
செவ்விந்தியர்களின் தாக்குதல் பயம் வேறு. இப்போது வெள்ளை இராணுவத்தினர் அவர்களின் இனத்தவருக்கு செய்யும் அநியாயங்களுக்கு பதிலடியாக எப்போதாவது வெள்ளையரின் தனித்திருக்கும் குடியிருப்புகளில் தாக்குதல் நடத்துவார்கள். ரொபின்சன் மரம் வெட்டும் தொழில் பார்ப்பவர். இதனால் காட்டுக்கு பக்கத்தில் இருந்த மரத்தொழிற்சாலைக்கு பக்கத்திலே தனது வீட்டினை அமைத்திருந்தார். காட்டுக்குள் உள்ள மான், மரை போன்ற மிருகங்களை வேட்டையாடி உணவினை பெற்றுக்கொள்ள முடிந்தது. கோடைக்காலப்பகுதிகளில் பக்கத்தில் உள்ள ஒரு சில கிராமங்களுக்கு சென்று வர முடிந்தது. கடுமையான பனி காலங்களில் வேலைக்கு கூட வெளியில் செல்ல முடியாது. ஆனால் வீட்டின் வெப்பநிலையை பேண விறகுகள் இல்லாவிட்டால் குளிரில்தான் வாடவேண்டும். அதற்காகத்தான் இப்போது வெளியே செல்லவேண்டியுள்ளது.
தியோவும், ரொபி


மாலைப்பொழுது, ஆனால் சூரியன் மறைக்கப்பட்டு, இருள் வியாபித்திருந்தது. வீட்டுக்கு வந்திருந்த அந்நியரான மனிதனின் பெயர் "பிளாட்ரோ" என்று அறிந்து கொண்டனர். தியோ தன்னிடம் இருந்த மரத்தாலான பொம்மைகளை அவருக்கு கொண்டு வந்து காட்டினான். "பிளாட்ரோ" புன்னகையுடன் அவற்றை பார்த்தவண்ணமிருந்தார். அவன் அவரிடம் எறிந்த மரப்பந்தை அவனிடமே திருப்ப எறிந்தார். இப்படியே கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் இருவரும் ஒரு புரிந்துணர்வில் விளையாடிகொண்டிருந்தனர். ஒளித்துகொண்டிருந்த சிரில்லா இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கிட்டே வந்து விட்டாள். "தியோ நானும் வரேண்டா" என்று மழலை மொழியில் ஆரம்பித்தாள். "ம்.. ம்... நாங்க இருவரும் பந்தை மாறி மாறி எறிவோம்.. நீ இந்த பந்தை பறிக்கவேணும்" என்று அவளுக்கு கொஞ்சம் மேலாக பிளட்ரோவிடம் எறிந்தான். அவரும் சிரில்லாவிடம் அகப்படாமல் அவனிடம் பந்தை லாவகமாக எறிந்தார். இப்படியே கொஞ்ச நேரம் சென்றது. சிரில்லாவின் முகம் சிவந்து கொண்டே போனது. விட்டால் கொஞ்ச நேரத்தில் அழுது விடுவாள் போலிருந்தது. இதனை அவதானித்த பிளாட்ரோ அவளை நோக்கி எறிந்தார். "எனக்கு வெற்றி வெற்றி.. ன.. னா.. ணா" என்று வெற்றிக்கூச்சல் போட்டாள் சிரில்லா. தியோ பிளாட்ரோவை நோக்கி முறைத்துப்பார்த்தான். அவரும் ஏதோ தவறுதலாக அவளிடம் பந்தை எறிந்து விட்டது போல தலையில் கைவைத்து கொண்டு கவலைப்படுவது போல் நடித்தார். அப்போது முன்னறைக்குள் நுழைந்த ரொபின்சன் "பிளாட்ரோ"வின் முகத்தினை பார்த்தார். களைப்பு அடங்கி, முகம் பிரகாசமாக இருந்தது. "நீங்க இந்த கடும் பனியிலே எதுக்கு மேற்கு பக்கம் போறீங்க.. எல்மிரா டவுனுக்கா போயிடிருந்தீங்க" என்று சம்பாஷணையை ஆரம்பித்தார் ரொபின்சன். அவர் புன்னகை கலந்த நன்றியுணர்வுடன் ரொபின்சனை பார்த்தவாறு பேச்சை ஆரம்பித்தார். "ஆமா! என்ன செய்யிறது.. கட்டாயம் போய் ஆகவேண்டிய சூழ்நிலை.. எனக்கு சவுத் கில்லில மரம் வெட்டுற வேலை.. எனக்கு ஒரு மகனும், சிரில்லா வயசில சின்ன பொண்ணு இருக்காங்க.. அவங்க எல்லோரும் எல்மிரா டவுணில் இருக்கிறாங்க.. ஒரு வருஷத்தில் கிறிஸ்மஸ் நேரத்திலேதான் விடுமுறை கிடைக்குது.. குளிர் காலத்தில என் சின்ன பெண்ணுக்கு இழுப்பு நோய் வரும்.. இந்த முறை கடுமையா வந்திட்டதா தகவல் சொல்லி அனுப்பினாங்க.. அதான் பனியை பத்தி யோசிக்காம கிளம்பிட்டேன்". முகத்தில் ஒருவித யோசனையுடன் கூடிய சோகம் இருந்தது. "கவலைப்படாதீங்க! பனி இன்னும் இரண்டு நாளில் குறைஞ்சுடும் போல இருக்குது. இரண்டு நாள் இங்க தங்கி இருந்துட்டு போங்க.. இன்னும் அஞ்சு மைல் போனால் ஹோர்ஸ்ஹெடில் குதிரை வாடகைக்கு எடுக்கலாம். பனியும் குறைஞ்சுடும்" என்று ஆறுதல் கூறினார். "அதுசரிதான், ரொபின்சன்! ஆனா அந்த சின்ன பெண்ணு தாக்குபிடிப்பாளா

