந்தாலும் பரவாயில்லை.. ஆனா லவ்வுல விழுந்த ஒரு developerஐ டீமில வச்சிருந்தா மற்றவங்களுக்கு வாழ்க்கையே நரகமாயிடும்டா" என்று புலம்புவான்.<br />
<br />
<br />
துமிலன்தான் எங்கள் ஆபீஸின் கருத்து கந்தசாமி. கொஞ்சம் டீசண்டாக சொல்வதானால் Business Analyst. அவன் கருத்துப்படி Software Engineerகள் எல்லோரும் கறைபடாத புண்ணிய ஆத்மாக்கள். மற்றவர்கள் எல்லோரும் வில்லன்கள். எப்போதாவது இரவு நேரத்தில் ஆபிசில் நின்று வேலை செய்யவேண்டி வந்தால், அவன் பிரசங்கம்தான் எங்கள் நித்திரையை போக்கும் நிவாரணி. எக்கச்சக்கமாக உளறுவான். Client யாராவது requirementsஐ மாற்றினால் பயல் சூடாகி விடுவான். "சாகாம சாகிறவன்தான் Software Engineer.. சாவடிக்கிறவன்தான் client.. அவங்கட கைக்கூலிதான் நம்மட Project manager" என்பான். அவன் அடிக்கடி எடுத்துவிடும் புதுமொழிகளை Facebookஇல் ஒரு போஸ்டாக போடலாம். குறைஞ்சது நூறு லைக்காவது விழும். ஆனாலும் அவன் ஆபீஸுக்குள்ளே ஜோக்கராக இருந்தாலும், சார் வெளியே ஒரு மன்மதன். அவனுடைய பாஸ்வோர்ட்களை எளிதாக ஊகித்து விடலாம். அவனது அப்போதைய girlfriendஇன் பெயரையே பாஸ்வோர்டாக வைத்திருப்பான். அதை வெளியே சொல்லிக்கொள்வதில் பயலுக்கு ஒரு பெருமை. ஆனாலும் தயங்காமல் ஆறு மாசத்துக்கு ஒருமுறை பாஸ்வோர்ட் மாற்றுவான். "ஏண்டா இப்பிடி" என்று கேட்டால், "என்னடா செய்றது அடிக்கடி பாஸ்வோர்ட் மறந்து போயிடுது" என்று அசட்டுத்தனமாக புன்னகைப்பான். இவன மாதிரி ஆளுகளாலதான் Software Engineerகளுக்கு மார்கட்டுல ரேட் குறைவு என்று எங்களுக்குள் பேசிக்கொள்வோம்.<br />
<br />
ஆனாலும் துமிலன் clientகளை அற்புதமாக கையாளுவான். ஒருமுறை அழகு சாதனபொருட்கள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றுக்கு ERP system implement செய்யவேண்டிய project எங்களுக்கு கிடைத்தது. ERP System பற்றி சரியாக தெரியாத என்னையும், துமிலனையும் மாலை போட்டு மஞ்சள் தண்ணி தெளிச்சு அனுப்பி விட்டார்கள். அப்போது அவனும் என்னை மாதிரியே ஒரு சாதாரண Software Developerதான். கோட்டு போட்ட இரண்டு பொண்ணுகளோடுதான் முதல் நாள் requirements meeting. மேடம் சாண்ட்ரா முப்பத்தைந்து வயது, எல்லாம் தெரிந்த அனுபவசாலி போல இருந்தாள். அவளோடு இருபது வயது போல இருந்த சில்வியா. அவள் கொம்பனியில் இலவசமாக கொடுத்த மேக்கப் சாதனங்களை பூசிக்கொண்டு பொம்மை மாதிரி சிக்கனமாக புன்னகைத்தாள். இவர்களோடு நானும் ஒரு ஆம்பிளை இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள கண்ணாடி போட்ட கோதுமை நிறத்தில் ஒருவன். தொடங்கியதுமே எக்கச்சக்கமான கேள்விக்கணைகள்.. சமாளிக்க முடியாமல் திணறினேன். சில கேள்விகளுக்கு மௌனம் சாதித்தேன். துமிலன் தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாதது போல சும்மா பக்கத்தில் இருந்தான். மீட்டிங் முடிந்தது. போரில் தோல்வியுற்ற தளபதி போல அவமானத்துடன் வெளியே வந்தேன்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR0KohWPcYh1MeYuI7lEYRgcRCf2q9ZudFFVNnYtYn_FMSYh1jibqgI6roHvoEPUGSfJydGYjmlpqwJQpYyEie0bblk5WyDd0bg4iPS3fsX957iYHuU_mPt7LHpOGdDSvQqfrF-C0AwBBF/s1600/smokingwarningforsoftwareengineers.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR0KohWPcYh1MeYuI7lEYRgcRCf2q9ZudFFVNnYtYn_FMSYh1jibqgI6roHvoEPUGSfJydGYjmlpqwJQpYyEie0bblk5WyDd0bg4iPS3fsX957iYHuU_mPt7LHpOGdDSvQqfrF-C0AwBBF/s1600/smokingwarningforsoftwareengineers.jpg" height="200" width="400" /></a></div>
"என்னடா மச்சான்! எல்லா கேள்விக்கும் எப்படி என் ஒருவனால் பதில் சொல்ல முடியும். நீயும் உனக்கு தெரிஞ்ச ஏதாவது சொல்லி சமாளிக்க வேணாமா" என்று எனது மனக்குறையை வெளியிட்டேன். "அதில வந்த குறைச்சலா பேசின மற்ற பொண்ணு அழகா மேக்கப் போட்டுட்டு வந்திச்சு இல்ல.. அதை பார்த்திட்டே இருந்தனா.. ஒண்ணுமே புரியலை" என்றான். எனக்கு வந்திச்சே ஒரு கோபம். அன்றிரவு நடந்த சண்டையின் முடிவில் மீட்டிங்போது எனக்கு சப்போர்ட் பண்ணுவதாக ஒப்புகொண்டான். அடுத்த நாள் முழுக்க மேடம் சாண்ட்ரா கேள்வி கேட்க நான் மேலோட்டமாக ஏதோ சொல்ல அவள் அதற்கு மேல் விளக்கம் கேட்க துமிலன் விரிவாக புளிபோட்டு விளக்கமளித்தான். முன்னுக்கு இருந்த White Boardஇல் கன்னா பின்னாவென்று ஏதேதோ வரைந்தான். கொஞ்சம் UML மாதிரியும் கொஞ்சம் BPMN மாதிரியும் கலந்து வரைந்தான். மேடம் சாண்ட்ரா அதை தனது நோட்புக்கில் குறித்துகொண்டாள். சில்வியா வச்ச கண் வாங்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அரசியல்வாதிகள் போல இஷ்டத்துக்கு அதை செய்து தாறோம், இதை செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தான். அதில் வரைந்த படங்களுக்கும் நாங்கள் develop பண்ண இருக்கும் systemத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்தாலும், குறுக்கிடாமல் எனக்கு கேள்விகளுக்கிடையில் கிடைத்த ஓய்வை அனுபவித்தேன்.<br />
<br />
"சும்மா கலக்கிட்டேடா மச்சான். எப்படிடா இப்படி" என்று பாராட்டினேன். "பொண்ணுங்களுட்ட பேச ஒரு முறை இருக்கு. காலங்காலமா ஒரு விதிமுறை இருக்கு அதை பின்பற்றினாலே போதும். எனக்கு இதெல்லாம் தண்ணி பட்டபாடு.. நீ ஒரு கேள்வி கேட்டா, ஆடு திருடின கள்ளன் மாதிரி முழிப்ப, நான் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஏதோ கதை கதையா சொல்றன்" என்றான். பின்னாட்களில் ஏதாவது பிரச்சனை வந்தால் துமிலன்தான் மெயில் அனுப்பி clientஐ சம்மதிக்க வைத்தான். எங்கள் கம்பெனியில் Developer, Business Analyst, QA Engineer என்று வேறு வேறாக roles அதுவரை இருக்கவில்லை. அந்த நிகழ்வின் பின்னர் துமிலன் முழுநேர Business Analyst ஆக நியமிக்கப்பட்டான். இதுபோலவே நீலன் நாங்கள் செய்யும் வேலைகளில் தவறு கண்டுபிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தான். அவனது develop செய்யும் வேலைகள் எங்களது தவறுகளால் பாதிப்படைவதாக project managerஇடம் சாதித்தான். இதனாலேயே அவன் முழுநேர QA Engineerஆக மாற்றம் பெற்றான். எங்கள் codeஇல் வரும் functionality தவறுகளை கண்டுபிடிப்பது அவனுடைய முழுநேர வேலையானது. புதுசா புதுசா வெவ்வேறு கோணங்களில் systemஐ டெஸ்ட் செய்து நிறைய bugs கண்டுபிடிப்பான்.<br />
<br />
இப்படித்தான் எங்கள் கம்பெனியும் வளர வளர புதிது புதிதாக roleகள் உருவாகின. Business Analyst, QA Engineer போன்ற வேலைகள் குறிப்பிட்ட சிறப்பியல்புகள் தேவைப்படுவது போன்று Software Developer என்பதற்கும் சில முக்கிய தகுதிகள் இருக்கின்றன. Developer எனப்படுபவன் bug-free softwareஐ உருவாக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறான். ஆனால் அது இம்மையில் முடியாத காரியம். ஆகவே ஒரு bug அவனது moduleஇல் வந்தால் அதனை ஒத்துகொள்ளும் மனபக்குவம் வேண்டும். Client கேட்கும் கேள்விகளில் தடுமாறினாலும், Clientக்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவதே அவனது ஒரே குறிக்கோளாக இருக்கக்கூடிய ஒருவனே சிறந்த developer. ஆனால் சில நேரங்களில் அவன் ஒரு பலியாடு போல உணரும் சந்தர்ப்பங்கள் வரலாம். ஆனால் சூடுசுரனை இல்லாதவன்தான் Software Developer.<br />
<br />
<br />
<table bgcolor="grey" border="1">
<tbody>
<tr>
<td>இந்தக்கதை நான் கண்ணால் கண்டு எழுதியது அல்ல. ஒரு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கம்பனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்த நாலு Software Engineerகளான நண்பர்களிடம் கேட்ட ஒன்றுக்கு ஒன்று ஒட்டாத அனுபவ கதைகளை கஷ்டபட்டு ஒட்ட முயற்சித்திருக்கிறேன். அவ்வளவுதான்.. நானும் ஒரு Developer என்பதால் கதையின் கடைசியில் ஹீரோ மாதிரி காட்டியிருக்கிறேன் :P. ஜோக்கர் மாதிரி அவன் உங்களுக்கு தோற்றினால் கண்ணை கழுவிவிட்டு மீண்டும் வாசிக்கவும் :).
</td>
</tr>
</tbody></table>
<br />
<br />
<br /></div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-8059997050399235972014-01-15T08:41:00.002-08:002014-08-16T10:22:03.089-07:00155 ஏறுங்கய்யா! ஏறுங்கம்மா!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjXvfdqUj0T_diICfmCULh3SrxLlJnBfcfUTBo0kYdEvj8ikPi4ysQr9RRC6z5N6AwJS4hv9cQh3RKUl5GYSwv7wxv99uDl9kySVoOHcR2w0qfQPQ4o2Jjo5JC_XBv5Zi7H_qi0VhW2EoR/s1600/133717815838.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjXvfdqUj0T_diICfmCULh3SrxLlJnBfcfUTBo0kYdEvj8ikPi4ysQr9RRC6z5N6AwJS4hv9cQh3RKUl5GYSwv7wxv99uDl9kySVoOHcR2w0qfQPQ4o2Jjo5JC_XBv5Zi7H_qi0VhW2EoR/s320/133717815838.jpg" height="270" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">155இன் மானசீக தோற்றம்</td></tr>
</tbody></table>
நீங்கள் எப்போதாவது 155 பஸ்ஸில் சாவகாசமாக பயணித்திருக்கிறீர்களா? நீங்கள் கொழும்புக்கு ஒருமுறை வந்திருந்தாலே போதும், 155 என்பது ஒரு பஸ்சின் இலக்கம் என்பது தெரிந்திருக்கும். ஆனாலும் ஏனைய பஸ் எண்களைகாட்டிலும், கூடிய பிரசித்தமானது. பலர் அந்த பஸ்ஸில் போவதையே தவிர்க்க எண்ணுவார்கள். ஆனாலும் அந்த பஸ் கொழும்பில் பிரபலம். ஏனென்றால் அது அவ்வளவு ஸ்லோவா போகும். ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் ஐந்து நிமிஷம் நிக்கும். கண்டக்டர் பயல் "பம்பலபிடிய, கம்பஸ், அஸ்வாட்டுவா, மட்டக்குளிய" என்று காது கிழிய கத்துவான். சில பேர் பஸ்ஸை எடுக்கமுன், இறங்கி டீ குடிச்சிட்டும் வந்திடுவான்கள். நான் கொழும்புக்கு வந்த தொடக்க காலங்களில் அப்பா "ஐடேன்ட்டி கார்டை மறக்காம எடுத்திட்டு போ" என்ற அட்வைசுடன் "டேய் நீ நடந்து போனாலும் போ.. தப்பித்தவறிக்கூட 155 பஸ்ஸில் ஏறிடாத.. ஸ்கூல் முடிஞ்ச பிறகுதான் போய் சேருவே" என்று எச்சரிக்கை விடுப்பார். ஆனாலும் சில நாட்களில் தவறுதலாக ஏறி நத்தை மேல் பயணம் செய்ததை போன்ற சுகானுபவத்தை பெற்றேன். A/L படிக்கும்போது, வர்ணம் சேர் physics வகுப்பின்போது பாடம் தவிர்ந்த கதைகள் அவ்வளவா கதைக்கமாட்டார். அந்த மனுசனே ஒருமுறை "155தான் குடுக்கிற காசுக்கு worthஆன பஸ். கொஞ்ச காசுக்கே கனநேரம் உங்களை வைத்துக்கொண்டு கொழும்பை சுற்றி காட்டுவார்கள்" என்றார்.<br />
<br />
எனது கொழும்பு பாடசாலை காலங்களில், யாழ்பாணத்தில இருந்து ஒரு நண்பன் எங்களது கொழும்பு பாடசாலையில் சேர்ந்தான். அவன் எல்லா வேலையையும் கொஞ்சம் ஸ்லோவாக செய்வான். அவனுடைய யாழ்ப்பாண பாடசாலையில் அவனுடைய பட்டப்பெயர் "ஆமை". ஆனால் அந்த பெயர் கொழும்பு சூழலுக்கு அவ்வளவு ஏற்றதாக இருக்கவில்லை. எல்லோரும் கூடிப்பேசி அவனுக்கு வைத்த பெயர் "நூற்றிஅம்பதைந்து". சில பரீட்சைகளில், அவன் நேரம் முடிந்தபின்னரும் எழுதிக்கொண்டிருப்பான். "ஏய் நூற்றிஅம்பதைந்து! நேரம் முடிஞ்சிட்டுது. பேப்பரை தா!" என்று வகுப்பாசிரியரே கேலி செய்யும் அளவுக்கு பிரபலமான பட்டப்பெயராக விளங்கியது. கொழும்பில் இருக்கும் ஒவ்வொரு நண்பர் கூட்டத்திலும் ஒரு "நூற்றிஅம்பதைந்து" நிச்சயம் இருப்பான். அவரவர் கதைக்கும் மொழிகேற்றவாறு 155 "வண் டபுள் பைவ்" ஆகவோ "எக்க சீய பணஸ் பகாய்" ஆகவோ இருக்கலாம்.<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1XoWP1PHsNqZdvju4VYTlQSui6Y6lFbJJZPM0mh3fM-wGV2D7XscgGZx4qMwAgaoOct_y59l-CLjNGG-xGXn-FMcvgFCZ2YNBKP4SFt1mHifeQzGChc7pphWR-sgiinywAVZR0IXRyz5X/s1600/6bus_sri_lanka.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1XoWP1PHsNqZdvju4VYTlQSui6Y6lFbJJZPM0mh3fM-wGV2D7XscgGZx4qMwAgaoOct_y59l-CLjNGG-xGXn-FMcvgFCZ2YNBKP4SFt1mHifeQzGChc7pphWR-sgiinywAVZR0IXRyz5X/s400/6bus_sri_lanka.jpg" height="300" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">இஸ்ஷரா யண்ண மள்ளி!</td></tr>
</tbody></table>
ஆனாலும் 155 போகக்கூடிய பாதையில் வேலைக்கு போகிறவர்கள், சற்றும் மனம் தளராமல் ஒவ்வொரு நாளும் நூற்றுஅம்பதைந்தில் பயணிப்பதை கண்டிருக்கிறேன். பஸ் நிறுத்தத்தில் எனது பஸ்ஸுக்காக காத்திருக்கும்போது நூற்றுஅம்பதைத்தில் பயணம் செய்பவர்களை கூர்ந்து அவதானிப்பேன். அவர்கள் முகத்தில் துறவிகளின் முகத்தில் காணப்படுவது போன்ற ஒருவித சாந்தமும் அமைதியும் இருக்கும். ஏனைய பஸ்களில் பயணிகள் எப்போது தங்களது இடம் வரும் என்று பொறுமையிழந்து நகத்தை கடித்துக்கொண்டிருக்கும்போது, நூற்றிஅம்பதைந்தில் போகும் பயணிகளால் மட்டும் எப்படி இப்படி முடிகிறது என்று எண்ணிவியப்பேன். எங்களது நண்பர் கூட்டத்தில் யாராவது ஒருவர் தப்பிதவறி அதில் ஏறினால் அவனை கலாய்த்து தள்ளுவோம். நூற்றிஅம்பதைந்தில் போவதை ஒரு அவமானமாகவே கருதினேன். கொழும்புக்கு வந்த பத்து வருடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பயணித்திருந்தேன். அவ்வாறு பஸ்ஸில் போகும்போது வேறு நண்பர்கள் பார்த்துவிடுவார்களோ என்ற பயம் மனம் முழுக்க வியாபித்திருக்கும்.<br />
<br />
ஆனாலும் நூற்றிஅம்பதைந்தினை தங்களுக்கு ஆதாயமாக பாவித்தவர்களும் உண்டு. A/L நேரத்தில சிவா வெள்ளவத்தையில் டியுஷன் கிளாஸ் முடிந்ததும், நூற்றிஅம்பத்தைந்தில ஸ்டைலா ஓடிப்போய் ஏறுவான். "ஏண்டா நீ வெள்ளவத்தையில் இருந்து கொண்டு ஏண்டா மட்டகுளிக்கு ஒவ்வோரு நாளும் போறே?" என்று கேட்டுவைத்தேன். "நான் சுவேதாவை லவ் பண்றன்டா. மட்டக்குளி பஸ்ஸில ஏறினா அவளை பார்க்கலாம்" என்றான்.<br />
"என்னடா அதுக்கு போய் அந்த மானங்கெட்ட பஸ்ல ஏறத்தான் வேணுமா" என்றேன். "இவன் யாருடா புரியாத ஆளா இருக்கான். அவள் மட்டக்குளியவில் இருந்து வாறது எனக்கு எவ்வளவு அதிஷ்டம் தெரியுமா.. இந்த ஒரு பஸ்ஸில் ஏறினால் குறைஞ்சது 2 மணித்தியாலமாவது சைட் அடிக்கலாம். வேற எந்த பஸ்ல இப்படி ஒரு சௌகரியம் கிடைக்குமா. நீயும் மட்டக்குளி ஷ்யாமாவை சைட் அடி.. நூற்றிஅம்பதைந்து ஒரு சொர்க்கம் என்றது தெரியும்" என்றான். இப்படி ஒரு பட்டாளம் 155இலே காதல் வளர்த்து இன்பம் கண்டது.<br />
<br />
நூற்றுஅம்பதைந்து எனது வாழ்க்கை என்னும் பயணத்தில் மறுபடியும் குறுக்கிடும் என்று நான் கனவில்கூட நினைத்துப்பார்க்கவில்லை. நானும் கடந்த நான்கைந்து வருடங்களாக மத்தியானச்சாப்பாடு கட்டிக்கொண்டு "அம்மா! நான் போயிட்டு வாரேன்" என்று சொல்லிக்கொண்டு என்னுடைய ஆபீஸுக்கு போய் வந்தேன். எனது ஆபீஸ் 100 பஸ் ரூட்டில் இருந்ததால் நூற்றிஅம்பதைந்தினை பற்றி எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஒருநாள், பக்கத்தில் இருக்கிற பயல் ஆபீஸ் புது இடத்துக்கு மாறப்போகுது என்றான். மனதில் கொஞ்சம் ஆர்வம் மேலிட்டது. ஐந்து பேர் சேர்ந்து Google Mapஇல் புது இடத்தை ஆராய்ந்தோம். அந்த இடத்துக்கு போவதற்கு தேவையான பஸ் ரூட் பற்றிய ஆலோசனை தொடங்கியது. ஒருத்தன் "ட்ரெய்னில் பெட்டாவுக்கு போய் 120 பஸ் எடு" என்றான். இன்னொருத்தன் "ட்ரெய்னில் மருதானைக்கு போய் பதினைஞ்சு நிமிஷம் நடந்தா இடம் வரும்" என்றான். ஒருத்தனுக்கும் நேரடியாக போகவல்ல சரியான பஸ் ரூட் தெரியவில்லை. அப்போது உள்ளே எங்கட Technical Lead (Tech. Lead) பற்றி ஞாபகம் வந்தது. மனுஷனுக்கு கொழும்பு பத்தி அக்குவேறு ஆணிவேறா தெரியும். அவரிடம் ஒரு கேள்வி கேட்டு அவருக்கு பதில் தெரியாவிட்டால் அந்த கேள்வியை அடுத்ததா ஆண்டவனிடம்தான் கேக்கணும் என்பான் நீலன். ஆகவே அவரிடம் பஸ் ரூட் பற்றி விசாரித்தேன். "நீ தெஹிவளையிலிருந்து இருக்கிற.. ஆகவே நீ நூற்றிஅம்பதைந்துதான் எடுத்து புது இடத்துக்கு போகணும்" என்றார். கொஞ்சம் தலையை சுற்றியது. யாரோ என்னை பார்த்து தொடர்ந்து சிரிப்பது போன்றதொரு வினோத உணர்வு ஏற்பட்டது.<br />
<br />
இது ஏதோ ஆண்டவனின் புது சோதனை என்று நினைத்துக்கொண்டேன். நூற்றிஅம்பதைந்தில் ஏறவே கூடாது என்று மனதில் சபதம் மேற்கொண்டேன். புதிய இடத்தில் ஆபீஸ் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளில் ட்ரெய்னில் நாற்பது நிமிட பயணத்தின் பின்னர் ஒரு மேம்பாலம் ஏறி கடந்து Google Mapஇன் உதவியுடன் காலை வெயிலில் வியர்வை வழிய பதினைந்து நிமிட நடையில் ஆபீஸ் போய் சேர்ந்தேன். இப்படியே பத்து நாள் போய்வந்தேன். காலையில் ஒவ்வொரு நாளும் முட்டை சாப்பிட வேண்டியிருந்தது. அந்த பத்து நாட்களிலேயே எனது எடை 5 கிலோவால் குறைந்தது. போதாக்குறைக்கு ஆபீஸ்ஸுக்கு லேட்டா போய் yellow card வாங்கினேன்.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc3S6u0aAD-Cl-CO3LY4fAy8tv7MczNqaSJOoBooWRtGCODsw6RoC9bllYLsi_Yz1JWVf6ClvR7kYTzNIalN-9czXi_1ADoYbzJNvCEIC10DeVFivFWb14Lel5UlCQYu7ja9CWTj05AwbT/s1600/no-english-on-these-busses-in-colombo-sri-lanka.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc3S6u0aAD-Cl-CO3LY4fAy8tv7MczNqaSJOoBooWRtGCODsw6RoC9bllYLsi_Yz1JWVf6ClvR7kYTzNIalN-9czXi_1ADoYbzJNvCEIC10DeVFivFWb14Lel5UlCQYu7ja9CWTj05AwbT/s400/no-english-on-these-busses-in-colombo-sri-lanka.jpg" height="243" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">இது சாம்பிள்தான் 155 கிடையாது :)</td></tr>
</tbody></table>
<br />
இப்படியே நாட்கள் எனது வைராக்கியத்துடன் கழிந்தன. ஒருநாள் வெளியே சென்றிருந்த சமயம். எனக்கு தெரிஞ்ச அங்கிள் ஒருவர் என்னை பார்த்து அடையாளம் கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமப்பட்டார். "என்ன அங்கிள்! நீங்களும் மறதி பேராசிரியர் வேலைக்கு சேர்ந்திட்டீங்களா" என்றேன். "இல்லைடா, நீ கொஞ்சம் கறுத்து ஒல்லியா போயிருக்கியா.. அதான் கண்டுபிடிக்க கொஞ்சம் நேரமாச்சுது.. என்ன ஆபீஸ்ல வேலை கூடவா" என்றார். "நான் கறுத்து போயிருக்கேன்" என்ற செய்தி என்னவோ செய்தது. இதற்கு மேலும் கறுக்க முடியாது என்று இதுநாள்வரை நினைத்திருந்த எனக்கு பெரிய அடிதான். எல்லாம் வெயிலில் தினமும் நடக்கும் 15 நிமிஷ நடைதான் காரணம் என்று மனதில் கருவிக்கொண்டேன். "என்ன செய்றது.. ஆபீஸ்சை வேற இடத்துக்கு மாத்திட்டாங்க. அந்த ஸ்லோ பஸ் நூற்றி அம்பதைந்தில மட்டும்தான் போகமுடியும். ஆனா ட்ரெய்னில போய் 15 நிமிஷம் வெயிலில நடக்கணும்" என்று எனது சோகக்கதையை சொன்னேன். "அந்த இடத்திலயா புது ஆபீஸ் இருக்குது. உனக்கு 155 மட்டும்தான் சரிவரும். என்ன செய்றது அந்த பஸ்காரன் பின்னுக்கு பார்த்துத்தானே ஓட்டுறான்.. ஆனா வேற வழியில்லையே" என்றார். இப்படி பலபேர் எனது மாறிவருகிற நிறத்தை பற்றி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சொன்னார்கள். "மச்சான்! இப்படியே போனால் நீ புதுசா ஐடென்டி கார்ட் எடுக்கணும். வர வர உன்ட முகம் மாறி வருதுடா" என்று வயிற்றில் புளியை கரைத்தான் நீலன். ஆபீஸ்ஸில் பெண்கள் யாராவது சிரித்தாலும் என்னை பார்த்து சிரிப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. இதைப்பற்றி இரண்டு நாள் நித்திரையில்லாமல் யோசித்ததில் எனது மானத்தை விடவும் எனது தோலின் நிறத்தை பேணுவது அவசியம் என்று தோன்றியது.<br />
<br />
இப்பொழுதெல்லாம் சரியாக காலை எட்டரை மணிக்கு நூற்றி அம்பதைந்தில் ஏறுகிறேன். எனது நடையில் இருக்கும் பரபரப்பு இப்போது இல்லை. முகத்தில் ஒரு மகானுக்குரிய அமைதி இருக்கிறது. பஸ்ஸில் ஏறி ஒரு மூலையில் இடம் தேடுகிறேன். இடம் கிடைக்காவிட்டாலும் எந்தவித ஏமாற்றமும் இல்லை. கண்டக்டர் இரண்டு ரூபா மிச்சம் தராவிட்டாலும் திருப்பி கேட்கமாட்டேன். கிடைக்கும் சீட்டில் அமைதியாக இருந்து பெரிய பெரிய புத்தகங்களாக கொண்டு போய் படிக்கிறேன். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிப்பதில்லை. பஸ் எப்போது போய் சேருமோ என்ற படபடப்பு இல்லை. எப்போது கொண்டு விடுகிறானோ. அப்போது இறங்கிக்கொள்கிறேன். எவ்வளவு லேட்டானாலும் என் முகத்தில் அதே புன்முறுவல்தான். நீங்கள் ஏதாவது ஒரு நூற்றிஅம்பதைந்து பஸ்ஸில் என்னை காணமுடியும். அப்போது ஒரு மூலையில் ஒரு புத்தகத்தை திறந்து வைத்துக்கொண்டு இருப்பேன். வந்தீர்கள் என்றால் ஒரு மணித்தியாலத்துக்கு குறையாமல் ஆறுதலாக கதைக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiacwnNmq-xRzd4wZE7axK8aNl4hByEowHybYvgEmbSmdAfbcGoXNTxYHzQc9-KOokiLRVcxLySJUS3Ov3Fd7AUrTqU-2vaXsKTKPzctPcPmdCCR6Zaccw4t8LRn4j6A2YKdb04kTEvKSb/s1600/mad+bus+residential+small.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiacwnNmq-xRzd4wZE7axK8aNl4hByEowHybYvgEmbSmdAfbcGoXNTxYHzQc9-KOokiLRVcxLySJUS3Ov3Fd7AUrTqU-2vaXsKTKPzctPcPmdCCR6Zaccw4t8LRn4j6A2YKdb04kTEvKSb/s1600/mad+bus+residential+small.jpg" height="191" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<span style="background-color: white; color: #404040; font-family: Roboto, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><b>155 பஸ்ஸில் ஏறி அவஸ்தை படும் ஆன்மாக்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்</b></span><br />
<br />
<br />
**நான் இந்த பதிவை எழுதுவதற்கான ஐடியாவை 155ல் பயணிக்கும்போதே யோசித்தேன். உங்களுக்கும் சிந்தனை வறட்சி ஏற்பட்டால் 155க்கு வாங்கோ, சேர்ந்து யோசிக்கலாம்.<br />
<br /></div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-70810132037707561262013-11-02T22:01:00.001-07:002014-08-17T08:17:32.049-07:00ஐஸ்பெர்க் காமிக்ஸ் இலங்கையில் ஒரு தமிழ் காமிக்ஸ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW0yYvcC12Dqzo70yT3NFckyjG_XfEjayLYM18PD3ur1UwC6BKNKQYmFUSZhTbXM-76L0K5JTfysrIZ7hVMIiWEdkLgU0J0uFfGML96k1eWq5L-_YxgSfLTTJ5iQgu_wkCA3AN-UAnhDCm/s1600/logo.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW0yYvcC12Dqzo70yT3NFckyjG_XfEjayLYM18PD3ur1UwC6BKNKQYmFUSZhTbXM-76L0K5JTfysrIZ7hVMIiWEdkLgU0J0uFfGML96k1eWq5L-_YxgSfLTTJ5iQgu_wkCA3AN-UAnhDCm/s1600/logo.png" /></a></div>
<br />
<br />
<br />
<br />
வருடம் 2005. மணி இரவு 2030. யன்னலை திறந்தாலும் காற்று வரமறுக்கின்ற, வழமைக்கு சற்றும் மாறாத வெக்கையான கொழும்பு இரவு. வெளியே பிரதான வீதியில் செல்லும் வாகனங்களின் ஒலிக்கு எனது மூளை இசைவாக்கமடைந்திருந்ததால் எதையுமே கண்டுகொள்ளாது java notesஐ பார்த்துக்கொண்டிருந்தேன். நான் அப்போது ஆங்கிலத்தில் இருக்கும் notesஐ தமிழ்ப்படுத்தி மூளையில் ஏற்றும் போராட்டத்தின் நடுவிலிருந்தேன். அப்போது வீட்டு calling bell அடித்தது. அது அண்ணாதான். அவன் calling bellஐ அடிக்கும்முறையை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். வழமையாக பதினோரு மணிக்கு வேலை முடிந்து வரும் அவனுக்கு எட்டரை மணி என்பது too early. வந்து சேர்ந்த முதல் வேலையா, computerஇல் Flash driveஐ போட்டான்.<br />
<br />
"வெளியிலிருந்து வந்த முதல் வேலையா முகத்தை கழுவு. போய் computerஇல் முன்னால் பழிகிடக்கபோறியே" என்று சமையலறையிலிருந்து வந்த அம்மாவின் குரலை காதில் போட்டுக்கொள்ளவில்லை. "நான் சில french காமிக்ஸ் website pages download பண்ணிக்கொண்டு வந்திருக்கேன். அதில நம்மட இரத்த படலமும் இருக்குதுடா" என்றான். அந்த காலத்தில் "இரத்தப்படலம்" என்றாலே கைக்கெட்டாத மந்திர வார்த்தை. அதுவரை காலமும் 4, 5, 6 ஆம் பாகங்களை மாத்திரமே வாசித்திருந்ததால் முதல் பாகங்களில் என்ன நடந்திருக்குமோ இனி கதை எப்படி போகுமோ என்ற ஆர்வம் எங்கள் நினைவுகளில் ஊறி கனவுகளில் உலாவிடும். புரியாத french மொழியில் இருந்த websiteஇல் கண்கவர் படங்கள் எங்களை கனவுலகத்துக்கே இட்டுச்சென்றன. நாங்கள் இதுவரை வாசித்து சிலாகித்த comicsகளை உருவாக்கியவர்கள் இங்க்லீஷ்காரர்கள் இல்லை பிரஞ்சு-பெல்ஜியம் காரர்கள் என்ற உண்மை அப்போதுதான் புரிந்தது. Internet என்ற ஒரு விஷயம் எங்களின் காமிக்ஸ் கனவுலகங்களை மேலும் விஸ்தரிக்க உதவியது. அந்த காலங்களில் Internet access ஒரு சில இடங்களில் மட்டுமே அரிதாக கிடைக்கும். அதனால் ஒவ்வொரு நாளும் அண்ணா சந்தர்ப்பம் கிடைக்கும்போது புதிது புதிதாக comics pages கொண்டு வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருப்பேன். அப்போதைய காலங்களில் லயன்/முத்து காமிக்ஸ்கள் அருமையாகவே வெளிவந்தன. வந்தாலும் இலங்கையில் கிடைக்காது. கடைக்காரர்களிடம் கிழமைக்கு ஒரு தடவை லயன் காமிக்ஸ் வந்து விட்டதா என்று விசாரித்து கடைக்காரர்களின் முறைப்புக்கு ஆளானோம்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizaDr3RmRtAlf0tYsbmRdy19t3EUgbSgcpdPiBH3jBvS1I2nzuwT7ZPRL8EIJ2IZHT1nxgDn7B20y0-EsbLVKP41mLi2vx1raQ3pHYRJDvuIIE99SCGZ_Pnc11yCy1CaCOwLsgSCvdR5BU/s1600/backcover.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="464" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizaDr3RmRtAlf0tYsbmRdy19t3EUgbSgcpdPiBH3jBvS1I2nzuwT7ZPRL8EIJ2IZHT1nxgDn7B20y0-EsbLVKP41mLi2vx1raQ3pHYRJDvuIIE99SCGZ_Pnc11yCy1CaCOwLsgSCvdR5BU/s640/backcover.png" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">முதல் இதழின் பின்னட்டையில் இருந்த trailer</td></tr>