இவ்வாறாக இரண்டு நாட்கள் நகர்ந்தன. "பிளாட்ரோ"வின் உடல்நிலையில் அவ்வளவான முன்னேற்றமிருக்கவில்லை. கிறிஸ்மஸ்க்கு இன்னும் ஏழு நாட்களே இருந்தன. ரொபின்சனுக்கு அவரைப்பற்றிய கவலை அதிகரித்தது. மனிதர் இளைத்து தொண்ணுறு வயது முதியவர் போல காணப்பட்டார். ஆனால் எப்போதும் சிரித்துகொண்டே சிரில்லா, தியோவுடன் விளையாடிகொண்டிருந்தார். இரவு வேளைகளில் தனியாக இருக்கும்போது கண்ணீர விட்டு அழுவதை ரொபின்சன் பார்த்திருக்கிறார். இக்கட்டான சூல்நிலையிலிருக்கும் மகளை கடைசியாக கூட காண முடியாமல் போய் விடுமோ என்று அழுதிருக்கலாம். தனது துயரை மீண்டும் ஒருமுறைகூட வெளிக்காட்டாமல் இருந்தார்.
அன்றுடன் அவர் வந்து நான்கு நாட்களாகி இருந்தது. காலையிலேயே பனி குறைந்து காணப்பட்டது. இன்றைக்கே கிறிஸ்ம

ரொபின்சனும் தியோவும் காட்டின் எல்லைப்பகுதியில் மரைகளை தேட ஆரம்பித்தனர். ஆனால் இன்று அதிஷ்டம் அவர்களின் பக்கமிருக்கவில்லை. காட்டுக்கு உள்ளே போய் ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு விலங்குகளையும் காணவில்லை. வழமையாக சூரிய வெளிச்சம் வரும்போது விலங்குகள் வெளிவர ஆரம்பிக்கும். ஆனால் இன்று எவற்றையும் காணவில்லை. ரொபின்சன் கொஞ்சம் அதிர்ந்து போனார். எதோ பனிப்புயல் வருவதற்கு முன்னர் வரும் அமைதி போல காடே அமைதியாக இருந்தது. "அப்பா! ஒன்றையுமே காணவில்லை. இன்னும் உள்ளே போனால் செவ்விந்தியர்களின் குடியிருப்பு வந்து விடும். வாங்கோ வீட்டுக்கு போய் விடுவோம்". என்று தியோ கத்தினான். திடீரென்று வெளிச்சம் குறைய ஆரம்பித்தது. காற்று குளிர ஆரம்பித்தது. இருவரும் பேசிகொள்ளாமல் வீட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
வீட்டினை அடைய நான்கு மணித்தியாலங்கள் ஆகலாம். காட்டின் எல்லைக்கு சென்றடைய முன்னரே பனிப்புயல் கடுமையானது. தியோ நடக்க முடியாமல் பனியில் சறுக்கி விழுந்தான். ரொபின்சன் அவனை தூக்கியவாறு ஒரு மரத்தின் பின்னால் பதுங்கினார். அப்போதுதான் அவருக்கு "பிளாட்ரோ"வின் ஞாபகம் வந்தது. கடவுளே அந்த கிழவர் இந்த புயலில் சிக்கிவிட்டாரே. இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தால் இந்த இடத்தினை விட்டு பத்திரமாக வெளியேறி இருப்பார். கடவுளே அவரை காப்பாற்று என்று வேண்டிகொண்டார். பனிப்புயல் கடுமையாக வீசியது. இருள் சூழ்ந்து பயங்கரமாக இருந்தது. பசியால் பிராணன் போனது. இப்படியே இரண்டு நாட்கள் தொடர்ந்து வீசினாலே அந்த

சூடாக வாயில் ஏதோ பருக்கப்படுவதை உணர்ந்தார். ஒருவிதமான மூலிகை வாசனையடித்தது. இப்போது ஒருவித வெம்மை இருந்தது. இது ஏதோ ஒரு செவ்விந்திய கூடாரம். ஒரு வயதான செவ்விந்திய கிழவர் அவனை கருணையாக பார்த்து அவனுக்கு ஏதோ ஒரு சூடான மூலிகை நீரை பருகத்தந்தார். பக்கத்திலே தியோ அமர்ந்திருந்தான். "அப்பா! நாங்க தப்பித்தோம். இப்ப புயல் குறைஞ்சிடுச்சு. இவங்கதான் எங்களை காப்பாற்றிஇருக்கிறார்கள்" என்று கூவினான். அப்போது ஒரு செவ்விந்திய இளைஞன் உள்ளே நுழைந்தான். அவன் "ஒரு கிழவர்தான் காட்டின் மயங்கிகிடந்த உங்கள் இருவரையும் காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் என்னவோ தெரியலை நீங்கள் மயங்கிகிடந்த இடத்தினை காட்டிவிட்டு மறைந்து போய் விட்டார்" என்று காப்பாற்றிய கதையை விளக்கினார். அதிர்ந்து போன ரொபின்சன் "அவர் எப்படி இருந்தார்" என்றார். "கறுப்பான கம்பளி உடை உடுத்தியிருந்தார். மேரி மாதா படம் போட்ட சங்கிலி அணிந்திருந்தார்". ரொபின்சனுக்கு இப்போது எல்லாம்
புரிந்தது.
"மீண்டும் வருவேன் என்று கூறினீர்களே பிளாட்ரோ. எங்களுக்காக இறப்பிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்களே"
No comments:
Post a Comment