</tbody></table>
<br />
<br />
இப்படி download செய்து அவனுக்கே அலுத்து விட்டதோ என்னவோ.. ஒரு நாள் இரவு ஏதோ முடிவுடன் வீட்டுக்கு வந்தான். "டேய் நாமும் பிரஞ்சு காரனுட்ட rights எடுத்து இலங்கையில comics வெளியிடலாம்." என்றான். "ஏதோ ஜோக்கடிக்கிறான்" என்றுதான் முதல்ல யோசிச்சேன். ஆனால் அவன் சீரியஸாக Dargaud comics பதிப்பகத்தினரின் foreign rights பற்றிய தகவல்களை கொண்டுவந்திருந்தான். அவன் கண்களில் பத்து வயது பொடியனுக்குரிய ஆர்வம் இருந்ததை அவதானித்தேன். அண்ணா "காமிக்ஸ் வெளியிடுவோம் வா" என்று என்னை கேட்பது இதுதான் முதல் முறையல்ல. அவன் பதினான்கு வயதாகும்போதே Indian Ink மூலம் Cowboy comicsகளை பார்த்து வரைந்து Dictionary பார்த்து தமிழ்ப்படுத்தி கையெழுத்து காமிக்ஸ் உருவாக்குவான். அவனுக்கு கறுப்பு வெள்ளை நிழட்படுத்தி வரையும் சித்திரம் நல்லா வரும். Blazing Colts (துடிக்கும் துப்பாக்கிகள் ?? )என்றதொரு western கதையை அப்படியே பார்த்து வரைவான். யுத்த காலங்களில் பாடசாலை மூடியிருந்ததால் அவனுக்கு நிறைய நேரம் கிடைத்தது. ஆனாலும் முழுக்கதையையும் முடிக்க முன்னரே பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டதால் அந்த "கையெழுத்து" காமிக்ஸ் இடை நிறுத்தப்பட்டது. நானும் எனது பங்குக்கு எனது வயதுக்கும் தகுந்தவாறு நானே வரைந்து நிறைய படம் நாலு வார்த்தை என்று காமிக்ஸ் செய்வேன். அப்போது கற்பனைக்கு எந்த கட்டுப்பாடும் இருக்காது. ஒரு நரி சிங்கத்திடம் கடன் வாங்கி விண்கலம் அமைத்து பூமியிலிருந்து சந்திரனுக்கு போகும். அங்கிருக்கும் சில விண்வெளி மனிதர்களை சந்தித்து நட்பு வளர்க்கும். அதற்கு பிறகு ஏற்பட்ட கற்பனை வறட்சி காரணமாக அந்த கதை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.<br />
<br />
இப்படியே எங்களுக்குள் பாதியில் நின்றுபோன கனவுகளை மீண்டும் மீட்டிப்பார்க்க, அண்ணா பத்து வருடங்களுக்கு பின்னர் முடிவெடுத்திருந்தான். வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களது படைப்புகளை இலங்கையில் வெளியிட அதிரி புதிரி தொகைப்பணத்தை கோரியிருந்தார்கள். அண்ணா அப்போதுதான் தொழிலை தொடங்கியிருந்தான். அவ்வளவு பணத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுத்து புத்தகங்களை இலங்கையின் குறைந்த வாசகர் வட்டத்தில் விற்க முடியுமா என்ற கேள்வி இரண்டு பேருக்குமே இருந்தது. நான் ஒரேயடியாக "முடியாது" என்று மறுத்தேன். நான் ஒரு அவநம்பிக்கை பேர்வழி. ஆனாலும் இரத்தப்படலத்தின் முதல் பாகத்தை நாங்களே வெளியிட்டால் அதுவரை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்திராத முன்வரிசை பாகங்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற "பேராசை" வியாபார தந்திரங்களையும், திட்டமிடல்களையும் தாண்டி முன்னிலை வகித்தது. ஆகவே அண்ணா முதல் வேலையாக Dargaud காமிக்ஸ் நிறுவனத்துடன் email தொடர்பை ஏற்படுத்தினான். வாரத்துக்கு ஒரு தடவை பக்கத்தில் இருக்கும் communicationக்கு சென்று இருநூறு ரூபாய்க்கு IDD call பிரான்சுக்கு கதைப்பான். "Dargaudஇலிருந்து யாரோ ஒரு பிரெஞ்சுக்காரன் ஜரூரா இங்கிலீஷில கதைக்கிறான். Royalty காசை கட்டினா போதும். காமிக்ஸின் மூலம் கிடைத்துவிடும்." என்றான் உற்சாகமாக. இது எவ்வளவு தூரம் போகும் என்று அவநம்பிக்கையாக "மதில் மேல் பூனை" போன்று அவதானித்து கொண்டிருப்பேன். அண்ணா சில மாதங்களுக்கு முன்பாக புதிதாக தொடங்கிய companyக்கு பெயர் ஐஸ்பெர்க். ஆகவே எங்கள் காமிக்ஸ்க்கு "ஐஸ்பெர்க் காமிக்ஸ்" என்ற நாமத்தினை சூட்டினான்.<br />
<br />
ஒரு மாதத்திற்கு பின்னர் ஒரு நல்ல நாளில் அண்ணா கோரியிருந்த XIII, மற்றும் ப்ளுபெர்ரி கதைகளுடன் சில வேற்று கிரகங்கள் தொடர்பான Aldebran போன்ற கதைகளுக்கான sampleகள் வந்திறங்கின. எல்லாமே பிரெஞ்சு மொழியிலிருந்ததால் படம் பார்த்து கதையை புரிந்து கொள்ள முயற்சித்தேன். இரத்தப்படலத்துக்கு மட்டும் அவர்களிடம் இருந்த சில ஆங்கில பதிப்புகளை எங்கள் வசதிக்காக அனுப்பியிருந்தார்கள். அவர்களது websiteஇல் ஐஸ்பெர்க் காமிக்ஸ் இலங்கையிலிருக்கும் partners என்று list பண்ணியிருந்தது எங்களுக்கு பெரிய சந்தோசமாகவிருந்தது. ஒரு கிழமைக்குள்ளாக அண்ணா XIIIஇன் முதல் பாகத்தை என்னிடம் மொழிபெயர்க்க சொல்லியிருந்தான். ஆனால் எனது சோம்பேறித்தனத்தினாலும் படிப்பின் இடையில் நேரம் ஒதுக்க முடியாமையாலும் என்னால் அதனை செய்து முடிக்க முடியவில்லை. அதனால் அண்ணா மொழிபெயர்க்கும் வேலையையும் ஏனைய வேலைகளுடன் எடுத்துக்கொண்டான். எப்படி மொழிபெயர்ப்பது என்பதில் சில சிக்கல்கள் இருந்தன. நாங்கள் அதுவரை இந்திய காமிக்ஸ்களை மட்டுமே படித்திருந்ததால் இலங்கை தமிழில் எப்படி மொழிபெயர்ப்பது, எந்த அளவுக்கு பேச்சுத்ததமிழை நுழைப்பது என்பதில் எனக்கு ஆயிரம் குழப்பங்கள் இருந்தன. ஆனால் அண்ணா அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கிறிஸ்மஸ் விடுமுறையில் புத்தகத்தை வெளியிடுவதற்கான முயற்சியாக இரண்டு நாள் கண்விழித்து கொஞ்சமாக இலங்கை தமிழ் வாசனையுடன் வழமையான காமிக்ஸ் பாணியில் எழுதி முடித்தான். வழமையாக இந்திய தமிழில் வரும் "டாக்டர்" என்பது "டொக்டர்" ஆனது. "பேசுதல்" என்பது "கதைத்தல்" ஆனது. எனக்கு தமிழில் மிகவும் பிடித்த வார்த்தையான "முடியாது" என்பது "ஏலாது" ஆனது. சில வசனங்கள் நீளமாக இருந்தால் Font sizeஐ கொஞ்சம் adjust செய்து வசன balloonக்குள் அடைத்தான்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ59aiTLWHPQLk71GykgYLiwu0iD3k4YbXvTYqgQ-PRdkpczBWni22cEdk04L0JL870ntsIaZNgTBw2FtKGjZNg5BXFnOysnrqfMK9VhhgLEiVI8NKZc6Aec_5BEcHFEKD3YySTEVqZWFo/s1600/1stPage.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="566" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ59aiTLWHPQLk71GykgYLiwu0iD3k4YbXvTYqgQ-PRdkpczBWni22cEdk04L0JL870ntsIaZNgTBw2FtKGjZNg5BXFnOysnrqfMK9VhhgLEiVI8NKZc6Aec_5BEcHFEKD3YySTEVqZWFo/s640/1stPage.png" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">முதல் பக்கத்தின் சில பகுதிகள்</td></tr>
</tbody></table>
<br />
<br />
இந்த கதைக்கு என்ன தலைப்பு வைப்பது என்பது பற்றி ஒரு மணி நேரம் விவாதித்தோம். கதை முழுக்க கதாநாயகன் தனது தொலைந்த அடையாளத்தை தேடிக்கொண்டிருப்பான். அதை குறிக்கும்விதமாக "ஆளடையாளம் XIII, ஒரு தேடல்" என்று பெயரிட்டோம். லயன் காமிக்ஸ் ஆசிரியர் விஜயன் அவர்கள் எழுதும் ஹாட்லைன் போல அண்ணா "ஹாய் ரீடர்ஸ்" என்ற எடிட்டோரியல் பகுதியை எழுதினான். அதில் காமிக்ஸ் என்பது சிறுபிள்ளை சமாச்சாரமில்லை பெரியவர்களும் ரசிக்கலாம் என்பதை வலியுறுத்தியிருந்தான்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghlzcT_iaZmdPbf4fxzp9uKb7th-nX8caJH341wIiZm-KRRvLK1XGOFSPBoehFRr4Jy-tO4cdfgjYDikysCMPI3ZWnQ2BajDtRVkfk_xzdr_1eYcf_9zNKJOw7iH4XtUjAqd_mR6NLpsX1/s1600/HiiReaders.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="488" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghlzcT_iaZmdPbf4fxzp9uKb7th-nX8caJH341wIiZm-KRRvLK1XGOFSPBoehFRr4Jy-tO4cdfgjYDikysCMPI3ZWnQ2BajDtRVkfk_xzdr_1eYcf_9zNKJOw7iH4XtUjAqd_mR6NLpsX1/s640/HiiReaders.png" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ஹாய் ரீடர்ஸ் பகுதி</td></tr>
</tbody></table>
<br />
<br />
<br />
இப்படியாக 2005 மார்கழி மாதத்தின் ஒரு நல்ல மழை நாளில் ஐஸ்பெர்க் காமிக்ஸின் முதல் பிரதி எனது மேசையில் ஜம்மென்று தயாராக இருந்தது. அண்ணாவின் சின்ன வயசு கனவு நிறைவேறியது. கிட்டத்தட்ட A4 சைசில் தரமான வெள்ளை தாள்களில் அச்சிடப்பட்ட கதையின் அட்டைப்படத்தில் கதாநாயகன் XIII கோட் அணிந்து சிவனே என்றிருந்தார். ஆனாலும் தமிழ் காமிக்ஸின் பாரம்பரியமான வழுவழுப்பான அட்டைப்படம் இருக்கவில்லை. அதையும் போட்டால் விலை 100 ரூபா ஆகிவிடும் என்ற அதிர்ச்சி தகவலை கேட்டவுடன் அது வேண்டாம் என்று முடிவு செய்தோம். ஆனாலும் விலை 85 ரூபா என்று நிர்ணயிப்பதை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் அந்த காலங்களில் லயன் காமிக்ஸ்கள் இலங்கையில் வெறும் நாற்பது ரூபாவுக்கே விற்றன. ஆகவே எங்கள் வெளியீடுகள் எந்தளவுக்கு வரவேற்ப்பு பெறும் என்பதில் பெரிய சந்தேகம் இருந்தது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-EYW8TrSRY7dfQtsoJi8aaxGoKPoM5VigYs56cRdKZ-i-9yk4oUeGu_8TAJU3IIcIlf0LyvXF4oFpBmJNMqhFfcxQepc-L686bJKbCoCAFpyskK3FU_xX8_AofWjie9C0_GBxqDqNuGk3/s1600/Aldebran.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="376" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-EYW8TrSRY7dfQtsoJi8aaxGoKPoM5VigYs56cRdKZ-i-9yk4oUeGu_8TAJU3IIcIlf0LyvXF4oFpBmJNMqhFfcxQepc-L686bJKbCoCAFpyskK3FU_xX8_AofWjie9C0_GBxqDqNuGk3/s640/Aldebran.png" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">முதல் இதழில் வந்த coming attraction - [Aldebran]</td></tr>
</tbody></table>
<br />
<br />
அண்ணாவே கொழும்பில் வழமையாக காமிக்ஸ் விற்கும் எல்லா கடைகளுக்கும் அண்ணா காமிக்சை விநியோகித்தான். குறிப்பாக பம்பலபிட்டி பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் புத்தகம் விற்கும் கடையில் 30 பிரதிகள் கொடுத்தான். ஒருவழியாக அச்சிடப்பட்ட 1000 இதழ்களில் 500க்கு அதிகமான இதழ்களை முதல்கட்டமாக விநியோகித்து முடித்தான். ஆனாலும் அவை எவ்வளவு தூரம் விற்பனையாகும் என்பது மில்லியன் டொலர் கேள்வியாக இருந்தது. கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் விநியோகிப்பதிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதிலும் நிறைய சிரமங்கள் இருந்தன. ஆனாலும் அண்ணா சளைக்காமல் போனில் கதைத்து இயலுமான வரைக்கும் விநியோகித்து முடித்தான். அப்போது யுத்தமா.. சமாதானமா.. என்று கணிக்கமுடியாத ஒரு இடைப்பருவம் ஆகவே யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களுக்கு சிரமத்துடனே புத்தகங்களை அனுப்பினான். எங்கட ஊர் வாசிகசாலைக்கு மறக்காமல் 2 பிரதிகள் அனுப்பினான்.<br />
<br />
புத்தகங்களை அனுப்பி ஒரு வாரத்துக்கு பின்னர் பம்பலபிட்டி பிள்ளையார் கோவில் கடையிலிருந்து 20 புத்தகங்கள் விற்று விட்டதாக ஒரு நற்செய்தி வந்தது. ஆனாலும் சில இடங்களிருந்து விற்பனை மந்தம் என்று வயிற்றில் புளியை சில தகவல்களும் வந்து சேர்ந்தன. கொஞ்ச காலங்களில் வாசகர் கடிதங்கள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கின. ஒவ்வொரு கெட்ட சேதியினை தொடர்ந்தும் தெம்பூட்டும் வாசகர் கடிதம் வந்து மனதை ஆற்றியது. A4 கடதாசியில் இரண்டு பக்கம் வந்த வாசகர் கடிதம் கூட இருந்தது.<br />
<br />
அவ்வாறான கடிதங்கள்தான் எங்களது இரண்டாம் இதழுக்கான அத்திவாரம். இரண்டாம் இதழுக்காக என்ன செய்தோம் என்பதை அடுத்த பதிவில் காண்க :) (??)<br />
<div>
<br /></div>
<div>
<br /></div>
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaMNIDlgt7k01mpK-YHXxYwSsGeVmyV8YI5DYycc79zVoNqh44Zouxp3ow4yJPQG5a7YKLQ1ByxQVZNnYrvQ6VwTfXahKu9cj9TTEzF188ADqforV15ZfqyJnGmnTIOW7s6qGpEj-MtYak/s1600/Iceberg1Front_thumb6.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaMNIDlgt7k01mpK-YHXxYwSsGeVmyV8YI5DYycc79zVoNqh44Zouxp3ow4yJPQG5a7YKLQ1ByxQVZNnYrvQ6VwTfXahKu9cj9TTEzF188ADqforV15ZfqyJnGmnTIOW7s6qGpEj-MtYak/s640/Iceberg1Front_thumb6.jpg" width="464" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">அட்டைப்படம்</td></tr>
</tbody></table>
<br />
<table>
<tbody>
<tr>
<td border="1"><span style="color: black; font-family: Trebuchet MS, sans-serif;">
2008ம் ஆண்டிலேயே நண்பர் கிங் விஸ்வா அவர்கள் ஐஸ்பெர்க் காமிக்ஸ் பற்றி எழுதிய தொடர் பதிவுகள் எங்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தந்தன. அவர் அந்த பதிவிகளில் பயன்படுத்திய scan படங்களையே இப்பதிவில் பயன்படுத்தியுள்ளேன். நன்றி விஸ்வா.
</span>
<br />
<span style="color: black; font-family: Trebuchet MS, sans-serif;"><br /></span>
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"><a href="http://tamilcomicsulagam.blogspot.com/2008/09/iceberg-comics-srilankan-tamil-1st.html">கிங் விஸ்வாவின் முதலாவது இதழின் விமர்சனம்</a></span><br />
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"><br /></span>
<span style="font-family: Trebuchet MS, sans-serif;"><br /></span></td>
</tr>
</tbody></table>
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6jnzxLH0Xdo8GTfpujePOLOYrnaekvgxw4EEo_IzQQmfQDX6Li0SxZPkWM3ovWKIvAivk5tEdIOp8IBiLCJZK-Ly0Ez8thQj52794qqUm0BtseG7QKCfL6iicTy9DnykxaG-EulhZ8QUG/s1600/lastpage.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="490" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6jnzxLH0Xdo8GTfpujePOLOYrnaekvgxw4EEo_IzQQmfQDX6Li0SxZPkWM3ovWKIvAivk5tEdIOp8IBiLCJZK-Ly0Ez8thQj52794qqUm0BtseG7QKCfL6iicTy9DnykxaG-EulhZ8QUG/s640/lastpage.png" width="640" /></a></div>
<br />
<br />
முற்றும்..<br />
<br />
ஆனால் தேடல் தொடரும் </div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-67513133623984974942013-08-25T00:13:00.003-07:002013-08-25T00:17:25.453-07:00Yarl Geek Challenge மறுபடியும் வருகிறது... ...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIj3t7FOzt2VuOn_Nv7FOupWNxxb6GESM3BB9C31Ew2SkBLdIagiHCjkBsBkFD_dhEBh32RE3EHm_VtjCWWGqL5Pr-5Gav5GHqPC6OA91HqLc5uSrgTHpKQGRq2pIHdx63e4YlMBULoJ_4/s1600/yGC5.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIj3t7FOzt2VuOn_Nv7FOupWNxxb6GESM3BB9C31Ew2SkBLdIagiHCjkBsBkFD_dhEBh32RE3EHm_VtjCWWGqL5Pr-5Gav5GHqPC6OA91HqLc5uSrgTHpKQGRq2pIHdx63e4YlMBULoJ_4/s1600/yGC5.jpg" /></a></div>
"போன வருஷம் yarl geek challenge சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. அடுத்தமுறை புதிதாக என்ன செய்வதாக உத்தேசம்" என்று எனக்கு தோன்றிய கேள்வியை கேட்டேன். இந்த கேள்வியை நான் கேட்ட இடம் Yarl IT Hub உறுப்பினர்கள் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்காக சந்தித்து கொள்ளும் கூட்டம். அன்று அந்த சந்திப்பு நடந்த மேசையில் ஆறு பேர்கள் இருந்தோம். மேசையின் நடுவில் நாங்கள் ஆர்டர் செய்த "காய்ந்து போன" சாண்ட்விச், ஆறிப்போன capuchino coffee, தேசிக்காய் தண்ணி (விலை 120 ரூபா) போன்றவை எங்களுக்காக காத்திருந்தன. எங்கள் சந்திப்புகளில் வழமையாக இவ்வாறான உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு இரண்டு மணித்தியாலம் கதைப்போம். ஆர்டர் செய்தால் அது வருவதற்காக ஒரு மணித்தியாலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஒரு Coffeeயை ஒரு மணித்தியாலமாக மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக குடிப்போம். நிறைய கதைப்போம். நாங்கள் வழமையாக போகும் அந்த உணவகத்தில் ஈயடிக்க ஆள் இருக்காது. ஆகவே நாங்கள் மூன்று மணித்தியாலமாக ஒரு coffeeயை வைத்து உறிஞ்சினாலும், "எழுந்து போங்கடா!" என்று சொல்ல மாட்டார்கள்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiX04ZRcR3h-QDqEcRVgLc6rXi8QncZ6BEWvm33b21JOZRBN-jM7RGRD7VnS8mG5x5ZHspmrR9RQs-ZyVLxh4bQkL8kahT2uScvWi1TPD84i903MoIJoV_PaGnNxpkcTWRnSmtl9IYhsKmC/s1600/yGC4.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="239" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiX04ZRcR3h-QDqEcRVgLc6rXi8QncZ6BEWvm33b21JOZRBN-jM7RGRD7VnS8mG5x5ZHspmrR9RQs-ZyVLxh4bQkL8kahT2uScvWi1TPD84i903MoIJoV_PaGnNxpkcTWRnSmtl9IYhsKmC/s320/yGC4.jpg" width="320" /></a></div>
<br />
அன்றைய கூட்டத்தில், அடுத்த yarl geek challenge நிகழ்வுக்கான ஆயத்தங்களை பற்றி தீவிரமாக திட்டமிட்டனர். அன்று பேச்சு குறைவாக இருந்தது. அதிக சிந்தனைதான் எல்லோர் முகத்திலும் ஆக்கிரமித்திருந்தது. இம்முறை என்ன புதிதாக செய்யப்போகிறோமோ என்று சீரியஸாக விவாதித்தோம்.<br />
<br />
"இப்போது IT பற்றிய அறிவு பாடசாலை மாணவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. இம்முறை அவர்களையும் இணைத்தால் நிச்சயம் அற்புத விளைவுகள் ஏற்படும். அவர்களுக்கு தொழில்சார் IT பற்றிய நல்ல அறிமுகமாக இருக்கும். பாடசாலை படிப்புகளின் பின்னர் சரியான துறையை தேர்ந்தெடுக்க இது நிச்சயம் உதவும்" என்றார் சயந்தன்.<br />
<br />
எல்லோருக்கும் அந்த ஐடியா பிடித்திருந்தது. முதல்கட்டமாக மூன்று பாடசாலைகளை இணைப்பதாக அந்த அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பாடசாலை மாணவர்கள் கிட்டத்தட்ட ஒரு மாத கால அவகாசத்தில் ஒரு Applicationஐ செய்து பிரதான Yarl Geek Challenge போட்டிகளின் கடைசி நாளன்று present செய்யவேண்டுமென்றார்கள். அதன்பின்னர் என்ன மாதிரியான கருப்பொருளில் Applicationகள் செய்யலாம் என்பது பற்றிய விவாதம் தொடங்கியது. வழமைபோல Web Application பற்றி யாரோ பரிந்துரைத்தார்கள். Web Application என்பது IT Competitionகளில் வரும் "உப்புமா சமாச்சாரம்" என்று எதிர்வாதம் வந்ததால் அது வந்த வேகத்திலேயே அடங்கிப்போனது. அது மட்டுமல்லாது மாணவர்களுக்கு இன்னும் கூடுதலான challengingஆன ஒன்றுதான் yarl geek challengeஇற்கு பொருத்தம் என்றார்கள். இதனால் சமீபத்திய trendஆன mobile applicationஇற்கே பலரின் வாக்குகள் இருந்தன.<br />
<br />
பாடசாலை மாணவர்களே! தயாராக இருங்கள். உங்களுக்கு புதிய அனுபவம் காத்திருக்கிறது. புதிதாக சில technologyகள் அறிந்துகொள்ளப்போகிறீர்கள். உங்களை போன்றே ITஇல் ஆர்வமான வேறு சில பாடசாலை நண்பர்களை சந்திக்கவிருக்கிறீர்கள். Computer முன்னே 24 மணித்தியாலம் வேலை செய்யும் பொறுமை படைத்த விசித்திர ஜீவன்களை நேரில் காணவிருக்கிறீர்கள். இந்த போட்டிக்கு வழமையான Reality showக்களின் பாரம்பரியபடி yarl geek challenge "junior" என்று பெயரிடப்பட்டது. இதற்காக propectus தயாரிக்கும் பணி முழுவீச்சில் தொடங்கியது. அதன் தமிழ் வடிவத்தினை சமீபத்தில்தான் முடித்திருந்தார்கள். அதில் பாவிக்கப்பட்ட தொழினுட்பவியல் சம்பந்தமான வார்த்தைகள் எனது கவனத்தை கவர்ந்தன. Presentationஐ அளிக்கை என்று தமிழ்படுத்தியிருந்தார்கள்.<br />
<br />
போனமுறை இடம்பெற்ற yarl geek challenge போட்டிகளிலிருந்து Algorithm round அவ்வளவாக பொருத்தமாக இருக்கவில்லை என்று பெரும்பான்மையினர் கருதியதால், அதனை மாற்றுவது பற்றி ஒரு email threadஇல் விவாதித்தோம். இருபக்கமும் சாதக பாதகங்களை பற்றி emailகள் சரமாரியாக வந்திருந்தன. விவாதத்தில் முடிவில் இந்த roundக்கு பதிலீடாக User Experience Roundஐ சேர்ப்பதாக முடிவு செய்யப்பட்டது. இந்த roundஇல் பயனாளர்களுக்கு தாங்கள் செய்யப்போகும் application மூலமாக ஏற்படக்கூடிய அனுபவங்களை போட்டியாளர்கள் present செய்யவேண்டும் என்று முடிவு செய்தோம். மற்றைய roundகளிலும் இருந்த பிரச்சனைகள் பற்றி விவாதித்து சின்ன சின்ன மாற்றங்கள் செய்தோம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnVhI4-UhgiTWJdVdCjEX1bQZ-hIQiNelirnFkJI8gHOawuzFZvgj5vMCwRWEDHKe2Mjmh6HV76oUwXfR0ZvV_UkzBQ67DcHL7f36N0aWiaZ9h4VTjusTZoABo1_UWwDg_1__aWPx-WCYH/s1600/yGc1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnVhI4-UhgiTWJdVdCjEX1bQZ-hIQiNelirnFkJI8gHOawuzFZvgj5vMCwRWEDHKe2Mjmh6HV76oUwXfR0ZvV_UkzBQ67DcHL7f36N0aWiaZ9h4VTjusTZoABo1_UWwDg_1__aWPx-WCYH/s320/yGc1.jpg" width="320" /></a></div>
<br />
போன வருடம் இடம்பெற்ற yarl geek challenge போட்டியின் பின்னதாக சில எதிர்பார்த்த நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. சில மாணவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் IT industryஇல் உள்ள அனுபவஸ்தர்களுடன் உரையாடி அறிவினை பகிர்ந்துகொள்ளவும் வழிசமைத்திருந்தது. சமீபத்தில் இடம்பெற்ற Hackathon நிகழ்வின்போது மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்று கலக்கியிருந்தது இதற்கு ஒரு நல்ல உதாரணம். இம்முறை போட்டிகளின் பின்னர் இதைவிட பலமடங்கு நன்மைகள் உருவாகும் என்று உறுதியாக நம்புகிறேன். இம்முறை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அறிவிப்பு செய்து விட்டோம். ஆயத்தம் செய்வதற்கு நிறைய நேரம் இருக்கிறது. புதிதாக கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்கள், சென்றமுறை பங்கேற்ற போட்டியாளர்களை பேட்டி காண்பதன் மூலம் சிறப்பாக ஆயத்தங்களை செய்து கொள்ளமுடியும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbhlHRjYIYj-5x65uJP_iDpBz9lp_cWcHLlESB4ejTNjvP-WlJUMsMMW5sOjMsgIEBLzMaiDXHcBD_0LYUIH5zKvw3VttIkMjvSG0wVlxbv7ACkK_3WaDHZwEuYSq0at6G3iHZrCchAK-Z/s1600/yGC.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="258" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbhlHRjYIYj-5x65uJP_iDpBz9lp_cWcHLlESB4ejTNjvP-WlJUMsMMW5sOjMsgIEBLzMaiDXHcBD_0LYUIH5zKvw3VttIkMjvSG0wVlxbv7ACkK_3WaDHZwEuYSq0at6G3iHZrCchAK-Z/s640/yGC.png" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
</div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-700450444336328792013-06-07T09:44:00.000-07:002014-08-16T10:20:53.993-07:00ஆல்பியின் கல்யாணம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoF4Bun3Ye3jg9i-k1Fl2DxHcRf2KWgp_4JhCi5MMn0-E7nK9CXMB02ysoS3yNdxELYit-vflSMPQ8bfz08Sumgj79apRxKFewmDs-M95W3VdGcBbAUIPBG0EIpJRFIUIbrb9ACK7CbLyq/s1600/10649913-speed-drive-on-car-at-night-motion-blurred.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoF4Bun3Ye3jg9i-k1Fl2DxHcRf2KWgp_4JhCi5MMn0-E7nK9CXMB02ysoS3yNdxELYit-vflSMPQ8bfz08Sumgj79apRxKFewmDs-M95W3VdGcBbAUIPBG0EIpJRFIUIbrb9ACK7CbLyq/s320/10649913-speed-drive-on-car-at-night-motion-blurred.jpg" width="320" /></a></div>
அல்பிரடோவை எனக்கு இருபது நாளாகத்தான் தெரியும். நான் புதிதாக வேலைக்கு சேர்ந்த கம்பனியில் அவன் System admin. அதாவது எங்களுக்கு வரும் network சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதுதான் அவனது தலையாய கடமை. அவனை மெக்ஸிகோக்காரன் என்றுதான் எங்களுக்கு தெரியும். ஐம்பது வயதானாலும் முப்பத்தைந்து வயது ஆண்மகன் போன்ற ஒரு மிடுக்கான தோற்றம் இருக்கும். Officeக்கு smartஆக வருபவர்களில் இவனும் ஒருவன். அவனை "ஆல்பி" என்று செல்லப்பெயர் வைத்து<br />
கூப்பிட்டால் சந்தோசப்படுவான். ஆகவே நாங்களும் அப்படியே கூப்பிடுவோம். எவ்வளவு கஷ்டமான பிரச்சனை என்றாலும் நிதானமாக செயல்படுவான். ஒவ்வொரு நாளும், அவன் வேலை முடிந்தது வெளியேறும்போது நேரத்தை பார்த்தால் சரியாக மணி ஆறு என்று<br />
காட்டும். ஆனாலும் ஆறு மணிக்கு.பத்து நிமிடங்களுக்கு முன்னதாக யார் என்ன வேலை கொடுத்தாலும் ஒன்றும் சொல்லாமல் பொறுப்பேற்பான். ஆனால் மாலை ஆறு மணியானால் வைத்ததை வைத்துவிட்டு டாண் என்று வெளியேறி விடுவான். இப்படித்தான் ஒரு முறை IT manager ஏதோ<br />
ஒரு முக்கியமான விஷயத்தை கொடுத்துவிட்டு Washroom போய் வருகிற gapஇல் ஆல்பிரடோ ஆறு மணிக்கு escape ஆகி விட்டான். IT Manager தாம் தூம் என்று குதிக்க அடுத்த நாள் நாங்கள் எல்லோரும் அந்நிகழ்வை பற்றி chat செய்து விவாதித்தோம். மதிய உணவு இடைவேளையின்போது தாராம் சிங் IT Manager முதல் நாள் கோபத்தில் கத்தியது போன்று நடித்துகாட்டினான். அல்பிரடோ அதை கண்டு கொள்ளவில்லை. தாராம் சிங் அல்பிரடோவுடன் எப்போதும் எதாவது ஒரு விசயத்துக்காக கொளுவிக்கொண்டிருப்பான். இவர்கள் இரண்டு பேர்களிடையே எப்போதும் எதாவது ஒரு சப்பை விசயத்துக்காக விவாதம் நடக்கும். "இந்த மெக்ஸிகோக்காரர்கள் எல்லாம் இப்படித்தான்.. இங்கிதம் தெரியாத பயல்கள்" என்று தாராம் சிங் ஸ்டைலான ஆங்கிலத்தில் முடிவுரை வழங்குவான். இதனை தமிழில் சொல்லும்போது ஒரு மாதிரியா இருந்தாலும் தாராம் சிங்கின் ஆங்கில உச்சரிப்பு அதன் அர்த்தத்தின் காரத்தை குறைத்து விடும்.<br />
<br />
அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையின் பின்னர் கொஞ்ச நேரம் Table tennis விளையாடுவோம். IT Manager ஏதாவது ஒரு மீட்டிங்க்கு போய் விட்டால் இன்னும் ஒரு மணி நேரம் கூடுதலாக விளையாடுவோம். தாராம் சிங் எப்போதும் அல்பிரடோவுடன் மோதுவான். தாராம் சிங்க்கு எனது வயதுதான் இருக்கும். சும்மா வளைந்து வளைந்து விளையாடுவான். ஆல்பி மூச்சிரைக்க கஷ்டப்பட்டு ஓடியாடி விளையாடுவான். தாராம் சிங் வென்று விட்டால் வெற்றியில் ஐந்து நிமிடமாவது கொக்கரிப்பான். அதனை தடுக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அல்பிரடோ உயிரை கொடுத்து விளையாடுவான். ஆனாலும் அவன் ஒரு முறையும் வென்றதாக சரித்திரம் இல்லை. இரண்டு மூன்று மேட்ச் தோற்ற பின்னர்தான் அப்பிராணியான என்னுடன் விளையாட வருவான் அல்பிரடோ. என்னுடன் விளையாடி வெற்றி பெற்று மனதை தேற்றிக்கொள்வான்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjinKFe7xcUVwt2K1i0FsJlNMPhPC5Ge0eaKZslM5wxUmmeL1jIprMoFn7IftyEo1LIZ5ORAj6H74Ppmx-11n9e8UP6sDVo-8wE72TJwac3byYRYVKneIi22gD7dDX73gXGE8EFLhPV3m_H/s1600/198689201_a72686ffaf_z.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjinKFe7xcUVwt2K1i0FsJlNMPhPC5Ge0eaKZslM5wxUmmeL1jIprMoFn7IftyEo1LIZ5ORAj6H74Ppmx-11n9e8UP6sDVo-8wE72TJwac3byYRYVKneIi22gD7dDX73gXGE8EFLhPV3m_H/s400/198689201_a72686ffaf_z.jpg" width="400" /></a></div>
வேலை நேரத்துக்கு முடியும் நாட்களில் என்னை காரில் ஏற்றி சென்று ரயில் நிலையத்தில் விட்டு விடுவான். அவனால் எனது கட்டாய அரை மணி நேர நடைபயிற்சியிலிருந்து தப்பித்துக்கொள்வேன். அவ்வாறான நாட்களில் அவனுடன் உரையாட வாய்ப்பு கிடைக்கும். "நீங்க எப்ப மெக்ஸிகோவிலிருந்து வந்தீங்க" என்று ஆரம்பித்தேன். "என்னுடைய சொந்த நாடு பொலிவியா.. இந்த அவுஸ்திரேலியர்களுக்கு பொலிவியா என்றோதொரு நாடு உலக Mapஇல் இருப்பதே தெரியவில்லை.. ஆகவே பக்கத்தில் இருந்த மெக்ஸிகோவை எனது நாடு என்றேன். எல்லோருக்கும் விளங்குது" என்றான். இப்படி கதைத்துக்கொண்டே காரில் போகும்போது பின்னால் வந்த கறுப்பு கார் எங்கள் காருக்கு அண்மையாக overtake செய்து கொண்டு போனது. பத்து சென்டிமீட்டர் தூரம்தான் இருந்திருக்கும். "இப்படியே போ உனக்கு நரகம்தான் கிடைக்கும்" என்று கூவினான் ஆல்பி. அதோடு சேர்த்து, இரண்டு மூன்று ஸ்பானிஷ் கெட்ட வார்த்தை சொன்னான். நல்லவேளை எனக்கு ஸ்பானிஷ் தெரியாது. இங்கு மொழிபெயர்க்க வேண்டியதில்லை. அவனது முகம் கோபத்தில் சிவந்திருந்தது.<br />
<br />
"இந்த பயல்களுக்கு ஒரு பாடம் கற்பிக்காமல் விடப்போவதில்லை" என்றான். அந்த கறுப்பு காரின் பின்னால் விரட்டி கொண்டு போனான். வேகம் என்றால் பயங்கர வேகம். எனக்கு குடல் தொண்டையில் தட்டுபடுவது போல உணர்ந்தேன். நான் இறங்க வேண்டிய ரயில் நிலையம் தாண்டி கார் சீறிக்கொண்டு போவதை பார்த்து முழித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய இடம் வந்து விட்டது. என்பதை சொல்லுவமோ என்று யோசித்து அவனது சிவப்பேறிய முகத்தை பார்த்ததுமே ஒரு வார்த்தை வரவில்லை. பத்து நிமிஷ வெறி பிடித்த ஓட்டத்தின் பின்னர் அந்த கறுப்பு காரை நெருங்கினோம். கண்ணாடியை திறந்து நடுவிரலை உயர்த்தியவாறு அந்த காரை overtake செய்தான். அதன்பின்னர்தான் அவனது தலைக்கேறிய இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பாகங்களுக்கு சென்றடைய முகத்தில் கடுமை தன்மை<br />
குறைந்தது. "எப்படி துரத்தி பிடிச்சேன்.. பார்த்தாயா" என்றான். நான் திரு திருவென்று முழிப்பதை அப்போதுதான் கவனித்திருந்தான்.<br />
<br />
"அடடா.. ரயில் station தாண்டிடுச்சே" என்றான். அப்போதுதான் அவனது கோபத்தினால் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை அவதானித்திருந்தான். திடீரென்று சிரித்துக்கொண்டே "நான் எப்பவுமே இப்படித்தான், என்னை ஒருவரும் கார் ஓடுவதில் மிஞ்சி விட முடியாது." என்றான். "இல்லை பரவாயில்லை என்னை அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கி விட்டால் பரவாயில்லை" என்றேன் எச்சிலை விழுங்கிக்கொண்டே. "எனக்கு கொஞ்சம் கூட கோபம் வரும். அவுஸ்திரேலியாவுக்கு வரும்முன்னர் பொலிவியா இராணுவத்தில் இரண்டு வருஷம் இருந்திருக்கேன். அப்போதெல்லாம் எடுத்ததேற்கெல்லாம் கோபம் வரும். இப்ப எவ்வளவோ better" என்றான். ஒருவாறாக அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கி விட்டபின்னர்தான் எனக்கு நிம்மதி வந்தது. அவனுக்கு நன்றி சொல்லியபோது எனக்கே நான் சொன்னது காதில் எதுவும் விழவில்லை.<br />
<br />
இப்படியே சில நாட்கள் கடந்தது. ஒரு நாள் மத்தியானம் சாப்பிட சூரிய வெளிச்சத்தில் அமர்ந்திருந்தோம். வசந்த காலம் அப்போதுதான் தொடங்கியிருந்தது. இவ்வளவு காலம் இருந்த கடுமையான குளிரினால் வெளியே செல்வதை தவிர்த்தோம். வசந்த காலத்தொடக்கத்தில் இதமான சூரிய ஒளியில் உணவருந்தினோம். தாராம் சிங் அன்று காலைதான் IT Managerஉடன் கடுமையாக ஒரு deadline சம்பந்தமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அதனால் Lunch Timeஇல் கூட சிரத்தையாக வேலை செய்வது போல பாவனை செய்து கொண்டிருந்தான். ஆகவே அவன் எங்களுடன் உணவருந்த வரவில்லை. சைனாக்காரன் "சான் லீ" அன்று லீவு. ஆகவே அன்று நானும் ஆல்பியும் மாத்திரமே அன்றைய Lunch இல் ஆஜர். தாராம் சிங்கின் அறுவை காரணமாக வாயை திறக்காத ஆல்பி அன்று மட்டும் கொஞ்சம் சகஜமாக கதைத்தான்.<br />
<br />
"இராணுவத்திலிருந்து விலகிய பின்னர் பொலிவியாவுக்கு திரும்பி போயிருக்கிறீங்களா"<br />
<br />
"ம்ம்.. அதுக்கு பன்னிரெண்டு வருசமாச்சு.. ட்ரெயினில் போய் இறங்கினப்போ ஊரே என்னை பார்க்க வந்திச்சு"<br />
<br />
"அண்ணை ஊருக்குள்ள செல்வாக்கான ஆசாமி போலும்" என்று சிரித்தேன்.<br />
<br />
"இல்லை. எனக்கே ஆச்சர்யமாத்தான் இருந்திச்சு.. அண்ணாதான் சொன்னான்.. எனக்கு அம்மா கல்யாண ஏற்பாடு செஞ்சிருந்தா என்று"<br />
<br />
"மகிழ்ச்சியான விசயம்தானே.. உனக்கு அதிர்ஷ்டம்தான் போ" என்றேன். அவனின் முகத்தில் சலனமில்லை. எனது முகத்தை உற்று நோக்கினான்.<br />
<br />
"பன்னிரெண்டு வருஷம் கழிச்சு எல்லோரையும் பார்க்க போறேன். யாரோ ஒரு பொண்ணை காட்டுறாங்க. இதுவரை பார்க்காத ஒரு புதுபெண்ணு. அடுத்த நாள் என்னோட மனைவி. என்னால் எச்சிலை கூட விழுங்கமுடியவில்லை"<br />
<br />
"கொஞ்சம் அதிர்ச்சியான விசயம்தான். பிறகு என்ன நடந்திச்சு" என்றேன் ஆர்வமாக.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzxEmPaXlgRrdpvshy0BfrdbdutXsmas8zHSzF9Pzf93FKAyV-OGCbsfuDoyjuwP2buOrkRLtE8r44bKtZMP7kd-EqzHb6D6W0m4DpHgGY6UwJi8rMqqM1AR-9JoIgVXTgMCUBUBKw1O85/s1600/220638256_41b96e5c19.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzxEmPaXlgRrdpvshy0BfrdbdutXsmas8zHSzF9Pzf93FKAyV-OGCbsfuDoyjuwP2buOrkRLtE8r44bKtZMP7kd-EqzHb6D6W0m4DpHgGY6UwJi8rMqqM1AR-9JoIgVXTgMCUBUBKw1O85/s400/220638256_41b96e5c19.jpg" width="266" /></a></div>
<br />
"அப்பா இல்லாத எங்களை அம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்தா.. அப்போது அது ஞாபகத்துக்கு வரலை.. அன்றைக்கு அவளை கடுஞ்சொற்களால் திட்டினேன். அண்ணா பிடித்திராவிட்டால் அவளை அடிச்சிருப்பேன். அம்மா எனக்கு செஞ்ச காரியத்துக்கு இன்னும் அவளை<br />
<br />
மன்னிக்கவில்லை" என்றான். அவன் கண்களில் முட்டிய கண்ணீரால் கண்கள் வசந்த கால சூரிய ஒளியில் ஒளிர்ந்தது. "எல்லோரும் என்னிடம் கதைத்தார்கள். அண்ணா என்னை சமாதானப்படுத்தினான்.. என்னோட நிலைமையை வனேஸ்ஸாவுக்கு தனியாக சந்தித்து விளக்க முயற்சித்தேன். இந்த கல்யாணத்தை மிகவும் எதிர்பார்த்திருந்ததாக வனேஸ்ஸா சொன்னா. மற்றவங்க மனசை புண்படுத்த என்னால முடியலை"<br />
<br />
"வனேஸ்ஸா சொன்னவுடனே ஹீரோ ஒத்துக்கொண்டிருக்காரு போல" என்றேன் சிரித்தவாறு.<br />
<br />
"இல்லை. இது இப்ப சாதாரண விசயமா இருந்தாலும் அப்போது என்னை வாட்டியேடுத்தது. அதை பற்றி நினைத்தாலே இப்போது கூட நெஞ்சில் இடது பக்கத்துக்கு கீழே ஒரு வலி வரும்" நெஞ்சை மெதுவாக அழுத்தினான். இப்போதுகூட வலி வந்திருக்க வேண்டும்.<br />
<br />
நான் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு மௌனமாக அவனை பார்த்துக்கொண்டிருந்தேன்.<br />
<br />
"ஏய் நண்பா! என்ர சோகக்கதையை கேட்டு அழுதிறாத! தொடக்கத்தில் கஷ்டமாக இருந்தாலும் இப்ப உலகத்திலே மகிழ்ச்சியான couple நாங்கதான். விஸ்கி அடிச்சது மாதிரி மூஞ்சியை வச்சிருக்காத. வா ஒரு Drive போய் வருவோம். Dessert வாங்கித்தாறேன். செலவு என்னோடது" என்றான்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOFZyoBXDfR4C_0cproalOAiSCgnHxe7ONDghrrz9Vfvu6iu_zleE5GqupKmUrnYWqfcQfou8T-jp6poHhoGvjGk5aST7pK-aKmefILhyphenhyphen3sLz2JJjMthnsG8XZRHshKRDcnsD0BrHTQlp2/s1600/evotourism-Kangaroo-Island-Australia-631.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="152" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOFZyoBXDfR4C_0cproalOAiSCgnHxe7ONDghrrz9Vfvu6iu_zleE5GqupKmUrnYWqfcQfou8T-jp6poHhoGvjGk5aST7pK-aKmefILhyphenhyphen3sLz2JJjMthnsG8XZRHshKRDcnsD0BrHTQlp2/s320/evotourism-Kangaroo-Island-Australia-631.jpg" width="320" /></a></div>
<br /></div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-3676989493247289142013-05-18T04:40:00.001-07:002014-08-16T10:21:32.751-07:00வடக்கு வீதி ஒபரேசன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8O1U97D7tNFWEk3GmLPqeXCYyYP3A6gs32ytqyvWpWru3C9TGjtm4FlAGc7ULfW5MNqRCMoNLK1GspKj_pi98hGFLj7BeQUsLpkokl84OBVUocAt-Fo0qyRRNfxiTqSNSW-1G-nJJZYj2/s1600/1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="303" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8O1U97D7tNFWEk3GmLPqeXCYyYP3A6gs32ytqyvWpWru3C9TGjtm4FlAGc7ULfW5MNqRCMoNLK1GspKj_pi98hGFLj7BeQUsLpkokl84OBVUocAt-Fo0qyRRNfxiTqSNSW-1G-nJJZYj2/s320/1.jpg" width="320" /></a></div>
நான் எனது சொந்த ஊரில் இருந்த காலங்கள் கொஞ்சமே. படிப்பு மற்றும் இடைவிடாத வேலை என்று கொழும்பிலேயே பலகாலம் வாழ்ந்து வருவதால் ஊருக்கு போவது எப்போதாவது நடக்கும் நல்ல காரியம். வருஷம் தவறாமல் அம்மன் கோவில் திருவிழாவுக்கு நான் எப்படியாவது ஊருக்கு போவது வழக்கம். "டேய் நண்பா! நீ இந்த திருவிழாவுக்கும் ஊருக்கு வராம இருந்தால் உன்ர ஊர் citizenship cancelஆயிடும்.. ஊருக்குள்ள ஒருத்தனும் உனக்கு பொண்ணு குடுக்கமாட்டான்" என்று வருஷம் ஒரு முறை திருவிழாவுக்கு பத்து நாளைக்கு முன்னதாக போன் போட்டு மிரட்டுவான் நட்டூ. நட்டூ ஊரில் இளம் சமுதாயத்தில் பிரதிநிதி. எங்கள் நண்பர் குழாத்தின் தலைமை பொறுப்பு அவனுக்கு அப்படி ஒரு பொருத்தம். ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் முதல் ஆளா அடிஉதை என்று நிற்பான். அம்மா அப்பா அவனுக்கு வைத்த பெயர் நடராஜ். சிறுவயதில் இருந்தே கார் பைக் போன்றவற்றை கழற்றி பூட்டி விளையாடுவது அவனுக்கு ஒரு பொழுதுபோக்கு. ஆகவே நடராஜ் என்ற பெயர் மருவி நட்டூ என்றானது.<br />
<br />
திருவிழா என்று வந்துவிட்டால் ஏற்பாடுகளில் முழுமூச்சாக வேலை செய்வான். என்னை சும்மா கூட்டி செல்வார்கள். எனக்கு இந்த வேலைகள் அவ்வளவாக தெரியாவிட்டாலும் அவர்களின் வேலையின்போது நடக்கும் சுவாரசியங்களை வேடிக்கை பார்ப்பதற்காகவே அங்கு செல்வேன். திருவிழா கடைசி கட்டத்தை நெருங்கும்போது, இரண்டு மூன்று நாள் நித்திரையில்லாமல் வேலை செய்யவேண்டியிருக்கும். இப்படித்தான் ஒருநாள் கடுமையாக வேலை நடந்துகொண்டிருந்தது, எனக்கு தூங்கி வழிந்தது. ஒரு மணிக்கு எழுப்பி விடுங்கடா என்று சொல்லிவிட்டு பன்னிரெண்டு மணிக்கு ஓரமாக நித்திரைக்கு போன நான் முழிக்கும்போது சூரிய வெளிச்சம் கண்ணில் அடித்தது. இரவு முழுக்க முழிச்சிருந்த எல்லோரும் என்னை முறைத்து பார்த்து கொண்டிருக்க அப்பாவியாக "ஏண்டா என்னை ஒரு மணிக்கு எழுப்பி விட்டிருக்கலாமே" என்றேன். "எத்தனை தரம்டா உன்னை எழுப்பிறது சும்மா கும்பகர்ணனாட்டம் தூங்கிறியே.. பத்து மணிக்கு வந்தே ரெண்டு துண்டு வெட்டினே.. நித்திரைக்கு போனே.. காலையிலே எழும்பிறே" என்று சத்தம் போட்டான் நட்டூ. அவன் கண்கள் சிவப்பாக இருந்தது. அதற்கு காரணம் தூக்கமின்மையா அல்லது கோபமா என்று ஆராயும் நிலையில் நான் அன்று இல்லை. இப்படி அவன் மூன்று நாளா முழிச்சிருந்து ஒட்டித்தான் போனமுறை திருவிழாவில் இருபது அடி புகைக்குண்டு வேலை முடிந்தது. எல்லோரையும் அன்பாகவோ கோபமாகவோ திட்டி வேலை வாங்கிவிடுவான். ஒருமுறை திருவிழாவுக்கு போகாவிட்டால் அடுத்தமுறை பெரிதாக ஒட்டி உறவாட மாட்டான். "எப்படி இருக்கே.. கொழும்பில இப்ப வெயில் அதிகம் எண்டு ரூபன் சொன்னான்" போன்ற உப்புமா கேள்விகளுடன் நிறுத்திக்கொள்வான். வேலைக்கு கூப்பிட மாட்டான். அவனுடைய நண்பர்களும் அவனையே பின்பற்றி நடப்பார்கள். அவன் இல்லாவிட்டால் எனக்கு வேறு நண்பர்கள் இல்லை என்பது அவனுக்கு நன்றாக தெரிந்திருந்தது.<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiseIFOpxEkUEJnXzUp4IcRjMvo6ulhDsKnZpHL2xCe9Wo0MwWkl_00YNgL2Rqqb2l-V8WN5gLcJa6rvct5_cn4LTjb-uA1lj89fu03_iqq36HHoiiU4zqytkXQaLGMhi3rips1wYDULLhA/s1600/amman+(73).jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiseIFOpxEkUEJnXzUp4IcRjMvo6ulhDsKnZpHL2xCe9Wo0MwWkl_00YNgL2Rqqb2l-V8WN5gLcJa6rvct5_cn4LTjb-uA1lj89fu03_iqq36HHoiiU4zqytkXQaLGMhi3rips1wYDULLhA/s320/amman+(73).jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">புகைக்குண்டு</td></tr>
</tbody></table>
எங்கள் ஊர் திருவிழாவில் புகைக்குண்டு முக்கிய இடம் வகிக்கும். இதனை திருவிழாக்களின் கடைசி நாட்களில் வானில் பறக்க விட்டு மகிழ்ச்சியடைவோம். சிறுவர்கள் இதனை பார்ப்பதற்காகவே இரவு திருவிழாக்களிலும் விழித்திருப்பார்கள். "சூடான காற்று பாரம் குறைந்தது" என்ற எளிதான Physics கோட்பாட்டை பாவித்து hot air baloon போன்ற உருவில் மெல்லிய கடதாசி மூலம் சாதாரணமாக பத்து அடி புகைக்குண்டை செய்வார்கள். கீழ்ப்பக்கத்தில் எரியும் தீப்பந்தம் மூலம் உ.ள்ளிருக்கும் காற்று சூடாக்கபட்டு புகைக்குண்டு மேலெழும். இப்படி பல புகைக்குண்டுகளை வெவ்வேறு வண்ணங்களில் செய்வார்கள். சிறுவயதுகளில் மேலே பறக்கும் புகைக்குண்டுகளை பார்ப்பதற்காகவே கோயிலுக்கு போவேன். அப்போது வானில் பறக்க விடப்படும் புகைக்குண்டை வானில் மேகங்களிடையே மறையும்வரை பார்த்துக்கொண்டிருப்பேன். வடிவம் சரியாக இல்லாவிட்டால் மேலே பறக்காது என்று நட்டூ சொல்லுவான். அவனுக்கு இருக்கும் அனுபவ அறிவு, மெத்த படிச்ச engineer பயல்களுக்கும் இருக்காது. பார்த்த மாத்திரத்திலே இது சரியாக பறக்குமா இல்லையா என்று சொல்லிவிடுவான். இந்த புகைகுண்டுகள் பந்தத்தில் இருக்கும் எண்ணெய் முடியும்வரை எரிந்தபின்னர் கடலிலோ காட்டிலோ விழும். சிறுவயதில் எங்கள் வீட்டில் எப்போதாவது விழுதா என்று எத்தனையோ நாள் கனவு கண்டிருக்கிறேன். ஒருமுறை இந்தியன் ஆமி டைமில, திருவிழாவுக்கு மேலே பறக்க விட்ட புகைகுண்டை பார்த்து "இது ஏதோ உளவு பார்க்கும் நவீன சாதனம்" என்றெண்ணிய ஆமிக்காரன் ஹெலிக்கோப்டர் மூலம் வானில் துரத்தி சுட்ட கதை மூலம் புகைக்குண்டு மற்ற ஊர்களிலும் பிரபலமானது..<br />
<br />
இந்த புகைக்குண்டுகள் நெடியகாட்டு பிள்ளையார் கோவில் மடத்தில் மட்டும்தான் ரகசியமாக ஒட்டுவார்கள். வெளி இடத்து ஆட்களை உயிர் நண்பர்கள் ஆனாலும் உள்ளே விட மாட்டார்கள். அங்கு வேலை செய்யும் எல்லோரும் நெடியகாட்டை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்பது எழுதப்படாத விதியாக எல்லோர் மனதிலும் பதிந்த விஷயம். பரம்பரை ரகசியம் என்பார்கள். ஆனால் திருமால் "இப்ப அதெல்லாம் உலகம் தெரிஞ்ச ரகசியமாயிட்டது. சங்கரானந்தம் மாமா வீட்ட போன முறை திருவிழாவுக்கு விட்ட புகைக்குண்டு தரைஇறங்கிட்டது. பிரிஞ்சு மேஞ்ச மாமா. தெருக்கடை ஒழுங்கை சின்னப்பயலுகளை வச்சே பரீட்சார்த்த முயற்சியில் புகைக்குண்டு செஞ்சதா ராசு மாமா சொன்னருடா." என்றான். திருமால்தான் எங்கள் ஊரின் உள்ளூர் BBC தமிழோசை. அவனுக்கு தெரியாமல் ஊரில ஒரு விஷயம் பண்ண முடியாது. எவன் எவளை சைட் அடிக்கிறான் போன்ற பொழுது போக்கு செய்திகள் தொடக்கம் எந்த பொண்ணு கல்யாணம் முடிச்சு வெளிநாடுக்கு ஏற்றுமதியாகபோகுது போன்ற துக்கசெய்திவரை cover பண்ணுவான். அவனால் செய்தி பரவியே பல லவ்கள் பிரிந்தன. துளிர்க்க இருந்த லவ்கள் முளையிலே கருகின. "இவனுக்கு பயத்திலேயே சீதாகிட்ட கடைசிவரை என்ர காதலை சொல்லவே இல்லடா" என்று ராசா புலம்புவான். அவனுக்கு இப்ப கல்யாணம் கட்டி ஒரு மகள். பேருகூட சீதா என்று கேள்விப்பட்டேன்.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6bIlPFYMaqsQTJmDP8oDO028Ok7pwPK_e7PaxPD0f6jnu0k7kb6iL405OBri5BNr6u6RjH_6mo-6KlgJ9gajQ4zmhL9eMyEd6d_UOWHxSBZAAMB9fCzmWQNkIDaHRpmu6zMZeGgf3gB4m/s1600/3.png" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="199" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6bIlPFYMaqsQTJmDP8oDO028Ok7pwPK_e7PaxPD0f6jnu0k7kb6iL405OBri5BNr6u6RjH_6mo-6KlgJ9gajQ4zmhL9eMyEd6d_UOWHxSBZAAMB9fCzmWQNkIDaHRpmu6zMZeGgf3gB4m/s320/3.png" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">அம்மன் கோவில்</td></tr>
</tbody></table>
<br />
இம்முறை தீர்த்த திருவிழா அன்று பறக்கவிட 50 அடி புகைக்குண்டு செய்யப்போவதாக நிரஞ்சன் சொன்னான். அதற்காக பத்து நாட்களுக்கு முன்னதாகவே வேலை தொடங்கியது. "நீ வந்தா நல்லா பொழுதுபோகும்டா. அடிக்கடி கோவில் மடத்துப்பக்கம் வந்திட்டு போ. வந்து நாலு துண்டு பேப்பரை ஒட்டினாலே போதும். நீ நாலு கதை பேசினா பொடியள் சந்தோஷப்படுவாங்க" என்று வேண்டுகோள் விடுத்தான். எனது திறமையில் அப்படி ஒரு நம்பிக்கை பயலுக்கு. முதல் நாளே இரவு ஏழு மணிபோல வேலை தொடங்கியது. நட்டூதான் முன்னுக்கு நின்று ஆள் ஆளுக்கு உத்தரவு பிறப்பித்தான். அம்பது அடி என்பதால் கடதாசி தாள்களின் தடிப்பு சற்றே அதிகம். மொத்தமான தாள்களை அளவு பார்த்து வெட்டினோம். கொஞ்சம் பிழைத்தாலும் நட்டூ ரிஜெக்ட் செய்தான். புதுசா வந்த சின்னப்பொடியங்களை தட்டிகொடுத்து ஊக்குவித்தான். இம்மாதிரியான திருவிழா ஏற்பாட்டு வேலைக்கு போனால் திருவிழாவுக்கு போவதை பற்றி நினைத்து பார்க்க முடியாது. ஆனால் நட்டூ தினமும் திருவிழாவுக்கு சாமி வெளிவீதி சுற்றும் நேரத்தில் தவறாமல் திருநீற்று பூச்சுடன் போய் விடுவான். ஆனால் அவன் கோயிலுக்கு போவதை மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டான். அந்த ஒரு மணி நேரம் தவிர மிச்ச நேரமெல்லாம் மடத்தடியில் புகைக்குண்டு ஒட்டினான். எனக்கு திருவிழா போவதைவிட புகைக்குண்டு ஒட்டுவதை பார்ப்பதிலும் அங்கு நடக்கும் சம்பாஷணைகளை கவனிப்பதில் அதிக ஆர்வமிருப்பதால் நெடியகாட்டு பிள்ளையார் கோவில் மடத்தடியிலே அதிக நேரத்தை செலவழித்தேன். "கொழும்பிலேருந்து திருவிழா பார்க்க வந்திட்டு மடத்தடியிலே நித்தமும் கிடக்கிறியேடா.. வந்து சாமியை நல்லா கும்பிட்டத்தானே கம்பெனிக்காரன் சம்பளத்தை கூட்டுவான்.. இன்னிக்காவது வந்து தொலைடா" என்றாள் அம்மா. சரியென்று நானும் வேட்டியை கஷ்டப்பட்டு கட்டிக்கொண்டு கோயிலுக்கு கிளம்பினேன்.<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5n92rONg4kLRKY1qAYTreJuSwC_JTjQXugJN7Xz16LDm8RpOug5nKgSJcBdS2J3BONgLRn8WDeO1hOKO6tFNJ9Ohf2IZjKZYagJULDPtCbffQohASHikeAnOFU_UeonrCQ2HwAE4RwhqY/s1600/2.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="181" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5n92rONg4kLRKY1qAYTreJuSwC_JTjQXugJN7Xz16LDm8RpOug5nKgSJcBdS2J3BONgLRn8WDeO1hOKO6tFNJ9Ohf2IZjKZYagJULDPtCbffQohASHikeAnOFU_UeonrCQ2HwAE4RwhqY/s320/2.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">சூடான காற்று நிரப்பபடுகிறது</td></tr>
</tbody></table>
அம்மன் கோயில் திருவிழாவில் உற்சவ அம்மன் நகைகள் அலங்கார விளக்குகள் சகிதம் அலங்கரிப்பட்டிருப்பாள். சுற்றி முழங்கும் மேள நாதஸ்வர ஓசை காதை பிளக்கும். மேள சத்தத்தில் இதயமே அதிரும். சில பெண்களுக்கு உரு வந்து ஆடுவார்கள். அங்கு சென்றால் பக்தி இல்லாதோருக்கும் பக்தி வந்து விடும். அப்படி ஒரு உன்னதமான சூழல். எல்லோரும் அம்மனை பார்த்து சேவிப்பார்கள். திருவிழா காலங்களில் உற்சவ அம்மன் கோவில் ஒவ்வொரு நாளும் உள்வீதி மற்றும் வெளிவீதியை சுற்றும். ஒவ்வொரு திருவிழாவும் இரண்டு மூன்று மணித்தியாலம் எடுக்கும். ஆண்கள் மேற்சட்டையின்றி வேட்டி அணியவேண்டும். இரண்டு வயது பாலகர்கள்கூட பட்டுக்கரை வேட்டியுடன் தமது அப்பாமாரின் கழுத்தில் தொங்கிகொண்டிருப்பார்கள். பிள்ளையார் கோவில் மடத்துக்கு போகாத மிச்ச ஆண்களை அம்மன் கோவில் வீதியில் காணலாம். நான் கோவிலுக்கு போகும்போது அம்மன் உள்வீதி சுற்றிக்கொண்டிருந்தது. சாமி வெளிவீதி சுற்றும்போதுதான் நட்டூ வந்தான். என்னை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்தாலும் மறைக்க முயன்றான். செயற்கையாக புன்னகைத்தான். "என்னடா இஞ்சால பக்கம்" என்று இழுத்தான். "இன்னிக்காவது சாமி கும்பிடலாம் என்று வந்தேன். நீ என்னடா சாமி வெளிவீதி சுற்றும்போது மட்டும் தவறாமல் கோவில் பக்கம் வர்ற. ஏதாவது நல்ல சேதியா" என்றேன். இப்போது அவனுக்கு முகத்தில் கவலை படர்ந்தது. "உன்கிட்ட மறைக்க என்னடா இருக்குது.. மாலாவை பார்க்க இஞ்சதானே வாய்ப்பு கிடைக்குது. அவள் அப்பர் இல்லாத ஒரே இடம் இதுதானே" என்றான். "டேய் திருமால்கிட்ட இதை சொல்லாதே.. அவள் அப்பர்கிட்ட இந்த விஷயம் போனா அவளை கோவிலுக்கும் அனுப்ப மாட்டாரு" என்றான் கெஞ்சலாக.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWFQfcRAkC71fG1Gn4XWhAeaWW4QSI15vVIcPm34Fbvk9cDZofK5XK2c6GJo4Ch2vGUU2GsqH8_B8VCbVgYnzCke1fBpzzZYwWO4e9dQECiwkyftM4oPPhrxcvP322KYU-axPyGIGVQwDf/s1600/amman+(196).jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWFQfcRAkC71fG1Gn4XWhAeaWW4QSI15vVIcPm34Fbvk9cDZofK5XK2c6GJo4Ch2vGUU2GsqH8_B8VCbVgYnzCke1fBpzzZYwWO4e9dQECiwkyftM4oPPhrxcvP322KYU-axPyGIGVQwDf/s320/amman+(196).jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">வடக்கு வீதி</td></tr>
</tbody></table>
<br />
என்னதான் நட்டூ கோவிலுக்கு வந்தாலும் மாலாவை பார்த்து கதைக்க முடியாது. ஆண்கள் ஒருபக்கமாகவும் பெண்கள் மறுபக்கமாகவும் இருப்பார்கள். கிட்ட நெருங்கவே முடியாது. ஆனாலும் சாமி வெளிவீதி சுற்றும்போது இரவு திருவிழாக்களின்போது வடக்கு வீதியின் ஒரு மணித்தியாலம் நிற்கும். இந்த ஒரு இடத்தில்தான் மேள + நாதஸ்வர வித்துவான்கள் சளைக்காமல் தமது திறமையை நிரூபிப்பார்கள். ஆளுக்கு ஒரு நாளைக்கு முப்பதாயிரம் கொடுப்பார்கள் கொடுத்த காசுக்கு வஞ்சகம் செய்யாமல் இஷ்டத்துக்கு வாசித்து தள்ளுவார்கள். அந்த ஒரு மணித்தியாலத்தின் எல்லோரும் வடக்கு வீதியில் அமர்ந்து விடுவார்கள். வீதியின் ஒரு கரையில் ஆண்கள் மற்ற கரையில் பெண்கள். நடுவில் சாமி நிற்கும். சாமிக்கு முன்னால் மேளங்கள் நாதஸ்வரங்கள். எல்லா பயலுகளும் தங்களுக்கு பிடித்த பெண்ணுக்கு நேராக இடம் பிடிப்பார்கள். பேசிக்கொள்வது கண்களால் மட்டுமே. "அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்" ரக காதல்கள்தான். திருமால் இதை "வடக்கு வீதி ஒபரேஷன்" என்பான். 90களில் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட எங்கள் ஊரில் ஒபரேசன் என்ற வார்த்தை பயன்பாட்டுக்கு தாக்குதல் என்று அர்த்தம் என்று சின்ன குழந்தைக்கு கூட தெரிந்திருந்தது. நட்டூவுக்கு வடக்கு வீதி ஒபரேசன்தான் இருக்கிற ஒரே வாய்ப்பு.. நட்டூ மாலா இருந்த இடத்துக்கு நேராக இருந்தான். "அவ ஹாப் சாரியில தேவதை மாதிரி இருக்கா.. இல்லையாடா" என்றான் நட்டூ. நான் இதுவரை தேவதையை நேரில் பார்க்காததால் மறுத்துபேசவில்லை. "அவளை சட்டையில எத்தனையோ தடவை பார்த்திருக்கேன்.. அப்ப வராத காதல் ஹாப் சாரியில பார்க்கும்போது வருதுடா" என்று புலம்ப ஆரம்பித்தான். அவனும் அவளும் சின்ன சின்ன சைகைகள் மூலம் ஏதோ பேச்சு வார்த்தை நடத்தினார்கள். நானும் ஏதாவது ஒரு பெண்ணை பார்க்கலாம் என்று கொஞ்சம் கொஞ்சமாக பார்வையை திருப்பினேன். என்னோட கஸின் தங்கச்சி நிலா என்னை கவனமாக பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் ஒரு லேடி ஜேம்ஸ் பொன்ட். வடக்கு வீதியில் நான் யாரை சைட் அடிக்கிறேன் என்று உளவு பார்க்க அம்மாவால் பணிக்கப்பட்ட பெண் உளவாளி. அவளை மீறி சைட் அடிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஓரிரண்டு பெண்களை ஓரக்கண்ணால் பார்த்தேன். முறைத்தார்கள். கண்வலி வந்ததுதான் மிச்சம். சைட் அடிக்கிறது கஷ்டம் என்று அன்றுதான் உறைத்தது.<br />
<br />
வடக்கு வீதி ஒபரேசன் ஒருவாறாக முடிந்தது. நட்டூ பரவச நிலையில் மிதப்பது போல நடந்து வந்தான். சால்வை அவிழ்ந்துகூட தெரியாமல் ஏதோ கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருந்தான். "டேய் நீ ஏதாவது பெண்ணை பார்த்தியா.. பிடிச்சிருக்கா" என்றான். "அப்படி எதுவும் இல்லடா நான் சாமி கும்பிடத்தான் வந்தேன்.. உன்னை மாதிரி இல்ல" என்றேன். முறைத்தான். "வந்த வேலை முடிஞ்சுது வா புகைக்குண்டு ஒட்ட போவம்" என்றான் உற்சாகமா. "இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே பார்த்திட்டிக்கபோறே.. உன்ட அப்பா அம்மாட்ட சொல்லி பொண்ணு கேட்க வேண்டியதுதானே" என்றேன். "நீ சொல்லிட்டு கொழும்புக்கு போயிடுவே.. ஏதாவது பிரச்சனை வந்தா அவளை பார்க்கவே முடியாம போயிடும்னு பயமா இருக்கு.. இப்படி ஒவ்வொரு திருவிழாவிலும் அவள் முகத்தை பார்த்தாலே போதும்டா.. காலம் வந்தா எல்லாம் நல்லா நடக்கும்" என்றான். அவன் முகத்தை பார்த்தேன். அவனது முகத்தில் பரவசம் இன்னும் குறையவில்லை. அவன் அடுத்த திருவிழாவுக்காக காத்திருக்கிறான்.<br />
<br />
<br />
நிறைய உண்மை.. கொஞ்சம் பொய்..</div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-79615176225310027732012-12-23T05:15:00.001-08:002013-01-16T02:52:27.644-08:00தீட்டப்பட்ட புன்னகைக்கு பின்னால்... V for Vendetta<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAHKtk7rvu2le83AhREIecVjSato7XebolQ6WRw3mES6FDzqgWpnY_XKc_zGptmaycSZajGlvMMB6UL5KqGBu0jgNt-HaPACj2ryOap52aWgNQJH8Bm5wxlqAHcAjH5eKZmchwCw66SH4q/s1600/1027564-v_large.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAHKtk7rvu2le83AhREIecVjSato7XebolQ6WRw3mES6FDzqgWpnY_XKc_zGptmaycSZajGlvMMB6UL5KqGBu0jgNt-HaPACj2ryOap52aWgNQJH8Bm5wxlqAHcAjH5eKZmchwCw66SH4q/s400/1027564-v_large.jpg" width="261" /></a></div>
V for Vendetta படத்தை நண்பர் ஒருவரின் கடுமையான சிபாரிசு காரணமாக பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். இரும்புக்கரம் கொண்டு மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயலும் அரசாங்கத்துக்கு எதிராக முகமூடி அணிந்த ஒருவன் புரட்சி செய்கிறான் என்பதை காட்டியிருப்பார்கள். என்னதான் வழமையான உப்புமா கதை மாதிரியாக இருந்தாலும் வழமையாக பயணிக்கும் பாதைகளில் அல்லாமல் வெவ்வேறான பாதைகளில் கதை பயணிக்கும். குறிப்பாக படத்தின் கதாநாயகன் V, அதில் வரும் பெண்ணை ஒரு முழுமையான போராளியாக மாற்ற எடுக்கும் நடவடிக்கைகள்தான் படத்தின் உயிர்நாடி. படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் மூலமாக எதிர்கால இங்கிலாந்து இப்படித்தான் இருக்கப்போகிறது என்று காட்டுகிறார்கள்.<br />
<br />
படத்தில் வரும் <a href="http://en.wikipedia.org/wiki/V_(comics)">கதாநாயகன் V</a> ஒருமுறையும்தானும் படத்தில் தனது முகமூடியை விலக்கவில்லை. V என்கிற ஒற்றை எழுத்துத்தான் அவனுடைய பெயர். அரசாங்க சித்ரவதை முகாமில் இவன் தங்கியிருந்த அறையின் ரோமன் இலக்கம் ஐந்து (V). சித்ரவதைகூடம் தீக்கு இரையாகும்போது அங்கிருந்து தப்பிய ஒரே கைதி V மட்டும்தான். அப்போதுதான் தான் மீண்டும் ஒருமுறை பிறந்து விட்டதாக எண்ணி பழைய பெயரை விடுத்து புதுபெயரான V என்ற பெயரை சூடி கொள்கிறான். 17 ஆம் நூற்றாண்டு காலப்பகுதிகளில் <a href="http://en.wikipedia.org/wiki/Guy_Fawkes">இங்கிலாந்து அரசனுக்கு எதிராக போராடி மறைந்த போராளியை</a> போன்றதொரு முகமூடியை அணிந்து கொள்வதன்மூலமாக தனது நிலைப்பாட்டை இங்கிலாந்து அரசாங்கத்துக்கு வெளிப்படுத்துகிறான். அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை கொல்வதன்மூலம் அவர்களுக்கு பெரிய தாக்கத்தினை உண்டு பண்ணி மக்களின் கண்களை திறக்கிறான். இதில் ஈவி என்றதொரு கதியற்ற பெண்ணை காப்பாற்றுகிறான் V. அவளையும் ஒரு போராளியாக மாற்றுகிறான். இப்படி போகும் கதையில் சின்ன சின்ன சுவாரசியமான சம்பவங்களை கோர்த்து படமாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக ஈவிக்கு "Egg in the Basket"ஐ சிரத்தையுடன் தயாரிக்கும் காட்சி அற்புதம். என்னைவிட அண்ணாவுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. அதில் காட்டுவதுபோல அவனும் செய்து சாப்பிடுடா என்று<br />
வற்புறுத்தியது வேறுகதை.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgToH9wWuyGMVvxkO2Yf3EPsr0zcdE5yAP2bKuI7mjSWHqB7xEv9Ci8zTPjqz32RNbSNGfxJbhBbANBgn1XrQ-3Sf-z1YnJkWOdjf4xG-5ixRdC7mWsi0TdxQUOUGF3hwMFd0maRlGpHEmN/s1600/vendetta1.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="133" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgToH9wWuyGMVvxkO2Yf3EPsr0zcdE5yAP2bKuI7mjSWHqB7xEv9Ci8zTPjqz32RNbSNGfxJbhBbANBgn1XrQ-3Sf-z1YnJkWOdjf4xG-5ixRdC7mWsi0TdxQUOUGF3hwMFd0maRlGpHEmN/s320/vendetta1.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">V Egg in the Basket தயாரிக்கிறான்</td></tr>
</tbody></table>
<br />
இந்த படத்தின் மேலதிக விவரங்களை <a href="http://en.wikipedia.org/wiki/V_for_Vendetta_(film)">Wikipediaஇல்</a> தட்டிப்பார்க்கும்போது இதன் மூலம் ஒரு காமிக்ஸ் என்பது தெரியவந்தது. Alan Moore என்பவரின் கதைக்கு David Lloyd என்பவர் தனது சித்திரம்மூலமாக கொடுத்த உயிர்தான் இந்த V for Vendetta காமிக்ஸ். Alan Mooreஇன் masterpiece. ஒரு தலை சிறந்த காமிக்ஸ் காவியம் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார்கள். என்னதான் இது ஒரு ஐரோப்பிய காமிக்சாக அடையாளம் காணப்பட்டாலும் இதனை வாசிக்கவேண்டும் என்று தோன்றவில்லை. போதாக்குறைக்கு அமெரிக்கர்களும் இதனை புகழ்ந்தது ஒருவித கிலியை ஏற்படுத்தியது.<br />
<br />
இது நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடிவிட்டது. ஏதாவது ஐரோப்பிய காமிக்ஸ்கள் கிடைக்குமா என்று ஒரு ஆங்கில புத்தகங்கள் விற்கும் கடைக்கு சென்று நோட்டமிட்டேன். எப்போதாவது உருப்படியான Lucky Luke புத்தங்கள் கிடைக்கும். ஆனால் Goscinny கதை எழுதிய அநேக புத்தகங்கள் வாங்கி முடித்தாகி விட்டது. ஆனாலும் Lucky Luke வாங்கவேண்டும் என்றே போதை உணர்வுடன் கடைக்கு சென்றிருந்தேன். ஐரோப்பிய காமிக்ஸ்கள் ஒன்று கூட இல்லை. ஆனாலும் அமெரிக்க காமிக்ஸ்கள் நிறைய அடுக்கப்பட்டிருந்தன. அந்த காமிக்ஸ்கள் 2000, 3000, 4000 ரூபா என்று போடப்பட்டிருந்தன. அதில் எல்லாமே Super Hero கதைகள். அதில் இருக்கக்கூடிய கதைகளை பற்றி கேட்கவே வேணாம். ஒரு வரி கதைக்கு பெரிது பெரிதாக படங்கள் வரைந்து நூறு பக்கங்களை தேற்றி விடுவார்கள். Batman கதைகளை தேடிப்பார்த்து சலித்தேன். அப்போதுதான் V for Vendetta காமிக்சை பார்த்தேன். விலை 2300ரூபா என்று போட்டிருந்தது. பொலித்தீன் உரையிடப்பட்டிருந்ததால், உள்ளே திறந்து பார்க்கமுடியவில்லை. வழமை போல ஒரேயொரு பிரதி மட்டுமே இருந்தது. வாங்குவோமா இல்லையா என்று கடுமையாக யோசித்துவிட்டு பொருளாதார நிலைகளை மனக்கண்ணில் வந்து போக வாங்காமலே வீட்டை நோக்கி நடந்தேன். நீயெல்லாம் ஒரு காமிக்ஸ் ரசிகனா என்று ஒருபக்க மனசாட்சி காறி துப்பியது. ஆனால் மற்ற மனசாட்சி "குடும்பக்கஷ்டம் தெரிஞ்ச நல்ல பிள்ளை" என்று அம்மா சொல்வதைப்போலவே சொல்லி பாராட்டியது<br />
<br />
இது நடந்து இரு வாரமாக Internetஇல் நான் google செய்த வார்த்தைகளில் "V for Vendetta" முன்னிடம் வகித்தது. கொடுக்கப்பட்ட sample படங்கள் போதுமான நம்பிக்கையை ஏற்படுத்தியது. சரி ஒருமுறை வாங்கி பார்த்து விடுவோமே! என்று தீர்மானத்துடன் ஒரு நல்ல நாளில் அலுவலக வேலையை முடித்துக்கொண்டு கடையை நோக்கி நடந்தேன். நல்லவேளையாக இருந்த ஒரு புத்தகத்தையும் ஒருவரும் வாங்கவில்லை. அதனை வாங்கிக்கொண்டு ஒருவித மனநிம்மதியுடன் Busஇல் பின்சீட்டில் ஏறி ஒரு ஆர்வத்தில் பொலீத்தீன் உறையை விலக்கி படங்களை பார்த்தேன். கொஞ்சம் மொத்தமான Newspaper தாள் போன்றொதொரு தாளில் அச்சிட்டிருந்தார்கள். பல வண்ணங்களில் படங்கள் இருந்தாலும் ஒருவித dullஆன வர்ணங்களை பயன்படுத்தியிருந்தார்கள். நமது தமிழ் காமிக்ஸ்களே தரமான தாளில் கண்ணை பறிக்கும் வர்ணத்தில் வரத்தொடங்கியிருக்கும்போது இப்படி ஒரு காமிக்ஸை 2300ரூபா கொடுத்து வாங்கினேனே என்று மனம் வருந்தினேன். ஆனால் இந்த ஏமாற்றம் தொடர்ந்ததா?<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-qEYidXN9lSRiDpved-B8JCIkr094d3w3WGtUjzKhn2D9zmxNT4ol3gpxnNBzKiKQKDBM3GIJXeJ2A3uRPVlMLFdsRpKYlmojJ59TzEdyy1Iq_GK4adAIVAfQ0CGFSOS7CYImeKgOXiiu/s1600/312551-90237-v_super.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="312" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-qEYidXN9lSRiDpved-B8JCIkr094d3w3WGtUjzKhn2D9zmxNT4ol3gpxnNBzKiKQKDBM3GIJXeJ2A3uRPVlMLFdsRpKYlmojJ59TzEdyy1Iq_GK4adAIVAfQ0CGFSOS7CYImeKgOXiiu/s400/312551-90237-v_super.jpg" width="400" /></a></div>
<br />
2300ரூபா கொடுத்துவிட்டோமே என்பதற்காகவே புத்தகத்தை வாசிக்கத்தொடங்கினேன். படத்தில் வந்த அதே கதைதான் ஆனால் வாசிக்க வாசிக்க காமிக்சிலிருந்து என்ன என்ன விசயங்களை அவர்களால் படங்களுக்கு எடுத்துச்செல்ல முடியாமல் போனது என்பதை உணரக்கூடியதாக இருந்தது. இக்கதைகள் தொடக்ககாலங்களில் கருப்பு வெள்ளையில் மட்டுமே வெளிவந்ததால் புதிதாக வர்ணங்களை தீட்டி மறுபதிப்பித்திருக்கிறார்கள். முதலில் பார்க்க ஒரு dullஆக இருந்தாலும் Originalஆக வந்த கறுப்பு வெள்ளை சித்திரங்களை கொஞ்சமேனும் கெடுக்காதவாறு அருமையாக வர்ணப்படுத்தியிருந்தது தெரிந்தது. V எப்போதுமே அணிந்திருக்கும் முகமூடி, ஒரு புன்னகைக்கும் போர்வீரனுடையது. இதனால் கோபமானாலும் V புன்னகைப்பான். துப்பாக்கியால் சுடப்பட்டு இரத்தம் வழியும் நேரத்திலும் அந்த புன்னகை மாறப்போவதில்லை. இது வாசிப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. கதையில் வரும் நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு முகமூடியில் இருக்கும் புன்னகையை ஓவியர் சரிவரப்பயன்படுத்தியிருப்பார். David Lloydஇன்<br />
ஓவியங்கள் இங்கிலாந்தின் இருள் நிறைந்த தெருக்களை கண்முன்னே கொண்டுவருகிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY1SlbwxqU4m7gSKmwAvhVfLNZAQR8v2DgYbozCkAw_AQ_0Ece-WqtSJFGsrXj1TgdSfFUri7u4aQyBcPBgCdyGFMnO3GUP-t55utTMLWOKJU6T-wN_Cg-Sm9yu-DM7Z-CnDzSFK9R9dSQ/s1600/v-anarchy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="321" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY1SlbwxqU4m7gSKmwAvhVfLNZAQR8v2DgYbozCkAw_AQ_0Ece-WqtSJFGsrXj1TgdSfFUri7u4aQyBcPBgCdyGFMnO3GUP-t55utTMLWOKJU6T-wN_Cg-Sm9yu-DM7Z-CnDzSFK9R9dSQ/s640/v-anarchy.jpg" width="640" /></a></div>
<br />
ஓவியங்கள் ஒருபுறமிருக்க Alan Mooreஇன் வசனங்கள் Britishதனமான ஆங்கிலத்தில் காட்சிகளுக்கு பொருந்துகின்றன. V ஒருவிதமான நாடக பாணியிலான வசனத்தில் பேசுவது சுவாரசியம். குறிப்பாக அவன் நீதிதேவதை சிலை முன்னர் பேசும் காட்சிகள் அருமை. நீதிதேவதைக்கும் சேர்த்து தானே பேசி அவளுடன் உரையாடுவது போன்ற அவன் பேசும் வசனங்கள் அருமை. வசனங்களுக்காகவே இன்னொருமுறை வாசிக்கலாம். ஆனாலும் பின்னணி இசையில் இளையராஜா, காட்சிகளின் தேவைக்கேற்றவாறு மௌனிப்பது<br />
போல, பொருத்தமான இடங்களில் வசனங்களற்ற படங்களே கதையை கொண்டு செல்கின்றன. ஈவியை இன்னொரு போராளியாக உருவாகும் காட்சிகள் அருமை. காமிக்ஸ்இல் இந்த காட்சியில் இருக்கும் அழுத்தம் படத்தில் இல்லை என்றே எனக்குப்பட்டது.<br />
<br />
<br />
இதனை லயன்-முத்துவில் வெளியிட்டால் அருமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழில் இவற்றுக்கான வசனங்கள் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படித்தான் சமீபத்தில் Frank Millerஇன் Dark Knight returns புத்தகத்தை வாங்கியிருக்கிறேன். ஓவியங்கள் கொஞ்சம் கிலியை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் நல்ல review கொடுத்திருக்கிறார்கள். இனித்தான் வாசிக்க வேண்டும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1zVjOizf-RqQLAbJojlLDnpCaKu9BSFTeDQfISR1TXi6KTBweiT_w5CPMByLxzBeenT09rrovr8YF91fi7TC8Bmasj4COF1qUXGya6uIm2XcL9JJ0NwIE0xlfJhnjy6mc3ENd258em4c2/s1600/210px-V_taking_a_bow.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1zVjOizf-RqQLAbJojlLDnpCaKu9BSFTeDQfISR1TXi6KTBweiT_w5CPMByLxzBeenT09rrovr8YF91fi7TC8Bmasj4COF1qUXGya6uIm2XcL9JJ0NwIE0xlfJhnjy6mc3ENd258em4c2/s1600/210px-V_taking_a_bow.jpg" /></a></div>
<br /></div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-8154562936241122542012-11-15T07:58:00.000-08:002012-11-15T08:03:43.547-08:00Yarl Geek Challenge: Final போட்டிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
இப்போட்டிகள் சம்பந்தமான முந்தைய இடுகைகள்<br />
<br />
<a href="http://vimalaharan.blogspot.com/2012/11/yarl-geek-challenge.html">Yarl Geek Challenge: 1ம் நாள் போட்டிகள்</a><br />
<br />
<a href="http://vimalaharan.blogspot.com/2012/11/yarl-geek-challenge-2.html">Yarl Geek Challenge: 2ம் நாள் போட்டிகள்</a><br />
<br />
<a href="http://vimalaharan.blogspot.com/2012/11/yarl-geek-challenge-3.html">Yarl Geek Challenge: 3ம் நாள் போட்டிகள்</a><br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlqE0lyX8ZV2kRK2SMYt_gGMU2-7zu4rl9BTWh4Q-dKTZLcO3jX4IQOt2q8KJmVazebxwMqPfs3zMUkUkAy3AtsmhxUKQwmdJ4QdGUJ04WwovQ5YtSGHKkqtMmo-W3Waoq__m3BV0RMRRZ/s1600/384793_404093002992562_1175990187_n.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlqE0lyX8ZV2kRK2SMYt_gGMU2-7zu4rl9BTWh4Q-dKTZLcO3jX4IQOt2q8KJmVazebxwMqPfs3zMUkUkAy3AtsmhxUKQwmdJ4QdGUJ04WwovQ5YtSGHKkqtMmo-W3Waoq__m3BV0RMRRZ/s1600/384793_404093002992562_1175990187_n.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">போட்டியாளர்கள், நடுவர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள்</td></tr>
</tbody></table>
கருமையான மேகங்கள் சூழ்ந்திருந்ததால் ஐந்தரை மணிக்கே நன்றாக இருட்டி விட்டிருந்தது. சுவாரசியமான மூன்றாம் நாள் ஒருவாறாக முடிவுக்கு வந்திருந்தது. எனினும் மூன்றாம் நாள் முடிவுகள் கொஞ்சம் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. இரண்டு அணிகள் மட்டுமே வெளியேற்றப்படும் என்று எதிர்பார்த்திருந்த பார்வையாளர்களுக்கு மூன்று அணிகள் வெளியேற்றப்பட்டமை கொஞ்சம் எதிர்பாராத முடிவாக இருந்தது. ஆனாலும் மறுநாள் finalஉடன் oppourtunity round நடைபெற இருப்பதால் அதற்கான ஆயத்தங்களை செய்ய வேண்டியிருந்ததால் அன்றைய முடிவுகளை பற்றி வெளியேறிய அணிகள் நிதானமாக யோசித்து கவலைப்பட சந்தர்ப்பம் கிடைக்காமல் போனது நன்மைக்கே. Algorithm round மற்றைய Roundகளில் இருந்தும் பெரிதும் மாறுப்பட்டிருந்தது. போட்டிகளிலே ஒரு புதுவித வேகம் இருந்தது.. போட்டியாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் காரம் அதிகமாகவே இருந்தது.. போட்டியாளர்களும் சளைக்காமல் பதிலளித்தனர்.. எப்போதுமே ஒருவித பதற்றம் போட்டி இடம்பெற்ற மேடையிலிருந்தது. நாங்களும் அன்றைய நாள் ஒருவித நிம்மதியுடன் வீடுகளுக்கு போனோம். அன்று காலைதான் Yarl Geek Challenge t-shirtகள் தனுஷனின் முயற்சிகளுக்கு பின்னர் கிடைத்திருந்தன. ஆகவே சந்தோசமாக நாளை புது t-shirtஉடன் போகலாம் என்ற சந்தோசம் எல்லாருடைய முகத்திலும் இருந்தது. நல்லவேளையாக புது t-shirt கிடைத்திருந்தது. ஏனென்றால் யாழ்பாணத்தில் அந்நேரத்தில் பெய்த தொடர்மழையால் நாங்கள் தோய்த்த உடுப்புகள் வெயிலில் காய்வதும், மறுபடி நனைவதுமாக இருந்தன. ஆகவே அடுத்த நாளைக்கு போட தோய்த்த உடுப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்ட எங்களுக்கு நிவாரணமாக t-shirt வந்து சேர்ந்தது.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDt5diB76UbhSzJaO55jD4x0oMtwoLm7_BUQJLGcYkYy6MGT6TlyB0qbiaLLjXegYjw3iCpd1FidQvqaky7u0GBovVqT-kT7f_V-nGRr-NGp8Yqts6JTgOE7grZLphuhq88nLP8XRxPzNv/s1600/292843_10151085104956415_566636535_n.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDt5diB76UbhSzJaO55jD4x0oMtwoLm7_BUQJLGcYkYy6MGT6TlyB0qbiaLLjXegYjw3iCpd1FidQvqaky7u0GBovVqT-kT7f_V-nGRr-NGp8Yqts6JTgOE7grZLphuhq88nLP8XRxPzNv/s1600/292843_10151085104956415_566636535_n.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Yarl Geek challenge T-Shirt அணிந்திருக்கும் model ஒருவர் :)</td></tr>
</tbody></table>
<br />
கடைசி நாளன்று பதினோரு மணிக்கு Oppourtunity round தொடங்குவதாக இருந்தது. ஒன்றரை மணிக்கு Product Strategy round. இந்த roundகளில் எல்லா அணியினரும் தங்களது projectஇன் எதிர்காலத்திட்டம் பற்றியும் அதற்காக ஏற்படும் செலவுகளை சமாளித்து அடுத்த கட்டத்துக்கு எவ்வாறு கொண்டுசெல்லவிருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். சுருக்கமாக சொன்னால் செய்த productஐ எப்படி கூவி கூவி விற்கப்போகிறார்கள் என்பதை எல்லோரும் நம்பும்விதமாக சொல்லவேண்டும். போட்டியாளர்கள் எவ்வாறு விளம்பரங்களை நுழைப்பதன்மூலம் பணத்தினை பெற்றுக்கொள்ளலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தார்கள். Projectஇன் தொடக்கத்தில் முதலாவது clientஐ பிடிப்பதற்கு முன்னதான காலங்களில் எவ்வாறு செலவுகளை சமாளிக்கபோகிறார்கள் என்ற கேள்விதான் மில்லியன் டொலர் கேள்வியாக இருந்தது. முழுக்க முழுக்க technical விசயங்களை மட்டுமே யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டிருந்த மாணவர்கள் business side பற்றி முதன்முறையாக கவலைப்படத்தொடங்கினார்கள். எல்லோரும் பெரியளவில் tension இல்லாமல் இருக்கிற business ideaக்களையும் presentationக்குள் பொறுத்த முயற்சித்தார்கள்.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhotKQKVy6c2n-p1jCVKQImEye6cwQARr2QUoo73pKEQzKhDaGQTj_XDELFLivgPWCCBkpSMKEO8s7GBV9B4T_BZM34sfEEBw4wLvCXyULL0yqn8fdmtgrg-rOrRMMZ8meAm3ATuBrvY59C/s1600/76210_402403323161530_1524268777_n.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="239" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhotKQKVy6c2n-p1jCVKQImEye6cwQARr2QUoo73pKEQzKhDaGQTj_XDELFLivgPWCCBkpSMKEO8s7GBV9B4T_BZM34sfEEBw4wLvCXyULL0yqn8fdmtgrg-rOrRMMZ8meAm3ATuBrvY59C/s1600/76210_402403323161530_1524268777_n.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">நடுவர்கள் குழாம்</td></tr>
</tbody></table>
<br />
ரமேஸ் அண்ணா நடுவர்களுக்கு இந்த roundகளில் போட்டியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் விசயங்களை பற்றி விளக்கினார். பதினோரு மணிக்கு opportunity round ஆரம்பமானது. இதில் முன்னைய நாட்களில் போட்டிகளிருந்து வெளியேறிய ஐந்து அணிகள் கலந்து கொண்டன. IFish அணியினர் மீன்பிடி சாமாசத்துடன் இணைந்து இதனை develop செய்யவிருப்பதாக கூறினார்கள். productஇன் business modelஐ <a href="http://en.wikipedia.org/wiki/Business_Model_Canvas">canvas model</a>இல் போட்டுக்காட்டி அசத்தினார்கள். ஆனாலும் இந்த projectஇன் அடுத்த கட்டம் என்ன என்பதை சரியாக விளக்கவில்லை. Smart Friends அணியினர் Ceylon Electricity boardஇற்கு prototype ஒன்றை develop பண்ணிக்காட்டி funding எடுக்கப்போகிறோம் என்றார்கள். ஆனாலும் இவர்களின் திட்டங்களில் உள்ள சாத்தியத்தன்மை பற்றி judgesஇற்கு இருந்த சந்தேகங்களை களைய தவறினர். Crazy Coders அணியினர் தங்களது projectஐ தொடங்குவதற்காக ஏற்படும் செலவுகளை பட்டியலிட்டு அதன் சாத்தியத்தினை தெளிவுபடுத்தினர். இவர்களது patient management systemஇனை தொடக்கத்தில் ஒரு வைத்தியசாலையுடன் இணைப்பதாகவும் பின்னர் ஒவ்வொரு வைத்தியசாலையாக இத்திட்டத்தில் இணைக்கவிருப்பதாக கூறினார்கள். Yarl Eagles அணியினர் Tourist Guide applicationஇல் ஹோட்டல், resthouse போன்றவற்றின் விளம்பரங்களை இணைக்கமுடியும் என்றார்கள். அதிகம் பணம் தரும் companyகளின் பெயர்கள் பாவனையாளர்களுக்கு காட்டப்படும் search resultsஇல் முன்னணி வகிக்கும் என்றார்கள். ஆனாலும், பணத்தை வாங்கிக்கொண்டு பாவனையாளர்களுக்கு தவறான தகவல்கள் போகலாம் என்ற கேள்விகளை judges கேட்டு மடக்கினர். Phoenix அணியினர் ஒரு research projectஐ ஒரு commercial product ஆக எவ்வாறு மாற்றலாம் என்று தெளிவுபடுத்தினர்.<br />
<br />
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு Final roundஆன Product strategy round தொடங்குவதாக இருந்தது. இதில் Zeros, Arimaa, Cybers போன்ற அணிகள் போட்டிக்கான கடைசி நேர ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தன. Oppourtunity roundஇல் மற்ற அணிகளுக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஏற்றவாறு தங்களது presentationகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எல்லோருக்கும் இந்த கடைசி முயற்சியில் எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்ற எண்ணம் கண்களில் தெரிந்தது. Cybers அணியினர் அவர்களது system மூலமாக response ஆக அனுப்பப்படும் SMSஇல் விளம்பரங்களை இணைப்பதன்மூலம் காசு பார்க்கலாம் என்றார்கள். அரசாங்க அதிகாரிகளுக்கு இவர்களுடைய system தொடர்பான presentationஐ செய்து அவர்களை இந்த projectக்கு தேவையான நிதியை தயார் செய்யவிருப்பதாக கூறினார்கள். Arimaa அணியினர் தங்களது project சமூக நலனுக்காக செய்யப்பட்டாலும் project sustainabilityக்காக beneficiariesகளிடமிருந்து ஒரு சிறுதொகையை அறவிடலாம் என்றார்கள். எதிர்காலத்தில் அவர்களது systemஇனை சமூக நிறுவனங்களுக்கு ஏற்றவாறு customize செய்து விற்கலாம் என்றார்கள். கேள்வி-பதில் நேரம் வழமைபோலவே அணல் பறந்தது. அவர்களது பதில்கள் தெளிவாகவும் judges எதிர்பார்த்ததை போலவே இருந்ததாகவும் பட்டது. Zeros அணியினர் ஆடுபுலி ஆட்டத்தினை download செய்வதற்காக ஒரு சிறிய தொகையை பாவனையாளர்களிடம் அறவிடலாம் என்றார்கள். அதுமட்டுமல்லாது விளம்பரங்களை காட்டுவதன் மூலம் பணத்தினை பெற்றுகொள்ளவிருப்பதாக சொன்னார்கள். ஆனால் Offline modeஇல் எவ்வாறு விளம்பரங்களை mobile phoneக்கு அனுப்பிட முடியும் போன்ற கேள்விகளால் judges துளைத்தார்கள்.<br />
<br />
போட்டியாளர்களின் presentationகள் முடிவடைந்தபின்னர் judges வழமைபோல மேடையைவிட்டு விலகி தனியிடத்தில் தங்களது அவதானிப்புகளை விவாதிக்கச்சென்றார்கள். போட்டிகளின் முடிவுகளை எதிர்பார்த்துக்கொண்டு போட்டியாளர்கள் ஒருவித பதற்றத்தில் அமைதியாக இருந்தனர். அவர்களின் இதயத்துடிப்புகளின் சத்தம் அவர்களின் மெல்லிய உரையாடல்களையும் தாண்டி ஒலித்தது. ஆண்டவனே! இப்படியே ஒரு மணித்தியாலத்தை எவ்வாறு கழிக்கப்போகிறோமோ என்று பயந்தேன். அதுக்கும் சயந்தன் சூப்பரான ஐடியா வைத்திருந்தார். அப்போதுதான் இப்போட்டி ஏற்பாட்டாளர்களை பேட்டியேடுத்து கலாய்க்கும் நிகழ்வை நடத்த சர்வேஸ் அண்ணா முன்னுக்கு வந்தார். அவர் முதலில் சயந்தனை அழைத்தார். பேட்டியின்போது சயந்தன் தனது வேலையை பற்றிக்கூறும்போது "ஏதாவது ஒரு புது project எடுக்கும் விசயமாக பெயர் கூட கேள்விப்படாத புதுநாட்டுக்கு பரிசோதனை எலி கணக்கா என்னை அனுப்பிடுவாங்க" என்று பெருமையாக கூறினார். சர்வேஸ் அண்ணா சயந்தனிடம் ஏதாவது கேள்விகள் கேட்கலாம் என்று கூறியிருந்தாலும் ஒருவரும் வாயை திறக்கவில்லை. அடுத்ததாக என்னை கூப்பிட்டார்கள். "நானும் சயந்தன் வேலை செய்யும் companyயில்தான் நாலு வருசமா குப்பை கொட்டுறேன்" என்று ஆரம்பித்தேன். "குப்பை கொட்டுறது என்றால் என்ன" என்றார் சர்வேஸ் அண்ணா. "நான் பொதுவாக உருப்படாத தெளிவில்லாத Codeதான் எழுதுவேன். அதாவது குப்பை code. அதை வினைசொல்லாக மாற்றினால் குப்பை <b>code</b>றது என்று வரும்" என்றேன். அப்போது கூட்டத்தில் யாரோ "குப்பையை கிளறுறது என்றால் என்ன" என்றார்கள். "அதைத்தான் code review என்று மரியாதையாக சொல்லலாம்" என்று சொன்னபோது சிலர் சிரித்தார்கள். அதன்பின்னர் விஜயராதா தனது company பற்றியும் open source பற்றியும் ரொம்பவே சீரியசாக விளக்கமளித்தார். இப்படியே போய்கொண்டிருந்த நிகழ்வில் சர்வேஸ் அண்ணா "கடந்த இரண்டு மூன்று நாளாகவே Yarl IT Hubஇன் twitterஇல் அதிரி புதிரியாக tweetகள் வருவதை அவதானித்திருப்பீர்கள். அதனை செய்து கொண்டிருப்பவர்தான் துஷி" என்று துஷிக்கு அதிரடி அறிமுகம் வழங்கினார்.<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRDoCaNXZHI5cwRe89uuBdfzlb6WQ21t05eJ5CqYj5ESKNJrPSBd6CvV3wh9dROL495e3wCYuRnrazqQhHzRMBhn06gAY8tGH7DZb7fLocFD4rE_joxSbPFDlgStBHIqcKU5AA2mxnguQi/s1600/534578_402404473161415_1501592171_n.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="239" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRDoCaNXZHI5cwRe89uuBdfzlb6WQ21t05eJ5CqYj5ESKNJrPSBd6CvV3wh9dROL495e3wCYuRnrazqQhHzRMBhn06gAY8tGH7DZb7fLocFD4rE_joxSbPFDlgStBHIqcKU5AA2mxnguQi/s1600/534578_402404473161415_1501592171_n.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">அரிமா அணியினர் முடிவுக்காக காத்திருப்பு</td></tr>
</tbody></table>
<br />
ஒருவாறாக judges முக்கியமான முடிவுகளுடன் மேடையை நோக்கி நடைபோட்டனர். Final roundஇற்காக போட்டியிட்ட மூன்று அணிகளும் வைத்த கண் வாங்காமல் judgesஐ பார்த்துக்கொண்டிருந்தனர். போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டவேளையில் Cybers அணி இரண்டாம் இடத்தை பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. Arimaa அணியும், Zeros அணியும் பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, Arimaa அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் முதல்பரிசாக 50000ரூபாவை பெற்றுக்கொண்டனர். Cybers அணியினர் 25000ரூபாவை பெற்றனர். Oppourtunity roundஇல் Crazy Coders அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. நான்கு நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற போட்டிகள் இனிதே நிறைவேறின. நாங்கள் கொழும்புக்கு திரும்புவதற்கு இன்னும் ஒன்றரை மணித்தியாலங்களே இருந்ததால் வேக வேகமாக போட்டி நடந்த Hallஐ பழையபடிக்கு மாற்றினோம். போட்டியாளர்களுடன் கதைத்து பிரியாவிடை பெற்றோம். பஸ்ஸில் ஏறி இருந்தபோது எல்லோருடைய முகத்திலும் மகிழ்ச்சி கலந்த புன்னகை இருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. கீழே தரப்பட்ட படமே இதற்கு சான்று பகரும்.<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgc9Txj5Kh6YrfS3uL-HfT2fmvMO8GfYcaAzyr-QaykjXyTflX0-G8Z5FZM2KwKcBbw018BzS4fQzKt6Prkg3CVwhD3UVgkkTrUZFaf9edc02BsXN2i19XFNwZhkX6zIRReEHt7gjHWy86q/s1600/154237_402488446486351_1355118605_n.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="298" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgc9Txj5Kh6YrfS3uL-HfT2fmvMO8GfYcaAzyr-QaykjXyTflX0-G8Z5FZM2KwKcBbw018BzS4fQzKt6Prkg3CVwhD3UVgkkTrUZFaf9edc02BsXN2i19XFNwZhkX6zIRReEHt7gjHWy86q/s1600/154237_402488446486351_1355118605_n.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">மீண்டும் கொழும்பு நோக்கி போரடிக்கிற வேலைக்கு திரும்புகிறோம்</td></tr>
</tbody></table>
<br />
இந்த போட்டிகள் நடந்த நான்கு நாட்களும் வேறோரு உலகத்தில் சஞ்சரிப்பது போன்ற உணர்வே இருந்தது. போட்டியாளர்கள் Software Engineering தொடர்பான பல்வேறு விடயங்கள் பற்றிய அறிவினை அனுபவத்தோடு பெற்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமல்லாது எங்களுக்கும் Software companyகளில் computer screenஐ வெறித்துப்பார்த்துகொண்டு வேலை செய்யும் அனுபவங்களிலிருந்து Yarl Geek Challenge புதிதான அனுபவ பாடத்தை கற்றுத்தந்தது. அடுத்து வரும் வருடங்களில் எவ்வாறு இந்த போட்டியின் அமைப்பை மேலும் மேம்படுத்தலாம் என்று இப்போதே திட்டமிட தொடங்கிவிட்டார்கள். அடுத்தமுறை இப்போட்டிகளை நடத்த மிகப்பெரிய இடத்தை தேர்வு செய்யவேண்டுமென்பது உறுதி.<br />
<br />
முற்றும்..</div>
Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.com0